கோயில் பிரகாரத்தின் தென்கிழக்கில் அரச மரத்தின் கீழ் இருக்கும் இந்த அதிசய விநாயகர் உத்தராயண காலத்தில் (தை - ஆனி) வெள்ளை நிறத்திலும், தக்ஷிணாயண காலத்தில் (ஆடி - மார்கழி) கறுப்பு நிறத்திலும் மாறுகிறார்.
கல்வெட்டுகள்: இக்கோயிலின் சுற்றாலை மண்டபங்கள், மடப்பள்ளி, ரிஷப மண்டபம், கருவறை விமானம் ஆகியவற்றை கட்டியவன் வேணாட்டு அரசன் வீர ரவிவர்மன் குலசேகரப்பெருமாள், கட்டிய ஆண்டு 1606. இவன் உமையம்மா ராணியின் மகன். அம்மாவின் ஆணைப்படி இக்கோவிலைக் கட்டியிருக்கிறான். இன்னொரு கல்வெட்டு வீர உதயமார்த்தாண்டவர்மா என்ற அரசன் இக்கோயிலுக்கு அளித்த நிபந்தத்தைக் கூறும், இது 1317 ஆம் ஆண்டுக் கல்வெட்டு.
இக்கோயிலில் மாசி மாதம் 10 நாட்கள் விழா நடக்கிறது. 9 ஆம் நாளில் சுவாமித் தேர், அம்மன் தேர் என இரு தேர்கள் வருகின்றன. கங்காளநாதர் வீதியில் வரல் நிகழ்வு உண்டு.
Contact Address
Related Content
Pannippagam Sri Krathamurthi temple
Thirparappu Virabadhreswarar temple
திருவிடைக்கோடு சடையப்பர் (மகாதேவர்) ஆலயம்
கன்னியாகுமரி குகநாதீஸ்வரர் திருக்கோயில் (Kanyakumari Guhanat