logo

|

Home >

information-to-know >

parai-thirumurai-musical-instruments

பறை (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)

Parai - Ancient music instruments mentioned in thirumurai

Thirumurais composed in the first millenium refer to many of the music instruments in vogue at that time. Many of them are still in use even today.Here is the list of the instruments.

Thirumurai isaikkaruvi - Parai

 

Instrument Reference
பறை பறையின்னொலி சங்கின்னொலி பாங்காரவு மார 
அறையும்மொலி யெங்கும்மவை யறிவாரவர் தன்மை 
நிறையும்புனல் சடைமேலுடை யடிகள்நின்றி யூரில் 
உறையும்மிறை யல்லதென துள்ளம் முணராதே. 1.18.3 

அறையார் கழல்மே லரவாட 
இறையார் பலிதேர்ந் தவனூராம் 
பொறையார் மிகுசீர் விழமல்கப் 
பறையா ரொலிசெய் பனையூரே. 1.37.5 

பறையுஞ் சிறுகுழலும் யாழும்பூதம் பயிற்றவே 
மறையும் பலபாடி மயானத்துறையும் மைந்தனார் 
பிறையும் பெரும்புனல்சேர் சடையினாரும் பேடைவண் 
டறையும் பழையனூர் ஆலங்காட்டெம் அடிகளே. 1.45.6 

வாரேற்ற பறையொலியுஞ் சங்கொலியும் வந்தியம்ப 
ஊரேற்ற செல்வத்தோ டோ ங்கியசீர் விழவோவாச் 
சீரேற்ற முடைத்தாய செங்காட்டங் குடியதனுள் 
காரேற்ற கொன்றையான் கணபதீச் சரத்தானே. 1.61.2 

பிறையும்புனலுஞ் சடைமேலுடையார் பறைபோல்விழிகட்பேய் 
உறையுமயான மிடமாவுடையார் உலகர்தலைமகன் 
அறையும்மலர்கொண் டடியார்பரவி ஆடல்பாடல்செய் 
பறையுஞ்சங்கும் பலியுமோவாப் பழனநகராரே. 1.67.3 

மறையின்னிசையார் நெறிமென்கூந்தல் மலையான்மகளோடுங் 
குறைவெண்பிறையும் புனலும்நிலவுங் குளிர்புன்சடைதாழப் 
பறையுங்குழலுங் கழலுமார்ப்பப் படுகாட்டெரியாடும் 
இறைவர்சிறைவண் டறைபூஞ்சாரல் ஈங்கோய்மலையாரே. 1.70.4 

கொட்டும் பறைசீராற் குழும அனலேந்தி 
நட்டம் பயின்றாடும் நல்லூர்ப் பெருமானை 
முட்டின் றிருபோதும் முனியா தெழுந்தன்பு 
பட்ட மனத்தார்கள் அறியார் பாவமே. 1.86.1 

பிறையும் நெடுநீரும் பிரியா முடியினார் 
மறையும் பலபாடி மயானத் துறைவாரும் 
பறையும் அதிர்குழலும் போலப் பலவண்டாங் 
கறையும் வடுகூரில் ஆடும் மடிகளே. 1.87.8 

துறைபல சுனைமூழ்கித் தூமலர் சுமந்தோடி 
மறையொலி வாய்மொழியால் வானவர் மகிழ்ந்தேத்தச் 
சிறையொலி கிளிபயிலுந் தேனினம் ஒலியோவா 
பறைபடு விளங்கருவிப் பருப்பதம் பரவுதுமே. 1.118.5 

மறையுமோதுவர் மான்மறிக்கையினர் 
கறைகொள்கண்ட முடையவர் 
பறையுஞ்சங்கும் ஒலிசெய்பராய்த்துறை 
அறையநின்ற அடிகளே. 1.135.6 

பொங்கு நடைப்புக லில்விடை யாமவ ரூர்திவெண் 
பொடி யணி தடங் கொள்மார் புபூண நூல்புரள 
மங்குலி டைத்தவ ழும்மதி சூடுவ ராடுவர் 
வளங் கிளர் புன லரவம் வைகிய சடையர் 
சங்கு கடற்றிரை யாலுதை யுண்டுச ரிந்திரிந் 
தொசிந் தசைந் திசைந்து சேரும் வெண்மணற் குவைமேல் 
தங்கு கதிர்மணி நித்தில மெல்லிரு ளொல்கநின் 
றிலங் கொளிந் நலங் கெழிற் றருமபு ரம்பதியே. 1.136.2 

சங்கு செம்பவ ளத்திரள் முத்தவை தாங்கொடு 
பொங்கு தெண்டிரை வந்தலைக் கும்புனற் பூந்தராய்த் 
துங்க மால்களிற் றின்னுரி போர்த்துகந் தீர்சொலீர் 
மங்கை பங்கமும் அங்கத்தொ டொன்றிய மாண்பதே. 2.1.3 

பிறையு மாசில்கதி ரோனறி யாமைப் பெயர்ந்துபோய் 
உறையுங் கோயில்பசும் பொன்னணி யாரசும் பார்புனல் 
அறையும் ஓசைபறை போலும் அனேகதங் காவதம் 
இறையெம் மீசனெம் மானிட மாகவு கந்ததே. 2.5.5 

பறையி னோடொலி பாடலும் ஆடலும் பாரிடம் 
மறையி னோடியல் மல்கிடு வார்மங்க லக்குடிக் 
குறைவி லாநிறை வேகுண மில்குண மேயென்று 
முறையி னால்வணங் கும்மவர் முன்னெறி காண்பரே. 2.10.4 

அறையார் கழலன் னமலன் னியலிற் 
பறையாழ் முழவும் மறைபா டநடங் 
குறையா அழகன் குடவா யில்தனில் 
நிறையார் பெருங்கோ யில்நிலா யவனே. 2.22.7 

துங்க வானவர் சூழ்கடல் தாங்கடை போதில் 
அங்கொர் நீழ லளித்தஎம் மானுறை கோயில் 
வங்கம் அங்கொளிர் இப்பியும் முத்தும் மணியுஞ் 
சங்கும் வாரித் தடங்கட லுந்து சாய்க்காடே. 2.38.6 

சூடும் பிறைச்சென்னி சூழ்கா டிடமாக 
ஆடும் பறைசங் கொலியோ டழகாக 
நாடுஞ் சிறப்போவா நாலூர் மயனத்தைப் 
பாடுஞ் சிறப்போர்பாற் பற்றாவாம் பாவமே. 2.46.2 

குறைநிரம்பா வெண்மதியஞ் சூடிக்குளிர்புன் சடைதாழப் 
பறைநவின்ற பாடலோ டாடல்பேணிப் பயில்கின்றீர் 
சிறைநவின்ற தண்புனலும் வயலுஞ்சூழ்ந்த திருநல்லூர் 
மறைநவின்ற கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே 2.57.3 

கறையணி வேலிலர் போலுங் கபாலந் தரித்திலர் போலும் 
மறையும் நவின்றிலர் போலும் மாசுணம் ஆர்த்திலர் போலும் 
பறையுங் கரத்திலர் போலும் பாசம் பிடித்திலர் போலும் 
பிறையுஞ் சடைக்கிலர் போலும் பிரம புரம்அமர்ந் தாரே. 2.65.1 

பறையொடு சங்கம் இயம்பப் பல்கொடி சேர்நெடு மாடங் 
கறையுடை வேல்வரிக் கண்ணார் கலையொலி சேர்கடம் பூரில் 
மறையொலி கூடிய பாடல் மருவிநின் றாடல் மகிழும் 
பிறையுடை வார்சடை யானைப் பேணவல் லார்பெரி யோரே. 2.68.4 

நறைவளர் கொன்றையி னாரும் ஞாலமெல் லாந்தொழு தேத்தக்ச் 
கறைவளர் மாமிடற் றாருங் காடரங் காக்கன லேந்தி 
மறைவளர் பாடலி னோடு மண்முழ வங்குழல் மொந்தை 
பறைவளர் பாடலி னாரும் பாண்டிக் கொடுமுடி யாரே. 2.69.4 

மருவு நான்மறை யோனுமாமணி வண்ணனும் 
இருவர் கூடியிசைந் தேத்தவேயெரி யான்றனூர் 
வெருவ நின்றதிரை யோதமார்வியன் முத்தவை 
கருவை யார்வயற் சங்குசேர்கலிக் காழியே. 2.75.9 
தோடொரு காதனாகி யொருகா திலங்கு சுரிசங்கு நின்று புரளக் 
காடிட மாகநின்று கனலாடு மெந்தை யிடமாய காதல் நகர்தான் 
வீடுடன் எய்துவார்கள் விதியென்று சென்று வெறிநீர் தெளிப்ப விரலால் 
நாடுட னாடுசெம்மை ஒளிவெள்ள மாரும் நனிபள்ளி போலும் நமர்காள். 2.84.5 

கடல்வரை யோதமல்கு கழிகானல் பானல் கமழ்காழி என்று கருத 
படுபொரு ளாறுநாலும் உளதாக வைத்த பதியான ஞான முனிவன் 
இடுபறை யொன்றஅத்தர் பியன்மே லிருந்தி னிசையா லுரைத்த பனுவல் 
நடுவிரு ளாடுமெந்தை நனிபள்ளி யுள்க வினைகெடுதல் ஆணை நமதே 2.84.11 

கொங்கரவப் படுவண் டறைகுளிர் கானல்வாய்ச் 
சங்கரவப் பறையின் னொலியவை சார்ந்தெழப் 
பொங்கரவம் முயர்பா திரிப்புலி யூர்தனுள் 
அங்கரவம் மரையில் லசைத்தானை அடைமினே 2.121.7 

பறைமல்கு முழவொடு பாடல் ஆடலன் 
பொறைமல்கு பொழிலணி பூவ ணத்துறை 
மறைமல்கு பாடலன் மாதோர் கூறினன் 
அறைமல்கு கழல்தொழ அல்லல் இல்லையே 3.20.7 

சூடுவர் சடையிடைக் கங்கை நங்கையைக் 
கூடுவ ருலகிடை யையங் கொண்டொலி 
பாடுவ ரிசைபறை கொட்ட நட்டிருள் 
ஆடுவர் கருக்குடி அண்ணல் வண்ணமே 3.21.5 

நிறையுடை நெஞ்சுளும் நீருளும் பூவுளும் 
பறையுடை முழவுளும் பலியுளும் பாட்டுளுங் 
கறையுடை மிடற்றண்ணல் கருதிய கானப்பேர் 
குறையுடை யவர்க்கலாற் களைகிலார் குற்றமே 3.26.4 

மறையின்ஒலி கீதமொடு பாடுவன பூதமடி மருவிவிரவார் 
பறையினொலி பெருகநிகழ் நட்டம்அமர் பட்டிசரம் மேயபனிகூர் 
பிறையினொடு மருவியதோர் சடையினிடை யேற்றபுனல் தோற்றநிலையாம் 
இறைவனடி முறைமுறையின் ஏத்துமவர் தீத்தொழில்கள் இல்லர்மிகவே. 3.73.6 

அங்கதிர் ஒளியினர் அரையிடை மிளிர்வதோர் அரவொடு 
செங்கதி ரெனநிற மனையதோர் செழுமணி மார்பினர் 
சங்கதிர் பறைகுழல் முழவினொ டிசைதரு சரிதையர் 
வெங்கதி ருறுமழு வுடையவ ரிடமெனில் விளமரே. 3.88.3 

நாமம் எனைப்பல வும்முடையான் நலனோங்கு நாரையூர் 
தாமொம் மெனப்பறை யாழ்குழ றாளார் கழல்பயில 
ஈம விளக்கெரி சூழ்சுடலை யியம்பு மிடுகாட்டிற் 
சாமம் உரைக்கநின் றாடுவானுந் தழலாய சங்கரனே. 3.102.8 

உண்ணவண் ணத்தொளி நஞ்சமுண்டு வுமையோ டுடனாகிச் 
சுண்ணவண் ணப்பொடி மேனிபூசிச் சுடர்ச்சோதி நின்றிலங்கப் 
பண்ணவண் ணத்தன பாணிசெய்யப் பயின்றா ரிடம்போலும் 
வண்ணவண் ணப்பறை பாணியறா வலம்புர நன்னகரே. 3.103.6 

பிறைவளர் செஞ்சடை பின்தயங்கப் பெரிய மழுவேந்தி 
மறையொலி பாடிவெண் ணீறுபூசி மனைகள் பலிதேர்வார் 
இறைவளை சோர எழில்கவர்ந்த இறைவர்க் கிடம்போலும் 
பறையொலி சங்கொலி யால்விளங்கும் பருதிந் நியமமே. 3.104.7 

பறைகொள் பாணியர் பிறைகொள் சென்னியர் பட்டி னத்துறை பல்லவ னீச்சரத் 
திறைவ ராயிருப் பாரி வர்தன்மை யறிவா ரார். 3.112.10 

நிலவெண் சங்கும் பறையும் ஆர்ப்ப நிற்கில்லாப் 
பலரு மிட்ட கல்ல வடங்கள் பரந்தெங்குங் 
கலவ மஞ்ஞை காரென் றெண்ணிக் களித்துவந் 
தலம ராரூர் ஆதிரை நாளால் அதுவண்ணம். 4.21.5 

விரிக்கும் அரும்பதம் வேதங்க ளோதும் விழுமியநூல் 
உரைக்கில் அரும்பொருள் உள்ளுவர் கேட்கில் உலகமுற்றும் 
இரிக்கும் பறையொடு பூதங்கள் பாடக் கழுமலவன் 
நிருத்தம் பழம்படி யாடுங் கழல்நம்மை ஆள்வனவே. 4.82.4 

அட்டும் ஒலிநீர் அணிமதி யும்மல ரானவெல்லாம் 
இட்டுப் பொதியுஞ் சடைமுடி யான்இண்டை மாலையங்கைக் 
கட்டும் அரவது தானுடை யான்கண்டி யூரிருந்த 
கொட்டும் பறையுடைக் கூத்தனை யாமண்டர் கூறுவதே. 4.94.8 

அறைமல்கு பைங்கழ லார்ப்பநின் றானணி யார்சடைமேல் 
நறைமல்கு கொன்றையந் தாருடை யானும்நல் லூரகத்தே 
பறைமல்கு பாடலன் ஆடல னாகிப் பரிசழித்தான் 
பிறைமல்கு செஞ்சடை தாழநின் றாடிய பிஞ்ஞகனே. 4.98.8 

கொடிகொள் விதானங் கவரி பறைசங்கங் கைவிளக்கோ 
டிடிவில் பெருஞ்செல்வ மெய்துவர் எய்தியும் ஊனமில்லா 
அடிகளும் ஆரூர் அகத்தின ராயினும் அந்தவளப் 
பொடிகொண் டணிவார்க் கிருளொக்கு நந்தி புறப்படிலே. 4.103.6 

பைங்காற் றவளை பறைகொட்டப் பாசிலை நீர்ப்படுகர் 
அங்காற் குவளைமேல் ஆவி உயிர்ப்ப அருகுலவுஞ் 
செங்காற் குருகிவை சேருஞ் செறிகெடி லக்கரைத்தே 
வெங்காற் குருசிலை வீரன் அருள்வைத்த வீரட்டமே. 4.105.2 

பறையின் ஓசையும் பாடலின் ஓசையும் 
மறையின் ஓசையும் வைகும் அயலெலாம் 
இறைவன் எங்கள் பிரானிடை மருதினில் 
உறையும் ஈசனை உள்குமென் உள்ளமே. 5.15.1 

பறையின் ஓசையும் பாடலின் ஓசையும் 
மறையின் ஓசையும் மல்கி அயலெலாம் 
நிறையும் பூம்பொழில் சூழ்திரு நின்றியூர் 
உறையும் ஈசனை உள்குமென் உள்ளமே. 5.23.4 

பிறையோடு பெண்ணொருபால் வைத்தான் றான்காண் 
பேரவன்காண் பிறப்பொன்று மில்லா தான்காண் 
கறையோடு மணிமிடற்றுக் காபாலி காண் 
கட்டங்கள் காண்கையிற் கபால மேந்திப் 
பறையோடு பல்கீதம் பாடி னான்காண் 
ஆடினான் காண்பாணி யாக நின்று 
மறையோடு மாகீதங் கேட்டான் றான்காண் 
மாகடல்சூழ் கோகரணம் மன்னி னானே. 6.49.6 

மறைக்காட்டார் வலிவலத்தார் வாய்மூர் மேயார் 
வாழ்கொளி புத்தூரார் மாகா ளத்தார் 
கறைக்காட்டுங் கண்டனார் காபா லியார் 
கற்குடியார் விற்குடியார் கானப் பேரார் 
பறைக்காட்டுங் குழிவிழிகட் பல்பேய் சூழப் 
பழையனூர் ஆலங்காட் டடிகள் பண்டோர் 
மிறைக்காட்டுங் கொடுங்காலன் வீடப் பாய்ந்தார் 
வீழி மிழலையே மேவி னாரே. 6.51.7 

இறைகளோ டிசைந்த இன்பம் இன்பத்தோ டிசைந்த வாழ்வு 
பறைகிழித் தனைய போர்வை பற்றியான் நோக்கி னேற்குத் 
திறைகொணர்ந் தீண்டித் தேவர் செம்பொனும் மணியுந் தூவி 
அறைகழல் இறைஞ்சும் ஆரூர் அப்பனே அஞ்சி னேனே. 7.8.1 

பறைக்கண் நெடும்பேய்க் கணம்பாடல் செய்யக் 
குறட்பா ரிடங்கள்பறை தாம்முழக்கப் 
பிறைக்கொள் சடைதாழப் பெயர்ந்து நட்டம் 
பெருங்கா டரங்காகநின் றாடலென்னே 
கறைக்கொள் மணிகண் டமுந்திண் டோ ள்களுங் 
கரங்கள்சிரந் தன்னிலுங் கச்சுமாகப் 
பொறிக்கொள் அரவம் புனைந்தீர் பலவும் 
பொழிலார் திருப்புத்தூர்ப் புனிதனீரே. 7.9.8 

பறையுங் குழலும் ஒலிபாட லியம்ப 
அறையுங் கழலார்க்க நின்றாடும் அமுதே 
குறையாப் பொழில்சூழ் தருகோடிக் குழகா 
இறைவா தனியே இருந்தாய் எம்பிரானே. 7.32.7 

நறைசேர் மலரைங் கணையானை நயனத் தீயாற் பொடிசெய்த 
இறையா ராவர் எல்லார்க்கும் இல்லை யென்னா தருள்செய்வார் 
பறையார் முழவம் பாட்டோ டு பயிலுந் தொண்டர் பயில்கடவூர்ப் 
பிறையார் சடையார் மயானத்துப் பெரிய பெருமா னடிகளே. 7.53.4 

அறையும்பைங் கழலார்ப்ப அரவாட அனலேந்திப் 
பிறையுங்கங் கையுஞ்சூடிப் பெயர்ந்தாடும் பெருமானார் 
பறையுஞ்சங் கொலிஓவாப் படிறன்றன் பனங்காட்டூர் 
உறையுமெங்கள் பிரானாரை உணராதார் உணர்வென்னே. 7.86.2 

நாதப் பெரும்பறை நவின்று கறங்கவும் 8.திருவா.கீர்த்தி.108 

வேத மொழியர்வெண் ணீற்றர்செம் மேனியர் 
நாதப் பறையினர் அன்னே என்னும் 
நாதப் பறையினர் நான்முகன் மாலுக்கும் 
நாதரிந் நாதனார் அன்னே என்னும். 8.திருவா.338 

இன்பால் மொழிக்கிள்ளாய் எங்கள் பெருந்துறைக்கோன் 
முன்பால் முழங்கும் முரசியம்பாய் - அன்பாற் 
பிறவிப் பகைகலங்கப் பேரின்பத் தோங்கும் 
பருமிக்க நாதப் பறை. 8.திருவா.365 

ஞானவாள் ஏந்தும்ஐயர் நாதப் பறையறைமின் 
மானமா ஏறும்ஐயர் பதிவெண் குடைகவிமின் 
ஆனநீற் றுக்கவசம் அடையப் புகுமின்கள் 
வானவூர் கொள்வோம்நாம் மாயப்படை வாராமே. 8.திருவா.615 

நறைக்கண் மலிகொன்றை யோன்நின்று நாடக மாடுதில்லைச் 
சிறைக்கண் மலிபுனல் சீர்நகர் காக்கும்செவ் வேல்கிளைஞர் 
பறைக்கண் படும்படும் தோறும் படாமுலைப் பைந்தொடியாள் 
கறைக்கண் மலிகதிர் வேற்கண் படாது கலங்கினவே. .. 8.கோவை.258 

கடுப்பாய்ப் பறைகறங்கக் கடுவெஞ் சிலையும் 
கணையும் கவணும் கைக்கொண்(டு) 
உடுப்பாய் தோல்செருப்புச் சுரிகை 
வராக முன்னோடி விளியுளைப்ப 
நடப்பாய் ! மகேந்திர நாத ! நா தாந்தத்(து) 
அரையா என்பார்க்கு நாதாந்தபதம் 
கொடுப்பாய் என்னும் குணக்குன்றே என்னும் 
குலாத்தில்லை அம்பலக் கூத்தனையே 9.29

நாட்டுக்கு நாயகன் நம்மூர்த் தலைமகன்
காட்டுச் சிவிகையொன்று ஏறிக் கடைமுறை
நாட்டார்கள் பின்செல்ல முன்னே பறைகொட்ட
நாட்டுக்கு நம்பி நடக்கின்ற வாறே. 10.153

முறைமுறை யாய்ந்து முயன்றில ராகில்
இறையிறை யார்க்கும் இருக்க அரிது
மறையது காரண மற்றொன்று மில்லை
பறையறை யாது பணிந்து முடியே 10.748 

பாலிக்கும் நெஞ்சம் பறையோசை ஒன்பதில்
ஆலிக்கும் அங்கே அமரர் பராபரன்
மேலைக்கு முன்னே விளக்கொளி யாய்நிற்குங் 
காலைக்குச் சங்கு கதிரவன் தானே
10.867 

சூலம்தண்டு ஓள்வாள் சுடர்பறை ஞானமாய்
வேல்அம்பு தமருகம் மாகிளி விற்கொண்டு
காலம்பூப் பாசம் மழுகத்தி கைக்கொண்டு
கோலஞ்சேர் சங்கு குவிந்தகை எண்ணதே. 10.1398 

பருந்துங் கிளியும் படுபறை கொட்டத்
திருந்திய மாதர் திருமணப் பட்டார்
பெருந்தவப் பூதம் போலுரு வாகும்
இருந்திய பேற்றினில் இன்புறு வாரே. 10.2896 

கயலொன்று கண்டவர் கண்டே இருப்பர்
முயலொன்று கண்டவர் மூவரும் உய்வர்
பறையொன்று பூசல் பிடிப்பான் ஒருவன்
மறையொன்று கண்ட துருவம் போ லாமே. 10.2910 

எட்டி இலவம் ஈகை சூரை காரை படர்ந்தெங்கும் 
சுட்ட சுடலை சூழ்ந்த கள்ளி சோர்ந்த குடர்கெளவப் 
பட்ட பிணங்கள் பரந்த காட்டிற் பறைபோல் விழிகட்பேய் 
கொட்ட முழவங் கூளி பாடக் குழகன் ஆடுமே. 11.13 

கடுவன் உகளுங் கழைசூழ் பொதும்பிற் கழுகும் பேயுமாய் 
இடுவெண் டலையும் ஏமப் புகையும் எழுந்த பெருங்காட்டிற் 
கொடுவெண் மழுவும் பிறையுந் ததும்பக் கொள்ளென் றிசைபாடப் 
படுவெண் துடியும் பறையுங் கறங்கப் பரமன் ஆடுமே. 11.21 

அழகுடைக் கிங்கணி அடிமிசை அரற்றத் 
தொழிலுடைச் சிறுபறை பூண்டு தேர்ஈர்த்து 11.291 

சிலம்பு பறையாகச் சேயரிக்கண் அம்பா 
விலங்கு கொடும்புருவம் வில்லா 11.300.63 

சிலம்புகுரற் சிறுபறை பூண்ட 
அலம்புகுரற் கிண்கிணிக் களிறுபெற் றனனே. 11.484 

குன்றகச் சிறுகுடிக் கிளையுடன் மகிழ்ந்து 
தொண்டகச் சிறுபறைக் குரவை அயர 11.501.197 

பாவை ஒலியும் பறைஒலியும் பல்சனங்கள் 
மேவும் ஒலியும் வியன்நகரம் 11.1358.50 

பழிப்பறை முழக்கோ ஆர்க்கும் பாவத்தின் ஒலியோ வேந்தன் 
வழித்திரு மைந்தன் ஆவி கொளவரும் மறலி ஊர்திக் 
கழுத்தணி மணியின் ஆர்ப்போ என்னத்தன் சடைமுன் கோளாத் 
தெழித்தெழும் ஓசை மன்னன் செவிப்புலம் புக்க போது. 12.113.28 

புள்ளும் தண் புனல் கலிக்கும் பொய்கையுடைப் புடை எங்கும் 
தள்ளும் தாள் நடை அசையத் தளை அவிழ் பூங்குவளை மது 
விள்ளும் பைங் குழல் கதிர் நெல் மிலைச்சிய புன் புலைச்சியர்கள் 
கள்ளுண்டு களி தூங்கக் கறங்கு பறையும் கலிக்கும் 12.4.4.10 

அல்லார் கண்டத்து அண்டர் பிரான் அருளால் பெற்ற படிக்காசு 
பல்லாறு இயன்ற வளம் பெருகப் பரமன் அடியார் ஆனார்கள் 
எல்லாம் எய்தி உண்கஎன இரண்டு பொழுதும் பறை நிகழ்த்திச் 
சொல்லால் சாற்றிச் சோறு இட்டார் துயர் கூர் வறுமை தொலைத்திட்டார் 12.5.1.259 

காதலொடும் தொழுது எடுத்துக் கொண்டு நின்று கை குவித்துப் பெரு மகிழ்ச்சி கலந்துபொங்க 
நாதர் விரும்பு அடியார்கள் நாளும் நாளும் நல் விருந்தாய் உண்பதற்கு வருக என்று 
தீது இல் பறை நிகழ்வித்துச் சென்ற தொண்டர் திருவமுது கறி நெய்பால் தயிர் என்று இன்ன 
ஏதம் உறாது இனிது உண்ண ஊட்டி அங்கண் இருதிறத்து பெரும் தவரும் இருந்த நாளில் 12.2464 

சிந்தை வெம் துயர் உறும் சிவநேசரும் தெளிந்து 
வந்த செய்வினை இன்மையில் வையகத்து உள்ளோர் 
இந்த வெவ்விடம் ஒழிப்பவருக்கு ஈகுவன் கண்ட 
அந்தமில் நிதிக் குவை எனப் பறை அறைவித்தார் 12.2961 

அணி ஆரூர் மருகு அதனில் ஆளி அங்குப் பறை அறைந்த 
பணியாலே மனை நிறைத்துப் பாங்கு எங்கும் நெல் கூடு 
அணியாமல் கட்டி நகர் களி கூரப் பரவையார் 
மணியாரம் புனை மார்பின் வன் தொண்டர் தமைப் பணிந்தார் 12.3183 

நிறை அழிந்த உள்ளத்தால் நெல் பண்டாரமும் அன்றிக் 
குறைவு இல் நிதிப் பண்டாரம் ஆன எலாம் கொள்ளை முகந்து 
இறைவன் அடியார் கவர்ந்து கொள்க என எம்மருங்கும் 
பறையறைப் பண்ணுவித்தார் படைத்த நிதிப்பயன் கொள்வார் 12.4117 

Related Content

திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்

ஆகுளி-திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்

இடக்கை-திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்

இலயம்-திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்

உடுக்கை-திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்