இறைவர் திருப்பெயர்: ஏகாம்பரேஸ்வரர், ஏகாம்பரநாதர்.
இறைவியார் திருப்பெயர்: சிநேகவல்லி
தல மரம்:
தீர்த்தம் :
வழிபட்டோர்:இராவணன்
Sthala Puranam
'திருவேகம்பம்' என்பதே இத்தலத்தின் பழம் பெயராகும். இஃது இன்று மாறி, 'திருவேகம்பத்து' என்று வழங்குகிறது.
கோயிலில் உள்ள பாண்டியர் மற்றும் பிற்காலக் கல்வெட்டுக்களில் "கானப்பேர் கூற்றத்தைச் சேர்ந்த திருவேகம்பம்" என்றே இவ்வூர் குறிக்கப்பட்டுள்ளது.
பெருமை வாய்ந்த காஞ்சிபுரத்தையும், அங்குள்ள ஏகாம்பர நாதரையும் நினைவிற் கொள்ளும் வகையில், பாண்டிய நாட்டில் தோன்றிய பதியே இத் திருவேகம்பம் / திருவேகம்பத்து - ஆகும். இதனாலேயே இவ்வூர் தட்சிண காஞ்சி என்று அழைக்கப்படுகிறது.
Specialities
இத்தலத்தைச் சூழ்ந்துள்ள நாடுகள் நான்காகச் சொல்லப்படுகின்றன. அவை 1. சிலாமேக வளநாடு, 2. தென்னிலை நாடு, 3. உருவாட்டி நாடு, 4. ராஜவள நாடு என்பன.
சிற்பங்களும், கல்வெட்டுக்களும் நிரம்பப் பெற்றுத் திகழும் இத்திருக்கோயில் சுமார் 700 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டதாகும். பின்பு 16ஆம் நூற்றாண்டில் திருப்பணிகள் செய்து புதுப்பிக்கப்பட்டுள்ளது.
இக்கோயிலில் 1. முதல் மாறவர்மன் சுந்தர பாண்டியன், 2. இரண்டாம் மாறவர்மன் சுந்தர பாண்டியன், 3. முதலாம் சடைய வர்மன் விக்கிரம பாண்டியன், 4. முதலாம் சடையவர்மன் வீரபாண்டியன் ஆகியோர் காலத்திய கல்வெட்டுக்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
Contact Address