இறைவர் திருப்பெயர்: மருந்தீஸ்வரர், பால்வண்ணநாதர், வேதபுரீஸ்வரர் (இலிங்கத் திருமேனி சற்று வடபக்கமாகச் சாய்ந்துள்ளது.)
இறைவியார் திருப்பெயர்: சொக்கநாயகி, சுந்தரநாயகி.
தீர்த்தம் : பஞ்சதீர்த்தம். பாப நாசினி
வழிபட்டோர்:சம்பந்தர், அப்பர், சேக்கிழார், வான்மீகி முனிவர், அகத்தியர், பிருங்கி முனிவர், சூரியன், வேதங்கள், தேவர்கள், காமதேனு முதலியோர்
Sthala Puranam
வான்மீக (வால்மீகி) முனிவர் பூஜித்தபதி ஆதலின் வான்மியூர் எனப்படுகிறது.
அகத்தியருக்கு இறைவன் மருந்து மூலிகைகள் பற்றி உபதேசம் செய்த தலம்.
வான்மீக முனிவருக்கு இறைவன் நடனக் காட்சி அருளியத் தலம்
தேவாரப் பாடல்கள் : பதிகங்கள் : சம்பந்தர் - 1. கரையுலாங் கடலிற்பொலி (2.04), 2. விரையார் கொன்றையினாய் (3.55); அப்பர் - 1. விண்டமாமலர் கொண்டு (5.82); பாடல்கள் : சேக்கிழார் - மெய் தரும் புகழ்த் (12.19.40) திருக்குறிப்புத்தொண்ட நாயனார் புராணம், நீடு திருக் கழுக் குன்றில் (12.21.330 & 331) திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம், திருத்தொண்டர் (12.28.1120, 1121 & 1124) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம்.
Specialities
சோழர் கால கல்வெட்டுகள் 16 உள்ளது. இதில் ஏழு கல்வெட்டுகள் படியெடுக்கப்பட்டுள்ளன.
Contact Address