திருச்சிற்றம்பலம்
379 | குழைகொள் காதினர் கோவண ஆடையர் உழையர் தாங்கட வூரின் மயானத்தார் பழைய தம்மடி யார்செயும் பாவமும் பிழையுந் தீர்ப்பர் பெருமா னடிகளே. |
5.38.1 |
380 | உன்னி வானவர் ஓதிய சிந்தையிற் கன்னல் தேன்கட வூரின் மயானத்தார் தன்னை நோக்கித் தொழுதெழு வார்க்கெலாம் பின்னை என்னார் பெருமா னடிகளே. |
5.38.2 |
381 | சூல மேந்துவர் தோலுடை ஆடையர் ஆல முண்டமு தேமிகத் தேக்குவர் கால காலர் கடவூர் மயானத்தார் மாலை மார்பர் பெருமா னடிகளே. |
5.38.3 |
382 | இறைவ னாரிமை யோர்தொழு பைங்கழல் மறவ னார்கட வூரின் மயானத்தார் அறவ னாரடி யாரடி யார்தங்கள் பிறவி தீர்ப்பர் பெருமா னடிகளே. |
5.38.4 |
383 | கத்து காளி கதந்தணி வித்தவர் மத்தர் தாங்கட வூரின் மயானத்தார் ஒத்தொவ் வாதன செய்துழல் வாரொரு பித்தர் காணும் பெருமா னடிகளே. |
5.38.5 |
384 | எரிகொள் மேனி இளம்பிறை வைத்தவர் கரியர் தாங்கட வூரின் மயானத்தார் அரியர் அண்டத்து ளோரயன் மாலுக்கும் பெரியர் காணும் பெருமா னடிகளே. |
5.38.6 |
385 | அணங்கு பாகத்தர் ஆரண நான்மறை கணங்கள் சேர்கட வூரின் மயானத்தார் வணங்கு வாரிடர் தீர்ப்பர் மயக்குறும் பிணங்கொள் காடர் பெருமா னடிகளே. |
5.38.7 |
386 | அரவு கையினர் ஆதி புராணனார் மரவு சேர்கட வூரின் மயானத்தார் பரவு வாரிடர் தீர்ப்பர் பணிகொள்வார் பிரமன் மாற்கும் பெருமா னடிகளே. |
5.38.8 |
இப்பதிகத்தில் 9,10-ம் செய்யுட்கள் சிதைந்து போயின. | 5.38.9-10 |
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது; சுவாமி - பிரமபுரீசுவரர், தேவியார் - மலர்க்குழன்மின்னம்மை.
Back to Complete Fifth Thirumurai Index