logo

|

Home >

hindu-hub >

temples

திருமுருகன்பூண்டி முருகநாதேஸ்வரர் திருக்கோயில் வரலாறு

இறைவர் திருப்பெயர்: முருகநாதேஸ்வரர், முருகநாதசுவாமி.

இறைவியார் திருப்பெயர்: ஆலிங்கபூஷணஸ்தனாம்பிகை, முயங்குபூண்முலையம்மை, ஆவுடைநாயகி, மங்களாம்பிகை.

தல மரம்:

வில்வம்

தீர்த்தம் : பிரமதீர்த்தம், ஞானதீர்த்தம், சுப்பிரமணியதீர்த்தம். ஷண்முக தீர்த்தம், நொய்யல் ஆறு

வழிபட்டோர்:சுந்தரர், அப்பர், சேக்கிழார், முருகப்பெருமான், அகத்தியர், மார்க்கண்டேயர், துர்வாசர் ஆகியோர்.

Sthala Puranam

Full view of temple

  • முருகப்பெருமான் வழிபட்ட தலம். அதனால் முருகன் பூண்டி எனப் பெயர் பெற்றது. முருகப்பெருமான் சூரபத்மனைக் கொன்றதால் ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷத்தைப் போக்கிக்கொள்ளும் பொருட்டு இந்த சிவஸ்தலத்திற்கு வந்து சிவலிங்கத்தை நிறுவிப் பூஜை செய்தார்.
  • அகத்தியர் மார்க்கண்டேயர் துர்வாசர் ஆகியோர் வழிபட்ட தலம். 
  • துர்வாசர் கற்பக உலகிலிருந்து மாதவி மர (குருக்கத்தி மர)த்தை இங்கு கொண்டு வந்தார் என்பர்; ஆதலால் இதற்கு மாதவிவனம் என்றும் பெயர்.
  • மகாரதன் என்னும் பாண்டிய மன்னன் சண்முக தீர்த்தத்தில் நீராடிபி புத்திரப் பேறு  கிடைப்பதற்காகப்  பசும்பால், கற்கண்டு சேர்த்து செய்த பாயசத்தை இறைவனுக்கு நைவேத்தியம் செய்து அந்தணர்களுக்கு  வழங்கினான். அதன் பயனாக இரட்டைக் குழந்தைகளைப் பெற்று  மகிழ்ந்தான்.
  • சுந்தரர் பெருமான்  கொடுங்கோளூரில்  தமது நண்பரான  சேரமான் பெருமாள் அளித்த  வெகுமதிகளைப் பெற்றுக்கொண்டு  இந்த வழியாகத் திருவாரூர் செல்லும் போது  இறைவன்  வேடர்களை அனுப்பி  அவர் வைத்திருந்த வெகுமதிகளைக்  கவர்ந்து வரச் செய்தார்.  சுந்தரர் பெருமான்  திருமுருகன்பூண்டி  திருத்தலத்து இறைவனிடம்  "கொடுகு வெஞ்சிலை" என்ற பதிகம் பாடி முறையிட,  இறைவன்  தம்முடைய திருவருளாக அந்த வெகுமதிகளை மீண்டும் சுந்தரருக்கு அளித்தார்.
  • இத்தலம் பிரமகத்தி தோஷம் நீங்கிய தலம்.
  • இத்தலத்திற்கு செட்டிப்பாளையம் வாசுதேவ முதலியார் பாடிய தலபுராணம் உள்ளது.

 

தேவாரப் பாடல்கள் : பதிகங்கள்     :    சுந்தரர்    -    1. கொடுகு வெஞ்சிலை (7.49); பாடல்கள்      :    அப்பர்     -       தில்லைச் சிற்றம்பலமுஞ் (6.70.1);                    சேக்கிழார்   -       ஆரூரர் அவர் தமக்கு (12.37.164,165 & 168) கழறிற்றறிவார் நாயனார் புராணம்,                                          செறிவுண்டு (12.52.7)  முனையடுவார் நாயனார் புராணம், (சுந்தரமூர்த்தி சுவாமிகள் துதி),                                          செற்றார் தம் புரம் எரித்த (12.64.2) அப்பாலும் அடிச்சார்ந்தார் புராணம், (சுந்தரமூர்த்தி சுவாமிகள் துதி).

Specialities

Tirumuruganpundi temple
  • நொய்யல் ஆற்றின் வடபகுதியில் அமைந்த தலம்.
  • சுவாமியும் அம்பாளும் மேற்கு பார்த்த சந்நிதிகள்; மூலவர் அம்பாள் பீடத்தின் கோமுகம் வடக்கு நோக்கி உள்ளது.
  • பதினாறுகால் மண்டபத்தைத் தாண்டி உள்ளே சென்றால் வலப்பால் வேடுவர் உருவமும் சுந்தரர் உருவங்கள் இரண்டும் (ஒன்று பறிகொடுத்து முகம் வாடிய நிலையிலும், மற்றொன்று மீண்டும் பெற்ற மகிழ்ச்சி நிலையிலும்) உள்ளன.
  • வழிமறித்து நிதிபறித்த இறைவன் இருக்குமிடத்தைக் கூப்பிட்டுச் சுந்தரருக்குக் காட்டிய (வேடுபறி நடந்த இடம்) 'கூப்பிடுவிநாயகர்' அவிநாசிக்கு போகும் வழியில் 1 கி.மீ. தொலைவில் பாறைமேல் உள்ளார்.
  • கருவறையின் பின்புறச் சுவரில் யானை ஒன்று தும்பிக்கையால் சிவலிங்கத்தைத் தூக்கிப் பிடித்திருப்பதை அழகிய புடைப்புச் சிற்பமாக வடித்துள்ளனர். 
  • கோயிலுக்கு வெளியே கருங்கல் தீபஸ்தம்பம் உள்ளது.
  • சித்தபிரமை, பைத்தியம், பில்லி, சூன்யம் இவை நீங்க வேண்டுவோர் இங்கு வந்து தங்கியிருந்து நீராடி வழிபடுவதை இன்றும் காணலாம்.
  • பிரமதாண்டவ நடராசர் சந்நிதிக்கு சற்று தொலைவில் மாலாதரன் எனும் வேட மன்னன் வழிபட்ட மாதவனேஸ்வரர் கோயில் உள்ளது; நல்ல கல் கட்டிடம்.
  • எங்கும் இல்லாத புதுமையாக கோயிலின் முன் மண்டபத்தின் மேல், பெரிய நந்தி, ஆலயத்தைப் பார்த்தவாறு சுதையால் அமைக்கப்பட்டுள்ளது.
  • மாசியில் 13 நாட்கள் பிரம்மோற்சவம்.
  • கல்வெட்டு: இத்திருக்கோயிலில் கொங்குச் சோழரில் வீரராஜேந்திரன் கல்வெட்டு ஒன்று இருக்கிறது. மற்றும் கோனேரின்மை கொண்டான், குலோத்துங்க சோழ தேவன், விக்கிரம சோழதேவன், இவர்களின் கல்வெட்டுக்களும் இருக்கின்றன. அக்கல்வெட்டுக்களன்றி வீர நஞ்சையராய உடையார் கல்வெட்டு ஒன்றும் உண்டு.
  • இங்குக் குறித்த அரசர்களில் வீரராஜேந்திரன், குலோத்துங்க சோழதேவன் இவர்கள் காலங்களின் கல்வெட்டுக்கள் திருமுருகன் பூண்டிக் கோயிலில் விளக்கு எரிப்பதற்கு நிவந்தங்கள் அளித்ததைக் குறிப்பிடுகின்றன. விக்கிரம சோழன் கல்வெட்டு நந்தவனத்திற்கு நிலம் அளித்ததைக் கூறுகின்றது.

Contact Address

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு அவிநாசியிலிருந்து 5-கி. மீ. தொலைவில் உள்ளது. பேருந்து வசதிகள் நிறைய உள்ளது. தொடர்பு : 04296 - 273507

Related Content

திருப்புக்கொளியூர் அவிநாசி லிங்கேஸ்வரர் திருக்கோயில் வரலாறு

திருநணா (பவானி) சங்கமேஸ்வரர் திருக்கோயில் வரலாறு

கொடிமாடச் செங்குன்றூர் (திருச்செங்கோடு) அர்த்தநாரீஸ்வரர் தி

வெஞ்சமாக்கூடல் (வெஞ்சமாங்கூடலூர்)

திருப்பாண்டிக்கொடுமுடி (கொடுமுடி) மகுடேஸ்வரர் திருக்கோயில் வ