இறைவர் திருப்பெயர்: | சுந்தரேஸ்வரர். |
---|---|
இறைவியார் திருப்பெயர்: | மீனாட்சி. |
தல மரம்: | |
தீர்த்தம் : | |
வழிபட்டோர்: | குண்டையூர் கிழார். |
வைப்புத்தலப் பாடல்கள் : சுந்தரர் - நீள நினைந்தடி யேனுமை (7-20-1).
சுந்தரருடைய திருமாளிகைக்கு செந்நெல், அரிசி, பருப்பு முதலியவற்றை அனுப்பும் திருத்தொண்டைச் செய்து வந்த குண்டையூர் கிழார் வாழ்ந்த திருத்தலம்.
ஒரு சமயம் சுந்தரர் திருக்கோளிலிக்கு வந்து பெருமானிடம், குண்டையூர் கிழார் மூலமாகத் தாம் பெற்ற நெல்லைத் திருவாரூருக்கு எடுத்துச் செல்ல ஆள்வேண்டப் பெருமான் பூதகணங்களை அனுப்பி அந்நெல்லை திருவாரூரில் சேர்ப்பித்தருளினார்.
சுந்தரேஸ்வரரை மக்கள் சொக்கநாத சுவாமி என்றழைக்கின்றனர். சொக்கநாத சுவாமி தேவஸ்தானம் என்பதே வழக்கில் உள்ளது; வெளியில் இருப்பது இச்சந்நிதி. உள்ளேஇருப்பது ரிஷபபுரீசுவரர், மங்களாம்பிகை சந்நிதியாகும்.
அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு திருக்குவளை என்று வழங்கும் திருக்கோளிலிக்குப் பக்கத்தில் 1 கி.மீ.ல் (திருக்குவளை - சாட்டியக்குடி சாலையில்) குண்டையூர் உள்ளது.