logo

|

Home >

information-to-know >

murasu-thirumurai-musical-instruments

முரசு (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)

Murasu - Ancient music instruments mentioned in thirumurai

Thirumurais composed in the first millenium refer to many of the music instruments in vogue at that time. Many of them are still in use even today.Here is the list of the instruments.

Thirumurai isaikkaruvi - Murasu

 

Instrument Reference
முரசு பணியுடை மாலும் மலரினோனும் பன்றியும் வென்றிப் பறவையாயும் 
நணுகல் அரியநள் ளாறுடைய நம்பெரு மானிது வென்கொல்சொல்லாய் 
மணியொலி சங்கொலி யோடுமற்றை மாமுர சின்னொலி என்றும்ஓவா 
தணிகிளர் வேந்தர் புகுதுங்கூடல் ஆலவா யின்கண் அமர்ந்தவாறே. 1.7.9 

சுரர்மாதவர் தொகுகின்னரர் அவரோதொலை வில்லா 
நரரானபன் முனிவர்தொழ இருந்தானிடம் நலமார் 
அரசார்வர அணிபொற்கல னவைகொண்டுபன் னாளும் 
முரசார்வரு மணமொய்ம்புடை முதுகுன்றடை வோமே. 1.12.4 

பெயலார்சடைக்கோர் திங்கள்சூடிப் பெய்பலிக்கென்றயலே 
கயலார்தடங்கண் அஞ்சொல்நல்லார் கண்டுயில்வவ்வுதியே 
இயலால்நடாவி இன்பமெய்தி இந்திரனாள்மண்மேல் 
வியலார்முரச மோங்குசெம்மை வேணுபுரத்தானே. 1.63.2 

மாடெ லாமண முரசெனக் கடலின தொலிகவர் மாதோட்டத் 
தாட லேறுடை அண்ணல்கே தீச்சரத் தடிகளை யணிகாழி 
நாடு ளார்க்கிறை ஞானசம் பந்தன்சொல் நவின்றெழு பாமாலைப் 
பாட லாயின பாடுமின் பத்தர்காள் பரகதி பெறலாமே. 2.107.11 

முரசதிர்ந் தெழுதரு முதுகுன்ற மேவிய 
பரசமர் படையுடை யீரே 
பரசமர் படையுடை யீருமைப் பரவுவார் 
அரசர்கள் உலகில்ஆ வாரே. 3.99.1 

நரியைக் குதிரைசெய் வானும் நரகரைத் தேவுசெய் வானும் 
விரதங்கொண் டாடவல் லானும் விச்சின்றி நாறுசெய் வானும் 
முரசதிர்ந் தானை முன்னோட முன்பணிந் தன்பர்கள் ஏத்த 
அரவரைச் சாத்திநின் றானும் ஆரூ ரமர்ந்தஅம் மானே. 4.4.2 

பரசா ருங்கரவா பதினெண்கண முஞ்சூழ 
முரசார் வந்ததிர முதுகுன்ற மமர்ந்தவனே 
விரைசே ருங்குழலாள் பரவையிவள் தன்முகப்பே 
அரசே தந்தருளாய் அடியேனிட் டளங்கெடவே. 7.25.8 

எம்தம் பிறவியில் கோபம் மிகுந்து 
முரசு ஏறிந்து மாப்பெருங் கருணையில் முழங்கிப் 8.திருவா.3.73 

இன்பால் மொழிக்கிள்ளாய் எங்கள் பெருந்துறைக்கோள் 
முன்பால் முழங்கும் முரசியம்பாய் - அன்பாற் 
பிறவிப் பகைகலங்கப் பேரின்பத் தோங்கும் 
பருமிக்க நாதப் பறை. 8.திருவா.365 

பாப்பணி யோன்தில்லைப் பல்பூ மருவுசில் ஓதியைநற் 
காப்பணிந் தார்பொன் அணிவார் இனிக்கமழ் பூந்துறைவ 
கோப்பணிவான் தோய்கொடி முன்றில் நின்றிவை ஏர்குழுமி 
மாப்பணி லங்கள் முழுங்கத் தழங்கும் மணமுரசே. 8.கோவை.196 

பூரண பொற்குடம் வைக்க மணிமுத்தம் பொன்பொதிந்த 
தோரணம் நீடுக தூரியம் ஆர்க்கதொன் மால்அயற்கும் 
காரணன் ஏரணி கண்ணுத லோன்கடல் திலலையன்ன 
வாரண வும்முலை மன்றலென்(று) ஏங்கும் மணமுரசே. 8.கோவை.296 

அடற்களி யாவர்க்கும் அன்பர்க்(கு) அளிப்பவன் துன்பஇன்பம் 
படக்களி யாவண் டறைபொழில் தில்லைப் பரமன்வெற்பில் 
கடக்களி யானை கடிந்தவர்க் கோஅன்றி நின்றவர்க்கோ 
விடக்களி யாம்நம் விழுநகர் ஆர்க்கும் வியன்முரசே. 8.கோவை.297 

பிரசம் திகழும் வரைபுரை யானையின் பீடழித்தார் 
முரசம் திகழும் முருகியம் நீங்கும் எவர்க்குமுன்னாம் 
அர(சு)அம் பலத்துநின்(று) ஆடும் பிரானருள் பெற்றவரின் 
புரைசந்த மேகலை யாய்துயர் தீரப் புகுந்துநின்றே. 8.கோவை.299 

பரசு வந்தியர் முன் சூதர் மாகதர் ஒருபால் பாங்கர் 
விரை நறுங் குழலார் சிந்தும் வெள் வளை ஒருபால் மிக்க 
முரசொடு சங்கம் ஆர்ப்ப முழங்கொலி ஒருபால் வென்றி 
அரசிளங் குமரன் போதும் அணி மணி மாட வீதி 12.0106 

தொண்டக முரசும் கொம்பும் துடிகளும் துளை கொள் வேயும் 
எண்டிசை நிறைந்து விம்ம எழுந்த பேர் ஒலியினோடும் 
திண்டிறல் மறவர் ஆர்ப்புச் சேண் விசும்பு இடித்துச் செல்லக் 
கொண்ட சீர் விழவு பொங்கக் குறிச்சியை வலம் கொண்டார்கள் 12.0687 

கஞ்சாறர் மகள் கொடுப்பக் கைப் பிடிக்க வருகின்ற 
எஞ்சாத புகழ்ப் பெருமை ஏயர் குலப் பெருமானும் 
தஞ்சால்பு நிறை சுற்றம் தலை நிறைய முரசு இயம்ப 
மஞ்சாலும் மலர்ச் சோலைக் கஞ்சாற்றின் மருங்கணைய 12.0885 

பரசும் கருணைப் பெரியோன் அருளப் பறி புன் தலையோர் நெறி பாழ்பட வந்து 
அரசு இங்கு அருள் பெற்று உலகு உய்ந்தது எனா அடியார் புடை சூழ் அதிகைப் பதி தான் 
முரசம் பட கந்துடி தண்ணுமை யாழ் முழவம் கிளை துந்துபி கண்டை உடன் 
நிரை சங்கு ஒலி எங்கும் முழங்குதலால் நெடு மா கடல் என்ன நிறைந்துளதே 12.1341 

அரசனது பணிதலை நின்ற அமைச்சர்களும் அந்நிலையே 
முரசு அதிரும் தானையொடு முன் சென்று முகில் சூழ்ந்து 
விரை செறியும் சோலை சூழ் திருவதிகை தனை மேவி 
பரசமயப் பற்று அறுத்த பான்மையினார் பால் சென்றார் 12.1356 

மணம் இசைந்த நாள் ஓலை செலவிட்டு மங்கல நாள் 
அணைய வதுவைத் தொழில்கள் ஆன எலாம் அமைவித்தே 
இணர் அலங்கல் மைந்தனையும் மண அணியின் எழில் விளக்கி 
பணை முரசம் எழுந்து ஆர்ப்பக் காரைக்கால் பதி புகுந்தார் 12.1726 

தாழ்ந்து எழுந்து முன் முரசு அதிர்ந்து எழும் எனும் தண் தமிழ் தொடை சாத்தி 
வாழ்ந்து போந்து அங்கண் வளம்பதி அதன் இடை வைகுவார் மணி வெற்புச் 
சூழ்ந்த தண் புனல் சுலவு முத்தாறொடு தொடுத்த சொல் தொடை மாலை 
வீழ்ந்த காதலால் பல முறை விளம்பியே மேவினார் சில நாள்கள் 12.2081 

மறை முழங்கின தழங்கின வண்தமிழ் வயிரின் 
குறை நரன்றன முரன்றன வளைக்குலம் காளம் 
முறை இயம்பின இயம்பல ஒலித்தன முரசப் 
பொறை கறங்கின பிறங்கின போற்றிசை அரவம் 12.2131 

மண் உலகு செய்த தவப் பயனாய் உள்ள வள்ளலார் அப்பதிகள் வணங்கி ஏகி 
எணில் முரசு இரங்கி எழப் பணிலம் ஆர்ப்ப இலங்கிய காளம் சின்னம் எங்கும் ஊதக் 
கண் வளர் மென் கரும்பு மிடை கதிர்ச் செம்சாலி கதலி கமுகு உடன் ஓங்கும் கழனி நாட்டுத் 
தெண் நிலவு சூடிய தம் பெருமான் வைகும் திருப்பிரம புரம் சாரச் செல்லும்போது 12.2154 

சின்னம் தனிக் காளம் தாரை சிரபுரத்து ஆண்டகை வந்தார் 
என்னும் தகைமை விளங்க ஏற்ற திருப் பெயர் சாற்ற 
முன் எம்மருங்கும் நிரத்த முரசு உடைப் பல்லியம் ஆர்ப்ப 
மன்னும் திருத்தொண்டனார் வந்து எதிர் கொண்டு வணங்க 12.2181 

நிறை குடம் தூபம் தீபம் நீட நிரைத்து ஏந்தி 
நறை மலர் பொன் சுண்ணம் நறும் பொரியும் தூவி 
மறை ஒலி போய் வான் அளப்ப மா முரசம் ஆர்ப்ப 
இறைவர் திரு மைந்தர் தமை எதிர் கொள் வரவேற்றார் 12.2438 

கார மண் வெஞ்சுரம் அருளால் கடந்தார் தாமும் கடல் காழி கவுணியர் தம் தலைவர் தாமும் 
சேர எழுந்து அருளிய அப் பேறு கேட்டுத் திறை மறைக் காட்டு அகன்பதியோர் சிறப்பில் பொங்கி 
ஊர் அடைய அலங்கரித்து விழவு கொள்ள உயர் கமுகு கதலி நிறை குடம் தீபங்கள் 
வார் முரசம் மங்கள் நாள் தங்கள் மல்க எதிர் கொள்ள அடியாருடன் மகிழ்ந்து வந்தார் 12.2474 

பன் மணி முரசம் சூழ்ந்த பல்லியம் இயம்பப் பின்னே 
தென்னனும் தேவியாரும் உடன் செலத் திரண்டு செல்லும் 
புன் நெறி அமணர் வேறு ஓர் புடைவரப் புகலி வேந்தர் 
மன்னிய வைகை ஆற்றின் கரை மிசை மருவ வந்தார் 12.2709 

முரசு இயம்பிய மூன்று நாள் அகவையின் முற்ற 
அரசர் பாங்கு உளோர் உள்பட அவனி மேல் உள்ள 
கரையில் கல்வியோர் யாவரும் அணைந்து தம் காட்சி 
புரையில் செய்கையில் தீர்ந்திடாது ஒழிந்திடப் போனார் 12.2962 

மன்னும் பெரும் சுற்றத்தார் எல்லாரும் வந்து ஈண்டி 
நன்னிலைமைத் திருநாளுக்கெழுநாளாம் நல் நாளில் 
பன்மணி மங்கல முரசம் பல்லியங்கள் நிறைந்து ஆர்ப்ப 
பொன் மணிப் பாலிகை மீது புனித முளை பூரித்தார் 12.3070

வன் தொண்டர் தமக்கு அளித்த நெல் கண்டு மகிழ் சிறப்பார் 
இன்று உங்கள் மனை எல்லைக்கு உள்படும் நெல் குன்று எல்லாம் 
பொன் தங்கு மாளிகையில் புகப் பெய்து கொள்க என 
வென்றி முரசு அறைவித்தார் மிக்க புகழ் பரவையார் 12.3182 

முரசங் கொள் கடல் தானை மூவேந்தர் தங்களின் முன் 
பிரசம் கொள் நறுந்தொடையல் புகழ்ச் சோழர் பெருமையினைப் 
பரசும் குற்றேவலினால் அவர் பாதம் பணிந்து ஏத்தி 
நரசிங்க முனையர் திறம் நாம் அறிந்தபடி உரைப்பாம் 12.3982 

அரசியல் ஆயத் தோடும் அங்கணர் கோயில் உள்ளால் 
முரசுடைத்தானை மன்னர் முதல்வரை வணங்கும் போதில் 
விரை செறிமலர் மென் கூந்தல் உரிமை மெல் இயலார் தம் உள் 
உரை சிறந்து உயர்ந்த பட்டத்து ஒருதனித் தேவி மேவி 12.4099 

அரசனும் அதனைக் கேட்டு அங்கு அதிசயம் எய்தி என்னே 
புரையறு சிந்தை அன்பர் பெருமை என்று அவரைப் போற்றி 
விரை செறி மாலை தாழ நிலமிசை வீழ்ந்து தாழ்ந்து 
முரசெறி தானை யோடு மீண்டு தன் மூதூர்ப் புக்கான் 12.4186 

பரவும் பெருமைத் திருப்பதிகம் பாடி பணிந்து போந்து அன்பு 
விரவு மறையோன் காதலனை வெண்ணூல் பூட்டி அண்ணலார் 
முரசம் இயம்பக் கலியாணம் முடித்து முடிச் சேரலர் தம்பால் 
குரவ மலர்ப் பூந்தண் சோலை குலவு மலை நாடு அணைகின்றார் 12.4242 

செய்வது ஒன்றும் அறியாது சிந்தை மகிழ்ந்து களி கூர்ந்து 
என் ஐயன் அணைந்தான் எனை ஆளும் அண்ணல் அணைந்தான் ஆரூரில் 
சைவன் அணைந்தான் என் துணையாம் தலைவன் அணைந்தான் தரணி எலாம் 
உய்ய அணைந்தான் அணைந்தான் என்று ஓகை முரசம் சாற்று வித்தார் 12.4245 

அரிவையர் தெருவில் நடம் பயில் அணி கிளர் தளிர் அடி தங்கிய 
பரிபுர ஒலிகள் கிளர்ந்தன பணை முரசு ஒலிகள் பரந்தன 
சுரிவனை நிரைகள் முரன்றன துணைவர்கள் இருவரும் வந்து அணி 
விரிதரு பவன நெடும் கடை விறல் மத கரியின் இழிந்தனர் 12.4252 
 

Related Content

திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்

ஆகுளி-திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்

இடக்கை-திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்

இலயம்-திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்

உடுக்கை-திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்