logo

|

Home >

hindu-hub >

temples

கொடிமாடச் செங்குன்றூர் (திருச்செங்கோடு) அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில் வரலாறு

இறைவர் திருப்பெயர்: அர்த்தநாரீஸ்வரர்.

இறைவியார் திருப்பெயர்: பாகம்பிரியாள்.

தல மரம்:

தீர்த்தம் : தேவ தீர்த்தம். பிரம தீர்த்தம்

வழிபட்டோர்:சம்பந்தர், கபிலதேவ நாயனார், பட்டினத்துப் பிள்ளையார், சேக்கிழார், கேதார கௌரி.

Sthala Puranam

cengunrur temple

  • மலை சிவந்தநிறமாக இருப்பதால் செங்கோடு என்று பெயர் பெற்றது. தெய்வத்திருமலை, நாகமலை, உரககிரி எனப் பல பெயர்களும் உள்ளது.
  •  ஒருமுறை ஆதிசேஷனுக்கும் வாயு பகவானுக்கும் தங்களில் யார் பெரியவர் என்ற போட்டி ஏற்பட்டது.  ஆதிசேஷன்  தன் படங்களால் மேரு மலையை அழுத்திப் பிடித்துக் கொள்ள  வாயு தன் பலத்தால் மலையை  விடுவிக்க வேண்டும் என்று பந்தயம்.  இதன்படி  ஆதிசேஷன்  மேருமலையை  படம் எடுத்து மூடிக்கொள்ள  வாயு வீசிய வேகத்தில் மலையின் சில முகடுகள் பறந்து சென்று பல இடங்களில் விழுந்தன.  அவற்றில் ஒன்று திருச்செங்கோடு.  அதனால் இம்மலைக்கு நாககிரி வாயுமலை என்றும் பெயர்கள் உண்டு
  • கேதாரகௌரி, மரகத லிங்கத்தைப் பூசித்து, இறைவனின் பாகத்தைப் பெற்றதாக வரலாறு சொல்லப்படுகிறது.
  • சம்பந்தர் கொங்கு நாட்டுத் தல யாத்திரையில் முதலில் இப்பதியை வணங்கி, பின்பு சில தலங்களுக்குச் சென்றுவிட்டு திரும்பவும் இங்கு வந்த போது, அவருடன் வந்த அடியார்களை 'நளிர்சுரம்' பற்றி வருத்த 'அவ்வினைக் கிவ்வினை' என்னும் பதிகம் பாடி, 'தீவினைவந்தெம்மைத் தீண்டப்பெறா திருநீலகண்டம்' என ஆணையிட்டு அந்நாடு முழுவதும் பிணிதீர்த்தார் என்பது பெரியபுராண வரலாறு.
  • இத்தலத்துச் சொல்லப்படும் ஒரு செய்தி :- இங்கு வாழ்ந்த குணசீலர் என்ற புலவருக்காகச் செங்கோட்டுவேலர் மாடு மேய்கும் சிறுவனாக வந்து குணசீலரின் கடைமாணாக்கர் என்று தன்னைக் கூறிக்கொண்டாராம். பாண்டிப்புலவரேறு என்பவர்; "சமரமுகத் திருச்செங்கோடு சர்ப்பசயிலமெனில் அமரிற்படம் விரித்து ஆடாததென்னே" - என்று பாடி அதற்குமேல் எழுதமுடியாது திண்டாடினாராம்; அப்போது, சிறுவனாக வந்த வேலவன் "அஃது குமரன் திருமால் முருகன் மயில்வாகனம் கொத்துமென்றே" - எனப் பாட்டினை முடித்து அப்புலவரைத் திரும்பிப் போகும்படிச் செய்தார் என்ற செய்தி இம்மலையடிவாரத்தில் நிகழ்ந்ததாகுமென்று சொல்லப்படுகிறது.
  • வீரகவிராஜபண்டிதரால் பாடப்பட்ட தலபுராணம் உள்ளது.

 

தேவாரப் பாடல்கள் : பதிகங்கள்     :       சம்பந்தர்       -   1. வெந்தவெண் ணீறணிந்து (1.107); பாடல்கள்      : கபிலதேவ நாயனார் -      சிவன்மாட் டுகவெழுதும் (11.23.95), சிவபெருமான் திருவந்தாதி,              பட்டினத்துப் பிள்ளையார்  -      இறைத்தார் புரம்எய்த (11.30.59) திருஏகம்பமுடையார் திருவந்தாதி,                        சேக்கிழார்        -      அண்டர் பிரான் (12.28.324 & 327) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம்.

 

 

Specialities

cengunrur temple
  • சிவத்தலமாகயிருப்பினும் இது முருகப்பெருமானுக்கு மிகவும் உகந்த தலம்.
  • இது அர்த்தநாரித் தலம்.
  • இத்தலம் மலைமீது உள்ளது.
  • மேலமாட வீதியிலிருந்து பார்த்தால் இம்மலை பார்ப்பதற்கு நாகம் போன்றிருப்பதால் நாகாசலம் நாககிரி என்றும் பெயர் உண்டு.
  • கோயிலுக்குச் செல்ல மலைமீது 1200 படிகள் ஏற வேண்டும். படிகட்டுக்களில் பாம்பு உருவங்கள் உள்ளன.
  • ஓரிடத்தில் நீளமான (20 அடி) பாம்பு வாடிவத்திலேயே ஏறும் வழி அமைந்துள்ளது.
  • மலையேற உள்ள படிகளில் 60 ஆம் படி மிகச் சிறப்பு வாய்ந்ததாக சொல்லப்படுகிறது. இங்கு நின்று சத்தியம் செய்தால் அது நீதி மன்றத்திலும் ஏற்றுக் கொள்ளப்படும் என்ற நிலை இருந்ததாம்.
  • இறைவன் வெள்ளை பாஷாணத்தால் ஆன சுயம்பு மூர்த்தி. உளி படாதது விடங்கம் - அடியில் சதுரபீடம்.
  • அர்த்தநாரீஸ்வரர் மூலவர் - நின்ற திருமேனி. (இலிங்க வடிவமில்லை) பாதி புடவை - பாதி வேஷ்டி அலங்காரம்; இந்த கோலத்திலேயே (மூலவர்) காட்சி தருகிறார். முழு வடிவமும் வெள்ளைப் பாஷாணத்தால் ஆனது.
  • திருவடியில் கீழ் குளிர்ந்த நீர் சுரக்கின்றது. இது தேவ தீர்த்தம் எனப்படுகின்றது. இத்தீர்த்தம் நாடொறும் வரும் அன்பர்கட்கு வழங்கப்படுவதைப்போல, அமாவாசை நாள்களில் 3, 4 அண்டாக்களில் சேகரிக்கப்பட்டு மக்களுக்கு வழங்கப்படுகிறது.
  • மூலவர் முன்னால் மரகத லிங்கமும், பிருங்கி மகரிஷியின் உருவமும் உள்ளது.
  • அர்த்தநாரீஸ்வரர் உற்சவத் திருமேனி மிக அற்புதமாகவுள்ளது.  ஆண்பக்கத்தில் (வலம்) கையில் 
    தண்டாயுதம், பெண்பக்கத்தில் (இடம்) கை இடுப்பில் வைத்த அமைப்பு: மார்பில் பெண் பக்கத்தில் கொங்கை, 
    திருவடிகளில் ஒன்றில் சிலம்பு , மற்றொன்றில் கழல், கண்களில் கூட ஆண், பெண் பாக வேறுபாடு ஒரு 
    மயிரிழையில் அகலமாகவும் குறுகலாகவும் அமைந்த அழகுத் திருமேனி.   
  • செங்கோட்டு வேலவர் "அழகு மிளிரும்" நின்ற திருவுருவம்
  • இங்குள்ள ஆதிகேசவ பெருமாள் சந்நிதி, நம்மாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்டதாகும்.
  • ஊரின் நடுவில் சுகந்த குந்தளாம்பிகை சமேத கயிலாசநாதர் கோயில் உள்ளது. 
  • இத்தலம் பற்றிய குறிப்புக்கள் சிலப்பதிகாரம், தேவாரம், கந்தர் அநுபூதி, கந்தர் அலங்காரம் முதலியவைகளில் உள்ளன.
  • நாகேஸ்வரரின் கருவறை, சிற்ப வேலைப்பாடுமிக்கது. கருவறை முன்மண்டபத்தில் குதிரை அல்லது யாளி மீதுள்ள வீரர்களின் கற்றூண் சிற்பங்கள் உள்ளன. 
  • வேளாளக்கவுண்டர் மண்டபத்தூண் ஒன்றில் வீரபத்திரர் உருவமும், மற்றொன்றில் அர்ச்சுனன் தவக்கோலம், வேடன், குருவிக்காரியின் உருவமும் சிற்பக்கலையழகு நிறைந்தவை.
  • மலை மீதிருந்து பார்த்தால் காவிரி ஆறு தெரியும்.
  • ஐந்து நிலை ராஜ கோபுரம் 
  • அர்த்தநாரீஸ்வரர்  சதய நட்சத்திரத்திற்கு  அதிபதியாக இருப்பதால் எல்லா சதய  நட்சத்திரத்திலும்  அர்த்தநாரீஸ்வரருக்கு அபிஷேகம் நடைபெறுகிறது
  • கல்வெட்டு: பரகேசரி வர்மனான முதலாம் இராஜராஜன், மதுரை கொண்ட முதற் பரகேசரிவர்மன், சுந்தரபாண்டிய தேவன், சொக்கப்பநாயக்கன், சொக்கலிங்கநாயக்கன், மைசூர் கிருஷ்ணராஜ உடையார் முதலிய அரசர்களின் கல்வெட்டுக்கள் இங்குக் காணப்படுகின்றன. 
  • அவற்றால் அறியப்படுவன பெரும்பாலானவை அந்தணர்களுக்கு அன்னமும், யாத்தீரிகர்களுக்கு உணவும், விளக்கிற்கு நெய்யும் அளிக்கப்பெற்ற நிபந்தங்களகும். 
  • கி.பி. 1660 முதல் 1682 வரை அரசாண்ட விஸ்வநாத சொக்கலிங்கர் காசிவிசுவேசர் கோயிலையும் கோபுரத்தையும் கட்டினார்.

Contact Address

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு சேலம், ஈரோடு, நாமக்கல் முதலிய ஊர்களிலிருந்து பேருந்தில் செல்லலாம். ஈரோட்டிலிருந்து 18-கி. மீ. மற்றும் நாமக்கல்லிலிருந்து 32-கி.மீ. தொலைவில் உள்ளது. தொடர்பு : 04288 - 255925, 09364229181.

Related Content

திருப்புக்கொளியூர் அவிநாசி லிங்கேஸ்வரர் திருக்கோயில் வரலாறு

திருமுருகன்பூண்டி முருகநாதேஸ்வரர் திருக்கோயில் வரலாறு

திருநணா (பவானி) சங்கமேஸ்வரர் திருக்கோயில் வரலாறு

வெஞ்சமாக்கூடல் (வெஞ்சமாங்கூடலூர்)

திருப்பாண்டிக்கொடுமுடி (கொடுமுடி) மகுடேஸ்வரர் திருக்கோயில் வ