இறைவர் திருப்பெயர்: பழமலைநாதர், விருத்தகிரீஸ்வரர்.
இறைவியார் திருப்பெயர்: பெரிய நாயகி, பாலாம்பிகை, விருத்தாம்பிகை.
தீர்த்தம் : மணிமுத்தாறு, அக்னி, குபேர, சக்கர தீர்த்தங்கள்.
வழிபட்டோர்:சம்பந்தர், அப்பர், சுந்தரர், பட்டினத்துப் பிள்ளையார்,சேக்கிழார், பிரமன், அகஸ்தியர் முதலியோர்
Sthala Puranam
சிவபெருமானால் முதலில் (ஆதியில்) படைக்கப்பெற்றது. எனவே,முதுகுன்றம் எனப்படுகிறது.
சம்பந்தரால், இத் தலத்தை அடையும்போதும், வலஞ் செய்தபோதும், வழிபட்டபோதும் தனித்தனிப் பதிகங்கள் பாடியருளப்பெற்ற பெருமையுடையது.
இங்கு இறப்பவர்களுக்கெல்லாம் உமாதேவியார் தமது ஆடையால் வீசி இளைப்பாற்ற, இறைவன் அவர்களுக்கு ஐந்தெழுத்தை உபதேசித்துத், தமது உருவமாக்கும்(சாரூப நிலை) திருப்பதி. ஆதலால், இது காசியினும் மேம்பட்டதாகும்.
தேவாரப் பாடல்கள் : பதிகங்கள் : சம்பந்தர் - 1. மத்தாவரை நிறுவிக்கடல் (1.12), 2. தேவராயும் அசுரராயும் (1.53), 3. நின்று மலர்தூவி (1.93), 4. மெய்த்தாறு சுவையும் (1.131), 5. தேவா சிறியோம் பிழையை (2.64), 6. வண்ணமா மலர்கொடு (3.34), 7. முரசதிர்ந் தெழுதரு (3.99); அப்பர் - 1. கருமணியைக் கனகத்தின் (6.68); சுந்தரர் - 1. பொன்செய்த மேனியினீர் (7.25), 2. நஞ்சி யிடையின்று நாளை (7.43), 3. மெய்யை முற்றப்பொடி (7.63); பாடல்கள் : சம்பந்தர் - அண்ணாமலை (2.39); அப்பர் - மாவாய்ப் பிளந்துகந்த (6.82); சுந்தரர் - முந்தையூர் (7.31.1); பட்டினத்துப் பிள்ளையார் - இறைத்தார் (11.30.59) திருஏகம்பமுடையார் திருவந்தாதி; சேக்கிழார் - தூங்கானை மாடத்துச் (12.21.154) திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம், அங்கு நின்று (180.181 & 182) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம், கூடலை ஆற்றூர் (12.29.104,127,132.133) ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம், உளத்தில் (12.47.9) ஐயடிகள் காடவர்கோன் நாயனார் புராணம்.
Specialities
சோழர்கள், காடவர், பாண்டியர், விஜய நகரத்தார் மற்றும் குறுநில மன்னர்கள் ஆகியோரது கல்வெட்டுகள் மொத்தம் 74 உள்ளது.
மேலும் காண்க :
Contact Address