logo

|

Home >

information-to-know >

palliyam-thirumurai-musical-instruments

பல்லியம் (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)

Palliyam - Ancient music instruments mentioned in thirumurai

Thirumurais composed in the first millenium refer to many of the music instruments in vogue at that time. Many of them are still in use even today.Here is the list of the instruments.

 

Instrument Reference
பல்லியம்

பல்லியல்பாணிப் பாரிடமேத்தப் படுகானின்
எல்லிநடஞ்செய் யீசனெம்மான்றன் இடமென்பர்
கொல்லையின்முல்லை மல்லிகைமௌவற் கொடிபின்னிக்
கல்லியல்இஞ்சி மஞ்சமர்கண்ணார் கோயிலே. 1.101.3

உண்ணா வருநஞ்ச முண்டான் றான்காண்
ஊழித்தீ யன்னான்காண் உகப்பார் காணப்
பண்ணாரப் பல்லியம் பாடி னான்காண்
பயின்றநால் வேதத்தின் பண்பி னான்காண்
அண்ணா மலையான்காண் அடியா ரீட்டம் 
அடியிணைகள் தொழுதேத்த அருளு வான்காண்
கண்ணாரக் காண்பார்க்கோர் காட்சி யான்காண்
காளத்தி யானவனென் கண்ணு ளானே. 6.8.11

ஆனந்தம் ஆடரங்கு ஆனந்தம் பாடல்கள்
ஆனந்தம் பல்லியம் ஆனந்தம் வாச்சியம்
ஆனந்தம் ஆக அகில சராசரம்
ஆனந்தம் ஆனந்தக் கூத்துஉகந் தானுக்கே 10.2725

பல்லியங்கள் பரந்த ஒலியுடன் 
செல்வ வீதிச் செழுமணித் தேரொலி 
மல்லல் யானை ஒலியுடன் மாவொலி 
எல்லை இன்றி எழுந்துள எங்கணும் 12.0088

வெங்கதிர் விசும்பின் உச்சி மேவிய பொழுதில் எங்கும் 
மங்கல வாழ்த்து மல்க மருங்கு பல்லியங்கள் ஆர்ப்பத் 
தங்கள் தொல் மரபின் விஞ்சைத் தனுத் தொழில் வலவர் தம்பால் 
பொங்கொளிக் கரும் போர் ஏற்றைப் பொருசிலை பிடிப்பித்தார்கள் 12.0689

ஆதி மூதெயில் அந் நகர் மன்னிய 
சோதி நீள் மணித் தூபமும் தீபமும் 
கோதில் பல்லியமும் கொடியும் பயில் 
வீதி நாளும் ஒழியா விழா வணி 12.1181

எல்லா உலகும் ஆர்ப்பு எடுப்ப எங்கும் மலர் மாரிகள் பொழியப் 
பல்லாயிரவர் கண நாதர் படி ஆடிக் களி பயிலச் 
சொல்லார் மறைகள் துதி செய்யச் சூழ் பல்லியங்கள் எழச் சைவ 
நல்லாறு ஓங்க நாயகமாம் நங்கள் பெருமான் தொழுது அணைந்தார் 12.1262 

சங்கு துந்துபி தாரை பேரி இம்முதல் 
பொங்கு பல்லிய நாதம் பொலிந்து எழ 
அங்கணன் அருளால் அவை கொண்டு உடன் 
பொங்கு காதல் எதிர் கொளப் போதுவார் 12.2101 

சின்னம் தனிக் காளம் தாரை சிரபுரத்து ஆண்டகை வந்தார் 
என்னும் தகைமை விளங்க ஏற்ற திருப் பெயர் சாற்ற 
முன் எம்மருங்கும் நிரத்த முரசு உடைப் பல்லியம் ஆர்ப்ப 
மன்னும் திருத்தொண்டனார் வந்து எதிர் கொண்டு வணங்க 12.2181 

பல்லிய நாதம் பொங்கப் படர் திருநீற்றின் சோதி 
நல் ஒளி வட்டம் ஆகி நண்ணி மேல் வருவது என்ன 
வில் வளர் தரளக் கோவை வெண்குடை நிழற்ற வெவ்வேறு 
எல்லையில் முத்தின் தாளம் தாரை சங்கு எங்கும் ஓத 12.2641 

பன் மணி முரசம் சூழ்ந்த பல்லியம் இயம்பப் பின்னே 
தென்னனும் தேவியாரும் உடன் செலத் திரண்டு செல்லும் 
புன் நெறி அமணர் வேறு ஓர் புடைவரப் புகலி வேந்தர் 
மன்னிய வைகை ஆற்றின் கரை மிசை மருவ வந்தார் 12.2709 

சீர் நிலவு திருத்தெளிச் சேரியினைச் சேர்ந்து சிவபெருமாள் தனைப் பரவிச் செல்லும் போது 
சார்வு அறியாச் சாக்கியர்தம் போதி மங்கை சார்தலும் மற்ற அது அறிந்த சைவர் எல்லாம் 
ஆர் கலியின் கிளர்ச்சி எனச் சங்கு தாரை அளவு இறந்த பல்லியங்கள் முழக்கி ஆர்த்துப் 
பார் குலவு தனக் காளம் சின்னம் எல்லாம் பர சமய கோள் அரி வந்தான் என்று ஊத 12.2802 

மன்னும் பெரும் சுற்றத்தார் எல்லாரும் வந்து ஈண்டி 
நன்னிலைமைத் திருநாளுக்கெழுநாளாம் நல் நாளில் 
பன்மணி மங்கல முரசம் பல்லியங்கள் நிறைந்து ஆர்ப்ப 
பொன் மணிப் பாலிகை மீது புனித முளை பூரித்தார் 12.3070

எயிலணையும் முகில் முழக்கும் எறிதிரை வேலையின் முழக்கும் 
பயில் தரு பல்லிய முழக்கும் முறை தெரியாப் பதி அதனுள் 
வெயில் அணி பல் மணி முதலாம் விழுப்பொருள் ஆவன விளக்கும் 
தயில வினைத் தொழில் மரபில் சக்கரப் பாடி தெருவு 12.4026

வயப்பரியின் களிப்பு ஒலியும் மறவர் படைக்கல ஒலியும் 
கயப் பொருப்பின் முழக்கு ஒலியும் கலந்து எழு பல்லிய ஒலியும் 
வியக்குமுகக் கடை நாளின் மேக முழக்கு என மீளச் 
சயத்தொடர் வல்லியும் இன்று தாம் விடுக்கும் படி தயங்க 12.4073

Related Content

திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்

ஆகுளி-திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்

இடக்கை-திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்

இலயம்-திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்

உடுக்கை-திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்