பெரியான்குடி (கழுக்காணிமுட்டம்) கருணைப்புரீஸ்வரர் திருக்கோயில்
இறைவர் திருப்பெயர்: |
கருணைபுரீஸ்வரர் |
இறைவியார் திருப்பெயர்: |
மரகதவல்லி |
தல மரம்: |
|
தீர்த்தம் : |
பறவை குளம், அப்பன் குளம், முனி குளம் |
வழிபட்டோர்: |
ஸ்ரீ வைஷ்ணவி, சிறுத்தொண்டர் |
Sthala Puranam
- ஸ்ரீ வைஷ்ணவி பூஜை செய்த தலம்.
- துர்வாச முனிவரின் சாபத்தால், இரண்டு அரச குமாரர்கள் கழுகு உருவை அடைந்து, பின்னர் இவ்வாலயத்து இறைவனைப் பூசித்து, சாப விமோசனம் அடைந்தனர். கழுகுகள் ஸ்னானம் செய்த குளம் பறவைகுளம் எனப்படுகிறது.
- இவ்வூரின் கண் வாழ்ந்த சீலவதி அம்மையார் என்பவரின் பக்தியை சிறுத்தொண்டருக்குக் காட்டியதாக ஒரு செய்தி உண்டு. இவர் மற்றும் சிவனடியார்கள் ஸ்னானம் செய்த குளம் முனிகுளம் எனப்பட்டது.
- இறைவன் ஸ்னானத்திற்கான குளம் அப்பன் குளம் எனப்படுகிறது.
Specialities
- கழுகு சிவலிங்கத்தைப் பூசிக்கும் காட்சி லிங்கோத்பவரின் கோஷ்டத்தின் மேல் செதுக்கப் பட்டுள்ளது
அமைவிடம்
மாநிலம் : தமிழ் நாடு
நாகை மாவட்டம், மயிலாடுதுறை வட்டம், மயிலாடுதுறையிலிருந்து 0.5-km
Location Details
Nagapattinam, Tamil Nadu, India - 611001