திருச்சிற்றம்பலம்
206 | என்னி லாரும் எனக்கினி யாரில்லை என்னி லும்மினி யானொரு வன்னுளன் என்னு ளேஉயிர்ப் பாய்ப்புறம் போந்துபுக் கென்னு ளேநிற்கும் இன்னம்பர் ஈசனே. |
5.21.1 |
207 | மட்டுண் பார்கள் மடந்தையர் வாட்கணால் கட்டுண் பார்கள் கருதுவ தென்கொலோ தட்டி முட்டித்தள் ளாடித் தழுக்குழி எட்டு மூர்த்தியர் இன்னம்பர் ஈசனே. |
5.21.2 |
208 | கனலுங் கண்ணியுந் தண்மதி யோடுடன் புனலுங் கொன்றையுஞ் சூடும் புரிசடை அனலுஞ் சூலமும் மான்மறிக் கையினர் எனலும் என்மனத் தின்னம்பர் ஈசனே. |
5.21.3 |
209 | மழைக்கண் மாமயி லாலும் மகிழ்ச்சியான் அழைக்குந் தன்னடி யார்கள்தம் அன்பினைக் குழைக்குந் தன்னைக் குறிக்கொள வேண்டியே இழைக்கு மென்மனத் தின்னம்பர் ஈசனே. |
5.21.4 |
210 | தென்ன வனென்னை யாளுஞ் சிவனவன் மன்ன வன்மதி யம்மறை யோதியான் முன்ன மன்னவன் சேரலன் பூழியான் இன்னம் இன்புற்ற இன்னம்பர் ஈசனே. |
5.21.5 |
211 | விளக்கும் வேறு படப்பிறர் உள்ளத்தில் அளக்குந் தன்னடி யார்மனத் தன்பினைக் குளக்கும் என்னைக் குறிக்கொள வேண்டியே இளக்கும் என்மனத் தின்னம்பர் ஈசனே. |
5.21.6 |
212 | சடைக்க ணாள்புன லாள்அனல் கையதோர் கடைக்க ணால்மங்கை நோக்கிம வான்மகள் படைக்க ணாற்பரு கப்படு வான்நமக் கிடைக்க ணாய்நின்ற இன்னம்பர் ஈசனே. |
5.21.7 |
213 | தொழுது தூமலர் தூவித் துதித்துநின் றழுது காமுற் றரற்றுகின் றாரையும் பொழுது போக்கிப் புறக்கணிப் பாரையும் எழுதுங் கீழ்க்கணக் கின்னம்பர் ஈசனே. |
5.21.8 |
214 | விரியுந் தண்ணிள வேனலில் வெண்பிறை புரியுங் காமனை வேவப் புருவமுந் திரியும் எல்லையில் மும்மதில் தீயெழுந் தெரிய நோக்கிய இன்னம்பர் ஈசனே. |
5.21.9 |
215 | சனியும் வெள்ளியுந் திங்களும் ஞாயிறும் முனிவ னாய்முடி பத்துடை யான்றனைக் கனிய வூன்றிய காரண மென்கொலோ இனிய னாய்நின்ற இன்னம்பர் ஈசனே. |
5.21.10 |
திருச்சிற்றம்பலம்
Back to Complete Fifth Thirumurai Index