logo

|

Home >

devotees >

kapila-dheva-nayanar-varalaru

கபில தேவ நாயனார் (கபிலர்) வரலாறு

பதினொன்றாம் திருமுறையைப் பாடிய பன்னிருவரில் கபில தேவ நாயனார் ஒருவர். வரலாற்றில் கபிலர் என்ற பெயரில் பல கவிஞர்கள் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

சங்கப்புலவராகிய கபிலர் வேள்பாரியின் இனிய நண்பர். அந்தணர், `பொய்யா நாவிற் கபிலன்` எனப் போற்றப்பட்டவர். ஆரிய அரசன் பிரகதத்தனுக்குத் தமிழ் அறிவுறுத்திக் குறிஞ்சிப்பாட்டுப் பாடியவர். செல்வக்கடுங்கோ வாழியாதன் மீது பதிற்றுப் பத்துள் ஒரு பத்துப் பாடிப் பரிசில் பெற்றவர். கலித்தொகையில் குறிஞ்சித்திணை பாடிக் `குறிஞ்சிக் கபிலன்` என்ற பெயரைப் பெற்றவர். பதினோராம் திருமுறையில் கபிலரால் பாடப்பட்ட மூன்று பிரபந்தங்கள் உள்ளன.
 


See Also:
1. பதினொன்றாம் திருமுறை

Related Content

Kabilar History

பொய்யடிமை இல்லாத புலவர் புராணம்

பதினொன்றாம் திருமுறை

திருமுறையில் குறிப்பிடப்பட்டுள்ள மலர்கள்

திருவாலவாயுடையார்