logo

|

Home >

devotees >

sithar-karuvur-thevar-varalaru

கருவூர்த் தேவர் (சித்தர் கருவூரார்) வரலாறு

ஒன்பதாவது திருமுறையான திருவிசைப்பாவைப் பாடிய ஒன்பது அடியார்களில் கருவூர்த் தேவரும் ஒருவர். அவரது பாடல்கள் திருவிசைப்பாவில் மூன்றாவது தொகுப்பாக அமைகின்றன. இவர் கருவூரில் பிறந்ததால் கருவூர்த்தேவர் என்று அழைக்கப்படுகிறார். அவரது இயற்பெயர் தெரியவில்லை. அவர் 10 ஆம் 11 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தார். (ராஜராஜன், ராஜேந்திரன் பேரரசர்களின் சமகாலத்தவர்). அவர் அந்தணர் குலத்தில் வந்தார். வேதங்களையும் கலைகளையும் நன்கு கற்றார்; மிக இனிமையாகத் தமிழ்ப் பாடல்களைப் பாடுவதில் வல்லவர்; சிவபெருமானிடம் தன்னை அர்ப்பணித்தவர்; சித்தர் போக நாதரிடமிருந்து ஆன்மீக வழிகாட்டுதல் கிடைத்தது; பல அறிவுத் தளங்களை ஆராய்ந்து ஞானத்தை அடைந்தார்; சிவயோகம் செய்தார்; பல அற்புத சக்திகளை அடைந்த பின்னும் அகங்காரத்தால் அசைக்கப்படாமல், எளிய துறவியாகப் பித்தர்போல் நாடெங்கும் திரிந்தார்; பிச்சையெடுத்த உணவு உண்டு காடுகளிலும் மலைகளிலும் அலைந்தார்.

அவர் வட பாரதத்தின் வழியாகவும், கொங்கு, தொண்டை நாடு வழியாகவும் தென் பாண்டிய நாட்டை அடைந்தார். தாமிரபரணி ஆற்றின் கரையில் உள்ள திருப்புடை மருதூர் வந்து சேர்ந்தார். ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது, மறுகரையில் இருந்த கருவூர்த் தேவர் நாறும்பூ நாதா  என்று ஓலமிட்டார்! கன்றுக்குட்டியின் தீவிர அழைப்பில் பசுவான சிவபெருமான் அவரை நோக்கித் திரும்பி “வா” என்று அழைத்தார். வெள்ளம் தணிந்து; அவரது  அன்பின் வெள்ளம் ஞானத்தால் ஆராய முடியாத இறைவனிடம் கொண்டு சேர்த்தது. அனைத்து குருக்களின் குருவான சிவபெருமான் கருவூர்த்தேவருக்குத் தனது பாதங்கள் மூலம் தீட்சை அளித்தார். அவர்  காந்தீஸ்வரத்தில் பேரொளியான இறைவனை வழிபட்டார். திருநெல்வேலியில் இறைவனை வணங்கினார்! 

கருவூர்த்தேவர் திருக்குற்றாலத்திற்குச் சென்று சிறிது காலம் தங்கினார். பின்னர் அவர் பொதிகை மலைக்குச் சென்று, மகரிஷி அகத்தியரை சந்தித்து ஆசி பெற்றார்.

அப்போது சோழச்சக்கரவர்த்தி ராஜராஜன், தஞ்சாவூரில் ஆரம்பமும் முடிவும் இல்லாமல் பிரம்மாண்டமாக நின்ற இறைவனுக்கு ஒரு மாபெரும் கோயிலைக் கட்டிக்கொண்டிருந்தார். இறைவனின் புனித ஸ்தாபனத்திற்காக, அஷ்டபந்தன மருந்து இறுகவில்லை, இது அரசனைக் கவலையடையச் செய்தது. கருவூர்த் தேவர்த் தேவரின் ஆசனான  போகநாதர் இவரைத் தஞ்சைக்கு அழைத்தார். கருவூர்ச் சித்தர், இறைவனை வணங்கி, அஷ்டபந்தன மருந்துப் பொருளைக் கடினப்படுத்தினார். இதனால் சிவலிங்கத் திருமேனியின் பிரதிஷ்டை இனிது முடிந்தது. பின்னர் அவர் ஸ்ரீ ரங்கநாதருக்கு வணக்கம் செலுத்தச் சென்றார், பின்னர் கருவூரை அடைந்தார். அந்த ஊரின் ஆசாரமான பிராமணர்கள், வைதிக ஒழுக்கம் தவறியவர் என்றும், வாம பூசைக் காரர் என்றும் இந்த சித்தரை ஏளனம் செய்தனர். ஒரு நாள் அவர்களைக் கண்டு பயப்படுவது போல் நடந்துகொண்டு ஆனிலை சந்நிதிக்குச் சென்று பசுபதீஸ்வரரைத் தழுவிக்கொண்டார்.

திருவிசைப்பாவின் ஒன்பது ஆசிரியர்களில் இவரே அதிகப் பதிகங்களை அருளியவர் ஆவார். அவர்  கோயில் (தில்லை), திருக்களந்தை  ஆதித்தேச்சரம், கீழ்க்கோட்டூர் மணியம்பலம், திருமுகத்தலை, திரைலோக்கிய சுந்தரம், கங்கைகொண்ட சோழேச்சரம், திருப்பூவணம், திருச்சாட்டியக்குடி, தஞ்சை இராசராசேச்சரம், திருவிடைமருதூர் ஆகிய தலங்களுக்குத் திருவிசைப்பா பாடியுள்ளார்.

இவர், தஞ்சை இராசராசேச்சரம், கங்கைகொண்ட சோழேச்சரம் ஆகிய இரண்டு தலங்களையும் பாடியிருத்தலின் இவர் கி.பி. 10 ஆம் நூற்றாண்டின் கடைப்பகுதியிலும், 11ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் வாழ்ந்தவர் எனலாம். கருவூர்த் தேவரின் திருவுருவச்சிலை கருவூர்ப் பசுபதீசுவரர் கோயிலிலும், தஞ்சைப் பெரிய கோயிலிலும் விளங்குகிறது.


மேலும் காண்க: 
1. திருவிசைப்பா  
2. Thirumurai Kanda Chozan - Rajarajan 

Related Content

Karur Lord Shiva Temples Pictures

What Virtue Do I Have to Lodge You!

திருக்கச்சியேகம்ப திருத்தல தேவாரத் திருப்பதிகங்கள்

திருமாளிகைத் தேவர் வரலாறு

सिद्ध करुवूर देवर दिव्य चरित्र