சிவமயம்

சித்தாந்த சிகாமணி

முதல் பாகம்

சிவப்பிரகாசரின் தமிழாக்கம்
- - - - -

பாயிரம்

விநாயக வணக்கம்
கலிவிருத்தம் மனவ னத்தின் மதமெனும் யானையைச் சினவி நிற்குந் திகழிள வெண்மதி புனைநு தற்கட் புராரிய ளித்தரு ணனைக வுட்களி நாகிள வேழமே. பரசிவ வணக்கம்
அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் உலகமெனு மோவியங்க டிகழ்ந்துமொரு படமாகி யொளிக ளெல்லா மிலகுபர வொளியாகிச் சச்சிதா நந்தமா யேக மாகிப் பலகலைகள் பரப்பிரமம் பரசிவமா லிங்கமெனப் பகரா நின்ற திலகநுத லுமைகணவன் றிருவடித்தா மரைவணக்கஞ் செய்து வாழ்வாம். 1 பராசக்தி வணக்கம் மாயையெனு மணல்கொடுல கெனுஞ்சிற்றி லிழைத்தாடும் வளமை யாளை மூயமல விருளிரிக்குஞ் செழுஞ்சுடரை யுயிர்களெல்லா முன்னமீன்ற தாயையொரு பரசிவனைப் பெயராக்குஞ் சமவாய சத்தி தன்னைத் தூயவறி வானந்த வடிவாளை மலைமகளைத் தொழுதல் செய்வாம். 2 வசவதேவ வணக்கம் எண்ணிகழ்ந்த வண்டமெல்லாம் வலம்புரிந்த தெனவுமைமா னீன்ற வேழந், தண்ணிகழ்ந்த நறுங்கொன்றைச் சடையொருவன் றனைச்சூழ்ந்த தகைமை போல, மண்ணிகழ்ந்த சிவசரணர் தமையெல்லாந் தொழுந்தகைமை வாய்ப்ப வெங்க, ளுண்ணிகழ்ந்த வசவனெனும் பெயருடையோன் றனைவணங்கி யுவகை கூறுவாம். 3 நூல் வரலாறு ஓங்குபுகழ்ச் சித்தரா மேசனென வொருகுரவ னுளன வன்சேய் தாங்குவிறற் சைவசிகா மணிமுத்தி தேவனவன் றநயன் மாயை நீங்குகுணக் குன்றனைய சித்தநா தப்பெயரோ னிகழ்த்த வன்பால் வாங்குதிரைக் கடற்கண்மதி போற்சிவயோ கிப்பெயரோன் வந்து தித்தான். 4 சிவபத்தி யெனுமமுத மொடுவிளங்குஞ் சிவஞானத் திங்க ளீனு முவமிக்க வரியதிருப் பாற்கடலாஞ் சிவயோகி யுலக முய்ய அவவுற்ற வுளத்தினொடு காமிகமே முதலாய வாக மங்க ணவையற்ற சிவபுரா ணங்களெனப் பட்டவெல்லா நயந்து பார்த்து. 5 மறைநெறிகள் வழுவாம லயனெறிக டடுமாற மதிஞ ரெல்லா மறிவமைதி பெறவீர சைவநெறி யனைத்துமொருங் கமைந்து காண நிறைவுதரு மாகமவே தங்கள்புரா ணங்கடொறு நெற்றி நாட்டத் திறைவனுமை யொடுமுருகற் கருளியதா யறிஞருள மிசைவ தாகி. 6 சங்கரசம் பிரதாய னாயவிரே ணுகன்முனிவர் தங்கட் கெல்லாம் புங்கவனா கியகலய முனிக்குரைத்த தாகியிவண் பொருந்தி யொன்று தங்கடலை யிட்டவொரு நூறு *தலம் புணர்வீர சைவ நூலை யிங்குரைசெய் தனனதனைத் தமிழ்ப்படுத்தி முறைபிறழா தியம்ப லுற்றேன். 7

( * சச்சிதாநந்த லக்ஷண லக்ஷிதமான பரப்ரஹ்மம் மகத்தத்துவ முதலிய சமஸ்த தத்துவங்களுக்கு ஆச்ரயமா யிருத்தலானும், அத்தத்துவங்களைத் தன்னிடத்தி லடக்கிக்கொண் டிருத்தலானும், ஸ்தலம் என்று சொல்லப்படும். “ஸ்த” என்னும் சப்தத்திற்கு ஸ்தானம் என்றும், “ல” என்னும் சப்தத்திற்கு இலயம் என்றும் பொருளாம். ஸ்தலசப்த வாச்சியமான அப்பரப்ரஹ்மமே தன்னிடத்தில் இடையறாது லீநமாயிருக்கும் சிற்சத்தியின் ஸ்புராணத்தினால் நிஸ்தரங்க சமுத்திரத்தில் வாயுசலனத்தினால் நுரைகள் பிறப்பனபோல், அங்க லிங்கமென்று இரண்டுவிதமாய் பின்னமாயிற்று. அங்கஸ்தலம் உபாசகமாகவும், லிங்கஸ்தலம் உபாசியமாகவும் ஏற்பட்டது. அந்த அங்கஸ்தலம் பக்தனாதியாக ஆறுவிதமாகவும், லிங்கஸ்தலம் ஆசாரலிங்கமாதியாக ஆறுவிதமாகவும் விபக்தமாயிற்று. ஒன்று இரண்டாகவும், இரண்டு பன்னிரண்டாகவும் விபக்த மானதுபோல், இத்தலம் நூற்றொன்றாய் விபாகிக்கப்பட்டிருக்கும்.)

நூற் பெயர்
முந்துறுமெச் சைவதந்தி ரங்களுக்கும் விளங்குதனி முடியாய் வீர தந்திரமுத் தரமாகித் தனக்குமே லிலாமையினாற் சாற்று நாம நந்துறுசித் தாந்தசிகா மணியாகுஞ் சிவாத்துவித ஞான வாழ்வைப் பந்தமறத் தருமிதன்கட் டிகழ்வீர சைவர்மனம் பட்டு நிற்கும். 8
அவையடக்கம்
உலகின்மலி புகழ்படைத்த சிவயோகி தனதுபே ருணர்வி னாலே மலைவதற வருளியவிச் சித்தாந்த சிகாமணியின் மதிசெ லுத்திக் கலைமுழுது முணர்ந்தவர்மு னியான்மொழியக் கருதலொரு கடுகு நாட்டி யலைகடலைக் கடைந்துசுவை யமுதெடுப்பக் கருதலொடொப் பாகு மன்றே. 9
ஆக்கியோன் பெயர்
தலங்குலவு மலயமமர் கலயமுனிக் கிரேணுகன்றண் ணளியா லீந்த நலங்குலவு சித்தாந்த சிகாமணியைத் தமிழ்க்கவியா னன்கு செய்தா னிலங்குதமிழ்க் கடலையொரு நாவாயாற் கடந்துலக மிறைஞ்சா நின்ற பொலங்கழலெம் பெருந்தகையாஞ் சிவப்பிரகா சையனெனும் பொருவி லானே. 10
- பாயிரம் முற்றிற்று -
* * *

இரேணுகர் காதை

பிரபஞ்சோற்பத்தி

அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் ஆதியி லநாதி கன்மத் தாருயிர்க் குலக மாகச் சேதந மயமா யொன்றாஞ் சித்தாந்த சிவன் றனாது பேதமில் சத்தி யாலே பெற்றதோர் மூர்த்தி யெய்தி மாதொரு பாக னாகு மகேசனாய் வயங்கா நின்றான். 1 சந்திர மவுலி யெம்மான் சகமெலாம் படைக்கு முன்னம் வந்துற விறைவ னாகு மலரயன் றன்னை நல்கி யந்தமில் விச்சை யெல்லா மருளின னருளி னாலே முந்துறு மயன் படைப்புத் தொழிலிடை முயற்சி பெற்றான். 2 சங்கர னாணை கொண்டு சகம்புரி தொழிலிற் புக்க பங்கயன் மாயை மாலிற் பட்டளிக் குறுமு பாய மங்குணர் கிலனாய் மீண்டு மரவணிப் பெருமான் பாதச் செங்கம லங்கள் போற்றி நின்றிது செப்ப லுற்றான். 3 தேவர்க டலைவ முக்கட் செல்வயான் முதலா யுள்ள யாவையு மாக்க வல்ல விறைவமுற் றுணர்ந்த மேலோ யோவரு மயலான் மாழ்கி யுணர்ந்திலேன் றமிய னேற்கு மூவுல கினையு மாக்கு முபாயநீ மொழிதி யென்றான். 4 நான்முக னிதனைக் கூற நனையவிழ் கொன்றை வேணிக் கூன்முக மதிய ணிந்த கொழும்பவ ளக்குன் றன்னான் றான்முக மலர்ந்து ரைத்தான் சகம்புரி வகையு ரைத்துந் தேன்முக மலரின் மேலோன் றெரிந்திலன் றியங்கிச் சொல்வான். 5 உலககா ரணப்ப டைப்பி னுபாயநீ யருளி னாலே பலமுறை யுரைத்து நெஞ்சிற் பட்டதின் றமல நீமுன் மலர்தலை யுலக மாக்கின் மற்றது கண்டுதேறி யிலகுற வடிய னேன்பி னியற்றுவ லென்று சொன்னான். 6 ஈசுவர சிருஷ்டி விதியிது புகன்று நிற்ப மின்னவிர் சடையிற் கீற்று மதிபுனை கடவு டன்போல் வளரொளி வடிவ ராகி முதிரறி வுடைய ராகி முழுதையு மளித்த ழிக்கு மதிசய நிலைய டைந்த கணங்களை யளித்தான் முன்னர். 7 சாற்றுறுங் கணங்க டம்மு ளிரேணுக தாரு கப்பே ரேற்றுள ரிருவ ரெங்க ளீசனுக் கினிய ரன்னோ ராற்றலை யாவ ரானு மறைந்திடற் கரியர் மாயை மாற்றிடும் வலியர் விச்சை யாவையும் வல்ல ரம்மா. 8 தௌ¤தரு முளத்தர் மாறாச் சிவாநந்த வமுத முண்டு களிதரு நலத்தர் கல்விக் கடல்கரை கண்டோர் ஞான வொளியினர் வேத சார முணர்ந்தவ ரகந்தை யில்லோர் விளிவுற விடய மைந்து மௌ¤தென வென்ற வீரர். 9 அனையவர் தம்மை நோக்கி யாலயத் துள்ளி லங்கும் புனைமணி வாயில் காப்புப் புரிசடைக் கடவு ணல்க வினிதென வவரு மேற்றவ் வேவலிற் சிறந்தோ ராகித் தனிவிழி நுதலி மைக்குஞ் சங்கரன் பாலி ருந்தார். 10 கயிலைச் சிறப்பு கலிநிலைத்துறை வேத னிந்திரன் செங்கண்மால் புன்புகழ் மேவி யோதி மங்கிளி றுவணனா யவர்தமை யுயர்த்த வாதி யம்பிகை நாயகன் பெரும்புக ழவனைக் காதல் கொண்டுதாங் குற்றது போன்றது கயிலை. 11 தெள்ளு சோதியங் கயிலைமால் வரையினிற் சிறிது வெள்ளி தான்கொடு திசைமுகக் கம்மியன் விரகா லள்ளி வானிருள் விழுங்குவா னமைத்ததொன் றன்றோ வெள்ளு றாமதி யென்பதிவ் வுலகங்க ளெல்லாம். 12 சபா மண்டபச் சிறப்பு அன்ன மாகயி லாயமோ ரருமறை யாகச் சென்னி மாமொழி யாகுமோர் செம்பொனா லியன்ற தன்னை நேர்மணி மண்டபத் தரியணை தன்னின் முன்ன மோர்பக லுமையொடு முதல்வன்வீற் றிருந்தான். 13 மகாசபை கூடுதல் இந்தி ரன்சுர ரரியய னியக்கர்கந் தருவர் சந்தி ரன்கதி ருரகர்சித் தர்கள்விறற் றகுவர் முந்து றுங்கண நாயகர் முனிவரர் வசுக்கள் வந்து கண்டன ருமையொடு பரமனை மகிழ்ந்து. 14 கலிவிருத்தம் பாடுவர் சிலர்சிலர் பணிவர் முன்னர்நின் றாடுவர் சிலர்சில ரார்ப்பர் மென்மலர் சூடுவர் சிலர்சிலர் துதிப்ப ரன்பினால் வாடுவர் சிலர்சிலர் மகிழ்ந்து வாழ்த்துவார். 15 இன்னண மிவர்பல வியற்றல் கண்டுமை தன்னொடு மரியணை தன்னின் மேவிய மின்னவிர் சடையினன் விளங்கு பேரவை முன்னுற நிகழ்ந்ததோர் முறைமை கூறுவாம். 16 அண்டர்க டமக்கெலா மரிய தன்கவுட் கொண்டருண் மெல்லிலை கொடுப்ப நூற்கடல் கண்டிடு மிரேணுக கணேச னென்பவற் பண்டுறு முவகையாற் பரன ழைத்தனன். 17 அழைத்தரு ளுவகையா லவ்வி ரேணுகன் றழைத்துயர் கல்வியந் தாரு கன்றனைப் பிழைத்தனன் கடந்துநம் வினைபி ழைப்பவே மழைத்திரு மிடற்றினோன் மருங்கு வந்தனன். 18 மிடைந்திடு தனதுபே ரவையின் மெய்யுணர் வடைந்திடு தாருக நாமத் தன்பனைக் கடந்துறு மிரேணுக கணேசற் பார்த்திது மடங்கலந் தவிசுறை வள்ளல் கூறுவான். 19 மதியுறு மிரேணுக மன்னு பேரவை யிதிலெம தடிமையா யிலங்கு தாருகற் கதிதரு காலினாற் கடக்கப் பட்டதென் விதிதவ றினையெனா விளம்பன் மேவினான். 20 சிவபக்தர்கள் மகிமை கருதுநம் பத்தரைக் கடத்தல் கேட்டினுக் கொருதனி மூலமா யுடம்பி னாயுளு மரிதுறு செல்வமுங் குலமு மன்றுதாம் பெரிதுறு கீர்த்தியும் பெயர்த்த ழிக்குமால். 21 கழிந்துள மயலின்மார்க் கண்ட னாகுமென் றொழும்புடை யவனைமுன் றொடர்ந்தி கழ்ந்தென தெழுங்கழ லுதையினா லின்று முள்ளுறு தழும்புறு முடலினன் றண்ட னாயினான். 22 தறிபவ மரமுடைச் சங்கு கண்ணனு மறிவுணர் பிருகுவு மாமென் றொண்டராற் பறிபடு தலையனாய்ப் பவங்கள் பத்தினு மறிபடு மாலென மதித்தி டாய்கொலோ. 23 திருமறு மார்பன்முன் செய்ய வென்றொழும் புரமுறு ததீசியா லொடிந்த நேமியான் பொருமற மிழந்தனன் புகழ்க்க ணேசரால் வருமறி முகமொடு தக்கன் மாழ்கினான். 24 தகுஞ்செய லுடையநஞ் சுவேதன் றன்னைமுன் னிகழ்ந்தனன் மறலியெம் மாலெ ரிந்தனன் புகன்றிடி னின்னுநம் பொருவி றொண்டரா லுகுந்திற லுடையவ ருளர நேகரே. 25 இரேணுகர் அவதரிக்கும் காரணம் சாதமி றாருகன் றனைக்க டந்தனை யாதலி னிரேணுக வரவு தாங்குறு மேதினி தனிலொரு பிறப்பு மேவென வோதின னடியவர்க் குதவி செய்பவன். 26 அறத்தனி முதல்வநீ யழைக்கு மோகைதான் பெறப்பெறு மடியனேன் பேதைத் தன்மையாற் சிறப்புறு தாருகற் கடந்த தீமையைப் பொறுத்தரு ளெனவடி பணிந்து போற்றினான். 27 அருந்துயர் வடிவமா யகன்ற மண்ணிடை வருந்துறு பிறவியை மன்னி நின்னையான் பிரிந்தன னலமரும் பெற்றி யென்கொலோ திருந்தடி யவரிடர் தீர்க்கு மெந்தையே. 28 மானிடப் பிறவியை மயக்கு மண்ணிடை யானெடுத் திடாவகை யருள்செ யென்றலுந் தேனெடுத் திதழவிழ் செய்ய கொன்றையோன் றானுளத் தருளினாற் சாற்றன் மேவினான். 29 என்னிக ரிரேணுக வின்று மண்ணிடைத் துன்னுறு பிறவியாற் றுயர மெய்தலை யென்னடி யவர்தமக் கெவ்வி டத்தினு மின்னல்வந் தடைகுவ தில்லை யில்லையே. 30 கண்டவர் தமக்கெலாங் கயிலை காட்டுறும் வண்டவர் பருப்பத மலையைத் தென்றிசை கொண்டுள தெலுங்கினிற் கொல்லி பாகமென் றொண்டல மொன்றுள துரைப்பி னாயிடை. 31 என்னுரு வாயசோ மேச னென்னவோர் தன்னிகர் பரசிவ லிங்கந் தங்குமா லன்னதின் மானிடப் பிறவி யன்றியே மன்னுதி யுலகெலாம் வியக்கும் வண்ணமே. 32 மறையொடு மறைமுடி மதம தாகுமென் னிறையுமத் துவிதநூ னிடயத்தி லியாவரு மறிவுற மொழிதியென் னடியர் மேன்மையுங் குறைவிலென் மேன்மையுங் கொடுத்தி யெங்கணும். 33 இரேணுகர் உலகில் வருதல் அங்கண னிவ்வகை யருள மெல்லடிப் பங்கய முடிமிசை படவி றைஞ்சியே யெங்கண நாயகன் விடைகொண் டெய்தினான் பொங்கொலி யுததிசூழ் புவியை நோக்கியே. 34 இரேணுகர் அவதரித்த ஸ்தலம் எய்திய விரேணுக னிறைவன் கூறிய மெய்திக ழிலிங்கமெய் மேவித் தோன்றினான் கொய்துணர் மலிபொழிற் கொல்லி பாகம்வாழ் செய்தவ முடையர்தாஞ் சென்று கண்டனர். 35 இரேணுகர் அவதாரம்
sri rENukar sOmEsalingaththilirunthu avathariththal

	அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்

நீற்றொளி விளங்கக் கண்டி நிறையணி யணிந்து வேணி 
தோற்றழ கிலங்க ஞானச் சோதியின் வயிற்றிற் றோன்றிப் 
போற்றிளங் கதிர்போ னின்ற புண்ணியன் றன்னைக் கண்டோ 
ராற்றவும் வியப்புற் றோரா யடியிணை பணிந்து சொல்வார். 	36

சோதிமா லிங்கந் தன்னிற் றோன்றுநீ யாரை யென்ன 
வாதியா மிறைவன் பாங்க ரமர்தரு மிரேணு கனியான் 
வேதநா யகன்வி டுப்ப விடைகொண்டிங் கெய்தி னேனென் 
றோதினான் வீர சைவத் தூதிய மாகி நின்றான். 		37


	இரேணுகர் பொதிகை யடைதல்

விளங்குறு சிவசித் தாந்த மென்பயிர் தன்னை வேறா 
யுளங்கவல் சயின புத்த ராதிய ருணர்வி னூலாம் 
வளர்ந்தெழு களைக ளைந்து வளர்ப்பதற் குற்றே னானென் 
றிளங்கதி ரனையான் வானத் தெழுந்துபோய் மலயத் துற்றான். 	38


		   பொதிகைமலைச் சிறப்பு

	ஓங்கிய விந்த வெற்பங் கொருகரஞ் சுமக்க லாற்றா 
	தேங்குபு பிலத்தில் வீழக் கண்டவல் விருடி தன்னைத் 
	தீங்கறு முனிவ ரெண்ணி லோரொடு சிகரந் தன்னிற் 
	றாங்கிய மலய வெற்பின் றன்மையார் சாற்ற வல்லார். 						39

	மலயச மென்று மிக்க மலயமா ருதமா மென்று 
	முலகொரு மூன்றி னுந்த னோங்குறு புகழ்சென் றெய்த 
	நலமலி சந்துங் காலு நல்கிய வதுபோற் றன்பே 
	ரிலகுற மலைக ளுள்ளொன் றேனுமீந் ததுதா னுண்டோ. 						40


		இரேணுகர் அகத்தியரைக் காணுதல்

	அப்பெரு மலயந் தன்னை யடைந்தகத் தியனி ருக்குஞ் 
	செப்பரும் வளம லிந்த விடத்தினைச் சென்று கண்ணுற் 
	றொப்பரு முவகை கூர்ந்த வுளத்தொடு கணங்கள் கோமா 
	னெய்ப்பறு முனிவ ரோடங் கிருந்துள முனியைக் கண்டார். 						41

	வந்தெதிர் நின்ற ஞான வாரியைக் கண்ணிற் கண்டு 
	சந்திர மவுலி தன்பாற் சார்ந்துள விரேணு கப்பேர் 
	முந்துறு பவனா மென்று முனிவனு முணர்வாற் கண்டு 
	சிந்தனை மகிழ்ந்தெ ழுந்து திரவடித் தலத்தில் வீழ்ந்தான். 						42

	பின்னரங் கவனைத் தானோர் பெருந்தவி சுறவி ருத்தித் 
	தன்னிக ரமல லோபா முத்திரை தந்த நீராற் 
	பொன்னடி விளக்கி நூலிற் புகன்முறை யருச்சித் தேத்தி 
	யன்னவ னருகு வேறோ ராதனத் தமர்ந் திருந்தான். 							43

	இருந்துள முனியை நோக்கி யிரேணுக னன்றாய் நின்பா 
	லருந்தவ நடந்த தேயென் றருளினால் வினாய்நி னக்குப் 
	பொருந்துறு மிடையூ றெண்ணிப் புரிபவ ரியாவ ரென்று 
	திருந்திய வுளத்த னாகிச் செப்புவ னுவகை மாற்றம். 						44

	விந்தமு நின்னாற் கீழ்போய் வீழ்ந்தது நகுட னின்னான் 
	முந்தர வுருவ மானான் முழங்குவெண் டிரைசு ருட்டுஞ் 
	சிந்துவு மருந்தப் படட்டுச் சேறலா தொழிந்த தன்று 
	வந்தொரு தகுவ னுன்றன் வயிற்றிடை யற்றா னன்றே. 						45

	செங்கண்மால் விடையா னல்குஞ் சிவதரு மோத்த ரத்தை 
	யெங்கண்மா முருக னாமத் திலங்கிலை வேலோ னல்க 
	வங்கண்மா ஞால முய்யப் பெற்றனை யருந்த வத்தோர் 
	தங்கண்மா நிதிய னாயுன் றனைநிகர் பவர்யார் சொல்லாய்.						46

	என்றுரை செய்ய வெங்க ளிரேணுகன் முனிவன் கேளா 
	நின்றனி வரவெ னக்கே  நேர்தலாற் றவத்தோன் யானே 
	நன்றிக ளனைத்து முள்ளேன் ஞானநல் விழியும் பெற்றேன் 
	வென்றனன் பவமு மேலாம் வீடடைந் துய்ந்தே னியானே. 						47

	புண்ணிய மூர்த்தி நீயென் பொருட்டிவ ணடைந்தாய் நின்னைக் 
	கண்ணுறில் வினைக ளெல்லாங் கதிரெதிர்ப் பனியை யொக்கும் 
	பண்ணிய தவநி றைந்து பயன்றரு காலத் தல்லா 
	லண்ணலுன் வரவெ வர்க்கு மரிதரி தென்று சொல்வான். 						48

	பற்பல கலையு ணர்ந்தும் பற்றிலன் றுணிவு மாறா 
	வுற்பவ மொழியும் வண்ண முயிர்சிவத் தேக மாகும் 
	பொற்பரு ளுவதாய் வேதப் பொருள்படு சிவசித் தாந்தஞ் 
	சிற்பர யோகி நின்னாற் றெளிந்திட விழைவ லென்றான். 						49

- இரேணுகர் காதை முற்றிற்று -

* * *

உபதேசம்

இரேணுகர் அகத்தியருக்கு உபதேசம் செய்தல்


sri rENukar akaththiyarukku upathEsiththal
	கலிவிருத்தம்

முனிவ னின்ன மொழிய வுளங்கொளா 
வினிய னென்னுமி ரேணுகன் முக்கணான் 
றனைநி னைந்து சமாதி யடைந்துபின் 
னினைவ டைந்து நிகழ்த்துதன் மேயினான். 		1

அருந்த வத்த ரரச வுனக்கிவண் 
டிருந்து மெய்ச்சிவ ஞானத் தௌ¤வினைப் 
பொருந்து மிக்கசித் தாந்தம் புகலுது 
மொருங்கு சித்தத் துவந்து செவிக்கொளே.		2

பேத விச்சையிற் பின்னப் பொருள்தளு 
மோது பற்பல வாய வொழுக்கமு 
மாதல் பெற்றிடு மாசில்சித் தாந்தநூன் 
மாத வத்தர் வழுத்து முனிவனே. 			3

ஆய்ஞ்ச சாங்கிய மாசறு யோகநற் 
பாஞ்ச ராத்திரம் பாசு பதத்தொடு 
வாய்ஞ்ச வேத மிவைபிர மாணமாய்த் 
தாஞ்செய் வாதத்திற் றள்ளுவ வல்லவாம். 									4

		சாங்கி யாதிகட் கென்றுந் தலைமையா 
		மோங்கு மாமறை யும்மறை யைத்தொடர்ந் 
		தீங்கு நின்றத னாலவை யாவையுந் 
		தாங்கு மானத் தகைமைய வென்பவே. 							5

		யோக சாங்கிய மோரைந்தி ராத்திர 
		மாகும் வேதத் தொருபுடை யன்னபோ 
		லேக தேச முறாமறை யெங்குமா 
		மாகம் வீழ்மலை மாதவ சைவமே. 								6

		ஓங்கும் வேதத் தொருபுடை யாகிய 
		சாங்கி யாதியிற் சைவஞ் சிறந்ததாய்த் 
		தீங்கில் வேதமெ லாந்தொடர் செய்கையா 
		னீங்கு பாச முனிவ நிலைக்குமால். 								7

		பிரம மோதுசித் தாந்தப் பெயர்பெறு 
		தரும சைவமென் றந்திர நான்மறைப் 
		பொருள தாகலி னம்மறை போலவே 
		வரம தாம்பிர மாண மெனப்படும். 								8

		கண்ணு தற்பெருங் காரண னாற்பல 
		வெண்ணு மாகமஞ் சைவமி லாகுளம் 
		பண்ணு பாசு பதமொடு சோமமென் 
		றண்ணன் மாமுனி யன்றறை யப்படும். 							9

		ஓது வாம மொழிவறுந் தக்கண 
		மேதை யாகு மிசிர முனிவர 
		தீதி லாதசித் தாந்த மெனவரு 
		பேத நான்கு பெறும்புகல் சைவமே. 							10

		வாமஞ் சத்தி பரஞ்சொல் வயிரவர்க் 
		காமந் தக்கண மம்மி சிரத்தெழு 
		நாமங் கொண்டுறு மாதர் நணுகுவா 
		ரேமஞ் செய்மறை யின்மத மற்றதே. 							11

		மறையு ரைக்குந் தருமம் வகுத்தலாற் 
		புறம தத்தொடு நின்று பொருதலாற் 
		றிறம டுத்தசித் தாந்த சிவாகம 
		மறமு ரைக்கு மறைமத மாகுமால். 								12

		செப்பும் வேதசித் தாந்த மபேதமா 
		மொப்பின் மெயப்பொரு ளொன்றே யுரைத்தலா 
		லிப்பெ ருஞ்சொற் கலைக ளிரண்டையும் 
		வைப்ப ரொப்பென மானத் தறிஞரே. 							13


			வீர சைவ விளக்கம்

		ஏக னுற்றருள் காமிக மேமுத 
		லாக மத்தி னிறைந்திடு முத்தர 
		பாக முற்றும் பகர்வீர சைவமாஞ் 
		சோக மற்றுயர் தொன்மதந் தோன்றுமால். 							14
	
		சித்த மாகுஞ் சிவமய மாகிய 
		வித்தை யூடு விசேடம தாகியே 
		யெத்தி னாலிங் கிரமிப்ப னன்னவன் 
		பொய்த்தி டாத புகழ்வீர சைவனே. 								15

		தீத கன்ற சிவசீவ யிக்கியமாம் 
		வீத ரும்பெரு வித்தையி னன்குறச் 
		சாத மின்றி ரமிக்குமச் சைவன்மற் 
		றோதி லன்னோ னுயர்வீர சைவனே. 							16

		வித்தை யூடு விரவிய மாயையைக் 
		கைத்து நாயெனக் கண்டு விடுதலை 
		வைத்த வாதி வருண முணர்த்துறு 
		முத்தி யாலுயர் வீர மாகேசனாம். 								17

				வேறு

		அரியவே தாந்தத்தி னாகு ஞானமே 
		மருவரும் வித்தையென் றுரைப்பர் மற்றதில் 
		விரவினோன் யாவன்மற்ற னையன்வீ ரனென் 
		றுரைதரு கிற்பர்மெய் யுணர்ந்து ளோர்களே.							18

		உட்புறம் பூசனை யுடையர் சைவருந் 
		திட்பமா யேசரு மாவர் தேர்ந்திடிற் 
		கொட்பறு சிவனரன் போலக் கூறிய 
		பெட்புறு மவர்களும் பின்ன மாயிடார். 							19

		மிறையறுஞ் சைவர்மெய்ஞ் ஞான வேள்வியுங் 
		கறையின்மா யேசரொண் கரும வேள்வியும் 
		பெறுநரென் றுரைத்திடும் பெற்றி யாலகம் 
		புறமுறு நெறியினர் புகன்று னோர்களே. 							20

		விலகுறு பலநெறி வீர சைவர்தா 
		மலைவறு பத்தன்முன் வழக்க பேதமுந் 
		தலநெறி விபேதமுந் தரிக்குந் தன்மையா 
		லிலகுவ ரறுவகை யினரென் றெண்ணவே. 							21

		தலத்தொடு பலவகைத் தருமமாதலா 
		லிலக்கதி காரிகள் பேத மெய்தலால் 
		விலக்கரு மறிஞராம் வீர சைவர்தங் 
		கலைத்திற	மதுவுமோ ராறு காண்டமாம். 						22

- உபதேசம் முற்றிற்று -
* * *

அங்கலிங்கோத்பவம்

1. நிரஞ்சந லிங்கஸ்தலம், 2. சூந்ய லிங்கஸ்தலம், 3. நிஷ்கள லிங்கஸ்தலமாய் விளங்குவது மஹாஸ்தலம்.

நிரஞ்சந லிங்கஸ்தலமாவது, வீரதந்திர விதிப்படி பிரபஞ்சோற்பத்திக்கு ஆதி (முதற்) காரணமாயுள்ளது. எவ்வாறெனின்:- முதல் நடு வீறும், நாத பிந்து கலைகளும், அவயவத்தோடு கூடியுங் கூடாமலும், தத்துவ ரூபமான பிரமாண்டாதி யுலகங்களும், அஷ்டமூர்த்திகளும், நாமரூப க்ரியைகளும், உற்பத்தி ஸ்திதி லயங்களும், சாத்விகாதி முக்குணங்களும், அகங்கார மமகாரங்களும், ஞானாஞ் ஞானங்களின் உற்பத்தியும், சுட்டிக் காட்டுபவரும், தன்னையும் பிறரையும் மற்றெவரையு மறிதலும், பாக்யாந்தரங்களும், குறிப்பிடும் அரி பிரம்மாதி சமஸ்த தேவர்களும், சிற்சத்தியென்னும் பெயரும், சூந்யா சூந்யங்களும், தத்பத த்வம்பத அசிபதங்களும், மற்றியாதும் இல்லாத காலத்தும் நித்யமாயுள்ளதெதுவோ அது.

சூந்ய லிங்கஸ்தலமாவது, மேற்கண்ட நிரஞ்சந லிங்கமே அநிர்வாச்சிய சூந்யலிங்கமாய் தநு முதலியவைகளும், மனாதிகளும், காலகர்மங்களும், இந்திரிய வியாபாரங்களும், சுகதுக்கங்களும், ஆதியநாதித்துவங்களும், நாத பிந்து கலைகளின் தோற்றங்களும், ஆத்மாநாத்மாக்களும், அரி பிரம்மாதி தேவர்களும், சராசரப் பிரபஞ்சங்களும், சிற்சத்தியுற்பவமும், சச்சிதாநந்தாதி தத்துவ லட்சணங்களும், அண்டஜ முதலிய நால்வகைத் தோற்றங்களும், எல்லையுற்றதும் எல்லையற்றதும், கமனாகமனங்களும், புண்ய பாபங்களும், தர்ம கர்மங்களும், சுவர்க்க நரகங்களும், இம்மை மறுமைகளும், பஞ்சபூத பௌதிகங்களும், அநந்தகோடி பிரமாண்டங்களும், தன்மை முன்னிலை படர்க்கைகளும் இல்லாத காலத்தும் மகா சூந்யமாயுள்ள தெதுவோ அது.

நிஷ்கள லிங்கஸ்தலமாவது, மேற்கண்ட சூந்யலிங்கமே நிஷ்கள ஸ்வயம்பு லிங்கமாய் தந்தை தாய், நாமம் குறி, பிறப்பிறப்பு, பிரகாசம் அப்பிரகாசம், ரூபா ரூபம், தான் எதற்கும் எதிர்நிற்றல் தனக்கு எதிரில் ஒன்றியிருத்தல், காரண காரியங்கள், முன் பின், மேல் கீழ், இடம் வலம், பற்றுதல் பற்றாமை, பார்த்தல் பாராமை, சொல்லல் சொல்லாமை, அறிதல் மறத்தல், சாத்யாசாத்யங்கள், பூஜிப்பவன் பூஜிக்கப்படுபவன், அங்கஸ்தல லிங்கஸ்தலப் பகுப்புக்கள், வேதாகம புராணேதிகாசங்கள், த்வைதாத்வைதங்கள், வெண்மை முதலிய பல நிறங்கள் ஆகிய இவைகள் இல்லாத காலத்தும், தான்ஒன்றைப் பற்றாமலும் எல்லாவற்றிற்கும் தான் பற்றுக்கோடாகவும், தனக்கோராதாரமின்றி எவற்றிற்கும் தானாதாரமாகவும், நிராதார சர்வாதார சர்வஜ்ஞ சர்வேச்வரனாய் அங்கஸ்தலமாறும், லிங்கஸ்தலமாறும், அறுவகைப் பக்தியும், அறுவகைச் சக்தியும், கர்ப்பீ கரித்துக்கொண்டு சச்சிதாநந்த நித்ய பரிபூர்ண சாக்ஷாத்காரமாய் நின்றதெதுவோ அது.

இவ்வித நிஷ்கள மகாலிங்க ஸ்தலத்தில் அக்நியின் உஷ்ணம் போதுள்ள சிற்சத்தியின் ஸ்புரணத்தினால் கயிற்றின்கண் அரவு போலவும், நிஸ்தரங்க சமுத்திரத்தில் புற்புதாதிகள் (குமிழி - அலை - நுரை) உண்டாவது போலவும், ஆதியில் ஆத்மாங்கமும் (ஆன்மா), அவ்வாத்மாங்கத்தில் ஆகாயமும், அவ்வாகாயத்தில் வாயுவும், அவ்வாயுவில் தேயுவும், அத்தேயுவில் அப்புவும், அவ்வப்புவில் பிருதிவியும், அப்பிருதிவியில் முப்பத்தாறு தத்துவங்களும், அநந்தகோ சூரிய சந்திரங்களும், பதினான்கு புவனங்களும், சப்த சாகரங்களும், நவ கண்டங்களும், அஷ்ட திக்குகளும், நக்ஷத்திர ராசிகளும், விஷ்ணு பிரம்மாதி தேவர்களும், யக்ஷர், ராக்ஷதர், கின்னரர், கிம்புருடர், கந்தருவர், கருடர், பூதப்ரேத பைசாசர், அண்டஜ ஸ்வேதஜ ஜராயுஜ உத்பிஜ்ஜங்கள், கேசர பூசர வநசர ஜலசரங்கள் விருக்ஷம், கொடி, செடி, மலை, நதி, வனாந்தராதி சமஸ்த வஸ்துக்களு முண்டாயின.

இவ்வாறு பிரபஞ்சோற் பத்தியாகவும் அக்காலையில் ஒன்றேயாய் நின்ற சிவ சைதந்யமே பின்னர் தன்னில் மாயாப் பிரசஞ்சத்தை யடக்கிக் கொண்டு தானொன்று - மாயாப் பிரபஞ்சத்திலிருக்கும் வியவகாரிக ஜீவர்களே உபாசகராய் அங்க ஸ்தலத்தினராயினர். ஆதார பூதமாயிருக்கத் தக்க பாரமார்த்திக சைதந்யமே உபாசியமாய் லிங்க ஸ்தலமாயிற்று. பாவனா ரீதியாய், போஷ்ய போஷக விபேதத்தினாலும், ஆதேய ஆதார விபேதத்தினாலும், சதி பதி, சீடன் குரு, அர்ச்சகன் தேவன், பிரஜை ராஜன், சேவகன் யஜமான், குழந்தை தாய், விருக்ஷம் பூமி, பூமி சூரியன், இத்யாதியாய் முந்தினவர் அங்க ஸ்தலத்தைப் பொருந்தினவராய், பிந்தினவர் லிங்க ஸ்தலத்தைப் பொருந்தினவராயிருக்கிறார்கள். கிரம ரீதியாய், தாரகனான பக்தனது சரீரமே அங்கஸ்தலம், தாரியனான லிங்கமே லிங்க ஸ்தலமாயிருக்கிறது. இங்கு, கிரம ரீதியே யங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. அங்க ஸ்தலமே பூஜகன், லிங்கஸ்தலமே பூஜ்யன்; அங்கமே ஜீவாத்மா, லிங்கமே பரமாத்மா; சங்கமே ஐக்கியம்; அங்கலிங்க சங்கமென்றால் ஜீவ பரமைக்கியம்; ஆனதினால் அங்கமே த்வம்பதம்இ லிங்கமே தத்பதம், சங்கமே அசிபதம்; லிங்காங்க சங்கமென்றால் தத்வமசி மகா வாக்யார்த்த போதகமாயுள்ளது. நிஷ்கள லிங்கத்தில் சிற்சத்தி லீனமாயிருந்த தென்று மேலே சொல்லப்பட்டிருப்ப தன்றோ? லிங்கம் இரண்டானவுடனே தத்கதமாயிருந்த (மகா) சத்தியும் ஸ்வஸ்வாதந்த்ரி யத்தினாலும், (பர)சிவசமான தர்மத்தினாலும் பெரு நெருப்பானது வேறு வேறு சிறிய தீபங்களானது போல, பக்தியொன், (கலை அல்லது பரை அல்லது) சக்தியொன்று என இரண்டாயிற்று. பக்தி அங்க ஸ்தலத்தையும், சக்தி லிங்க ஸ்தலத்தையும் சம்பந்தித்தன. இவைகளில் பக்தி பிரபஞ்சத்தின் லயத்தையும், சக்தி பிரபஞ்சத்தின் விருத்தியையும் விரும்புவது. பக்தி மாயா ரஹிதமாயுள்ளது, சக்தி மாயாசஹிதமாயுள்ளது. பக்தி ஊர்த்தவமுகம், சக்தி அதோமுகம், பக்தி நிவிர்த்தி மார்க்கம், சக்தி பிரவிர்த்தி மார்க்கம். புகையில்லாதிருக்கும் சோதி போல பக்தி வாசனா ரஹிதமாய்ப் பிரகாசித்துக் கொண்டிருக்கும், நெருப்பின்சுவாலையானது புகையினால் மூடப்பட்டிருக்குங் காலையில் வெளிச்சத்தைப் பரவச்செய்யாமல் மழுங்கியிருப்பதுபோல (கலை) சக்தி வாசனா சஹிதமாயிருக்கும். பக்தியினால் ரூபம் விரூபமாகிறது, சக்தியினால் விரூபம் ரூபமாகிறது. பக்திக்கு உபாசகத்துவம் உண்டானதினால் அது அங்க ஸ்தலத்தை யாச்ரயித்தது, சக்திக்கு உபாசியஸ்தலம் உண்டானதினால் அது லிங்கஸ்தலத்தை யாச்ரயித்தது. எக்காலத்தில் பிரபஞ் சோற்பத்தியானதோ அக்காலத்தே சகல ஜீவர்களும் மகா லிங்கத்தில் ஒடுங்கி நிற்பதாயினும் வியவகார தசையில் லிங்கத்தினின்றும் பின்னமாய்த் தோன்றி சுகதுக்காதிகளை யநுபவித்து, மீளவும் தாங்கள் எவ்விலிங்கத்தினின்று உற்பவித்தனரோ அவ்விலிங்கத்திலேயே லயப்பட விரும்புவர். இவ்வாறு விருப்ப முள்ளவர்களில் பிண்ட ஸ்தல - பிண்டஞான ஸ்தல - சமுசார நீக்க ஸ்தலங்களைத் தாண்டி லிங்க தாரணத்திற்கு வரும் வீரமாஹேச்வரரே சிரேஷ்டர்; சிவஜீவைக்கியம் இவர்களுக்கு முதலில் சித்திக்கிறது; ஏனையோர் இவர்கட்குப் பிற்பட்டவரே.

இங்கு, மகாஸ்தலத்திற்கு வாச்சியமானது பரப்ரஹ்மம், அதே பரசிவம், அதே மகாலிங்கம் எனினுமாம்.

முற்காலத்தில் வடதேசத்தின்கண் புண்யஸ்தலமாகிய கல்ணாயபுரியிலே சிவபக்தியை உத்தாரணம் செய்தற்காக அவதரித்தவர் ஸ்ரீவசவேசர். சிவபெருமானே ஜங்கம வடிவுதாங்கி குருமூர்த்தமாயெழுந்தருளி லிங்கதாரணம் செய்யப்பெற்றவரும் இவரே. தர்மஸ்வரூபியும் கருணாநிதியும், சதாகாலம் அநேகமாயிரம் சிவகணங்களுக்குத் திருவமுது படைத்த வள்ளலும் இவரே. விஜ்ஜல மகாராஜனுக்கு மந்திரியாயிருந்து மகிமையுடன் வேதபாஹ்யரா பாஷண்ட மதத்தினரையும், ஏனைய புறமதத்தினரையும் வென்ற வீரரும் இவரே. இவரது தமக்கை மாது சிரோமணியாகிய நாகாம்பையின் திருவயிற்றில் அவதரித்தவர் ஸ்ரீசென்னவசவேசர், சிவலோபதிஷ்மான அசாதாரண வீரசைவமத ஷட்ஸ்தல ஞானசாரத்தை உலகில் பரவச்செய்த மகா புருஷரும் இவரே. இவருக்கு ஜனன காலத்திலேயே விதிப்படி லிங்கதாரணமாயினும், அந்த லிங்கம் அத்வாசோதன கலா வாஹனங்களையடைந்து கொடுக்கப்பட்டு, அதை யார்ச்சிப்பதே வீரசைவ தர்மமாயிருப்பதினால் ஸ்ரீ சென்னவசவேசர் தனக்கு மாமனாரான ஸ்ரீவசவேசரையே குருபாவத்தினால் கண்டு, அவராலே மேற்கூறிய ஸம்ஸ்காரத்தை யடையப்பெற்றார். தனக்கு மூத்தவரும் ஸம்ஸ்காராதிகாரியுமாயிருந்த ஸ்ரீவசவேசரை சென்னவசவேசர் குருபாவத்தினால் கண்டிருந்ததைப் போலவே,ஸ்ரீ சென்னவசவேசரிடத்தில் சிவஞானாதிக்யத்தைக் கண்டும், அவரால் ஷட்ஸ்தல சித்தாந்தபோதத்தை தான் அடைந்தும் ஸ்ரீவசவேசர் அந்த சென்னவசவேசரையும் பாத்தினால் கண்டிருந்தார். ஸ்ரீசென்னவசவேசர் சிவஞானமூர்த்தியே தானா யிருந்ததினால் பூதலத்தில் ஸ்ரீவசவாதி ப்ரமதர் எல்லோரும் காலோசிதமாய் ஞானோதயம் வரும்படியும் எச்சரித்து, எல்லோரையும் ஷட்ஸ்தல மார்க்க நிஷ்டராகும்படி செய்துகொண்டிருந்தார். ஸ்ரீவசவேசர் பக்தி பரவசத்தினால் ஜங்கமர்களிடத்தில் யோக்யதா விசேஷமொன்றையும் லக்ஷ்யம் செய்யாது தன் பிராணனைப் போலவே அவர்களைக் கண்டுகொண்டிருந்தார். ஸ்ரீ சென்னவசவேசர் அவ்வாறன்று. ஜங்கமர்கள் ஸ்வஸ்வரூப ஞானிகளாயிருக்கத்தக்கதே ஜங்கமலட்சணமென்று விதித்து, எல்லோரை யும் அவ்விதமான ஞானிகளாகச் செய்தற்கு அவசியமான நிர்ப்பந்தத்தையும் கற்பித்திருந்தார். ஷட்ஸ்தல ஞானிகளல்லாதவர்கள் தன்னரண்மனைக்கு பிரவேசிக்கக் கூடாதென்று கடினமான உத்திரவு செய்து, தன் அரண்மனையின் ஆறு வாயில்களிலும் ஆறு ஆட்களை (ஷட்ஸ்தல ப்ரஹ்மிகளை) காவல் வைத்து, வெளியிலிருந்து வருபவர்களையெல்லாம் ஷட்ஸ்தல விசாரமாய் வினாவி, அதற்குத்தக்க விடையளித்தவர்களையே உள்ளே விடும்படி ஏற்படுத்தியிருந்தார். இக்காரணத்தினாலேயே ஸ்ரீ சென்னவசவேசரை ஷட்ஸ்தல ஸ்தாபனாசாரியரென்று வீரசைவர்கள் நம்பியிருக்கிறார்கள். இவர் பாலபிரமசாரியாயிருந்து க்ருஹஸ்தாச்ரமத்தை ஸ்வீகரிக்காமல் நிராபாரி (யதி) யாதியேமுக்தரானார். இதன் விரிவை மகா காவ்யங்களில் காணலாம்.

இது பற்றியன்றோ ஸ்ரீமத் சிவப்பிரகாச சுவாமிகள் அருளிய பிரபுலிங்கலீலை துதி கதியில் அடியில் வருமாறு சூசனை செய்யப்பட்டுள்ளது:-

	“வெள்ள வேணிப் பெருந்தகைக்கி யாஞ்செய் யடிமை மெய்யாகக் 
	கள்ள வேடம் புனைந்திருந்த கள்வ ரெல்லாங் களங்கமறு 
	முள்ள மோடு மெய்யடியா ராக வுள்ளத் துள்ளுமருள் 
	வள்ள லாகும் வசவேசன் மலர்த்தா டலையால் வணங்குவாம்.” 

	“பங்க வளற்று வழிமாற்றி யொரு நல்வழியைப் பகர்வார்போற் 
	றங்கண் மதியிற் பலபிதற்றுஞ் சமயருரைக டமை நீக்கி 
	யங்க நிலையிற் றிலிங்கநிலை யிற்றென் றருளும் வீரசைவ 
	சிங்க நிலைத்த வருட்சென்ன வசவன் றிருத்தாள் சிரத்தணிவாம்.”

	“பரசிவம் பிரம மென்னப் பட்டொரு திரிவு மின்றி 
	யுரைமன மிறந்து நின்ற வொருசிவ லிங்கந் தன்னின் 
	வருமுயர் சதாசி வன்றான் மற்றவன் றனைப் பொருந்து 
	மருமைகொண் ஞான சத்தி யவர்களாற் சிவனு திப்பன்.”

- அங்கலிங்கோத்பவம் முற்றிற்று -
* * *

*அங்கஸ்தலம்

(இதன் பிரிவு)
- - -


அறுசீர் கழிநெடிலடியாசிரிய விருத்தம் ஆதிதனி லரும்பத்தத் தலமாகே சத்தலம்பி னடுக்கும் பின்னர் சாதமுறும் பிரசாதித் தலமதன்பின் பிராணலிங்கத் தலமா கும்பின் போதுசர ணத்தலமா றாவதயிக் கியத்தலமாம் புகன்ற வற்றுண் மாதவமுன் புறுபத்தத் தலமொடதன் றிறமுரைத்து மகிழ்ந்து கேண்மோ. 1

(* மற்றொரு பிரிவு :- அங்கஸ்தலம் ஸ்தூல, சூக்ஷ்ம, காரணம் என மூன்று விதமாம்; அவை த்யாகாங்கம் - போகாங்கம் - யோகாங்கம் என்பன; அவற்றுள் சமுசாரபிராந்தி பரித்யாகமே லட்சணமாயுள்ளது த்யாகாங்கம்; சிவப்பிரசாத சேவையினா னுண்டான சுக பரிணாமமே லட்சணமாயுள்ளது போகாங்கம்; சிவத்தின் ஐக்யாநுசந்தானமே லட்சணமாயுள்ளது யோகாங்கம். ஸ்தூலதேகயுக்தமானது த்யாகாங்கம்; சூக்ஷ்ம தேகயுக்தமானது போகாங்கம்; காரண தேகயுக்தமானது யோகாங்கம். ஜீவாத்ம ஸம்ஞையுள்ளது த்யாகாங்கம்; அந்தராத்ம ஸம்ஞையுள்ளது கோகாங்கம்; பரமாத்ம ஸம்ஞையுள்ளது யோகாங்கலிங்கம். த்யாகாங்கலிங்க சம்பந்தம் தாரணையோக மென்று சொல்லப்படும்; போகாங்கலிங்க சம்பந்தம் தியாந யோகமென்று சொல்லப்படும்; யோகாங்க லிங்கசம்பந்தம் சமாதி யோகமென்று சொல்லப்படும்.

திரிவித லிங்கஸ்தலம் ஆசார பேதத்தினால் ஆறுபேதங்களாயின. எவ்வாறெனின், த்யாகாங்கம் - பக்தன் மஹேச்வரன் என இரண்ட பேதமாயிற்று; போகாங்கம் - பிரசாதி பிராண லிங்கியென இரண்டு பேதமாயிற்று; யோகாங்கம் - சரணன் ஐக்யன் என இரண்டு பேதமாயிற்று. 1இந்து ஆறு அங்கஸ்தலத்திற்கும் முறையே பிருதிவி - அப்பு - தேயு - வாயு - ஆகாயம் - ஆத்மா என்பவைகள் அங்கங்களாயிருக்கின்றன; சித்தம் - புத்தி - அகங்காரம் - மனம் - ஞானம் - பாவம் என்பவைகள் ஹஸ்தங்களாயிருக்கின்றன; க்ராணம் - ஜிஹ்வா - சக்ஷு - த்வக்கு - ச்ரோத்ரம் - ஹ்ருதயம் - என்பவைகள் முகங்களா யிருக்கின்றன. சிரததாபக்தி - நிஷ்டா பக்தி - அவதாந பக்தி - அநுபவ பக்தி - ஆநந்த பக்தி - சமரச பக்தி என்பவைகள் பக்திகளா யிருக்கின்றன. சந்தனாதி திரவியம் - மதுரமாதி திரவியம் - ச்வேதாதி திரவியம் - ம்ருத்வாதி திரவியம் - நாதாதி திரவியம் - பரிணாம திரவியம் என்பவைகள் சமர்ப்பிக்கத்தக்க பதார்த்தங்களா யிருக்கின்றன.)


முதலாவது பத்தத்தலம்

[அதாவது - சரீர பிராண தர்மாதிகளெல்லாமும் ஸ்த்திரமென்று தோன்றிக் கொண்டிருப்ப தாயினும் தன் க்ரியா விசேஷத்தினால் அந்த பிராந்தியை விட்டு சித்தத்தை என்றும் சிவபக்தி சதாசாரங்களில் செலுத்தி யிருத்தல் என்பது.]

(இதன் உட்பிரிவு)
பரமசிவ பத்தியுள னெவனவனே பத்தனெனப் படுவ னன்னோன் றருமமுரை செய்திடுத றலமாகு மதன் றிறத்த தலமூ வைந்தா நிரையினவை பிண்டமதன் ஞானமொடு சமுசார நீக்க மாசா னருளிலிங்க நீறுமணி முறைதரித்த லஞ்செழுத்து மறிந்து கூறல். 1 பத்திநெறி குருலிங்க வந்தனைசங் கமபூசை பகர்ந்த வன்னோர் வைத்தபிர சாதவுண வவரிடத்திற் செயுந்தான வகையு பாதி மெய்த்தநி ருபாதியொடு சகசமென மூதறிஞர் விளம்பா நின்ற வித்தலத்தில் வருநெறிக ளனைத்து மியற் றுதல் *பத்தர்க் கியல்பு மாதோ. 2

(* மற்றொரு பிரிவு :- அதாவது பக்தனானவன் குரு பக்தன் லிங்க பக்தன் ஜங்கம பக்தன் என மூன்று வகைப்படுவான். குரு பக்தன், லிங்க பக்தன், ஜங்கம பக்தன் முறையே காயிக க்ரியையினானும், மானஸிக க்ரியையினானும் உடல் பொருள் ஆவி ஆகிய இவைகளை சமர்ப்பணம் செய்தல். பக்தனை மூர்த்திப்ரஹ்மம் என வழங்குதலுமுண்டு.)


முதலாவது

(1) பிண்டத்தலம்

[அதாவது - கிஞ்சிஜ்ஞனாய், மலத்ரயத்தினால் கூடிச் சரீராபி மானத்தைத் துறக்காமல் அவித்யா மோஹிதனாய், ப்ரஹ்மைக்ய ஞான தூரனாய், தன் கர்மா நுசாரமான தேவ திர்யங் மநுஷ்யாதி ஜந்மங்களை யடைந்து ஜனன மரணாத்மகமான சமுசார சக்கரத்தில் சுழன்று கொண்டிருக்கும் ஜீவன் தன் கர்ம பரிபாகத்தினால் மலத்ரயங்களைப் போக்கிக்கொண்டு எக்காலத்தில் சுத்தாந்தக் கரணனுமாவானோ அக்காலத்தில் பிண்டம் என்னும் ஸம்ஞை யுள்ளவனாகிறான் என்பது.]

				கலிநிலைத்துறை

		பண்டொ ராயிரம் பிறவியிற் பயின்றபுண் ணியத்தான் 
		மண்டு தீவினைப் பரப்பறப் புனிதமா மனத்தைக் 
		கொண்ட தேகியே கடல்குடித் துயர்குறு முனிவ 
		பிண்ட நாமமுற் றிடுமென வறைகுவர் பெரியோர். 						1

		உலகி றந்துசிந் மயவ விகாரியா யொளியா 
		யிலகு றும்பர சிவன்றன தஞ்சமா யிருந்த 
		வலகி றந்துள சீவர்க ளநாதியா மவித்தை 
		மலமு றும்பரி சாற்பல பிறவியின் வருவார். 						2

		அனையர் நெஞ்சிடை யியக்கும யேசனுற் றருள்வன் 
		பனிய விந்துகாந் தத்தினிற் புனல்கதிர்ப் பளிங்கிற் 
		கனலும் வெவ்வழல் வித்தினின் முளையெனக் கலந்து 
		முனைவர் சிங்கமென றுரைத்திட மலையொடு முனிவோய்.					3

		வெற்பெ ழுங்கதி ரிடத்தில்விம் பயப்பதி விம்ப 
		முற்ப வம்பெறு மாறென வொருபிர மத்தின் 
		முற்ப கர்ந்திடு சீவனோ டீசனா முறைமை 
		கற்பி தம்பெறு மென்பர்பல் கலைநெறி கற்றோர். 						4

		அறிவ தேவடி வாம்பர தத்துவ மதனி 
		னிறைவ தாகிய பிரேரகத் துவமொடு நிலைத்த 
		மறிவில் போத்துருத் துவமிகு போக்கியம் வருமாற் 
		குறைவி லாதெழு முக்குண பேதமே கொண்டு. 						5

		மடிவி லாதமுக் குணவடி வாகிய மாயை 
		முடிவி லாதமெய்ச் சிவத்துறு மக்குண மூன்றும் 
		விடம மேவுற விளம்புமுப் பொருட்பெயர் விரியுங் 
		கடிவி லாநிலைப் பிரமமா மொருபொருட் கண்ணே. 						6

		தக்க சத்துவ வுபாதிகொள் பிரமசை தந்ய 
		மொக்க வீசனாஞ் சத்துவ ரசோமய முயிரா 
		மிக்க தாமத முடையதே போக்கிய விளைவா 
		மிக் கணக்கின்முப் பொருளும்வந் துறுஞ்சிவந் திசைந்து. 					7

		சுத்த மென்றுள வுபாதியிற் றோய்ந்திடு மீசன் 
		மெய்த்தி டும்பதி யாகிய பிரேரகன் மிசிர 
		முய்த்த போத்துருப் பசுவென வறைவர்பே ருணர்வோ 
		னத்த னவ்வுயிர் சிற்றுணர் வுடையதென் றறியே. 						8

		மிகுதி கொண்மறை யுணர்வதவ் வியத்தமாம் பெயர்கொள் 
		பகுதி நண்ணினர்க் கமோககா ரணியெனும் பரையே 
		தகுதி கொண்டிடு சுத்தமா மசுததமுஞ் சாற்றிற் 
		றொகுதி கொண்டிடு மோககா ரணியெனத் துணியே. 						9

		மாயை கொண்டிறை பற்பல மூர்த்திகண் மருவுந் 
		தூய தன்றெனு மவித்தையாற் றோன்றுவர் பலரா 
		யேய சீவர்க ளநாதியே முத்தனவ் வீசன் 
		றீய பந்தனை யநாதியே யுற்றுளர் சீவர். 							10

		பரம ஞானமற் றநாதியாம் பாசமுற் றநாதி 
		கரும வேதுவா லடுத்துள காயங்கண் மருவி 
		மிருக மாதியாம் பற்பல பிறவியின் விரவித் 
		தெரும ருஞ்சுழன் றிடும்பெருந் திகிரிபோற் சீவன். 						11 

		சாதி யாயுவோ டுணவது தரும்பிட மத்திற் 
		கேது வாயுறுங் கருமமெந் திரமெனச் சுழல்வோர்க் 
		காதி யாமிறை யியக்குவோ னாய்க்கரி யாகிப் 
		போத கம்புரிந் தருளுநன் னெறியினைப் பொருந்தி. 						12

		கூறு சீவனும் வினைபரி பாகமே கொண்டு 
		மாறு மாமல வாதனை மருவினோ னாகி 
		யாறு மாமுடி புனைந்தருள் பரசிவ னருளின் 
		பேறு கூடுறச் சுத்தமா மனமொடு பிறக்கும். 						13

		பாக மாகிய நல்வினைப் பயன்கொடு சுத்த 
		மாகு மாமன முன்னிடத் தங்கண னருளா 
		லேக மாஞ்சிவ பத்திதோன் றுறுமவ னீற்றுத் 
		தேக மோடுநற் பிண்டமென் பெயர்கொடு செறியும். 						14

- பிண்டத்தலம் முற்றிற்று -
* * *
இரண்டாவது

(2) பிண்டஞானத்தலம்

[அதாவது - சரீரங்கள் நச்வரமானவைகள், ஆத்மாக்களைப் பார்க்கிலும் ஈச்வரன் பின்னனும் அவகைளுக்குப் பிரேரகனுமா யிருப்பவன் என்னும் ஞானம் பிண்டனானவனுக்கு எக்காலத்திலுண் டாகுமோ அக்காலத்தில் பிண்ட ஞானி என்பது.]

			கலிவிருத்தம்

		உற்றிடு முடலுயி ருணர்வி வேகமே 
		பெற்றவ னெவனவன் பிண்ட ஞானியென் 
		றற்றம தறுமலை யமர்ந்த மாதவ 
		கற்றறி புலவர்மெய் கழறு வாரரோ. 							1

		உடலுயி ரெனுமுல காய தன்பொறி 
		யடலுயி ரென்னுமற் றொருவ னன்றியே 
		புடைவரு புத்தியே யென்னும் புத்தனிவ் 
		விடலுறு மிவைகளான் மாவின் வேறவாம். 						2 

		உயிரின்வே றாகிநின் றுணரப் பட்டிடுஞ 
		செயிருறு முடலொ டிந்திரிய புத்தியி 
		னயலழி வரியவான் மாவுண் டாமென 
		நயமுட னுணர்பவன் பிண்ட ஞானியே. 							3

		வினைவழி திரிதரு மெய்யும் வேறதாய் 
		நினைவரு நித்தவான் மாவு நித்தமா 
		யனையவான் மாவின்வே றாய வீசனும் 
		பினமுற வறிபவன் பிண்ட ஞானியே. 							4

- பிண்டஞானத் தலம் முற்றிற்று -
* * *
மூன்றாவது

(3) சமுசார நீக்கத் தலம்

[அதாவது - இங்ஙனம் பிண்ட ஞானோதயமான மகாத்மாவுக்கு ஸம்ஸ்கார வல்லமையினால் மனைவி, புதல்வன், உடல், பொருள் முதலிய சமுசாரங்களைத் துச்சமாய்க்காணும் புத்தியுண்டாய் வைராக்கிய முள்ளவனாதல் என்பது.]

			கலிவிருத்தம்

		சுத்தம துறுமனந் தோன்று நித்தியா 
		நித்திய விவேகிபா னின்ற வரதனா 
		சத்தியின் மிகுசமு சாரம் விட்டொழி 
		புத்திவந் துறுமெனப் புகல்வர் குற்றுளார்.  							1

		பெண்டெழு வாய்தரு பேறி மைப்பினில் 
		விண்டிடு மிம்மையு மேய புண்ணிய 
		முண்டொழி துயர்முத லுறுது றக்கமுங் 
		கண்டெவர் விரும்புவார் கற்று ளோரினே. 							2 

		பிறந்தவர்க் குண்மையே பெறுமி றப்புமற் 
		றறிந்தவர்க் கன்னதே பிறப்பு மிவ்வகை 
		செறிந்துள பிறப்புட னிறப்பிற் சீவனு 
		மறிந்திடு சகடமே போல வந்துறும். 							3

		மீனொடு கமடமே வெண்பற் பன்றிமா 
		மானிட வரிமுத லாக வந்துள 
		வேனைய பிறப்பினு மெய்து மாயவன் 
		றானுமம் மரணநோய் தள்ள வல்லனோ. 							4 

		ஆவிமுன் வினைவசத் தந்த ணாதியாய் 
		மேவுறு சாதியின் விரவித் தோன்றியே 
		தாவுற வடருமுத் தாப வங்கியால் 
		வேவுறு நிலைமையாம் விளம்ப வேண்டுமோ. 						5

		பொய்த்திடா தடையுறும் வினையிற் போதரு 
		மத்தியான் மிகமுத லாய வெந்துயர்க் 
		கொத்தினான் மிகுமிடர் கொண்டு ளோர்தமக் 
		கெய்த்திடா தமைதலெவ் விடத்துண் டாகுமோ. 						6 

		ஆதியத் தியான்மிகம் பவுதி கம்பினா 
		மோதுதெய் வீகமூன் றாவ தாகுமாற் 
		போதுமத் தியான்மிகம் புறமுட் கொண்டிரு 
		பேதமுற் றிடுமெனப் பேசு வாரரோ. 							7 

		வளிமுத லனதர வரல்பு றத்ததா 
		முளினது மடிவில்கா மாதி யுய்க்குதல் 
		களியர சாதிநோய் பவுதி கங்கழு 
		தளியிடர் முதலதெய் வீக மாகுமால். 							8 

		இனைய வெந்துயர் பலவிசைந் துகட்டுறும் 
		வினையொடு திரிதரு முயிர்க்கு விண்ணிடை 
		யெனினுமிம் மண்ணிடை யெனினு மோர்கணந் 
		துனியறும் படிசிறு சுகமு மின்றரோ. 							9 

		மின்னினு மலையினும் விளக்கெ ழுஞ்சிகை 
		தன்னினு நிலையறத் தபுசெல் வத்தினை 
		மன்னுறு பொருளென மதிப்ப ரோகண 
		மென்னினு மறிஞரோ டிருந்து ளோருமே. 							10 

		மலசல நிறைதரு கடத்தை வன்றுய 
		ரலைபடு துரும்பினை யழியு மின்னினு 
		நிலையறு மிவ்வுட றன்னை நிந்தைசெய் 
		புலைமனை தன்னையார் பொருந்து வார்களே. 						11

		நித்தியா நந்தசிற் சொரூப நின்றிட 
		மித்தையா மியல்புடைத் துயர வீடென 
		வைத்தவா கத்தினை மகிழ்ந்தி ருந்திடும் 
		புத்தியார் செய்குவர் புலவர் தம்மினே. 							12

		ஓதியா னிடர்தரு முடம்பின் மக்களின் 
		மாதரி னுறவினின் மற்று ளோர்தமிற் 
		கோதுறு தனத்தினிற் குலத்திற் போக்குறு 
		காதலி னநித்தியங் காண்ப னென்றுமே. 							13

		பொறிகளின் விரத்தியாய்ப் பொருவி றம்மையே 
		யறிவுற விழைவுடை யறிஞர்க் காழ்துயர் 
		மறிவுறு குடும்பநோய் மாற்று மேதுவிற் 
		செறிவுறு முளமெனச் செப்பு வாரரோ. 							14 

		ஆசறு மனமுட னநித்த நித்தமுந் 
		தேசுற வுணர்ந்துநற் றெய்வ வாழவினு 
		நேசம தகன்றுள நெறியி னோனிடைப் 
		பாசம தறுசிவ பத்தி தோன்றுமால். 							15

- சமுசார நீக்கத் தலம் முற்றிற்று -
* * *
நான்காவது

(4) குரு காருணியத் தலம்

[அதாவது - முற்கூறிய பிண்டஞானி சமுசார நீக்கத்தல சம்பந்னனாகவும் ப்ரஹ்ம ஜ்ஞான சம்பாதநார்த்தமாய் ஸ்ரீ ஸத்குரு சந்நிதியை யடைந்து த்ரிவித தீக்ஷையையடைதல் என்பது.]

		அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

	மலர்தலை யுலக மெல்லா மலிபெரும் புகழோ டொன்றி 
	யிலனென விவறன் மோக மிரித்துத்தத் துவமு ணர்ந்து 
	புலநெறி கடந்து சாந்தம் பொருந்திச்சித் தாந்த மோடு 
	பலகலை தெரிவுற் றையம் பாற்றிட வல்ல னாகி. 							1

	அறநெறி வாய்மை மேவி யாரிய குலத்தாற் போந்த 
	முறைநெறி யொழுக்க மெய்தி முத்திநே யத்த னாகிப் 
	பொறையொடு பொருந்தி யக்க மணிதிகழ் பூதி யென்று 
	நிறைவுற வணிந்தி லிங்க நிலைபெற வுடற ரித்து. 							2 

	அகத்துறு தியாக மேவி யருச்சனை புரிவோ னாகி 
	யுகப்புறு மங்க லிங்க யோகதத் துவமு ணர்ந்தே 
	யிகப்பறு தலங்க ளோர்வுற் யெதியத் துவித ஞானந் 
	தகச்சிவ முணர்த்த வல்ல தயங்குஞ்சீர்க் குரவன் றன்னை. 						3 

	மாசறு மனத்த னாகி மதியுடை விராகி யானோன் 
	பாசம தனைத்து நீக்கும் பரசிவ முணரத் தோன்று 
	நேசமோ டடைவன் பாம்பி னௌ¤திரைக் கடல்வ றப்ப 
	வாசம நஞ்செய் தோங்கு மகத்தியப் பெயரி னானே. 							4

	திங்களா றேனு மாண்டொன் றாயினுந் தேசி கன்றன் 
	பொங்கருள் காணுங் காறும் புரிந்துநற் பணிகள் காணி 
	னங்கருள் சீல சீட னஞ்சலி செய்து நின்றே 
	பங்கமாம் பிறவி நோயெற் பரிந்தருள் புரிக வென்பான். 						5 

	புனிதமா ணாக்க னின்ன புகன்றரு ளிரந்து நிற்ப 
	வனையவன் றனது சத்தி பாதமுற் றறிந்து பின்னர் 
	வனைதபு *தீக்கை யோடு மேவுவித் தருள்வ னென்ப 
	தனிவரு பரமா நந்த தத்துவக் குரவ னன்றே. 							6 

( * தீக்கை என்பது - “தீக்ஷா” என்னும் வடசொற்றிரிபு. தீ க்ஷ என்னும் இரண்டு அக்ஷரங்கள், குருவினது அநுக்கிரகத்தினால் சிவஞான சம்பந்தம் (க்ஷீயதே ) கொக்கப்படுவது, மலத்ரயம் (க்ஷீயதே) நாசப் படுத்துவது எனப் பொருள் கொள்க.)

	மூவகை யுறுமத் தீக்கை முறைதரு வேதா* வென்றும் 
	தாவின்மந் திரம தென்றுந் தகுதிகொள் கிரியை யென்று 
	மேவுறு மவற்றுள் வேதா மெய்க்குரு காட்சி யானே 
	யாவிகொள் சிவம்வி ளங்க லத்தமத் தகயோ கத்தால். 						7 

	(* பாவ லிங்கத்தை காரண சரீரத்தில் நிலைக்கச் செய்தல்.) 

	மந்திர மதனை யேதன் மைந்தனுக் குபதே சித்தல் 
	சிந்தைசெய் +மந்தி ரப்பேர்த் தீக்கையாங் குண்ட மாதி 
	தந்திரங் கொண்டு செய்த றக்கநற் ++கிரியை யென்ப 
	ரந்தம தடைந்த வந்தக் கிரியையை யறைது மாதோ. 						8

	(+ பிராண லிங்கத்தை சூக்ஷ்ம சரீரத்தில் ஸ்தாபித்தல்.  மநுதீக்ஷை என்றும் சொல்லப்படும்.
	++ இஷ்ட லிங்கத்தை ஸ்தூல சரீரத்தில் தாரணம் செய்தல்.) 

	தீங்கறு திங்க ணல்ல திதிகால வார மொன்ற 
	வோங்குறு பூதி தாம்பூ லத்தொடு முதவிப் பத்தர்க் 
	கீங்கற லாட லாதி யியற்றிவெண் டுகில்பு னைந்து 
	பாங்குறு சீடன் றன்னைப் பகர் முறை யருக ழைத்து. 						9

	உத்தர திசையை நோக்கி யுற்றதன் பாங்கர்ச் செய்த 
	சித்திர மண்ட பத்திற் குணக்கெனுந் திசையை நோக்கி 
	வைத்தருள் புரியு மாசான் மலிசிவத் துதிக டாஞ்செய் 
	வித்தக விருளி ரிக்குந் தியானமும் விரவு விப்பன். 							10

	முன்னர்நன் னீற்றுப் பட்ட மொழியிடம் வழாத ணிந்து 
	பின்னர்மெய்க் குரவ ராயைம் பிரமமே வடிவா யுற்ற 
	தன்னிகர் கும்ப நீரச் சற்குரு வழியின் வந்த 
	செந்நெறி யுடைய வாசான் சிதறுக சீடன் மீது. 							11

	ஆண்டரு கிருந்த சுத்த னாகிய மாணாக் கன்றன் 
	மாண்டரு வலக்கா தின்கட் பலப்பிணி மருந்தாய் நல்லோர் 
	வேண்டுமஞ் செழுத்த மெல்ல விளம்பு சொருபஞ் சந்தம் 
	காண்டகு மிருடி மிக்க கடவுணன் னியாசஞ் சொல்க. 						12 

- குரு காருணியத் தலம் முற்றிற்று -
* * *
ஐந்தாவது

(5) இலிங்கதாரணத் தலம்

[அதாவது - எந்த வஸ்துவினிடத்தில் இந்தச் சராசராத்மகமான ஜகத்துலீனமாய் மீளவும் உற்பத்தியாவதெதுவோ, சர்வ சாக்ஷியாயும் சிதானந்தமாயுமுள்ளதெதுவோ, லிங்க மென்னும் அபிதானமுள்ளதெதுவோ, அந்தப் பரப்ரஹ்மமே பாஹ்யேந் த்ரியங்களுக்ககோ சரமாய்ப் பாவனைக் கதீதமாய்ச் சித்ரூபமாயிருக்கிற அந்த ஜ்யோதிர்லிங்கம் என்று அநுசந்தான பூர்வகமாய் சத்குரு தத்தமான இஷ்டலிங்கத்தைச் சீடன் அந்தர்லிங்கா நுசந்தானனா யிருப்பினும் அல்லது அஸத்மர்த்தனா யிருப்பினும் இதை அபேத புத்தியினால் ஸ்தூ சரீரத்தில் தரித்துக்கொண்டே யிருத்தல் வேண்டும்; ஏனெனின், - சத்குருவின் கருணையுடன் கூடி மோக்ஷார்த்தியான சீடனது இருதயத்திலிருக்கும் சிந்மூர்த்தி தாரணமாதலான் என்க.]

		அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

	சந்திர காந்தத் தேனுந் தபனகாந் தத்தி லேனுஞ் 
	சுந்தர சயிலந் தன்னிற்  றோன்றிய சிலையி லேனும் 
	வந்துறு படிகத் தேனு மகிழ்வாண லிங்கத் தேனு 
	முந்தழ குறுமி *லிங்க மொன்றுகொள் கிற்க மன்னோ. 						1 

( * அத்யதிஷ்டத்தசாங்குல, நிருபம், நித்ய, நிராமய, நிர்க்குண, நிரஞ்ஜன, நிர்த்வந்த்வ, அவ்யக்த, அவ்யவ, பராத்பர, அத்விதீய ப்ரஹ்மம் என்னும் பதத்திற்கு வாச்யமான பரவஸ்துவே இந்த லிங்கம்.)

	இலக்கண முழுது மொன்றி யிலங்குமா னைந்து மாடிக் 
	குலக்கடி மலர்சந் தாதி கொண்டருச் சிக்கப் பட்டு 
	விலக்கரு மநுவாற் சுத்த மேவுமவ் விலிங்கந் தன்னிற் 
	கலைக்கதி வழாது சைவ கலையையுய்த் திடுவ னாசான். 						2 

	சீடன துயிரை யந்தச் சிவலிங்கந் தன்னி லுய்த்துப் 
	பீடுறு மிலிங்க மன்னோன் பிராணனி லுறவி ருத்தி 
	யேடென விரும்பு மாசா னிவ்வகை யேக பாவங் 
	கூடுற வியலி லிங்கங் கொடுக்கவச் சீடன் கையில். 							3 

	இலங்குழிப் பிராண லிங்க மினியநின் பிராண னேபோற் 
	சலந்தவி ருனக்கு மைந்த தரிப்பதெவ் விடத்து மென்றும் 
	விலங்குவ தன்றெங் கேனும் வீழ்ந்திடின் மெய்யி னின்று 
	நலங்கிளர் முத்தி சேர்வா னல்லுயிர் விடுக வல்லே. 						4

	நூனெறி முழுது மாய்ந்த நுண்ணுணர் வுடையோன் றன்னாற் 
	றானினி திவ்வா றோதிச் சாற்றிடப் பட்ட சீடன் 
	மேனியி னுயிர்வாழ் காறும் விடாதுநன் குறத்த ரிக்க 
	கூனிள மதிய ணிந்த குழகன்மெய்ச் சிவலிங் கத்தை. 						5 

	புண்ணிய மனைத்தி னுக்கும் புகலிட மாகி நின்றங் 
	கெண்ணரும் பவம கற்று மிலிங்கதா ரணம தென்று 
	கண்ணுத லருளிச் செய்த காமிகா திகளை யோர்ந்த 
	நுண்ணுணர் வுடைய வெல்லா முனிகளு நுவல்வ ரன்றே. 						6 

	தகைபெறு பரம லிங்க தாரண முட்பு றம்பாம் 
	வகைபெற விரண்டா மென்பர் மாதவ ரவற்று ளாதி 
	பகவனென் பெயர்பு னைந்த பரமசிந் மயலிங் கத்தை 
	யகமதி லுறத்த ரித்த லாந்தர மாகு மன்றே. 							7 

	மூலகா ரணமாய் ஞான மூர்த்தியா யின்ப மாகி 
	மேலதா யுண்மை யாகி விகற்பமோ டழிவு மின்றி 
	மாலிலா துலகி றந்த பிரமமா மாலிங் கந்தான் 
	சாலவீ டுறுதல் வேண்டுந் தக்கவ ரடைத லாமே.							8

	வேதமா முடிய னைத்தும் விளங்குறப் பிரம மென்னுஞ் 
	சோதிமா லிங்க மெல்லா வாவிக டோறு நிற்கு 
	மாதி *யா தாரமாசி லகமெனு +மிதய நன்றிக் 
	கேதுவாம் ++புருவ நாப்ப ணெனவரு மூன்றிடத்தும். 						9

( * பாயுவுக்கும் இலிங்கத்திற்கும் நடுவில் (நான்கிதழுடைய) முக்கோண வடிவாகிய இடமானது மூலாதாரமென்று சொல்லப்படும். + அநாஹதம் எனப்படும் பன்னிரண்டிதழுடைய இடமானது இருதயம் என்று சொல்லப்படும். ++ புருவத்திற்கு நடுவிலுள்ள ஆக்ஞை எனப்படும் இரண்டு இதழுடைய இடமானது புருவ நாப்பண் என்று சொல்லப்படும். இவ்வாறு யோகஸிகோபநிஷத்தில் கூறப்பட்டிருத்தல் காண்க.)

	அழிவற வரிதா யென்று மகண்டமாய்ப் பிரம மென்னு 
	மொழிபெறு பரம லிங்க முத்திநே யத்த ராகி 
	வழிபடு பவர்க்கா கத்தன் மாயையாற் கண்டி தரப்பட் 
	டொழிவற விருக்கு மென்றே யுரைப்பர்நுண் ணுணர்வி னோரே. 					10

	சரமுட னசரமென்னச் சாற்றிய வுலகு திக்குங் 
	கருமமோ டிலய மெய்துங் காரண மதனா லென்று 
	முரைமன மிறந்து ஞான வொளியுரு வாகி நின்ற 
	பிரமம திலிங்க நாமம் பெறுமென விசைப்பர் தக்கோர். 						11

	சாற்றரும் பரம தாய சச்சிதா நந்த லிங்க 
	மாற்றவும் பெரிதாந் தன்மை யடைதலி னானு மன்றித் 
	தோற்றுறு முலகி னுக்குக் கருப்பமாந் தொடர்பி னானும் 
	போற்றுறும் பிரம நாமம் பொருந்துமென் றறிந்து கொண்மோ.						12

	மருவுமா தாரத் தேனு மிதயநன் மலரி னேனும் 
	புருவமா நடுவி லேனும் பொருந்திய வொன்றி லென்றும் 
	விரவுமா சோதி லிங்கம் விடாதநு சந்தா னந்தா 
	னிரவிலாந் தரவி லிங்க தாரண மென்பர் மேலோர். 							13

	ஆடக வுருவ மாக வணிகொண்மூ லாதா ரத்திற் 
	பாடல வொளியி மைக்கும் பவளம்போ லிதயந் தன்னி 
	னீடொளி யுபலம் போல நிகழ்தரு புருவ நாப்ப 
	ணாடரு முணர்வி லிங்க ஞானயோ கிகள்சிந் திப்பார். 						14

	புறத்துறு தார ணத்திற் புகல்கோடி மடங்கு மிக்க 
	சிறப்புறு மகவி லிங்க தாரணந் தீர்ந்து பாதி 
	பிறப்பிடை மறிதல் செய்யார் பிறங்கொளி யிலிங்கந் தன்னைத் 
	துறப்பற விதய மொன்றத் துணிவொடு தரித்து ளோரே. 						15

	உள்ளத்தி லிலிங்கந் தன்னை யொழிவற விடாது பற்ற 
	றெள்ளுற்ற வான்ம வித்தை சேர்ந்தமை வுறுத லம்ம 
	வள்ளற்றண் ணளிநல் லாசான் மகிழ்செய்குற் றேவ லென்னத் 
	தள்ளற்ற விவைக டாமே காரணந் தனிமுத் திக்கே. 							16

	ஊனமாம் விடய நீத்தே யுளந்தடு மாற வில்லா 
	மானமா யோகி கட்கு மனத்தெழுந் திலங்கா நின்ற 
	ஞானமா லிங்கத் தன்றி நவின்றுள புறத்தி லென்றுந் 
	தானுறா துளவி ருப்பென் றுணருதி தவத்தின் மேலோய்.						17

	வேதனோ டரிய ரன்சீர் விண்முழு தாளி யாதி 
	மாதிர மன்ன ரீண்டு மனிதர்கந் தருவர் சித்தர் 
	தீதறு முனிவ ரெல்லாஞ் சிந்மய மாய கத்துட் 
	சோதிகொள் பரமா நந்த லிங்கமே துணிந்து காண்பார். 						18

	சச்சிதர நந்த மாகுந் தற்பர லிங்கந் தன்னை 
	யிச்சையா லறிஞ னானோ னெத்திறத் தானு மென்று 
	மச்சமார் துயர மெல்லா மருக்கன்முன் னிருளே போல 
	வெச்சமாய் நிலாது பொன்ற விதயத்திற் றியானஞ் செய்க. 						19

	அத்தனை யகந் தரிக்க வசத்தனா யினும தாஅன்று 
	சத்தனே யெனினு ஞான தற்பர லிங்க மேயென் 
	புத்தியின் றிட்ப மெய்திப் புறத்திலிங் கந்த ரிக்க 
	வித்தக னெறி யுணர்ந்த வீரசை வர்கடா மன்றே. 							20

	திரம்பெறு மிலிங்க மூன்று திறத்ததாந் தூல லிங்கம் 
	பரம்பெறு சூக்கு மம்பின் பராற்பர மென்னத் தூலங் 
	கரம்பெறு மிட்ட லிங்கங் கருத்தது சூக்கு மந்தா 
	னிரம்புறு மிலிங்கந் தானே நிகழ்பராற் பரமென் றோர்வாய். 						21

	மாட்சியாய்ப் பிரம* மிக்க சிவமென மருவி யன்றே 
	யாட்சியா மநிட்ட மெல்லா மகற்றியே யிட்ட மாகிக் 
	காட்சியா னிகழ்வ தாஞ்சிற் கனபரி ணாமலிங்கம் 
	பூட்சியூ டகலா தென்றும் புலமையோர் தரிக்க மாதோ. 						22

( * இச்செய்யுளில் பிரமம் என்றதினால் இவ்விஷ்டலிங்கத்தை யாதோ ஒரு லிங்கமென்று நினையாது பரப்ரஹ்ம ஸ்வரூபமென்று பாவிக்கவேண்டும் என்பதாம்.)

	சிரமொடு களநன் மார்பு சிவந்துள வுதரங் கக்கங் 
	கரமெனு மிவற்றி லொன்றின் கட்சிவ லிங்கந் தாங்கல் 
	வரமிழி நாபி யின்கீழ் வார்சடை நுதியிற் பின்பாற் 
	புரைதரு மிடத்தி லென்றும் பொருந்துறத் தரிக்கொ ணாதால். 						23

	தம்பொரு ளாமி லிங்கந் தன்னைவள் ளிதழ விழ்ந்த 
	வம்பலர் கந்த மாதி மருவுற முறையிற் கொண்டு 
	கம்பமின் மனத்தி னோடு கரபீடத் தினிலர்ச் சிப்ப 
	ரிம்பரி னென்றுஞ் சுத்த ரெனப்படும் வீர சைவர். 							24

	உரம்பெறு முத்தி நேய மூற்றமாம் வீர சைவர் 
	நிரந்தரம் விடாது பற்று நிகழ்கர பீட பூசை 
	பரம்புற மியற்றும் பீட பூசையிற் பராரை வெற்பி 
	லிருந்துமை பாக னோடொப் பென்பதை யுணர்த்த வல்லோய். 					25

	பனிமல ரயன்மா லாதிப் பண்ணவர் கோத மாதி 
	முனிவர ரனைவ ருந்தம் முடிமிசை யென்றுங் கொள்வர் 
	தனிவரு மிலிங்கம் வாட்கட் பொறிமுதற் சத்தி யெல்லாம் 
	புனைமல ரளக மீது பொருந்துறத் தரிப்பர் மன்னோ. 						26

	சதுமறை யுள்ளு மிக்க சாத்திரங் களினு மீரொன் 
	பதுவித புராணத் துள்ளும் பகர்தரு காமி கந்தான் 
	முதல்வரு மாக மத்து மொழிந்திடப் பட்டி டுஞ்சந் 
	ததமுமெய் விடாவி லிங்க தாரணம் *விறற்சை வர்க்கே. 						27

( * சங்கர சம்ஹிதை கோஷிப்பதாவது :- ஓ! புத்திரனான ஷண்முக, யாதொருவன் குருவினால் பூஜிக்கப்பட்டுக் கொடுத்த தனது இஷ்ட லிங்கத்தைக் கரம் என்னும் பீடத்தில் வைத்து அந்த மஹா லிங்கத்தில் லயித்த மனமுடையவனாய் பாஹ்யக்ரியையில் பற்றில்லாதவனாய்ப் பூஜிக்கின்றானோ அவன் வீரசைவன் என்பது.)

	பங்கயற் கிறைவ னின்மெய் பவித்திர மெனவி ருக்கொன் 
	றிங்குரைப் பதனாற் றூய்தா விலங்குறுஞ் சிவலிங்கந் தான் 
	றங்குறத் தரிக்கத் தக்க தாகுமச் சைவ லிங்க 
	மங்கலம் புனித தீக்கை மருவுறா னடைந்தி டானால். 						28

	உன்றது வகோர மாகி யுருத்ர பாவத்தி னீங்கு 
	மென் *றெசு ருரைத்த லாலே லிங்கதா ரகனாஞ் சைவன் 
	றுன்றுபா வங்களெல்லாந் தொலைப்பவ னென்பர் மேலோர் 
	தென்றலங் குன்றி னுற்ற செஞ்சடை முனிவ ரேறே. 						29

( * யஜுர்வேதம் கோஷிப்பதாவது :- ஓ! ருத்ரா, உமது யாதொரு [லிங்கரூபமாகிய] தேகமானது மங்கல ஸ்வரூபமாயும், சாந்தமாயும், புண்ணியவான்களிடம் விளங்குவதாய முளதென்பது, இக்காரணத்தினால் சிவ [லிங்க] சம்பந்த முடையவன் பாவமற்றவன்.)

	நித்தலு நியமஞ் செய்து நிமலபூ சையின்கட் பட்ட 
	சித்தம துடைய னான சிவலிங்க தாரகன்றா 
	னெத்திற மலமு நீங்கா விருடெறு கதிரின் மாய்க்குஞ் 
	சுத்தம துறும்வி பூதி தோன்றுறப் புனைவ னன்றே. 							30

- இலிங்கதாரணத்தலம் முற்றிற்று -
* * *

வீரசைவ சமய விசாரம்

இதுவரையில் பிண்டத் தலம், பிண்ட ஞானத் தலம், சமுசார நீக்கத் தலம், குருகாருணியத் தயம், இலிங்கதாரணத் தலம் என்பன சொல்லப்பட்டன; இவற்றால் முறையே, ஸத்வாசனா ரூபமான சக்தி பாதத்திற்குச் சமீபமான ஈற்றுத்தேக பாவமுள்ளவ னெவனோ அவன் பிண்டன் என்பதும், இந்தத் தேகத்தில் நித்யாநித்ய விசாரமுள்ள விவேகியானவனெவனோ அவன் பிண்டஞானி என்பதும், இந்தச் சம்சார பிண்டத்தில் வெறுப்புத் தோன்றி மோக்ஷதாக முள்ளவ னெவனோ அவன் சம்சாரத்தி னின்றும் விடுபட்டவன் என்பதும், இவ்வித வெறுப்புள்ள சீடனைச் சம்சாரத்தி னின்றும் தீக்ஷையினால் விடுவிக்கக் கருணையுள்ளவ னெவனோ அவன் தீக்ஷா குரு என்பதும், அந்தச் சற்குருவின் கருணையினால் ப்ராண லிங்க ஐக்ய சம்பந்தமுள்ள சீடனெவனோ அவன் லிங்கதாரகன் என்பதும் பெறப்பட்டன. இவ்விதமான சீடனே வீரசைவன் என்பதும், அவனுக்குத் தீக்ஷையும் லிங்க தாரணமும் அத்யாவசிகமாய் விதிக்கப்பட்டன என்பதும், அன்னோனது லக்ஷணம் இத்தன்மைத்து என்பதும் நன்கு அறியப்பட்டன. அந்த வீரசைவனது லக்ஷண மறியப்படினும் ஏனைய சமயிகளின் லக்ஷணங்களையுமறிதல் அவசியமாதலால் அவை ஆகம புராணங்களில் விரிவாய்ச் சொல்லப்பட் டிருப்பினும், வடமொழியில் முக்கியமாய் விளங்கும் பாகங்களை மட்டும் ஈண்டுத் தமிழில் எழுதலாயிற்று. அவை வருமாறு:-


பாரமேச்வராகமம்

சம்யக்கான ஜ்ஞானத்தைக் கொடுப்பது, பாசங்களின் சமூகத்தைக் கெடுப்பது, இந்தத் தாநக்ஷபனங்கள் என்னும் இரண்டின் சாசனத்தில் தீக்ஷாசப்தம் பிரசித்தம்.

அந்தத் தீக்ஷையானது நிராதார தீக்ஷை யென்றும், சாதார தீக்ஷை யென்றும் இரு வகைப்படும். அவற்றுள், சிவபிரான் நிராச்ரயனாய்த் தீவிர சக்தி நிபாதத்தினால் விஞ்ஞான கலர் பிரளயாகலர் இருவர்களுக்குச் செய்யும் தீக்ஷையே நிராதார தீக்ஷையென்று சொல்லப்படும். குரு மூர்த்தியை யாச்ரயித்து மந்த சக்தி நிபாதத்தினால் சகலர்களுக்குச் செய்தலே சாதார தீக்ஷை யென்று சொல்லப்படும்.


காரணாகமம்

பின்னும், சாதார தீக்ஷையானது ஸபீஜ தீக்ஷை, நிர்பீஜ தீக்ஷை, சிந்மய தீக்ஷை என்று மூன்று வகைப்படும். அவை முறையே, கர்ம பக்தி ஞான காண்டங்களுக்குரிய தீக்ஷைகள் எனப்படும்.


பாரமேச்வராகமம்

அவற்றுள், நிர்பீஜ தீக்ஷையானது சத்யோநிர்வாண தீக்ஷை, சிரந்நிர்வாண தீக்ஷையென்று இரண்டு பேதமுள்ளதா யிருக்கும். அவற்றுள், அத்யந்த விரக்தனான சீடனது அநேக பவங்களில் செய்யப்பட்ட சஞ்சித கர்மங்களையும், மற்றும் அந்தச் சஞ்சித கர்ம ராசியில் அக்காலத்தில் தரித்திருந்த சரீரத்தைக் கைப்பற்றி அநுபவித்துக் கொண்டிருந்த ப்ராரப்த கர்மங்களையும், பின்னர் பவாந்தரங்களில் அநுபவிக்க வேண்டி ஆகாமி கர்மங்களையும் சோதித்து, சத்யோந் முக்தியைக் கொடுக்கும் தீக்சையே சத்யோ நிர்வாண தீக்ஷை யென்று சொல்லப்படும். இன்னும், சீடனது சஞ்சித கர்மங்களையும் ஆகாமி கர்மங்களையும் கெடுத்து, தீக்ஷோத்தர க்ரியாவஸாந பர்யந்தம் அநுபவித்துக்கொண்டிருந்த ப்ராரப்த கர்மங்களின் போகாந்தத்தில் முக்தியை யடைவிக்கும் தீக்ஷையே சிரந் நிர்வாண தீக்ஷையென்று சொல்லப்படும்.

காமிகாகமம்

பின்னும், அந்தச் சிரந்நிர்வாண தீக்ஷையானது ஆஜ்ஞாதீக்ஷை, உபமாதீக்ஷை, ஸ்வஸ்திகாரோஹணம், விபூதிபட்டம், கலசாபிஷேகம், லிங்காயதம், லிங்கஸ்வாயதம் என்று ஏழுவகைப்படும். அவற்றுள், குருவினது ஆஜ்ஞா பரிபாலனத்தில் சமர்த்தமானதே ஆஜ்ஞாதீக்ஷையாம். புராதனர்களின் சமயாசாரத்திற்கு ஸத்ருசமானதே உபமா தீக்ஷையாம். ஸ்வஸ்திகம் என்னும் மண்டலத்தின்மேல் சீடனை யுட்காருவித்து, மந்திர நியாசத்தைச் செய்து, மந்திர பிண்டமாகச் செய்தலே ஸ்வஸ்திகாரரோஹணமாம். ஆகமோக்த ஸ்தானங்களில் அவ்வம்மந்திரங்களினால் விபூதி தாரணத்தைச் செய்தலே விபூதிபட்டமாம். பஞ்ச கலசங்களில் தீர்த்தோதகத்தை நிறைத்து, சிவகலா ஸ்தாபனத்தைச் செய்து அந்தக் கலசோதகத்தினால் சீடனுக்கு ஸ்நபநம் செய்வித்தலே கலசாபிஷேகமாம். ஆசாரியன் சீடனுக்கு உபதேசித்து அளிக்கவேண்டிய லிங்கத்தை அர்ச்சனைசெய்து சீடன் காணும்படி செய்தலே லிங்காயதமாம். அந்த ஸ்ரீகுருநாதனால் உபதேசிக்கப்பட்ட ப்ராணலிங்கத்தைச் சீடன் பக்தியினால் ஸ்வீகரித்து, தனது உத்தமாங்காதி ஸ்தானங்களில் தரித்தலே லிங்கஸ்வாயதமாம்.

வாதுளாகமம்

பின்னும், அந்த ஸ்வாயத தீக்ஷையானது வேதா தீக்ஷை, க்ரியா தீக்ஷை, மந்த்ர தீக்ஷை என்று மூன்று விதப்படும். அவை யெவ்வாறெனின் :- குருவானவர் சீடனது மஸ்தகத்தில் ஆகமோக்த விதானத்தினால் சிவசாஸன(மந்திர)த்தைத் தியானித்து அவ்வவ்விடங்களில் செய்யவேண்டிய சிவதத்வ தீக்ஷையே வேதாதீக்ஷையாம். தீக்ஷோத்தர க்ரியையோடு ப்ராண லிங்கோபதேசம் செய்தலே க்ரியா தீக்ஷையாம். தேவதா பீஜ கீலக முதலியவைகளுடன் மந்த்ரோபதேசமும் செய்தலே மந்த்ர தீக்