logo

|

Home >

devotees >

references-to-chundharamurthi-nayanar-in-thevaram-other-thirumurais

திருமுறைகளில் சுந்தரமூர்த்தி நாயனார் பற்றிய குறிப்புகள்

 

ஒன்பதாம் திருமுறை

களையா உடலோடு சேரமான் ஆருரன்

விளையா மதமாறா வெள்ளானை மேல்கொள்ள

முளையா மதிசூடி மூவா யிரவரொடும்

அளையா விளையாடும் அம்பலம்நின் ஆடரங்கே. 5

 

பதினோறாம் திருமுறை

கோயில் திருப்பண்ணியர் விருத்தம்

 

இறையும் தெளிகிலர் கண்டும் எழில்தில்லை அம்பலத்துள்

அறையும் புனற்சென்னி யோன்அரு ளால்அன் றடுகரிமேல்

நிறையும் புகழ்த்திரு வாரூ ரனும்நிறை தார்பரிமேல்

நறையுங் கமழ்தொங்கல் வில்லவ னும்புக்க நல்வழியே.  31 

 

திருத்தொண்டர் திருவந்தாதி

 

தொழுதும் வணங்கியும் மாலயன் தேடரும் சோதிசென்றாங்

கெழுதும் தமிழ்ப்பழ ஆவணம் காட்டி எனக்குன்குடி

முழுதும் அடிமைவந் தாட்செய் எனப்பெற்ற வன்முரல்தேன்

ஒழுகு மலரின்நற் றார்எம்பி ரான்நம்பி யாரூரனே.                       11.08-நம்பி

 

‘அருட்டுறை அத்தற் கடிமைப் பட்டேன் இனி அல்லன்’என்னும்

பொருட்டுறை யாவதென் னேஎன்ன வல்லவன் பூங்குவளை

இருட்டுறை நீர்வயல் நாவற் பதிக்கும் பிரான்அடைந்தோர்

மருட்டுறை நீக்கிநல் வான்வழி காட்டிட வல்லவனே.                     11.16-நம்பி 

 

‘நிதியார் துருத்திதென் வேள்விக் குடியாய் நினைமறந்த

மதியேற் கறிகுறி வைத்த புகர்பின்னை மாற்றி’டென்று

துதியா அருள்சொன்ன வாறறி வாரிடைப் பெற்றவன்காண்

நதியார் புனல்வயல் நாவலர் கோன்என்னும் நற்றவனே.           11.23-நம்பி 

 

‘நிதியார் துருத்திதென் வேள்விக் குடியாய் நினைமறந்த

மதியேற் கறிகுறி வைத்த புகர்பின்னை மாற்றி’டென்று

துதியா அருள்சொன்ன வாறறி வாரிடைப் பெற்றவன்காண்

நதியார் புனல்வயல் நாவலர் கோன்என்னும் நற்றவனே.           11.32-நம்பி 

 

துணையும் அளவும் இல் லாதவன் தன்னரு ளேதுணையாக்

கணையும் கதிர்நெடு வேலும் கறுத்த கயலிணையும்

பிணையும் நிகர்த்தகண் சங்கிலி பேரமைத் தோள்இரண்டும்

அணையும் அவன்திரு வாரூரன் ஆகின்ற அற்புதனே.                     11.40-நம்பி 

 

கூற்றுக் கெவனோ புகல்திரு வாரூரன் பொன்முடிமேல்

ஏற்றுத் தொடையலும் இன்அடைக் காயும் இடுதருமக்

கோற்றொத்துக் கூனனும் கூன்போய்க் குருடனும் கண்பெற்றமை

சாற்றித் திரியும் பழமொழி யாம்இத் தரணியிலே.                        11.48-நம்பி 

 

பல்லவை செங்கதி ரோனைப் பறித்தவன் பாதம்புகழ்

சொல்லவன் தென்புக லூர்அரன் பால்துய்ய செம்பொன்கொள்ள

வல்லவன் நாட்டியத் தான்குடி மாணிக்க வண்ணனுக்கு

நல்லவன் தன்பதி நாவலூர் ஆகின்ற நன்னகரே.                  11.57-நம்பி 

 

கொடுத்தான் முதலைகொள் பிள்ளைக் குயிர்அன்று புக்கொளியூர்த்

தொடுத்தான் மதுர கவிஅவி நாசியை வேடர்சுற்றம்

படுத்தான் திருமுரு கன்பூண் டியினில் பராபரத்தேன்

மடுத்தான் அவனென்பர் வன்தொண்ட னாகின்ற மாதவனே.                11.63-நம்பி 

 

தகுமகட் பேசினோன் வீயவே நூல்போன சங்கிலிபால்

புகுமணக் காதலி னால் ஒற்றி யூர்உறை புண்ணியன்தன்

மிகுமலர்ப் பாதம் பணிந்தரு ளால்இவ் வியனுலகம்

நகுவழக் கேநன்மை யாப்புணர்ந் தான்நாவ லூர்அரசே.            11.69-நம்பி 

 

செழுநீர் வயல்முது குன்றினில் செந்தமிழ் பாடிவெய்ய

மழுநீள் தடக்கையன் ஈந்தபொன் ஆங்குக்கொள் ளாதுவந்தப்

பொழில்நீ டருதிரு வாரூரில் வாசியும் பொன்னுங்கொண்டோன்

கெழுநீள் புகழ்த்திரு வாரூரன் என்றுநாம் கேட்பதுவே.             11.77-நம்பி 

 

ஞானஆ ரூரரைச் சேரரை அல்லது நாம்அறியோம்

மானவ ஆக்கை யொடும்புக் கவரை வளரொளிப்பூண்

வானவ ராலும் மருவற் கரிய வடகயிலைக்

கோனவன் கோயிற் பெருந்தவத் தோர்தங்கள் கூட்டத்திலே.               11.86-நம்பி 

 

ஆளுடைய பிள்ளையார் திருவுலாமாலை

 

நிலவு முருகர்க்கும் நீலநக் கற்கும்

தொலைவில் புகழ்ச்சிறுத்தொண் டற்கும் - குலவிய 

 

தோழமையாய்த் தொல்லைப் பிறப்பறுத்த சுந்தரனை

மாழையொண்கண் மாதர் மதனனைச் - சூழொளிய 

 

கோதைவேல் தென்னன்தன் கூடல் குலநகரில்

வாதில் அமணர் வலிதொலையக் - காதலால் 

 

புண்கெழுவு செம்புனலா றோடப் பொருதவரை

வண்கழுவில் தைத்த மறையோனை - ஒண்கெழுவு 

 

ஞாலத் தினர்அறிய மன்னுநனி பள்ளியது

பாலை தனைநெய்தல் ஆக்கியும் - காலத்து.                             11.75-நம்பி 

 

 பெரியபுராணம்

 

மாத வம்செய்த தென்றிசை வாழ்ந்திடத்

 

See Also: 1. chundharamUrthi nAyanAr

 

திருமுறைகளில் நாயன்மார் பற்றிய குறிப்புகள் - /devotees/references-of-nayanmars-in-thevaram-other-thirumurais

 

Related Content

Our Savior for the life here and the other world

Remover of Hunger

Is God sectarian ?

Calling out to God

Whom else to think of ?