logo

|

Home >

hindu-hub >

temples

திருவெற்றியூர் கோயில் தலபுராணம் Sthala Puranam of Thiruvetriyur Temple

இறைவர் திருப்பெயர்: வன்மீகநாதர், பழம்புற்றுநாதர்.

இறைவியார் திருப்பெயர்: பாகம்பிரியாள்.

தல மரம்:

தீர்த்தம் : வாசுகி

வழிபட்டோர்: மகாவிஷ்ணு, வாசுகி.

Sthala Puranam

  • 'கல்லல்' என்ற ஊருக்குப் பக்கத்தில் 'வெற்றியூர்' என்றொரு ஊர் இருப்பதால், இத்தலத்தை "திருவெற்றியூர்" என்றே அழைக்கின்றனர்.

     

  • இத்தலத்திற்கு 'ஜயபுரி' என்றும் பெயருண்டு.
  • வைப்புத்தலப் பாடல்கள்		: சம்பந்தர் - மனவஞ்சர் மற்றோட (2-39-6) 
    				 
    				  சுந்தரர் -  மூல னூர்முத லாயமுக் (7-12-3). 
  • மகாவிஷ்ணு தனக்கு ஏற்பட்ட புற்று நோயைத் இத்தல இறைவனை வழிபட்டு, சிவபுஷ்கரணியான வாசுகி தீர்த்தத்தில் நீராடி நீங்கப் பெற்ற தலம்.

Specialities

  • இத்தலம் சம்பந்தர், அப்பர், சுந்தரர் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.

     

  • "பாகம் பிரியாள் கோயில்" என்று சொன்னால் எல்லோருக்கும் தெரியும்; அவ்வளவு பிரசித்தியான கோயில்.

     

  • சிறந்த பிரார்த்தனைத் தலமாதலின் எப்போதும் மக்கள் வெள்ளம் வந்து சென்ற வண்ணமுள்ளது.

     

  • கோயிலின் பிரதான (கிழக்கு) வாயிலின் முன்பு பெரிய தீர்த்தக் குளமுள்ளது.

     

  • தட்சிணாமூர்த்தியிடத்தில் உபதேசம் பெறும் நான்கு முனிவர்களின் திருவுருவங்களும் தனித்தனி மூர்த்தங்களாகப் பக்கத்தில் வைக்கப்பட்டுள்ளன.

     

  • மாவிளக்கு பிரார்த்தனை செய்பவர்கள் கோயிலிலேயே மாவை இடித்துக்கொள்ளும் பொருட்டு, பிராகாரத்திலேயே நிறைய கல் உரல்கள் ஆங்காங்கே உள்ளன.

     

  • இக்கோயிலில் யாரேனும் திருடினால், கட்டாயம் இறைவனால் உடனேயே ஏதேனும் தண்டனை கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை மக்களிடையே நிலவுகிறது.

Contact Address

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு திருவாடானை பேருந்து நிலையத்திலிருந்து 'தொண்டி' செல்லும் பாதையில் சிறிது தூரம் சென்றதும், "திருவெற்றியூர் 10 கி. மீ." என்று கைகாட்டி உள்ள இடத்தில், வலப்புறமாகப் பிரியும் சாலையில் சென்றால் கோயிலை அடையலாம். நல்ல தார்ச்சாலை. தொண்டியிலிருந்து 9 கி. மீ. தொலைவு.

Related Content