| 1161
| இரந்துபின்னிற்றற்கெண்ணல். கல்லா ரலர்முற்றுங்
கற்றும்வன் றொண்டரங் கால்பரவை வில்லார் முலையின் படையப் பிறரடி
வீழ்ந்திரந்தார் செல்லார் பொழிற்பு கலியார் பொதியச் சிலம்பமரிந்
நல்லா ரடியடைந் தேயிரப் பாமின்ப நாம் பெறவே.
| 7 |
| 1162
| இரந்துபின்னிலைநிற்றல். விண்பர வாதிப்
பிரான்றிருத் தோணிமுன் மேவிமிக்க தண்பர ஞான வமுதமும் வாங்குந்
தரமுடையே னெண்பர வாயநுஞ் செவ்வா யமுதமின் னேயிரந்தேன் பண்பர வாய
மொழியீர் மறீர்பழி பற்றிடவே.
| 8 |
| 1163
| முன்னிலையாத்தல் நாகங் கருதுஞ் சிரபுரத் தீசர்
நகுவரைவாய்க் கோகங் கருது முலையீர்நல் லாயக் குழுவினகன் றேகங்
கருதிச் சுனையாட லாதிய வின்றிநின்றீர் யோகங் கருதியென் றேநினைத்
தேன்சொன்மி னுண்மையையே.
| 9 |
| 1164
| வண்டோச்சி மருங்கணைதல். மோதுந் திரைக்கடற் காழிப்
பிரான்வரை மொய்த்தவண்டீர் யாதும் பெயர்பொய்ம்மை யேயளி யென்ற
லஞரினொடு தீதும் படவிடை கூந்தலிற் பாய்ந்து சிலீமுகமென் றோதும்
பெயர்மெய்செய் தீரிவர் பாலிஃ தொத்ததன்றே.
| 10 |
| 1165
| மெய்தொட்டுப் பயிறல். எய்தவஞ் செய்கழல் காணெனுங்
காழி யிறைவர்வெற்பின் மெய்தவஞ் செய்த மனமே முகமு மிளிர்புயமு மைதவஞ்
செய்தடை கண்ணார்பொற் றாளும் வருடநந்தங் கைதவஞ் செய்ததுண் டில்லையென்
றாலது கைதவமே.
| 11 |
| 1166
| பொய்பாராட்டல். வார்க்குங் குமமுலை யாணிலை யாளமர்
வாமத்தர்நீ ரார்க்குஞ் சடையர்தென் காழியன் னீர்நும்
மலர்த்தொடையல் போர்க்குங் குழற்கிணை யாமா கருதிப்
புயல்கறுத்துப் பார்க்குமொவ் வாமை விளர்க்குமிவ் வாறு பயின்றிடுமே.
| 12 |
| 1167
| இடம்பெற்றுந்தழால். எண்ணார் புரஞ்செற்ற
வல்லார்வில் லார்பொன் னெயிற்புகலிக் கண்ணார் சிராமலை வாயெவ ருங்கல
வாதவண்டின் பண்ணா ரிளமரக் காவுண்டு மாதவிப் பந்தருண்டு தண்ணா
ரிவர்கட் கடையரு ளுண்டு தழுவுவமே.
| 13 |
| 1168
| வழிபாடுமறுத்தல். விண்ணியன் மாமதி வேய்ந்தார்
கழுமல வித்தகர்தந் தண்ணியன் மால்வரை வாய்விரை வாய்மலர்ந்
தண்கொடியே பெண்ணிய லென்று வடநூலி னாமம் பெறுமிலச்சை கண்ணிய லாமெனக்
கஃதொழி யாதின்று காத்தருளே.
| 14 |
| 1169
| இடையூறுகிளத்தல். ஞாலம் பொலியப் பொலிகாழி நாதர்
நறுமலர்க்கைச் சூலம் பொலியக்கொள் வார்பவர் வேணிச் சுடர்மதிபோற் பாலம்
பொலியநிற் பீர்மிசை யேயன்றிப் பாணியுள்ளா னீலம் பொலியவைத் தீர்தகு
மோவென் னிலைகண்டுமே.
| 15 |
| 1170
| நீடுநினைந்தி ரங்கல். அருளாற் பரமர் புகலியிற்
பாலுண்ட வையர்தென்னற் கருளாற் புகுத்திய நோயவ ரேயொழித்
தாங்கிவரெற் கருளாற் புகுத்திய நோயிவ ரேதெற லன்றிமற்றோ ரருளாற்
புகன்மந் திரமாதி யானொழி யாததுவே.
| 16 |
| 1171
| மறுந்தெதிர்கோடல். பேரியல் வையைப் பெருக்கன்பர்
காமப் பெருக்கதனுட் சீரிய லன்பர் விடுமேடு போலச்செல் லாதமணர் காரிய
லேட்டிற் கழிந்தது நாணங் கரைவதென்னே யாரியல் செஞ்சடை யார்காழி நாத
ரருளிதுவே.
| 17 |
| 1172
| வறிதுநகைதோற்றல். பொருந்தும் பரவை புலவியிற்
றேம்பும் புலவர்முனஞ் சருந்தும் யிரான்முளைத் தாலெனக் காழி
யணிவரைவாய் வருந்துந் தலைவன் றடுமாற்றந் தீர வறிதுநகை முருந்து
நிகர்நகை யார்செய்ய வாயின் முளைத்ததுவே.
| 18 |
| 1173
| முறுவற்குறிப்புணர்தல். அடியார் குறித்த தருள்காழி
நாதர்வெள் ளானுயர்த்த கொடியார் புரிந்த குறுநகை முப்புரங்
கொன்றதிடைத் துடியார் புரிந்த குறுநகை யென்னையென்
றொல்குலத்து நெடியார் பலரை யுயச்செய்த தீது நிகரரிதே.
| 19 |
| 1174
| முயங்குதலுறுத்தல். ஆடிய பாதர் பிரம புரேச
ரருளனையார் கூடிய மாமுலை பற்றி நிதம்பங் குடைந்துதுவர் நீடிய வாயமு
துண்டாம் வரைபற்றி நேமிகுடைந் தோடிய வாரமு துண்டார்கொ லோநமை யொப்பவரே.
| 20 |
| 1175
| புணர்ச்சியின் மகிழ்தல். தண்ணாளி தேயன்பர் மேவிக்
கலப்பத் தனையருளு மெண்ணாளி காழிப் பிரானெனத் தன்னை
யிகறெறுமைக் கண்ணாளி யாதுங் கருதா தளிக்கக் கலந்தனம்யாம் விண்ணாளி
யாரண னாரணன் போகமும் வேண்டிலமே.
| 21 |
| 1176
| புகழ்தல். தண்டா ரரவர் சிரபுரத் தீசர்
தனிவிழிபோன் மண்டா ரழற்சுரம் போய்வெயில் வாய்நின்று வாடித்தவ மெண்டா
ரணிவியப் பப்புரிந் தாலு மெனையடிமை கொண்டார் வனமுலை யோலுவி ரோசொலுங்
கோங்கங்களே.
| 22 |
| 1177
| ஏற்புறவணிதல். சேலிற் பிறழ்விழிக் கஞ்சனந்
தீட்டித் திகழ்தொடையைம் பாலிற் புனைந்து முலைமேற் கலன்கள்
பலதிருத்தி மாலிற் பொலியொரு பாலார்தென் காழியில் வண்சிலம்பு காலிற்
புனையவுங் கற்றன வாநங் கரதலமே.
| 23 |
| 1178
| வன்புறை அணிந்துழி நாணியதுணர்ந்து
தெளிவித்தல். மறிவா ளனையகண் ணாய்பரன் காழி மணிவரைவா யெறிவா ளுடைக்கல
மெல்லாநின் றோழியி னின்றணிந்தேன் குறிவா ளுடையக் கலம்வாய் படைத்துண்மை
கூறிடுமே லறிவா ளஃதுள்ளி யுட்கொள்ள னாணமு மச்சமுமே.
| 24 |
| 1179
| பெருநயப்புரைத்தல். நலரா யினரன்றி வேதா கமநன்
னடைபிறழுங் கலரா யினரணு காப்பாழி யார்புகழ்க் காழியின்வாய்ப் புலரா
விளம்பொழில் சூழ்வாவி வாயொண் பொறிவண்டுகாண் மலரா வரும்புங் குவியா
மலருங்கொள் வல்லியுண்டே.
| 25 |
| 1180
| தெய்வத்திறம்பேசல். துருவின மாலுக் கரியர்
பெரியர்வண் டோணிபுரத் திருவின பற்றுடை யார்விடை யார்த
மிலங்கருளா லுருவின ராய முருகனும் வள்ளியு மொப்பெனயா மருவின மாலிஃ
தியாரிடை நீக்கும் வலியினரே.
| 26 |
| 1181
| பருவாலுணர்தல். மயலா ரெனக்கு மலமாயை கன்ம
மடித்தருளு மியலா ரமலை பயலார்தென் காழி யிளங்கொடியே புயலார் பொழிலகம்
பாணித் துறையிற் புகுந்தமரு மயலா ருணரவுங் கூடுமென் றோவின் றழுங்குவதே.
| 27 |
| 1182
| பிரிவச்சம். நில்லா துயிர்பிருந் தாற்கணப்
போழ்துமிந் நேரிழைக்குச் செல்லாது பாணித் திருப்புமிச் சோலையிற்
செய்வதென்யா மல்லார் களத்தன் புகலிப் பிரான்பிரி வஞ்சியன்றோ வல்லார்
முலைநிலை மாதோடு மொற்றித்து வாழ்கின்றதே.
| 28 |
| 1183
| இன்றியமையாமை எடுத்துரைத்தல். புகலும் படிபுகல்
வார்புக லாய புகலியுள்ளான் மிகலுங் குறைவுமில் லானருள் சாரினு
மீன்கரையோ டிகலும் புனலை யகலினெத் தன்மைத் தியலுநினை யகலும் படியுறி
னற்றென தாருயி ராரணங்கே.
| 29 |
| 1184
| பிரியேனென்றல். வரியேன் மதர்விழிச் சங்கிலி காண
மகிழடியிற் பிரியேனென் றோதிப் பிரிந்துவன் றொண்டர்முன்
பெற்றதையான் றெரியே னலேன்வண் புகலியன் னீர்நுமைத்
தீர்ந்துமுயிர் தரியேன் பிரியே னெனச்சட்டை நாதர்முன் சாற்றுவனே.
| 30 |
| 1185
| பிரிந்துவருகென்றல். இருந்துமுன் சங்கத் தருந்தமி
ழாய்ந்த விறைகடனஞ் சருந்துமுன் னோன்றிருக் காழியன் னீரரும்
புஞ்சுரும்புந் திருந்துமுன் றோன்றும் பொழிலகத் தேகிநுஞ்
சேற்கணிமை பொருந்துமுன் வந்து புகுவே னகுமிப் புனத்தகத்தே.
| 31 |
| 1186
| இடமணித்தென்றல் கயலம ருங்கொடி யானை முனிந்து
கனிந்துமெய்யிற் பயலமர் வாட்புணர்ந் தாருணர்ந் தார்சண்பைப்
பாங்குறுமென் வயலமர் வஞ்சிநின் குன்றம ராணை மருவுமயி லியலமர்
நின்னொடு மென்னொடு மாறுபட் டென்னமின்னே.
| 32 |
| 1187
| தெளிவு குழைதரு காத ருழைதரு கையர்
குலவுகரு மழைதரு கண்டர் தழைதரு காழியில் வாழ்க்கைபெற்ற பிழைதரு
தன்மையில் யாவருங் கூற்றம் பிழைப்பரென்பார் விழைதரு தன்மையி லாக்கொலைக்
கூற்றத்தின் மேற்றுண்மையே.
| 33 |
| 1188
| பிரிவுமகிழ்ச்சி. செல்லுங்கிழத்திசெலவு கண்டு
உளத்தொடு சொல்லல். காணா மரபின தாலுயி ரென்று கரைதருவார் நாணா மரபின
ரென்னுயிர் காணு நலத்தினதாய்க் கோணா வருளொடு செல்லுதல் பார்களி
கூர்மனமே மாணா வெனக்கு மருள்காழி நாதர்பொன் மால்வரைக்கே.
| 34 |
| 1189
| பிரிவுழிக்கலங்கல். பாகனொடு சொல்லல். அற்றே
மலர்க்குழ லோர்கைபின் றாங்க வவிழ்ந்தகலை சிற்றே ரிடையி லொருகைமுன்
றாங்கச் சிலம்பொலிக்கப் பற்றே யிலார்தம் பரன்காழி வாயருட்
பார்வையென்மே லுற்றே நடப்பது பார்வல வாவென் னுயிர்த்துணையே.
| 35 |
| 1190
| பிரிவுழிக்கலங்கல். ஆயவெள்ளம் வழிபடக்கண்டிது
மாயமோவென்றல். தீயிடை யாடும் பரமர் தமக்குந்
திருநிலைக்குஞ் சேயிடை மேவப் பொலிவார்தென் காழிச்
சிலம்பின்மெலிந் தோயிடை யாரிவர் மாண்பின்ன தேன்மகிழ்
வுற்றிவரை யாயிடை மேவி யதுநன வோகன வாயதுவே.
| 36 |
| 1191
| நெஞ்சொடுகிளத்தல். இலம்பாடு ளார்பெருஞ் செல்வர்தம்
வாழ்வெய்த வெண்ணுவதி னலம்பாடு மேவுங்கொல் காழிப் பிரான்பொன்
னகுவரைவாய் நிலம்பாடு மாதவஞ் செய்திலம் யாநெஞ்ச மேயினிச்சஞ் சலம்பாடு
கோடு மெளியர் கொலோவிந்தத் தையலரே.
| 37 |
| 1192
| வாயில் பெற்றுய்தல். வேண்டா ருறவென்றும் வேண்டா
ரரிக்கும் விரிஞ்சனுக்கு நீண்டார் தலைக்கலம் பூண்டார்தென் காழி
நெடுவரைப்பான் மூண்டார் மயற்கு மருந்துணர்ந் தாமுனி
யாதுநம்மை யாண்டார்கண் மானொரு மாதர்கட் பார்வை யவாவியதே.
| 38 |
| 1193
| பண்பு பாராட்டல். கலரா யினரணு காக்காழி யார்வரைக்
காரிகையார் புலரா முகத்தை மலரினெவ் வாயம் புணர்முலையை யுலரா
தரும்பினெவ் வாய்விதி யாயு ளுளவரைக்கு மலரா திருமற் றலரெனக் காவதெ
னம்புயமே.
| 39 |
| 1194
| பயந்தோர்ப்பழிச்சல். கழிபடு வெண்டலை மாலையன்
காழிக் கடவுள்வெற்பின் மொழிபடு நான்முக னாயுள் வடதிசை
மூர்த்திசெல்வம் விழிபடு மேனியன் போகமிம் மூன்றும்
விராயெனக்கோர் வழிபடு தெய்வந்தந் தார்நீடு வாழ்கவிம் மாநிலத்தே.
| 40 |
| 1195
| கண்படைபெறாது கங்குனோதல். அனம்போ லியங்கு மணங்கனை
யாரிடத் தாய்துயிலென் மனம்போ லடைந்தது மீண்டில தானொடு
வானமுய்யக் கனம்போ லிருண்ட களத்தார்தென் காழியிற் கங்குலொரு வனம்போல்
வளைவுற்ற தம்புலி வெம்புலி மானுவதே.
| 41 |
| 1196
| இடந்தலைப்பாடு. தந்ததெய்வந்தருமெனச்சேறல். வன்றந்த
யானை யுரித்தார் புகலிவல் லாரருளா லென்றந்த காரமெஞ்ஞான்றுங் கெடுத்தொளி
யேகொடுக்குந் துன்றந்த வாயத்தி னீக்கிநம் மாவித் துணைபுணர முன்றந்த
தெய்வமின் னுந்தருஞ் சேறுமம் மொய்பொழிற்கே.
| 42 |
| 1197
| தலைவன் நெஞ்சொடுவினாதல். வானோக்கி நிற்கு
மயில்போற் பொழிலை மருவியெனைத் தானோக்கி நிற்குங்கொ லோருங்கொ லாயத்திற்
சாருங்கொலோ மீனோக்கி பாகர் விடைப்பாகர் காழி விமலரருண் மானோக்கி
யின்னளென் றியானுண ரேன்புகல் வாழிநெஞ்சே.
| 43 |
| 1198
| அவளமரிடம் அவளாகக்கூறல். பொன்னா ரிளந்தளிர் மேனியு
நீன்மணிப் பூங்குழலு மன்னார் பசுங்கழைத் தோளுங் குவட்டு
வனமுலையு மின்னார்செங் காந்தட்கை யும்மையர் வெங்குரு
வெற்பமைந்தீங் கென்னா ருயிரனை யார்போன்று தோன்று மிதுவியப்பே.
| 44 |
| 1199
| மன்னனை நினைந்து மின்னிடைமெலிதல். என்னிரு கண்ணனை
யாயக் லேனென் றிசைத்தகன்ற மின்னிரு தோளரிங் கெய்துவ ரோதமர்
வெள்ளமிகத் துன்னிருஞ் சாரவ ணெய்துவ ரோவென்ன சூழுவரோ பன்னிரு நாமப்
பதிச்சட்டை நாதர் பழமலைக்கே.
| 45 |
| 1200
| முந்துறக் காண்டல். பொன்னோ வெனுஞ்சடை யார்காழி
நாதர்செம் பொன்வரைவாய்த் தன்னோடொன் றாமெனை யல்லாதுவேறொன்று
தான்புகுதற் கன்னோ கொடாவகத் தோடெங்கும் வீசி யவிரொளியீ தென்னோ
வெனவுற்ற தென்முடி மாணிக்க மின்றுவந்தே.
| 46 |
| 1201
| தனிநிலைகண்டு தளர்வகன்றுரைத்தல் ஒருவரு மின்றி
யசோகடி மேவினர் யோகியரே பொருவரு நீர்மை யிவரொரு நால்வர்
புடைவளைப்ப மருவரு மாலடி மேவு படாத வளம்படுவெங் குருவரு யோகியின்
மிக்கா ரிவர்க்குக்கை கூப்புதுமே.
| 47 |
| 1202
| முயங்கல் பெருமான் புகலிக் கவுணியர் முன்னம்
பெருமணஞ்சார்ந் தொருமான் கரம்பற்றி யுற்றவின் பேயிதற்
கொப்பெனவித் திருமான் கரம்பற்றிச் சேராப் பெருமணஞ்
சேர்ந்துறமே வருமான வின்பமுற் றேனிது வேபெரு வாழ்வெனக்கே.
| 48 |
| 1203
| புகழ்தல் பாவியல் சீர்த்திப் புகலிப் பிரான்பொற்
பரங்குன்றின்வாய்த்து தேவியன் மேனித் திருவே திரிநேத்
திரம்படைத்து மேவிய தொத்தது கொல்லோநின் கொங்கைக்கு மேலெழுந் தாவிய
தாயெப் படிவரி னும்பந்து தானுமற்றே.
| 49 |
| 1204
| உடன்புணராயத்துய்த்தல் கதிர்நோக்கி நிற்குங்
கமலத்தில் வானங் கலந்தகொண்மூ வதிர்நோக்கி நிற்கு மயிலிற்றென் காழி
யமலரருண் முதிர்நோக்கி நிற்குமெய் யன்பரி னீவரன்
முன்னியதற் கெதிர்நோக்கி நிற்குநின் னாயத்துண் மெல்ல வெழுந்தருளே.
| 50 |
| 1205
| பாங்கற்கூட்டம் தலைவன் பாங்கனைச்சார்தல் பற்றா
வெனக்கு மருள்காழி மேய பரமர்திருக் குற்றால மன்னசெவ் வாய்வெண்
ணகைக்கருங் கூந்தன்மின்னார் முற்றா முலையின் படையத் தடையென்
முழுக்கலையுங் கற்றா னொருமுறை யோனுள னான்மிகு காதலனே.
| 51 |
| 1206
| பாங்கன் தலைவனை உற்றதுவினாதல் கண்கொண் டவிர்நுதற்
காழிப் பிரான்பொற் கயிலைவெற்பா மண்கொண் டடங்கலர்க் கீந்தனை யோவிண்
மணிபொன்முத லெண்கொண் டவைகொண் டுயிரீந் தனைகொ லெறுழ்கனிந்து திண்கொண்ட
நின்புயம் வாடுதற் கேதுவென் செப்புகவே.
| 52 |
| 1207
| தலைவன் உற்றதுரைத்தல். நிலைமுழு துங்கெடு நாளைய
னாதி நெடும்புலவர் தலைமுழு துந்தரிப் போன்காழி நாதன்
றமிழ்வரையோர் கொலைமுழு துஞ்செய்கண் ணாண்முக மாய
குரூஉமதிக்கென் கலைமுழு துங்கொடுத் தேனடுத் தேனினைக் காதலனே.
| 53 |
| 1208
| பாங்கனை நின்குறையாக இது முடிக்கவேண்டுமென்றல்.
மயில்கா யியலின டந்தவெங் காமம் வரம்பொருவி வெயில்கா யறைவெண்ணெய்
போலப் பரந்தது மேனியெங்கு மெயில்காய் நகையர் தகையர் புகலி
யிறைவர்வெற்பிற் குயில்கா யெழிலியி னீகாயின் மாயுமக் கோளினதே.
| 54 |
| 1209
| கற்றறிபாங்கன் கழறல். கரும்பைச் சிலைசெய்த காம
னெரியக் கனல்விழித்தா ரரும்பைப் பொருமுள் ளடையார்தென் காழி
யடையலர்போற் றுரும்பைப் பொருள்செய்து வாடுநின் றோட்பெருந்
தூணமென்றா லிரும்பைச் சிதல்சென் றரிக்குமண் ணானிற் கிதுதகுமே.
| 55 |
| 1210
| கிழவோன் கழற்றெதிர் மறுத்தல். பண்பார் திருவெழு
கூற்றிருக் கைப்பதிப் பற்றுடையார் நண்பா ரருளி னெனக்ககப் பட்ட
நறுநுதலை விண்பாரின் மிக்கதன் றாலென மேவும் விளங்கிழையைக் கண்பாரப்
பாலுரை யாடுவ யாவுமென் காதுறுமே.
| 56 |
| 1211
| கிழவோன் பாங்கனை ஆண்டுச்செல்லவேண்டுமென்றல். நன்றா
லடியுறை வார்பிறை வார்சடை நம்பர்செம்பொற் குன்றா லமைத்த மதிற்காழி
யார்கொடுங் குன்றகநீ சென்றானண் பாசென் றனும னிராகவன்
சிந்தைத்துயர் கொன்றா லெனவென் மனத்துயர் யாவையுங் கொல்லுவையே.
| 57 |
| 1212
| கிழவோற்பழித்தல். எண்மையு ளேன்றன துண்மை விராவ
வினிதருளுந் தண்மையு ளான்கொச்சை யாளியண் ணாமலைச் சாரலினோ பெண்மைகண்
டாண்மை யுடைந்ததென் றாய்பிற ருக்குணர்த்தும் வண்மையெங் கேமனத்
திண்மையெங் கேயெங்கண் மன்னவனே.
| 58 |
| 1213
| கிழவோன்வேட்கை தாங்கற்கருமைசாற்றல். இரியாவெப்
பாளரைச் சூழவெந் தீயிட் டெரித்ததென வரியா வுகைக்கும் புகலிப் பிரானரு
ளாயமின்செய் பிரியா வஞர்பெரு கப்பேசு வாயென்
பிறதுயர்க்குத் தரியாநின் மேற்குற்றம் யாதுநண் பாவென் றலையெழுத்தே,
| 59 |
| 1214
| பாங்கற்கூட்டம். பாங்கன்
தன்மனத்தழுங்கல். படியே பொலியப் பொலிதொண்டை நாட்டிற் படர்ந்த
முல்லைக் கொடியே குறிஞ்சிக் கொடிபிறி தாய கொடியெனிற் பொன் முடியே
புனையுங் களிறுகட் டுண்ணுங்கொன் மொய்த்துவண்டு குடியெ கொளுங்கொன்றை
யான்காழி வாயென் கொடுவினையே.
| 60 |
| 1215
| தலைவனோடழுங்கல் வெங்கூற்ற மாய்க்கும் விறற்காழி
நாதர்பொன் மேருவின்வாய் மங்கூற்றந் தீர்பெரு மானீ யொருசிறு
மான்பொருட்டென் செங்கூற்ற முற்றுங் கருங்கூற்றஞ் செய்யிலென்
செய்குவல்யான் பொங்கூற்ற வாழி புரண்டாலெங் கேகரை போகடலே.
| 61 |
| 1216
| எவ்விடத் தெவ்வியற்றென்றல். கரையோ விலாவலி யேமிரு
வேமிது கட்டுரைகா ணரையோ திமனுண ராமுடி யார்சண்பை நாடனைய விரையோ
வருங்குழ லாளியல் யாதவண் மேவிடம்பொன் வரையோ திரையோ வுரையோ தரும்புகழ்
மன்னவனே.
| 62 |
| 1217
| அவன் அஃது இவ்விடத்து இவ்வியற்றென்றல். ஒருபா
லுமையினர் தென்காழி மால்வரை யோர்முளைக்குத் தருபால்பொற் றாள மொழிமுலை
யானத் தரளநகை பொருபா லிலாதசெம் பொன்மேனி வெற்றி பொலிவியலோ நிருபான்
முகிறவ ழவ்வரை யேயிட மென்னுயிர்க்கே.
| 63 |
| 1218
| பாங்கன் இறைவனைத்தேற்றல். கலங்காநி னுள்ளங்
கலங்கல் கலக்குங் கருங்குயிலை மலங்காய் பவரை விலங்கான் புகலி
மணிவரைசார்ந் துலங்கா முறுபுயத் தாய்கண்டு மீள்வ
லுறையிவணின் விலங்காத துன்பந் தனக்கு மெனக்கும் விடைகொடுத்தே.
| 64 |
| 1219
| குறிவழிச்சேறல். நலங்சாரன் பாளரொ டென்னையுஞ்
சேர்த்தரு ணம்பன் முகிற் குலஞ்சார் புகலி வரைவாய் முளைத்த கொடியெனத்தா
ணிலஞ்சார் தரநிற்கு மோவண்ட லாட்டி னிகழுறுமோ வலஞ்சார்நங் கோனு
ளழலரக் காக்கிய வணுதலே.
| 65 |
| 1220
| தலைவியுருவு வெளிப்பட்டமைகண்டு
தலைவன்கூறல். காய்மா றிலாத்தென்னங் காச்சண்பை யார்வரைக்
கண்முகின்மேற் பாய்மா முலைமத மாவல்குற் றேர்நுதற் பாரவில்கண் ணாய்மா
வடுவம்புங் கொண்டெங்குந் தோன்றுமென் னோருயிர் மால் சேய்மார னென்னைக்
கறுப்பது நோக்கிச் சிவப்பதொத்தெ.
| 66 |
| 1221
| காணுங்கொலோவெனத் தலைவன் ஐயுற்றிரங்கல். விண்டா
னெனப்பொலி வேணு புரேசர் வியன்சிலம்பிற் பண்டானண் பாகி யவனென் னருமைப்
பசுங்கிளியைக் கண்டான்கொ லோவவட் காணாது தேடிக் கழியவலங் கொண்டான்கொ
லோவறி யேன்குறி யேனொன்றுங் கோளுறவே.
| 67 |
| 1222
| இறைவியைக்காண்டல். சேவே கொடியமைத் தார்காழி வாணர்
சிலம்பிதுவே காவே குழலுழ லேவே விழிநறுங் காமர்கஞ்சப் பூவே முகமத மாவே
முலையிப் புனையிழையே யாவே நிகர்வண்மை யான்சொற்ற மாதிதற் கையமின்றே.
| 68 |
| 1223
| பாங்கன் இறைவியை எளிதிற் காட்டியதெய்வத்தை
வணங்கல். உன்னும் பெருந்திருக் கோனுமற் றியானுமின்
றுய்யும்வண்ண மின்னுங் கொடியிடை யாளைத் தமர்நின்றும்
வேறுசெய்து துன்னும் பொழிலி லெளிதுறக் காட்டிய தொல்புகலி மன்னுங்
கடவுளை யேதொழு வேனென்றும் வாழ்த்தல்செய்தே.
| 69 |
| 1224
| பாங்கன் இகழ்ந்ததற்கிரங்கல். எண்ணாது கூற
லிழுக்கெனன் மெய்ம்மை யெடுத்தமிர்த முண்ணாது நஞ்சுண்ட வன்காழி யன்னவ
ளொண்குணமு மண்ணா தொளிர்மணிப் பூணானுட் காதலும் வன்பொறையுங் கண்ணாதி
யானிகழ்ந் தேபெரும் பாவங் கவர்ந்தனனே.
| 70 |
| 1225
| தலைவனை வியத்தல். ஊரைக் கடக்கு நகையானி லேதி
யொருவிநெடு நீரைக் கடக்கு மதிற்காழி யன்னவிந் நேரிழையார் சீரைக்
கடக்கு முலையானை யும்மிடைச் சிங்கமுஞ்செய் போரைக் கடக்குநம் மண்ணலை
யாவர் பொருவுவரே.
| 71 |
| 1226
| தலைவியைவியத்தல். மறியா ரிடத்தர் புகலி வலத்தர்
மணிவரைவாய்ப் பொறியா ரசோகநன் னீழல்வன் பூவின்மென் பூவடிவைத் தறியாரி
னிற்பர்நங் கோமகன் சோக மகற்றியவன் குறியா ரிதய கமலால யங்குடி கொள்பவரே.
| 72 |
| 1227
| தலைவன்றனக்குத் தலைவிநிலைகூறல். நிலவா தவனழல்
கண்செய்த கோனிறை நீர்ப்புகலி வலவா தரவரை வாயண்ண லேயெழில்
வாய்ந்தொளிரோ ருலவாத வல்லி யொருகொம்பர் நோக்கி யொருவர்வந்து கலவாத
சோலைக் கடைத்தனி யேநிற்கக் கண்டனனே.
| 73 |
| 1228
| தலைவி தலைவன்வருங்கொல்லோவென நினைத்தல். உடையும்
படியுள் ளுருகுநர் பால்விண் ணுளரொருங்கு மிடையும் படியடை வேணுபு ரேசர்
விழையவஞர் குடையும் படிமெலி வேன்பா லுவகைக் குலங்குடிகொண் டடையும்
படியின் றடைவர்கொ லோவென்னை யாள்பவரே.
| 74 |
| 1229
| தலைவன்சேறல். மன்றாடு மையர் கழுமலத் தீசர்
மணிவரைவாய் நின்றாடு மாயத் தொடுகலந் தாடுங்கொ னேயத்தொடு கன்றாடு
மங்கை திருமுகந் தாங்கக் கருதிவெப்பங் கொன்றாடு சோலையி னிற்குங்கொ
லோவென் குலதெய்வமே.
| 75 |
| 1230
| தலைவன் தலைவியைக் காண்டல். விறலெதிர் தோட்சண்பை
யாரமு தோடன்பர் மேவுமுன்மீ னறலெதிர் வண்குரு காவூரில் வந்துநின்
றாங்குவில்வே டிறலெதிர் வாயமு தோடிப் பொழில்யான்
செறியுமுனென் னுறலெதிர் நோக்கிநின் றாரென்னை யாளு மொருவர்வந்தே.
| 76 |
| 1231
| கலவியின் மகிழ்தல். அம்பல வாணர் கழுமலத் தீச
ரருள்வலியா னம்பல மாவிவர் தோள்சேர்ந்தின் பேயுற்ற நந்தமக்கு வம்பலர்
கூந்தலொவ் வோர்மாதர் தோள்கண் மருவித்துன்பே தம்பல மாகக்கொண்ட மாலய
னிந்திரன் றாழ்ந்தவரே. (7
| 77 |
| 1232
| பாங்கனை உண்மகிழ்ந்துரைத்தல். ஒருகா னடைந்தென்
வருத்தந் தணித்த வொருவன்முன மிருகா னடந்துதன் றோழன் வருத்த
மிரித்தபெருங் குருகான் மலர்ப்புனற் கொச்சைப் பிரானிற்
குலவுநல்லோ னருகா லவனட் பெழுமையு மோங்க வளியனுக்கே. (7
| 78 |
| 1233
| புகழ்தல். மறையே புகலும் புகலிப் பிரான்பொன்
மணிமுடிமேற் குறையே யறத்தண் டுறையே முழுகிக் குடிகொளினும் பிறையேயொப்
பாவைகொல் லோவென்னை யாண்ட பிறழ்நெடுங்கண் ணறையே கமழ்குழ லாணீறு பூசு
நறுநுதலே.
| 79 |
| 1234
| தலைவியைப் பாங்கியொடுவருகெனப்பகர்தல். அமையாளந்
தோளணங் கேமணங் கேழிவ் வலர்ப்பொழில்வாய் நமையா ளுறவ னறவன் புறவ
னகுமருளா முமையா ளொடுமொண் கமையாள் பவர்மு னுறலினினி யிமையாள்கண்
போனின் னிகுளையொ டென்மு னெழுந்தருளே.
| 80 |
| 1235
| பாங்கிற்கூட்டல். உடுவே யனபன் மணிநாப்ப ணாணிமுத்
துற்றதெனக் கடுவே பொலிகளத் தான்காழி நாதன் கயிலைவெற்பிற் கொடுவே
தனைகொடு நோக்குநின் னாயக் குழுநடுவே நடுவே யிலாயுறு வாய்தகப் பாத
நகப்பெயர்த்தே.
| 81 |
| 1236
| பாங்கிமதியுடன்பாடு. நாற்றத்தான்
ஐயமுற்றோர்தல். அலையும் புனற்சடை யார்விடை யாரடை
யார்புரங்கள் குலையும் படியெய் தவர்பவர் வாழ்வெங்
குருவரைமான் முலையுங் குழலும் புழுகுந் தொடையு முயங்கிமுன மலையுங்
கடியை மலையும் புதுக்கடி வாய்ந்தனவே.
| 82 |
| 1237
| தோற்றத்தான் ஐயமுற்றோர்தல். ஆளும் பரமர் பிரம
புரேசர்மன் றாடுமையர் நீளுந் திருவரை வாய்வெள்ளை நோக்கின்றி
நேர்ந்தவற்றைக் கீளுங் கருந்தடங் கண்ணுந் துணைத்துமெல்
கிப்பணைத்த தோளுங் கனதன முங்காட்டு மானலந் தோகைக்கின்றே.
| 83 |
| 1238
| ஒழுக்கத்தான் ஐயமுற்றோர்தல். கோடாண் முகன்குகன்
றந்தைதென் காழி குலவுபொன்னி நாடா ணறும்புன லாடாள் பறித்து
நறுமலருஞ் சூடாள் குறிஞ்சியும் பாடா ளசும்பு
சுடர்மணிப்பந் தாடாள்பொன் னூசலு மாடாளென் னோவிவட் காயதுவே.
| 84 |
| 1239
| உண்டியான் ஐயமுற்றோர்தல். விண்ணா ரமுதமுன்
வைத்துண்க மாவென்று வேண்டினுந்தீக் கண்ணார் கழுமலத் தாருண வென்று
கழித்துமற்றொன் றெண்ணோர் கொடிய விரதங்கொண் டாரி னிரிவளிந்தப் பண்ணார்
மொழிமட வாளெண்ணம் யாதென்ன பாவமிதே.
| 85 |
| 1240
| செய்வினைமறைப்பான் ஐயமுற்றோர்தல். பனியே படுவரை
மங்கைபங் காளன் பரவுமறை நுனியே யமரும் பிரான்காழி சூழ்ந்த
நுவலருந்தீங் கனியேய் பொழிலிற் றனியே பயிலவுங் கற்றனள வனியேக மென்னு
நமையு மறைத்திம் மடமயிலே.
| 86 |
| 1241
| பாங்கிமதியுடன்பாடு. செலவுகண்டு
ஐயமுற்றோர்தல். வல்லிட பக்கொடி யாளன் பவப்பகை மாய்ப்பதற்கு நல்லிட
மாய புகழிப் பிரானுண்மை நன்குணர்ந்தார் செல்லிட மேர்பல் லிடமொழித்
தோரிடஞ் சென்றுநிற்பாள் சொல்லிட வேண்டுங்கொ லோவுளத் தொன்றுண்டு
தூமொழிக்கே.
| 87 |
| 1242
| பயில்வான் ஐயமுற்றோர்தல். வலைத்தலை மானன்ன கண்ணாள்
செவிலி மடித்தலையொண் முலைத்தலை நீத்து துயிலாணற் றாய்முழு
முத்தமுலை யலைத்தலை கொண்டெழு பாலன்றி யுண்டறி யாள்புகலி மலைத்தலை
யானிற் றனிபயில் வாளிவண் மாண்புநன்றே.
| 88 |
| 1243
| அவ்வகைதன்னான் ஐயந்தீர்தல். பற்றார் கதியர்
திருமாலை மாற்றுப் பதியர்மறை சொற்றார்பொற் றோணி வரைவாய்விற் றோணி
சுடர்முகத்து பெற்றார் மணமுங் குணமு முறவும் பிறவுமிவட் குற்றா ரொருவ
ருளராயி னாரென் றுணர்த்திடுமே.
| 89 |
| 1244
| பிறைதொழுகென்றல். ஆலங் குடிகொண் மிடற்றார் கழுமலத்
தையர்செய்ய சீலங் குடிகொள் செழும்பொன்னி நாட்டிற் சிறுபிறைகண் டேலங்
குடிகொள் குழலாய் குவியுமெத் தாமரையுங் கோலங் குடிகொணின் கைத்தா மரைகுவி
யாமையென்னே.
| 90 |
| 1245
| கரந்துரைத்தல். பொன்னிழல் செஞ்சடை யார்தோணி மேய
பொருப்புடையா ரன்னிழல் கண்ட ரருள்போற் குளிர்ந்தொளி
ரப்பொழில்வாய் நன்னிழ லின்பந் தருந்தரு வொன்றைநண் ணாமையினோ மின்னிழல்
பூண்மட வாய்திரு மேனி மெலிவதுவே.
| 91 |
| 1246
| கரவுநாட்டம். கருநீலஞ் செம்ப வளஞ்செய்து காமரு
செம்பவள மருநீல வார்குழல் வெண்முத்தஞ் செய்து வயங்குவது தீருநீல
கண்டர் திருத்தோணி மால்வரைத் தேத்தளிசால் குருநீல வாழ்சுனை யேலடி
யேன்களி கூருவனே
| 92 |
| 1247
| சுனைநயப்புரைத்தல். விண்ணப்ப மொன்றெம் பெருமாட்டி
நின்றிரு மேனியெல்லாம் வண்ணப்ப சும்பொற் றுகளப்பி மாமுலை
மான்மதச்சாந் தெண்ணப்ப ரப்பிடு மேலடி யோமுமெய் திக்குடைவோங்
கண்ணப்பர் கோனம ருந்தோணி மால்வரைக் கட்சுனையே.
| 93 |
| 1248
| சுனைவியந்துரைத்தல். வளமுலை யாத புகலிப்
பிரான்வெள்ளி மால்வரைவாய்த் தளமுலை யாத மலர்ச்சுனை கூந்தற்குத்
தாழ்தொடையு முளமுலை யாதெழு வேயடு தோளுக் குறுபுழுகு மிளமுலை
யார்க்கன்பி னல்கிடு மேலதை யாதொக்குமே.
| 94 |
| 1249
| தகையணங்குறுத்தல். மலைமீது தோணி யுறைவார்குற் றால
வரைத்தலமே கலைமீது பூணல்குல் வான்மக ளேநின் கலப்புநன்று முலைமீது
முத்தவெங் கோமாட் டியுமிவண் முன்னியுறு மலைமீது வல்லிக ளென்னவொத்
தீர்சுனை யாடுவிரே.
| 95 |
| 1250
| நடுங்கநாட்டம். அங்கோட்டு வார்சிலை வாணுத லாணிலை
யம்மைக்கொரு பங்கோட்டு வார்பொற் றிருத்தோணி மால்வரைப்
பாற்பயிலுஞ் சங்கோட்டு கந்தரச் சுந்தர மேயென்ன
சாற்றுவலோர் செங்கோட்டு யானைமுன் வேலெறிந் தாரொரு சேவகரே.
| 96 |
| 1251
| பெட்டவாயில் பெற்றுச்சேறல். ஒன்றியொன் றாதம
ரின்பிச்சை யார்நற வூற்றுதுழாய்ப் பன்றியொன் றாத பதக்காழி யாரருள்
பற்றுதல்போ லின்றியொன் றாத விவர்காம மெய்யின்ப
விச்சைகொள்யான் வென்றியொன் றாத விடைத்தோழி யார்பற்று மேவுவனே.
| 97 |
| 1252
| இரவுவழியுறுத்தல். துறையார் மலரொற்றிச் சங்கிலி
யார்கண்செய் துன்பமெல்லா நறையாரந் தார்ப்புயத் தாரூரர் காழிநம்
மாற்குரைத்தாங் கிறையார் வளையிவ் விளங்கொடி யார்கண்செ
யின்னலெல்லாம் பொறையார் மனத்துப் பெருந்தோழி யார்க்குப் புகலுதுமே.
| 98 |
| 1253
| ஊர்வினாதல். அவஞ்செய நின்ற கொடியேனை யுந்தடுத்
தாண்டுகொள்வார் சிவஞ்செய மேவு திருத்தோணி மால்வரைச்
சேயிழையீர் பவஞ்செய நின்றபல் லூரொழித் தேன்மனம் பற்றமுற்றத் தவஞ்செய
வேண்டுநும் மூருரைத் தாலங்குச் சாருவனே.
| 99 |
| 1254
| பெயர்வினாதல். யாரா யினுந்தொழு தான்மல மாதி
யிரித்தருளுஞ் சீரா யினுஞ்சிறந் தார்காழி வாணர் திருச்சிலம்பி னூரா
யினுமுண ரேனுரை யீரினி யுங்கடிருப் பேரா யினுமுரைப் பீருரைத் தால்வரும்
பீழையென்னே.
| 100 |
| 1255
| பாங்கிமதியுடன்பாடு. ஊரும்வேறும் உடன்வினாதல்.
கனக்கா வலர்செறி காழியில் வாழ்நுதற் கண்ணரெண்ணு மினக்கா
வலர்திருக் காளத்தி மால்வரை யேந்திழையீர் தனக்கா வலர்விழை நும்மூர்சொல்
லீர்தவிர் வீரினியிப் புனக்கா வலரெவ ரோசொல்ல வேண்டும் புலப்படவே.
| 101 |
| 1256
| வேழம்வினாதல். பைந்நாக நாண்புனை காழிப்
பிராற்குக்க பாய்கொடுத்த கைந்நாக மேயெனத் தக்கதென் வேலுங்
கவர்ந்ததொரு மைந்நாக மொப்பதுங் கொங்கையொப் பாய மருப்பதொளி தைந்நாக
மாமட வீர்வந்த தோவொன்றித் தண்புனத்தே.
| 102 |
| 1257
| வன்றிவினாதல். பூவுண்டு வண்டுறங் கும்பொழில்
சூழும் புகலிப்பிரான் சேவுண் டுமிழ்ந்த தவாவநிற் பீரத்
திகழ்பெருமான் பாவுண் டுறுபத நாடிய தொத்ததொர் பன்றியென்கை யேவுண்
டுடைந்திங் கடைந்ததுண் டாயி னியம்புமினே.
| 103 |
| 1258
| மரைவினாதல். நாம்பல் லமரரை நாடா தருள்புரி
நம்பரும்பர் கூம்பல் பரிகை கொடுபோற்றுங் காழி குறுகலரிற் றேம்பல்
கொளுஞ்சிற் றிடையீர் தலையளி செய்துநுஞ்செவ் வாம்பன் மலர்த்து மொருதா
மரையிங் கடைந்ததுண்டே.
| 104 |
| 1259
| கலைமான்வினாதல். கானொன்று வேணியர் பூணியர்
தோணியர் கைக்கமலந் தானொன்று றாததுங் கட்பகை யாய்மிசைத்
தாவுதலாற் றேனொன்று பூங்குழ லீர்கணை யேவச் சிறிதுடைந்த மானொன்று
வந்ததுண் டோபுகல் வீரிவ் வரைச்சரியே.
| 105 |
| 1260
| மதமாவொடு மனம்வினாதல். பாலார் மொழியொரு
பாலார்பொற் றோணிப் பருப்பதத்து மேலார் கயிலை மலைச்சார லுங்கள்
வியன்முலைநேர் மாலார் கரிமுன் வரவிடை நேரென் மனம்பின்வந்த தாலார்
திருவயிற் றீர்கண்டி ரேலுறை யாடுவீரே,
| 106 |
| 1261
| வழிவினாதல். பழியா யினுங்கிடை யாக்காழி மேய
பரம்பரனார் விழியா யினுங்கிடை யாதது வோநும் விரிபொழிலூ ரொழியா
யினுமுனக் கென்னிங்கெ னாதந்த வூரடையும் வழியா யினுமுரை யீர்விரை
யீர்ங்குழன் மங்கையரே.
| 107 |
| 1262
| இடைவினாதல். மடையெங்கு முத்தஞ் சொரிந்தற றேக்கி
வளைகழனிப் புடையெங்கு நீந்தும் புகலிப் பிரானருள்
போற்பொலிவீர் தடையெங்கு நீத்தெழு கொங்கையு மல்குலுந்
தங்கக்கண்டோ மிடையெங்கு வைத்து மறந்துவந் தீரஃ தியம்புமினே.
| 108 |
| 1263
| மொழியாமைவினாதல். செய்யோன் புகலிப் பெருமான்
கயிலைச் சிலம்பிலெனை வெய்யோனென் றேயுங்கள் வாயரக் காம்பல்விள்
ளாதுமுழுப் பொய்யோ வெனுமிடை யீர்விருந் தாய்வந்து
புக்கவர்பா லையோவொன் றேனுஞ்சொ லாடா திருத்த லடுத்ததன்றே.
| 109 |
| 1264
| யாரே இவர்மனத்து எண்ணம் யாதேனத்தேர்தல். வில்லில
ரம்பிலர் வேட்டம்வந் தோமென்பர் மெய்ம்மையெனுஞ் சொல்லிலர் பொய்யரு
மல்லர்நன் மேனியிற் றோன்றிவிளங் கெல்லில ரெண்ணமுள் யாதோ கழுத்தன்றி
யெவ்விடத்து மல்லிலர் காழி யமர்தேவர் வெற்பகத் தாரிவரே.
| 110 |
| 1265
| எண்ணம் தெளிதல். யானை யவாமரை வன்றி யவாவியற்
பேரொடுமூ ரேனை யவாவிவை யெல்லாம்பொய் யன்பர்மு னிட்டவெச்சி லூனை
யவாவிய காழிப் பிரான்வரை யுத்தமர்நம் மானை யவாவிய தொன்றேமெய் சான்றவர்
வார்த்தைகளே.
| 111 |
| 1266
| கையுறையேந்திச்சேறல். காவாற் பொலிதண் கடற்காழி
நாதர் கயிலைவெற்பிற் றாவாப் பெருங்குணத் தோழியும் வாழி
தலைவியுநம் மோவாத் தவமும் பயனுமொத் தேயிங் கொருங்கமர்ந்தார் மேவாக்
குறையனைத் துந்தெரிப் பாமின்ப மேவுறவே.
| 112 |
| 1267
| புனங்கண்டு மகிழ்தல். வலமே பொலிமழு வார்தொழு
வார்வினை மாய்த்தருளு நலமே மலிபு கலிவரை வாயென்ன நன்மைசெய்வாங் குலமே
வியபைங் குரல்கொண் டிவரைக் கொணர்ந்துநங்கட் புலமே மகிழ விருந்துசெ யேனற்
புனத்தினுக்கே.
| 113 |
| 1268
| புனத்திடைக்கண்டுமகிழ்தல். தேரா னருமையுட்
டேர்ந்தா னெனிலித் தினைப்புனத்தே பாரா னிவரைப் பயந்தா னெவரும்
பரவுசண்பை யூரா னெனெஞ்சினும் பேரான் முடியுற் றெழிந்தமலர்த் தாரா
னருமை யறிந்தன னோவெச்ச தத்தனன்றே.
| 114 |
| 1269
| பாங்கியிற்கூட்டம். இருவரும்
உளவழிச்சேறல். வெண்காட்டு நங்கையுஞ் சந்தனத் தாரும்
விழைதரமிக் கொண்காட்டு நீரமர் வீர்காழி யாரரு ளொத்தவரே பண்காட்டு
வாய்மலர்ந் தாலோல மென்று பலகிளியுங் கண்காட்டு நும்புனத் தேயழைப்
பீர்நல்ல காவலிதே.
| 115 |
| 1270
| பாங்கி எதிர்மொழிகொடுத்தல். தாரே வளையுஞ்
சடைக்காழி நாதர் தமிழ்வரைநன் னீரே வளையும் பொழுதெங்ஙன் வந்து
நெருங்கும்வன்னி யேரே வளையும் புயத்தீரிக் குன்றகத்
தெவ்விடத்துங் காரே வளையும் வழுவையெக் காலமுங் கண்டிலமே.
| 116 |
| 1271
| இறைவனை நகுதல். பன்னக நாணினர் தென்காழி மால்வரைப்
பால்வருத்தந் தன்னமு மேவரு மோராம்ப லாய்ப்பின்பு தாமரையா யன்னமன்
னாயொண் கருநீலக் கோலமு மாயதுமற் றின்னமென் னாகுங்கொ லோதழை யாலிவ
ரெய்ததுவே.
| 117 |
| 1272
| மதியினின் அவரவர் மனக்கருத்துணர்தல். சொல்லார்
பரமர் பிரமலிங் கேசர் சுடர்க்கிரியிந் நல்லார் தினைபுனங் காப்பதும்
வேட்ட நலங்குறித்திவ் வில்லா ரிறைவர் வருவது மாதவர்
வேடமுனங் கொல்லார் படைக்கை யிராவணன் சீதைமுன் கொண்டதுவே.
| 118 |
| 1273
| பாங்கியிற்கூட்டம். தலைவன்
உட்கோள்சாற்றல். சேலாழி நல்கக்கொண் டார்காழி நாதர்
திருவருளாற் பாலாழி வைகு மமுதமொன் றோமதிப் பாலமுதுங் கோலாழி
கொள்விரற் கொம்பரன் னீர்கொடுப் பேனருள்வீர் மாலாழி மூழ்கி யிறந்து படாத
வகையெனக்கே.
| 119 |
| 1274
| பாங்கி குலழறைகிளத்தல். மதிக்கு முயர்குலத் தோனீ
யிழிகுல மாதர்நல முதிக்கு மிகழ்வொடு வேட்டனன் றோவென்
னுளத்துமொண்டாள் பதிக்குங் கருணைப் பரன்றோணி மால்வரைப்
பாலழல்போற் கொதிக்கும் பசியுற்ற போதுங்கொ ளாதுபுல் கோட்புலியே.
| 120 |
| 1275
| தலைவன் தலைவிதன்னை உயர்த்தல். நீடுந் தியாகரைப்
போலேயிம் மாதரு நீத்தமையால் வாடுந் தருவிணின் சொற்படி யாய
மரபெனினுங் கோடுங் குவடும் பொருமுலை யாயொர் குறத்தியைச்சேர்ந் தாடும்
பிரான்சண்பை யானிளஞ் சேயுற்ற வாசென்னையே.
| 121 |
| 1276
| பாங்கி அறியாள்போன்று வினாதல். குன்றாடு வாரரு
வித்திர ளேற்றுங் குலவுமன்று ணின்றாடு வார்சண்பை மால்வரை வாய்ச்சுனை
நீர்குடைந்து மின்றாடு வார்பல ரன்னருண் மன்னரு ளேறனையாய் நன்றாடு
வாருன் மனங்கவர்ந் தாளெந் நறுநுதலே.
| 122 |
| 1277
| இறையோன் இறைவிதன்மையியம்பல். தானே தனக்கிணை
யாங்காழி நாதன் றளிர்பொருகைம் மானே விழிமுடி வாழ்பிறை யேநுதன்
மன்னுகொன்றைத் தேனே மொழியர வேயல்குல் கொங்கையுஞ் சேவிமிலே மீனே
பொருகணல் லாயென்னை யாத்தவொர் மென்கொடிக்கே.
| 123 |
| 1278
| பாங்கி தலைவியருமை சாற்றல். மருட்குரி யாரெண்ண
வும்படு மோவிம் மணிவரைவாய்த் தெருட்குரி யார்மக ளாரூரர் மேவிரு
தேவியர்போற் பொருட்குரி யாரொரு தோழமை யார்நம் புகலியர்பே ரருட்குரி
யார்க்கன்றி மற்றோர்க் கெளிய ளலளலளே.
| 124 |
| 1279
| தலைவன் இன்றியமையாமை இயம்பல். வாரா வமரர்
வணங்குங் கழுமல வாழ்க்கையென்றுந் தீரா தவர்தந் திருவருள் போலச்
சிறந்ததுகாண் பாரார் புனலன்றி மீனிற்கு மோவப் பரிசினுங்க ளாரா
வமுதமின் றேனிற்கு மோவென தாருயிரே.
| 125 |
| 1280
| பாங்கி நின்குறை நீயே சென்றுரையென்றல். நவையா
றுறாம லெனைப்புரப் பார்சண்பை நாட்டிளவேய் குவையா முறித்துக் களிறின்
பிடிக்குக் கொடுக்கும்வெற்பா செவையாக நின்குறை நீயேசென் றோதெங்கள்
செல்விமுன மிவையா திகளெம்ம னோரிசை யாரச்ச மெய்துவரே.
| 126 |
| 1281
| பாங்கியைத் தலைவன் பழித்தல். வானோ நிலவுல கோபுகழ்
காழி வரதரிளங் கானோ வுறாவரை வாய்விரை வாயிரு கைவிரித்தாய் தேனோ
வெனுமொழி யாய்நல்ல காரியஞ் செய்தனைநீ யேனோநிற் பற்றித் தொடர்ந்து
திரிந்திளைத் தெய்த்ததுவே.
| 127 |
| 1282
| பாங்கியிற்கூட்டம் பாங்கி பேதைமை யூட்டல்.
வாராண் முலைநிலை மங்கையொர் பங்கர் மதியமுகிழ்த் தாராள் சடையர்
புகலிவெற் பாவெங்க டையலெனுங் காராள் குழலி புணர்தொழி லோவத்துங்
கண்டறியா டேராணி னுட்டுயர் பல்காற் பலர்சென்று செப்பினுமே.
| 128 |
| 1283
| காதலன் தலைவிமூதறிவுடைமை மொழிதல். நன்றே யதற்கெதி
ரேபுரி காவி நளினமைத் தன்றே வருத்திநின் றாரறி யார்கொனல்
லாயகவை யொன்றே குறித்தறி யாரெனிற் காழி யொருவர்தம்பாற் குன்றே
பொருமுலைப் பாலுண்டு ளாருமக் கொள்கையரே.
| 129 |
| 1284
| பாங்கி முன்னுறுபுணர்ச்சி முறையுறக்கூறல்.
ஆருர்வன் றொண்டர் கழுமலத் தீச ரனுஞைமுன்பெற் றேரூர் பரவையின்
பெய்திய தாற்பின்னு மெய்தப்பெற்றார் போரூர் களிற்றண்ண லேசுய மேமுன்
புணர்ந்தனைநீ காரூர் குழலியை மீட்டுமென் பாலென்ன காரியமே.
| 130 |
| 1285
| தன்னிலை தலைவன் சாற்றல். தெருளன்றி மற்றொன்
றிலார்சூழ் புகலிச் சிவபெருமா னருளன்றி முத்தி யடைவதுண் டோநின்
னனுஞையெனும் பொருளன்றி முன்னம் புகுந்தவென் குற்றம்
பொறுத்தருள்க விருளன்றி வேறொன் றெனோக்குழ லாயினி யென்செய்வனே.
| 131 |
| 1286
| பாங்கி உலகியலுரைத்தல். சூதாக மீதெழு கொங்கைமின்
னாரின்பந் தோய்ந்தமர்தற் கேதாக முற்றவ ரெல்லாம் வரைந்தன்றி
யெய்துகிலார் போதாக வென்பணி வார்காழி யீசர் புரிந்துரைத்த வேதாக
மங்களி னுள்ளதன் றோவிவ் விதியண்ணலே.
| 132 |
| 1287
| நீவரைகென்றல். கிடைசிறி தேனுமில் லாக்காழி வாணர்
கிளரருளாற் கடைசிறி தேனுமில் லாவலி யோய்நற் கடிமணஞ்செய் திடைசிறி
தேனுமில் லாமட மாதினை யெய்தினின்பந் தடைசிறி தேனுமில் லாதெய்த லாமித்
தரணியிலே.
| 133 |
| 1288
| தலைவன் மறுத்தல். செப்போது கொங்கைத் திருவனை யாய்திரு
மான்முதலொர் முப்போது மேத்துங் கழுமலத் தீசர் மொழிவழியே தப்போ
துதலொழி யந்தணர் சூழத் தமர்மகிழ விப்போ துயிர்பிழைத் தாற்செய்ய லாம்பி
னியன்மணமே.
| 134 |
| 1289
| பாங்கி அஞ்சியச்சுறுத்தல். பண்ணார் மொழியுமை
பங்கர்தென் காழிப் பருப்பதத்தி னண்ணார் தொழுகழ லாயிங்கு மேவி
னமர்கொடுமை யெண்ணார் புரிவ ருனையு மனையு மெனையும்வையுங் கண்ணார்
கதிரும் படுமினி நீயுங் கழிதனன்றே.
| 135 |
| 1290
| தலைவன் கையுறைபுகழ்தல். பரிவா யருள்சண்பை யாரரு
ளாலொளி பற்றுதய கிரிவா யிழிசெவ் வருவியுண் மூழ்கிக் கிடந்ததய னரிவாய்
புகழ்வது பெற்றேனந் தோவிவ் வருமணிநுஞ் சுரிவாய் குழலி முலையேறிற் கண்டு
தொழுதுய்வனே.
| 136 |
| 1291
| பாங்கி கையுறை மறுத்தல். அண்டார் புரஞ்செற்
றவர்காழி நாத ரருணைவெற்பில் வண்டார் குழலி யணிமுலை மேலிம்
மணியமையக் கண்டா ரெனிலெமர் காணாய்பி னீயெமைக் கன்னவிறோட் டண்டா
ருடையண்ண லேயெண்ண லேதச் சழக்கருக்கே.
| 137 |
| 1292
| ஆற்றுநெஞ்சினோடு அவன்புலத்தல். விழையுங் குழையு
மனத்தன்பர் கூட்டம் விழையுமையர் மழையுங் குழையுங் களத்தார் புகலி
வணங்கலர்நோய் தழையுங் குழையுந் தளர்வொழி யாத தனிமனம் போற் குழையுங்
குழையும் படியுற்ற தாலென் கொடுவினையே.
| 139 |
| 1293
| பாங்கி ஆற்றுவித்தகற்றல். மதிக்கும் புகலிப்
பெருமான் றிருமலை வாணர்குலத் துதிக்குங் கொடியொண் முலைமேனின் கைம்மணி
யுற்றொளிருந் திதிக்குங் கருணைத் திறத்தாய் நின்னூர்க்கின்று
சென்றுகுன்று துதிக்குங் கதிரெழு காலையில் வாவிந்தச் சோலையிலே.
| 140 |
| 1294
| இரந்து
குறைபெறாதுவருந்தியகிழவோன் மடலேபொருளெனமதித்தல். ஆலஞ் சிதைத்தட
ராதயின் றார்சண்பை யாளர்துழாய்க் கோலஞ் சிதைத்து மருப்பணிந் தார்குடி
கொண்டிடினு நீலஞ் சிதைத்தொளிர் கண்ணாள் பொருட்டு நெடியபெருந் தாலஞ்
சிதைத்து விடலே துணிபெத் தடையினியே.
| 141 |
| 1295
| பாங்கிக்கு உலகின்மேல்வைத்துரைத்தல். கடல்சூழ்
புவியிளங் காளையர் தாந்தங் கலைமதியை விடல்சூ ழிடைமட வாரல்குற் பாம்பு
விழுங்கியதே லுடல்சூழ் தரச்சண்பை யார்நீறு பூசி யுழிஞையொடு மடல்சூ
ழெருக்கணிந் தேமட லூர்வர் மடமயிலே.
| 142 |
| 1296
| பாங்கியிற்கூட்டம். அதனைத் தன்மேல்வைத்துச்
சாற்றல். ஒன்பா னுருவ முளனா கியுமுரு வொன்றுமிலா னன்பான் மலிபு
கலியுங்கள் வீதியி னாளைநல்லா யென்பா னணிந்து மடன்மா விவர்ந்துகை
யேற்றதொடு வன்பான்மை யின்வரு வேனென்செய் வீரிந்த வல்வினைக்கே.
| 143 |
| 1297
| பாங்கி தலைமகள் அவயந்தருமைசாற்றல். வாரார்
விழிக்கு வலயமங் கைக்கம லஞ்சொல்வன்னி காரார் கருங்குழற் கொண்ட லிடைவிண்
கமழுமுயிர் நீரார் முகமதி மெய்கதி ராக நிகழ்சண்பையா ரேரார்மெய்
யெட்டு மெழுதியன் றோமட லேறுவதே.
| 144 |
| 1298
| தலைமகன் தன்னைத்தானேபுகழ்தல். கடையு மிடையு
முதலுமில் லான்றிருக் காழியன்னாள் படையு முடையும் விழிமுத லியாவும்
படமுணர்ந்தோர் மிடையு மடையு மிருபிடி யென்ன விரைந்தெழுதி யிடையு
நடையு மொருபிடி யென்ன வெழுதுவனே.
| 145 |
| 1299
| பாங்கி அருளியல்கிளத்தல். பாவா ருலாப்புகன் றேகயி
லாயம் படர்ந்தவர்தோட் பூவா ரலங்க லிழத்தனன் றோபுவிப் போனகங்கொ ளாவார்
புகலிப் பிரமலிங் கேச ரருட்குரியார் மேவார் வரைப்பெண்ணை வேட்டே
கடற்பெண்ணை வெட்டுதற்கே.
| 146 |
| 1300
| பாங்கி கொண்டுநிலைகூறல் ஆரா வமுதன்ன வெம்பெரு
மாட்டி யடிபணிந்து தீரா நினுள்ளக் குறையாவும் விண்ணப்பஞ்
செய்வலின்னே நாரா யணனுண ராச்சண்பை யார்வரை நண்பவுள்ள நேரா குறாதெனிற்
போந்துகொண் டேமய னீந்துகவே
| 147 |
| 1301
| தலைவி இளமைத்தன்மை பாங்கி தலைவற்குரைத்தல் பொறியா
ணிறத்தன் மலரா ளறத்தன் புகல்புகலி மறியா ளிடத்தன் மழுவாள் வலத்தல்
வரையணங்கு சிறியாண் முளைத்தப னேற்றிரண் டேநின் செறிதுயர மறியா
ளுளத்துங் குறியா ளவட்கெ னறைவதுவே
| 148 |
| 1302
| தலைவன் தலைவிவருத்தியவண்ணமுரைத்தல் ஒருபார்வை
வெப்ப மொருபார்வை தட்ப மொருவர்முகத் திருபார்வை யொப்பத்த னொண்முகத்
தேயமைத் தேவெதிர்ந்து வருபார்வை யாயென் னகத்தாமரையைமுன்
வாட்டுவளென் றருபார்வை யோபின் மலர்த்துவள் காணிந்தச் சண்பையிலே
| 149 |
| 1303
| பாங்கி செவ்வியருமைசெப்பல். தருக்கும் பகைவர்
மணிமோலி யெற்றுபொற் றாளுடையாய் பெருக்கும் பலவிளை யாடலு நீத்தொரு
பேச்சுமின்றி மருக்கும்ப மென்முலை யாள்சண்பை யாரை
மனத்திருத்தி யிருக்கும் பெரியவர் போலிருப் பாளென் னியம்புவதே.
| 150 |
| 1304
| தலைவன் செவ்வியெளிமைசெப்பல். பாராய் புகழ்ச்சண்பை
யாரரு ளப்பர்தம் பால்வருகைச் சீராயப் பூதி யடிகளைப் போலென்
றிகழ்வருகைக் காராய் பவளென் வரவோதி னப்பொழு தேயலர்ப்பூந் தாரா
யெதிர்கொண் டுனையு மெனையுந் தழீஇக்கொளுமே.
| 151 |
| 1305
| பாங்கி என்னைமறைப்பின் எளிதெனநகுதல். கடம்படு வேழ
முரித்த பிரான்றிருக் காழிவெற்பா மடம்படு கோதையு நீயுமொத் தீரன்ன
மாண்பினிரே லிடம்படு மென்னை மறைத்துப் புணர்திற மெய்துவிரோ வுடம்படு
மெய்யின்றி யேபுண ராதுயி ரோடுயிரே.
| 152 |
| 1306
| அந்நகைபொறாது அவன்புலம்பல். அப்பார் சடைய ரடற்சூற்
படைய ரமர்விடையர் செப்பார் முலைநிலை மங்கையொர் பங்கர்
திருப்புகலி யொப்பார் கருங்கணுஞ்செவ்வாயுஞ் செய்த
வொழிவருமென் வெப்பார் பிணிக்குப் புளியிட்ட தாயிற்றுன் வெண்ணகையே.
| 153 |
| 1307
| பாங்கி தலைவனைத்தேற்றல். பெம்மான் புகலியிற்
சம்பந்தர் பால்வைத்த பேரருள்போ லம்மான் விழியெம் முதல்வியென் பானல்
லருள்பெரிய ணம்மானச் சம்பந்தர் சொற்படி யாவு நடத்தினன்மற் றிம்மானென்
சொற்படி யெல்லா நடத்து மியல்பினளே.
| 154 |
| 1308
| கையுறை ஏற்றல். வெற்றகட் டுக்கன மீவார் புகலி
விமலரெனக் குற்றகட் டுக்களைந் தாள்வார் வரையி லொளிறுவைவேல் செற்றகட்
டுக்க மறாச்சிற் றிடைப்பெருஞ் செல்வியல்குற் பொற்றகட் டுக்கணி யாமைய
நின்கைப் பொலிமணியே.
| 155 |
| 1309
| கிழவோன் ஆற்றல். துருத்திய வாஞ்சண்பை நாயக
ரப்பர்க்குச் சூலைவெந்நோய் பொருத்திய வாறவர் பாலரு ளாகிப்
புகுந்ததுபோ லிருத்திய வார்வத் திவர்பல கால்வன்சொ
லீந்துநம்மை வருத்திய வாறுநம் மாட்டரு ளாகி மலிந்ததுவே.
| 156 |
| 1310
| இறைவன்றனக்குக் குறைநேர்பாங்கி இறைவிக்கு அவன்
குறையுணர்த்தல். அருவ ருருவ ரருவுரு வாள ரவிர்புகலித் திருவ
ரிருவ ருணரார் வரைநஞ் செழும்புனத்தே வருவ ரொருவ ரரியர் பிரியர்
வயமுருகே பொருவர் தருவர் தழியவர்க் கென்ன புரிதுமின்னே.
| 157 |
| 1311
| இறைவி அறியாள்போன்று குறியாள்கூறல். நாம்பணி
தாளர்வெம் பாம்பணி தோளர் நகுபுகலிக் காம்பணி மால்வரை யார்வீழி மேவிக்
கவுணியர்க்குக் கூம்பணி கைகொடு காண்கநற் றோணிமெய்க் கோலமிதே யாம்பணி
கென்றுமுன் காட்டினர் காண்மிக் கதிசயமே.
| 158 |
| 1312
| பாங்கி இறையோற்கண்டமை பகர்தல். தலையானை யைந்தினப்
பாலானை யைந்துமெய்ச் சாமியெண்ணெண் கலையானை யாறினொ டாறுக் கதீதன்
கயிலைநெடு மலையானை நேடிவந் தாரல ராலதை வாட்டியநின் முலையானை நேடிவந்
தார்சண்பை வாழ்நண்பர் மொய்குழலே.
| 159 |
| 113
| பாங்கியைத் தலைவிமறைத்தல். விரைப்பால் வளர்குழ
லாய்மான மீக்கொள்வில் வேடர்குலத் துரைப்பால் வழுவி னுயிரே வழுவுமென்
றோர்ந்துளைநீ தரைப்பா லெவரும் புகழ்நம் பிரான்றம்
பிரான்புகலி வரைப்பா லுறைபவர்க் குந்தகு மோவிந்த வார்த்தைகளே.
| 160 |
| 1314
| பாங்கி என்னை மறைப்பது என்னெனத் தழாஅல். இருமாட்
டியன்றன வெல்லாஞ்சொ லென்றினி தேற்றன் முன்மே வருமாட்டியபம்
பரம்போற்சுழலு மனமிற்றைநாள் கருமாட்டி நம்மைப் புரக்கும் பிரான்றிருக்
காழியிலெம் பெருமாட்டி யென்னை மறைத்தலி னாலென்ன பெற்றியதே.
| 160 |
| 1315
| பாங்கி கையுறைபுகழ்தல். குரவே கமழுங் குழலாய்
புகலிநங் கோனருளாற் புரவே புரியரி மார்புகண் டான்முன்
பொலிவதொளி யிரவேயென் றோவி யவாவுந் தகைத்து னெழில்செயல்கு லரவே யணியக்
கிடைத்தது காணிவ் வருமணியே.
| 161 |
| 1316
| தோழி கிழவோன் துயர்நிலைகிளத்தல் வண்டார் கடுக்கை
மலைவார் கழுமல வாணர்வெற்பிற் றண்டா ரணிகுழ லாயொரு வேழந்
தடக்கைகொடு விண்டார் முளைமுறித் துப்பிடி வாய்விருப்
பிற்கொடுக்கக் கண்டா ருடனுயிர் விண்டார்கொ லென்னக் கலங்கினரே.
| 162 |
| 1317
| மறுத்தற்கு அருமை மாட்டல். வெய்யோ ருறாச்சண்பை
யார்வரை வாய்மென்றளிர்கள்கொய்து கையோ சலித்தன வென்பார் துயர்கண்டு
கண்வெதும்பும் பொய்யோ வினிப்புக லக்கிடை யாதொரு போக்குமின்றா லையோ
பெரியவர் முன்செல நாணுற் றகன்றனனே.
| 163 |
| 1318
| தோழி தலைமகன்குறிப்பு வேறாக
நெறிப்படக்கூறல். மிடிகெட்ட தென்று புகுவார் மகிழ்தரும்
வெங்குருவார் கடிகெட்ட தென்றுரை யாமழு வார்தங் கருதருளாற் படிகெட்ட
தென்றுரை யாடா தளிப்பவர் பல்களியர் குடிகெட்ட தென்றுரை யாடுவ ராலென்று
கூறினரே
| 164 |
| 1319
| தோழி தலைவியைமுனிதல். கறுப்பார் களத்தர்தென்
காழியன் னீர்முற் கலப்புணர்ந்தே மறுப்பா ரலரென்று வாய்திறந் தேனிற்றை
மாண்புணரேன் வெறுப்பார்சொல் லுள்ளத் தொழிகவென் மீதும்
விருப்புறுக பொறுப்பாரன் றோபெரி யோர்சிறி யோர்செய்த புன்மையையே.
| 165 |
| 320
| தலைவி பாங்கியைமுனிதல். மாதேநின் வார்த்தை புகலிப்
பிரான்றிரு வார்த்தையென்று தீதே யறக்கொள்ளு வேன்பழங் கேண்மைச்
சிதைவுமின்று சூதேயுட் கொண்டு பலபல கூறத் துணிந்தனையிப் போதே
திலளெனக் கொண்டாய் நினக்கிது புந்தியன்றே.
| 166 |
| 1321
| தலைவி பாங்கிதன்கைக் கையுறையேற்றல். பழுதே
யுறார்தம் பரன்காழி வெற்பர்நம் பால்வரில்வண் டுழுதே மலர்க்குழ லாய்சில
வாமொழி யிற்பலவாந் தொழுதே மடல்கொள லாலலர் நின்கையிற்
றுன்னியவப் பொழுதேயென் கையுற்ற தாயிற் றவர்தந்த பூந்தழையே.
| 167 |
| 1322
| இறைவி கையுறையேற்றமை பாங்கி
இறைவற்குணர்த்தல். மன்னா சிறந்ததொன் றன்பே யஃதின்றி
வாசவன்மு னின்னாவுற் றானின் றளிர்சண்பை யாரரு ளிற்கவர்ந்து முன்னா
முடிவைத் திருவிழி யொற்றி முகத்தணைத்துத் தன்னாக முற்றுமெய் நின்னாக
மாகத் தழுவினளே.
| 168 |
| 1323
| பாங்கி தலைவற்குக் குறியிடங்கூறல். தார்கோ ளரவெனக்
கொண்டார் புகலித் தடங்கிரிப்பா லூர்கோண் மதியி னடுவட் பளிக்கறை
யொன்றமரக் கார்கோள் வளாகம் புகழ்பொழில் சூழ்ந்து கஞலுமிட மார்கோ
ணெடும்புயத் தாய்பகல் யாம்விளை யாடிடமே.
| 169 |
| 1324
| குறியிடத்து இறைவியைக் கொண்டுசேறல். பொன்னே
பொருசடை யார்சண்பை யார்வரைப் பூஞ்சுனைநீ ரன்னேநின் மேனி நறுமண மீந்தென்
னகக்குறைதீர் பின்னே யெனாதெனுஞ் சென்றாடு தற்குன் பிறங்குபத மின்னே
மெலப்பெயர்த் தெம்பெரு மாட்டி யெழுந்தருளே.
| 170 |
| 1325
| குறியிடத்து உய்த்துநீங்கல். மண்ணுக் குவகை
செயுங்காழி நாதர் வரைமயினின் கண்ணுக் குவகை செயுமாடி மற்றிது
கண்டிவணில் பண்ணுக் குவகை செயுமொழி யாய்நின் பசுங்குழற்கார் விண்ணுக்
குவகை செயுமலர் கொய்திங்கு மேவுவனே.
| 171 |
| 1326
| நீங்குந்தோழி தலைவற்குணர்த்தல். சற்றாய்
பவர்க்கும் பெரும்பய னல்குந் தனிமுதல்வன் பற்றா யுறைநிறை பொற்றோணி
வெற்பிற் பசுமயிறா னற்றாய் செவிலியு மின்றிமற் றாரொடு
நானுமின்றிக் கற்றாய் தமியணிற் கின்றாள் வெறாதன்பிற் காத்தருளே.
| 172 |
| 1327
| இறையோன் குறியிடத்து எதிர்ப்படுதல். குளத்தே
விழியொன் றுளார்சண்பை யாரன்பு கூர்ந்தவருட் டளத்தே யமர்ந்து மவர்க்கே
வெளியுந் தயங்குதல்போல் வளத்தே மலியும் பெரிதாங் கருணைநன்
மாட்சியினென் னுளத்தே யமர்ந்தும் வெளிநின் றுளாரிவ் வொருவரின்றே.
| 173 |
| 1328
| புணர்ச்சியின்மகிழ்தல். நன்கோடி நோக்கிப்
பணிந்திரப் பார்க்கரு ணம்பர்நெடுந் தென்கோடி சூழும் புகலியி லெத்தவஞ்
செய்தனமிப் பொன்கோடி யுள்ள கருவூலம் புக்கிரு பொன்மலையும் பின்கோடி
நீங்க லிலாநிதி யங்களும் பெற்றனமே.
| 174 |
| 1329
| புகழ்தல். மழையுந் தொழுங்குழ லீருங்கள் கண்களை
வாணுதலைத் தழையுஞ் செருக்கி னெதிர்ந்துவெல் லாதிரி
தன்மைகண்டே யுழையும பிறையு முலகமுற் றீன்ற வொருபெரியாள் விழையும்
புகலித் திருத்தோணி யப்பர் வெறுத்தனரே.
| 175 |
| 1330
| தலைமகளைத் தலைவன்விடுத்தல். கலர்வருத் தங்கரு
தாக்காழி நாதர் கருணையன்னீ ருலர்வருத் தந்தவி ரிச்சோலை யுற்றொரு
வேனுளத்தே யலர்வருத் தந்தணித் தீர்கண் ணுறாம லலைந்தஞர்கொள் பலர்வருத்
தந்தணிப் பீராய நாப்பட் படர்ந்தினியே.
| 176 |
| 1331
| தலைவி சோர்தல். வானவ ரிந்திர னாரண னாரணன்
மற்றுமுள்ளோ ரானவர் போற்றுங் கழுமலத் தீச ரருள்வலியாற் கானவா காவலிச்
சோலையி லேயெனைக் கைகலந்து போனவர் பின்சென்ற தாலென்செய் வேனென் பொறாமனமே.
| 177 |
| 1332
| பாங்கி தலைவியைச்சார்ந்து கையுறைகாட்டல். கோகந
கங்குறித் தாலுங் குறித்தல்கொள் ளேற்குமருள் கோகந கங்குல வுஞ்சிலை
யான்வெங் குருவரைவாய்க் கோகந கங்கொள் குவிமுலை யாய்நின்
குழற்கணியக் கோகந கங்கொணர்ந் தேன்பொறி யேறுமுன் கொண்டருளே.
| 178 |
| 1333
| பாங்கி தலைவியைப் பாங்கிற்கூட்டல். கடிமலர்
பூங்கடுக் கைத்தொடை யாரென் கருந்தலைக்கு மடிமலர் சேர்த்துநன் காள்வார்
புகலி யருவரைவாய்க் கொடிமல ரொன்று மிகைகொடி யேமற்றைக்
கோலஞ்செய்முப் படிமல ரும்புனைந் தேன்பண்ணை மேவப் படருதுமே.
| 179 |
| 1334
| நீங்கித் தலைவற்கு ஒம்படைசாற்றல். போத முறாவெனை
யும்புரப் பார்தென் புகலிவெற்பிற் பேத முறாமனத் தாள்பொருட் டியான்செய்
பிழைமறக்க நீத முறாமின் றனக்கு மெனக்கு நினக்குமினி யேத முறாதண்ண
லேயெண்ண லேநிற் கியலறமே.
| 180 |
| 1335
| உலகியன்மேம்பட விருந்துவிலக்கல். வானும் புகழ்திற
லாய்சுடர் மாயும் வழிப்புனலுங் கானுங் கடத்த லரிதினித் தேனுங்
கடியுழையூன் றானுங் கவர்ந்துத யத்தேக லாமன்பர் தந்தவெச்சி லூனுங்
கவர்ந்தனர் காளத்தி வாய்ச்சண்பை யுத்தமரே.
| 181 |
| 1336
| விருந்திறைவிரும்பல். வாங்கிய வாணுத லார்செங்கை
தொட்டது மாற்றருங்கைப் போங்கிய வேம்பெனி னுங்கரும் பாமுரை
யாடுவதென் வீங்கிய மாமுலை யாய்வள்ளி யாருண்ட மெல்லிலையிற் றேங்கிய
மிச்சிலன் றோசண்பை யாரிளஞ் சேயுண்டதே.
| 182 |
| 1337
| ஒருசார் பகற்குறி. கிழவோன்பிரிந்துழிக் கிழத்தி
மாலையம்பொழுதுகண்டிரங்கல். வாரின்றி மேவுத லில்லா மலைநிலை
மங்கைகொங்கைப் போரின்றி மேவுத லில்லாப் புயத்தர்
புகலிவெற்பி லூரின்றி யூழற் றதுமுடிப் பானுற் றொருவன்மலர் நாரின்றி
யேதொடுத் தான்பெரு மாலை நணுகுறவே.
| 183 |
| 1338
| பாங்கி புலம்பல். வண்டாய் கமல முகம்வாடச்
செய்தவிம் மாதுமுகங் கண்டா யதைவருத் தக்கதி ரேபு கலியரற்குத் தொண்டா
யுறாரி னழுவம் புகுந்துன் சுடர்மறைத்துக் கொண்டாய் கவிமறைந் தெய்தவன்
மேலொரு குற்றமின்றே.
| 184 |
| 1339
| தலைவனீடத் தலைவிவருந்தல். வேதரிப் பாரளந் தார்தலை
கண்முடி மேலடிமே லோதரிப் பார்சண்பை யுன்னாரி னென்னை
யொருகழைக்கோட் போதரிப் பார்விடு பூந்தோணி காமப் புனலழுத்து மாதரிப்
பார்வந் தணைந்திலர் தேம்புமென் னாருயிரே.
| 185 |
| 1340
| தலைவியைப் பாங்கிகழறல். அமைகூடு தோளணங் கேபிரிந்
தாருயி ரன்னவரென் றுமைகூடு மெய்யர் புகலியுன் னாரி
னுயங்குவையுட் கமைகூடு மன்னரு நீயு மினனுங் கரமுங்கொல்கண் ணிமைகூ
டுவதும் பிரிவதுஞ் சற்றுளத் தெண்ணுகவே.
| 186 |
| 1341
| தலைவி முன்னிலைப்புறமொழி மொழிதல். சொல்லாமுன்
முன்னங்கொ டெல்லா முணருஞ் சுகுணர்க்கன்றி யெல்லா முரைத்து முணரா
தவர்க்கொன் றிசைப்பதினுங் கல்லா தவரணு காக்காழி வாழ்மணி
கண்டர்நுதற் பொல்லா வழற்க ணெதிராத னன்று புரிபவர்க்கே.
| 187 |
| 1342
| தலைவி பாங்கியொடுபகர்தல். தேருந் திறமெற்
கருள்வார் சிரபுரச் செல்வர்வெற்பி னேருங் கிளிமொழி கட்கினி தாய
நெருஞ்சிமலர் சாருங் கொடுங்கண் டகமாய தென்னத் தலைவரெனக் காரும்
படிசெய்த வின்ப மெலாந்துன்ப மாயதுவே.
| 188 |
| 1343
| தலைவியைப் பாங்கி அச்சுறுத்தல். உள்ளே யொருகதிர்
மேவுற வோம்பி யொழிவில்கதிர் கள்ளே மலிகுழ லாய்வெளி யோம்பலை
கஞ்சமனப் புள்ளேகொ ணீர்ச்சண்பை யார்வரை வாழ்நம்பொல்
லாருணர்ந்தாற் கொள்ளேயென் றாக்குவர் வெஞ்சிறை யாய குகையிருளே.
| 189 |
| 1344
| நீங்கற்கருமை தலைவி நினைந்திரங்கல். வரியார்
விழியணங் கேயுயிர் நீத்துடல் வாழுங்கொலோ தரியாவின் பந்தந் தவரையெவ்
வாறு தணப்பல்சண்பைக் குரியா ரரிக்கு மரியா ருடனுமை
யொற்றித்தென்றும் பிரியா திருக்கச் செயுமா தவஞ்செயப் பெற்றிலனே.
| 190 |
| 1345
| தலைவிக்கு அவன்வரல் பாங்கிசாற்றல். பாடி வருந்து
மவர்க்கருள் காழிப் பரன்வரைநீ நீடி வருந்து மதுதணிப் பானன்பர்
நீண்மணித்தே ரோடி வருந்துங்க மாரோதை கேளவ் வொருவர்நம்மைத் தேடி
வருந்து மதுகாண லாமிச் சிறைமறைந்தே.
| 191 |
| 1346
| தோழி சிறைப்புறமாகச் செறிப்பறிவுறுத்தல். ஓங்கை
முகவர் தகவர் பகவ ரொளிமழுக்கொள் பூங்கை யுடையர் விடையர் சடையர்
புகலிவெற்பிற் றீங்கை யுறுத்துந் தழல்கண் ணுறீரித்
தினைக்கிளிகாள் வேங்கை சிவந்த தினியெங்கண் மானிங்கு மேவரிதே.
| 192 |
| 1347
| தோழி முன்னிலைப்புறமொழி
மொழிந்தறிவுறுத்தல். விண்ணுடை யார்புனன் மேலுடை யாரசண்பை
வெற்பமரு மெண்ணுடை யாரினிக் கொய்வார் தினையிங்
கியன்மயில்காண் மண்ணுடை யாரன்பர் போலெங்கண் மாதை
மறப்பின்மிகக் கண்ணுடை யாரெனும் பேரில்லை யாகுங் கருதுமக்கே.
| 193 |
| 1348
| பாங்கி தலைவன்முன்னின்று இற்செறிப்பு
அறிவுறுத்தல். கோட்புலி யார்விரை யாக்கலி தப்புங்
குலமடங்க வாட்புலி யார்கொடு மாய்த்தா லெனத்தினை
மாய்த்தனர்செவ் வேட்புலி யார்நிகர் வேந்தேயிக் காவல்கை
விட்டதுறேந் தாட்புலி யார்தொழு மம்பலத் தார்சண்பைத் தாழ்வரைக்கே.
| 194 |
| 1349
| முன்னின்றுணர்த்தி ஓம்படைசாற்றல். தழையாற்று
வேணிப் பெருமான் புகலித் தனிமுதல்வன் பழையாற்று நன்கு வெளிப்படுங்
காறுமப் பாலகலா துழையாற்று ளங்கொண் டமர்ந்தவர் சீர்த்தி
யுணர்ந்தமன்னா விழையாற்று மங்கையை நீமறந் தாற்கதி வேறில்லையே.
| 195 |
| 1350
| தலைவன் தஞ்சம்பெறாது நெஞ்சொடுகிளத்தல். கனத்தே
மலர்க்குழற் சீதையைக் கொண்டகல் கள்வனிலென் மனத்தே யமரும் பிரான்காழி
வாணன் மணிவரையிப் புனத்தே யமருங் கிளியையெங் கோகொடு
போயினரித் தினத்தே கொடுஞ்சிலை வேடரென் றாலென்ன செய்வனெஞ்சே.
| 196 |
| 1351
| பகற்குறி இடையீடு. இறைவனைப் பாங்கி குறிவரல்விலக்கல்.
மாவேட்ட மாடவில் லம்புட னேகுன்ற வாணரன்பர் பாவேட்ட நாதர்
திருத்தோணி மால்வரைப் பாலுழல்வார் நாவேட்ட வின்புக ழாய்புனிற் றாவி
னயந்துநறும் பூவேட்ட வார்குழல் பாற்பல காலும் புகுமன்னையே.
| 197 |
| 1352
| இறைவியைப் பாங்கி குறிவரல்விலக்கல். நடத்தே பழகிய
தாளான் புகலிநம் பன்களத்தே விடத்தே சுளான்பசப் போர்பாதி முற்றும்
விளைந்ததனான் மடத்தே மலர்க்குழ லின்னளென் றாய்மனம்
வைத்தனளிவ் விடத்தே வருதல்சொன் னேன்மயி லேநிற் கியல்பல்லவே.
| 198 |
| 1353
| இறைவி ஆடிடம் நோக்கி அழிதல். தென்னாவ லூரரின்
பந்தந்த வொற்றியைத் தீர்ந்தடைந்த வின்னா வுணர்ந்து மொருதோணி யப்ப
ரிரும்பொருப்பு முன்னா வளையுஞ் சுனையு நனையு முழுமலருந் துன்னா
வொளிர்பொழி லுந்துறப் பாநந் துணிபென்னையே.
| 199 |
| 1354
| பாங்கி ஆடிடம்விடுத்துக் கொண்டகறல். குழையே
பொலியுஞ் செவிச்சட்டை நாதர் குலவிநிற்கு மழையே தவழு மலைச்சாரல் வாய்மண
வாளர்வந்தாற் கழையே தருதழல் கொண்டதெண் ணாது கவின்கிளிகாள் பிழையே
யிலாருயி ரோடுசென் றாரென்று பேசுமினே.
| 200 |
| 1355
| தலைவனுருவு வெளிப்பட இரங்கல். மேவா வெனக்கு
மருள்சட்டை நாதர் வியன்கிரிப்பா லோவா வளமைப் புனமு மிதணு மொளிர்பொழிலுந்
தாவாநன் னீர்ச்சுனை யுந்தேடி நாமிங்குச் சார்வதன்மு னாவா
வெதிர்வந்து நின்றன் ரானம்மை யாள்பவரே.
| 201 |
| 1356
| பின்னாள் நெடுந்தகை குறிவயின்
நீடுசென்றிரங்கல். வாய்மையி னாற்பொலி வார்சூழ் புகலி
வடுகன்வெற்பிற் றூய்மையி னாற்பொலி மாலைய தாயவிச்
சோலையெதிர் சேய்மையில் யான்வரும் போதே தரிசனஞ் செய்யநிற்கு மாய்மயில்
காணவொண் ணாதாயிற் றாலணி மைக்கண்ணுமே.
| 202 |
| 1357
| தலைவன் வறுங்களநாடி மறுகல். மதிக்கும் புலமை
யிடைக்காடன் சீற்ற மலிந்தவந்நாட் கதிக்கும் புகழ்ச்சண்பை யார்மகிழ்
கூடற் கனதளியுட் டுதிக்கும் விமானங்கொ லோநம தாவித்
துணையகல வுதிக்கும் விழியின் முகம்போன் றிருந்தவிவ் வோரிதணே.
| 203 |
| 1358
| குறுந்தொடிவாழும் ஊர்நோக்கி மதிமயங்கல் சொல்லரி
தாம்புக ழானா னுயர்த்தவன் றோணிவெற்பிற் கல்லரி தாநங் கவலைக் கிழிங்கையக்
காரிகையைப் புல்லரி தாமினி யூரது வேனும் பொருக்கென்றங்குச் செல்லரி
தாநெஞ்ச மேயென்செய் வாமிந்தத் தீவினைக்கே.
| 204 |
| 1359
| இரவுக்குறி இறையோன் இருட்குறிவேண்டல் பொன்னங்
கவர்மலை போன்முலை யீர்கடல் பூத்தவிட முன்னங் கவர்பவன் சண்பையன் னாருண்
முளைப்பதொடு பன்னங் கவர்வினை போலெழு காரும் படர்ந்ததுங்க ளன்னங்
கவர்விருந் தாயடைந் தேனிங் கருளுமினே
| 205 |
| 1360
| பாங்கி நெறியினது அருமைகூறல் மடங்காப்
புகழ்ச்சண்பை வாழும் பிரான்செய்ய வார்சடில மடங்காக் கலுழி யனையான்கை
யஞ்சரு மானைபுலி முடங்காத் திறலுடைப் பஞ்சா னனமுழு
துங்கடந்து தடங்காத் திடுபுயத் தாயெங்க ளூர்வர றானரிதே.
| 206 |
| 1361
| தலைமகன் நெறியினது எளிமைகூறல் நெல்லே விளையும்
வயற்சண்பை யார்வரை நீள்புலியோர் புல்லேவல் யாளி யறுகே புகர்முகப்
பூட்கைகொடும் பல்லே யுடைக்களி றோராம்ப லேயஞ்சிப் பாறுவலோ வல்லே
பொருமுலை யாய்நீந்து வேனெழு வாரியுமே.
| 207 |
| 1362
| இரவுக்குறிக்குப் பாங்கியுடன்படல் புரவைக் கருதிப்
புகலியின் மேவும் புராணர்வெற்பி லிரவைக் கருதி யரவைக் கருதி
யிரும்புனல்வாழ் கரவைக் கருதிப் புகல்வதல் லாதெங்கள் காவலநின் வரவைக்
கருதிப் புகல்வாரு முண்டுகொன் மாநிலத்தே.
| 208 |
| 1363
| பாங்கி அவனாட்டு அணியியல்வினாதல் பூவேது கொய்வ
ரிழையே தணிவர் புரிந்துபண்ணை காவேது செய்வர் விரையேது பூசுவர்
காமருபட் பாவேது பாடுவர் நாரா யணனோடு பங்கயற்குஞ் சாவே தினியென
நஞ்சமுண் டான்புகழ்ச் சண்பையிலே.
| 209 |
| 1364
| இரவுக்குறி தலைமகன் அவள்நாட்டு அணியியல்வினாதல்
நாற்றங் குடிகொள் குழனீ வினாயது நானுணர்ந்தேன் சீற்றங் குடிகொ
டிகிரிப் பிரான்முதற் றேவர்கடங் கூற்றங் குடிகொள் களத்தா ரொருவெங்
குருவரைவா யேற்றங் குடிகொளு நின்னாட் டணியியல் யாதுரையே.
| 210 |
| 1365
| தன்னாட்டு அணியியல் பாங்கிசாற்றல் வரையேறு
நீர்ச்சுனை யாடுவர் சூடுவர் வான்கணிப்பூ விரையேறு சந்தனம் பூசுவர்
பேசுவர் மென்குறிஞ்சி திரையேறு வாரிதி சூழுல காளுஞ்செல்
வாதெளிமோ நரையே றுயர்த்த பிரான்காழி சூழெங்க ணாட்டவரே.
| 211 |
| 1366
| பாங்கி இறைவிக்கு இறையோன்குறை அறிவுறுத்தல்.
கூம்ப லவாவுகை யாரு ளவாவுமெய்க் கூத்துடையா னோம்ப லவாவுதென்
காழியின் வாயொழி யாவிருளிற் றேம்ப லவாவிடை யாய்மதி கண்டுசெந்
தேனுணச்செவ் வாம்ப லவாவுங் குவலய மாளு மளியரசே.
| 212 |
| 1367
| நேராதிறைவி நெஞ்சொடுகிளத்தல் பொறையா ருமைதென்
புகலிப் பிரான்கண் புதைத்தவந்நாட் குறையா விருளும் பகலே யெனச்செய்
குருட்டிருள்வாய் மறையா வனவெங் கொடுமா வுழல்சிறு வட்டையினம் மிறையார்
வரல்புகல் வார்பாவம் பாவ மிதுகொடிதே.
| 213 |
| 1368
| பாங்கி இரவுக்குறி ஏற்பித்தல் பல்லா ரவாஞ்சண்பை
யாரொரு பாற்பெண் பசுங்குழல்வீழ் சொல்லா ரளியை நிகரொரு வண்டுதற்
சூழ்பெடையைக் கல்லார வின்மது முன்னூட்டிப் பின்னுணக்
கண்டுயிர்த்தார் வல்லா ரமாமுலை யாய்கொடி யேன்கண்டு வாழ்குவனே.
| 214 |
| 1369
| நேரிழை பாங்கியொடு நேர்ந்துரைத்தல் நாமப்
புனல்விழு நாள்வீழ்ந் தெடுத்திடு நம்பெரியோர் காமப் புனல்விழு நாணோ
மெடாதது கைதவமாந் தாமப் புனற்சடை யார்காழி வாணர்
சயிலத்திற்பூஞ் சோமப் புனற்குழ லாய்செய்க நின்னுளஞ் சூழ்துணிபே.
| 215 |
| 1370
| நேர்ந்தமை பாங்கி நெடுந்தகைக்குரைத்தல் மிறையே
யிலாயிங்கு நீவந்த வேளைநல் வேளையின்று முறையே புகலி வடுகப் பிரானடி
முன்பணிந்து பறையேதும் வஞ்சமி லாண்மலர்த் தாள்பின்
பணிந்திரந்தே னறையேய் மனமுகை போதா யுடன்மல ராயதுவே.
| 216 |
| 1371
| பாங்கி தலைமகனைக் குறியிடைநிறீஇத் தாய்
துயிலறிதல். பாதங்க மாலயன் காணவொண் ணாத பரனவர்த மாதங்கம்
பூண்டவன் காழியன் னாய்முன்னம் வான்புனந்தப் பாதங்க வாவி யடிக்கடி மேவிப்
படருமொரு மாதங்கம் வந்தது வோவெழும் வேங்கையின் வாய்முழக்கே.
| 217 |
| 1372
| இறைவிக்கு இறைவன் வரவறிவுறுத்தல். சேலே பொருவிழி
யாய்கடற் காழிநஞ் செல்வர்கழற் காலே கருதுங் கருத்துடை யன்பர்
கருதுகலை போலே வனத்துப் படர்யாறு மிந்தியம் போற்களிறு மாலே யெனவிரு
ளுங்கடந் தாரிங்கு வந்தனரே.
| 218 |
| 1373
| பாங்கி தலைவியைக் குறியிடத்துக்
கொண்டுசேறல். விட்கெதி ராக மிளிர்காழி நாதர் வியன்கிரியுன்
கட்கெதி ராகப் பகல்வரு வானிக் கருகிருளிற் பட்கெதி ராக வருமொழி
நீலம் பயிலுமலர்ந் துட்கெதி ராகவின் னேசென்று பார்த்துண்மை யோருகவே.
| 219 |
| 1374
| பாங்கி தலைவியைக் குறியிடத்து
உய்த்துநீங்கல். சிவைதழு வக்குழைந் தார்காழி யோங்கலிற்
சேவலைப்பே டவைதழு வப்பொலி சோலையின் வாயணங் கேமலர்ப்பூங் குவைதழு
வப்பொலி கொம்பரை யொவ்வொர் கொடிதழுவு மிவைதழு வக்கண் விடுத்துநி
லங்குற்றிங் கெய்துவனே.
| 220 |
| 1375
| பாங்கி தலைவியைக் குறியிடத்து
எதிர்ப்படுதல். விண்பார் புகழும் புகலிப் பிரான்றன்
விளங்கருளா னண்பார் சகல மொடுகே வலமொழி நல்லவர்போற் பண்பார் மலர்தல்
குவிதலில் லாதபொற் பங்கயமோ வண்பா ரிரவிதழ் வாயடை யாதநும் மாளிகையே.
| 221 |
| 1376
| தலைவன் தலைவியைச் சார்தல்பயனாகப்
புகழ்தல். மிடியாளர் வெம்பசி மேவிய வேலைவிண் ணாரமுதே கடியாளர்
கண்பிழைத் துற்றது போலுமிக் கங்குலினீர் முடியாளர் சண்பைக் குடியாள
ரென்வினை முற்றுமெற்று மடியாளர் மால்வரைச் சார்நீ ரெனக்கெதி ராயதுவே.
| 222 |
| 1377
| தலைவி ஆற்றினது அருமைநினைந்திரங்கல். மின்னா
முழங்கிப் பொழிமா முகிலந்த விண்மறைக்கு மன்னா முழங்கி வருவெள்ள நீரிந்த
மண்மறைக்கும் பன்னாக வேணிப் பிரான்சண்பை நின்றிப்
பசும்பொழிலென் முன்னாக நீவந்த வாறெந்த வாறிருண் முன்னவனே.
| 223 |
| 1378
| இரவுக்குறி. புரவலன் தேற்றல். இருள்வா யழுந்தி
யெழாதார்க்கு முண்டுகொ லின்பமென்றியா னருள்வா யழுந்தித்தம் மோடொன்
றுறதொன்ற வாள்பரமர் தெருள்வா யழுந்தினர் சேர்காழி நாதர்செவ் வாய்மலர்
நூற் பொருள்வா யழுந்திய தோரிரு ளோருநர் புன்மையரே.
| 224 |
| 1379
| புணர்தல். முன்றே மலர்க்குழ லூருற் றுறைபொழின்
முன்பினுற்றாங் கொன்றே யெனவுரு வுற்றுரை யாவின்ப முற்றதனா னன்றேசை
வம்புகல் சாலோக மாதியொர் நான்குமுற்றே மின்றே யெனிலிது தான்காழி நாயக
ரின்னருளே.
| 225 |
| 1380
| புகழ்தல். சமைய விசேட நிருவாண மென்றுநஞ்
சண்பைப்பிரா னமைய வுரைத்த துணர்ந்தாய்கொ னீதனி யாகுவதே சமையநி னங்கை
தொடலே விசேடந் தரித்தகலை யமைய நெகிழ்த்திட லேநிரு வாணமெய் யாமிதுவே.
| 226 |
| 1381
| தலைவி தலைவனைக் குறிவரல்விலக்கல். பாதம் பெரிதடுப்
பார்க்கருள் வார்தம் படையெனப்பல் பூதம் பெரிதுடை யார்காழி யார்சிர
பூதரப்பா லோதம் பெரிதுகொ லென்ன வழுவை யுழுவைகொள்்கா னேதம் பெரிதண்ண
லேயெண்ண லேது மிரவரலே.
| 227 |
| 1382
| தலைவன் தலைவியை இல்வயின்விடுத்தல் நீண்டங்கு மாறு
படுமா லயன்முனின் றோனவர்மெய் பூண்டங்கு மாறு புனைந்தோ னவர்ப்புணர்
வார்களத்து நாண்டங்கு மாறுநஞ் சுண்டோன் புகலிநல்
லாய்துயர்தா யாண்டங்கு மாறு கொளத்தேடு நீமு னணைந்தருளே.
| 228 |
| 1383
| பாங்கி இறைவியையெய்திக் கையுறைகாட்டல். சேற்பா
லருகு முருகு பெருகு செருகுமலர் நாற்பான் மலருளு மைம்பாற் கியைமலர்
நான்கொணர்ந்தேன் காற்பால் வளைமுர லுங்காழி நாதன் கயிலைவரை மேற்பா
லமர்தருக் கோற்பாலந் தேனிகர் மெல்லியலே.
| 229 |
| 1384
| பாங்கி தலைவியை இற்கொண்டேகல். பழிப்பாளென் பாட்டு
முவந்தவ னண்ட பகிரண்டமுற் றழிப்பா ளருளுடை யான்காழி மால்வரை
யன்னையொண்கண் விழிப்பாளப் போதெதிர் நில்லோ மெனிற்றன்
விழிசிவந்து தெழிப்பாள் பலவுங் கொழிப்பாள்செல் வாநந் திருமனைக்கே.
| 230 |
| 1385
| பாங்கி பிற்சென்று தலைமகனை வரவுவிலக்கல். பெருமான்
கரத்தி லொருமான் றரித்தபெம் மானெருதேழ் பொருமா னுயர்த்த வருமான் புகலிப்
பொருப்பிறைவா கருமான் கொடுமை செருமான வேடர் கலகமெண்ணா தொருமான்
பொருட்டுக் குருட்டிருள் வாய்வரலொத்ததன்றே.
| 231 |
| 1386
| தலைமகன் மயங்கல். சேவென் றுரைக்கத் திருமாலைச்
செய்த சிவபரனே கோவென் றுரைக்க வெனக்கருள் வோன்வெங்
குருவரைவாய்ப் போவென் றுரைக்கப் பயின்றது போலவிப்
பூங்கொடிவாய் வரவென் றுரைக்கப் பயிலாமை யான்செய்த வல்வினையே.
| 232 |
| 1387
| தோழி தலைவிதுயர்கிளந்து விடுத்தல். பாட்டொலி
மல்குநின் னூருற்ற பின்பு பலதழுவு மாட்டொலி மல்கும் புகலிப் பிரான்பொன்
னடிச்சிலம்பு காட்டொலி கேட்டன்றி வாழாவொர் கோதையிற்
காவலநின் கோட்டொலி கேட்டன்றி வாழா துயிரெங்கள் கோதைக்குமே.
| 233 |
| 1388
| திருமகட்புணர்ந்தவன் சேறல். மருணீக்கி யேயென்
குடிமுழு தாளும் வரதர்மனத் தருணீக்கி யென்று மமர்ந்தறி யார்சண்பை
யாரணங்கே வெருணீக்கி யென்னுயி ரன்னார்தம் மேனி
விளக்கங்கொண்டே யிருணீக்கி யிப்பொழு தேகுவன் யானென் னெயிலினுக்கே.
| 234 |
| 1389
| இரவுக்குறி இடையீடு. இறைவிக்கு இகுளை
இறைவரவுணர்த்தல். கலையே யுணர்வரி யான்காழி சூழுங்
கடற்றுறைவா யலையே யறைந்தது வோபடர் பூந்துகி ரங்கொடியின் றலையே
வளைத்தது வோபுதி தாவனந் தண்மலரே யிலையே செறிபுன்னை வாயிரு ளேங்குதற்
கேதுவென்னே.
| 235 |
| 1390
| தான்குறிமருண்டமை தலைவி பாங்கிக்கு
உணர்த்தல். வெளியே யுரைசெயி னாண்கேடு மாண்கொணம்
வேந்தர்செயு மளியேயென் றோரொலி கேட்டணைந் தேன்மற்றொன்றாகியது நளியே
செறியுநங் கானலின் வாயெனி னானென்செய்கே னிளியே புரைமொழி யாய்காழி வாண
ரிருந்துறைக்கே.
| 236 |
| 1391
| இரவுக்குறி இடையீடு. பாங்கி தலைவன்
தீங்கெடுத்தியம்பல். களியாப் பொலிகை வளைநீ யிழக்கக்
கருத்துமுதல் வெளியாப் பொருளுரைக் கத்தெரி யார்சொல்
விழையவென்று முளியாத் தளிரிளங் கானலின் வாய்நம் முயலுளமுந் தெளியாக்
குறிவிளைத் தார்காழி யார்கடற் சேர்ப்பரின்றே.
| 237 |
| 1392
| தலைமகன் புலந்துபோதல். சேலே பொருகண் பொருட்டுக்
குருட்டுத் திருட்டிருட்டுள் வேலே பொருமுட் கடத்துத் தடத்து
விடத்திடத்து மாலே வியல்சிலைக் காழிப் பிரானருண் மாறுபட்ட நூலே
யெனவலைத் தாயென்னை யென்னை நுவறிநெஞ்சே.
| 238 |
| 1393
| புலர்ந்தபின் வறுங்களம் தலைவிகண்டிரங்கல். தாயோ
வருமிடம் வைத்தார் புகலித் தனிமுதல்வர் வேயோ தருமண மாலைகொண் மாணி
விழையவைவேற் சேயோ வெனவிங்கு மேய புகார்த்துறைச்
சேர்ப்பர்தந்தார் நீயோகொண் டாய்புன்னை யேபெரி தாலுன் னெடுந்தவமே.
| 239 |
| 1394
| தலைவி பாங்கியோடுரைத்தல். வானப் பிறைக்குண
மென்றிருந் தேன்சண்பை மன்னர்சடைக் கானப் பிறைக்குணம் போன்றாலு நன்றுநங்
காமர்குழற் றானப் பிறைக்குணம் போற்றேய்ந்து தேய்ந்துபின்
சாயுங்கொலோ தேனப் பிறைக்குங் குழன்முகி லாயன்பர் செய்யுநட்பே.
| 240 |
| 1395
| தலைமகளவலம் பாங்கிதணித்தல். மதனீள் புயத்தர்
குறிபிழை யார்வண் கமலைவிண்வாழ் சிதனீள்வன் மீகத் துறைவார் சிரபுரச்
செல்வரெனப் பதனீள் கழிப்பெருஞ் சார்பா லடிக்கொளும் பான்மையன்றி முதனீ
டழையவ் விதநீள் கவியை முடிக்கொளுமே.
| 241 |
| 1396
| இறைவன்மேற் பாங்கி குறிபிழைப்பேற்றல். மறியிடத்
தேகொள் பெருமான் புகலி வழுத்துமன்பர் குறியிடத் தேவந் தருளுதல்
போலெங்கள் கோதைகுறி செறியிடத் தேவந் தருளுகி லீரென்செய்
தீர்படருங் கறியிடத் தேசந்தின் பூஞ்சினை தாழ்வரைக் காவலரே.
| 242 |
| 1397
| இறைவிமேல் இறைவன் குறிபிழைப்பேற்றல். மழைவர
வோர்ந்து மயிலா டுறுங்குன்ற வாணர்மக ளுழைவர வோர்ந்துகொள் ளாதோடி வாடி
யுழன்றவனென் யிழைவர வோர்ந்துகொண் டோன்சண்பை யேத்தல ரிற்றனது பிழைவர
வோர்ந்துசொல் லாளெனின்யா னெவன் பேசுவதே.
| 243 |
| 1398
| தலைவி குறிமருண்டமை தோழி தலைவற்குணர்த்தல். ஒருகா
லெழுந்தெறி யுந்தொறுங் காய்மு னுதிர்வனதேர்ந் தொருகால்கொ னின்குறி
யென்றுபல் காலங்கங் குற்றுழன்றா ளொருகான் மிசைமுக் கிளையோன் மன்றாட
லுவந்தெடுத்த வொருகாலென் னுட்பதிப் போன்காழி மால்வரை யோரணங்கே.
| 244 |
| 1399
| தலைமகன் சொல்லியகொடுமை
தலைமகட்குச்சொல்லல். காட்டொடு வெங்கொடுங் கான்யாறு நீந்தியிக்
கார்வரைசேர்ந் தீட்டொடு நித்திரை யில்லா தழுங்கிய தென்னளவோ வாட்டொடு
மன்றுணிற் பார்காழி நாத ரருளனையாய் பேட்டொடு புள்ளுமற் றேயென்று காவலர்
பேசினரே.
| 245 |
| 1400
| என்பிழைப்பன்றென்று இறைவிநோதல். பகல்வா யுறங்கி
யிருள்வாய் விழித்துப் பசுநறுந்தே னுகல்வாய் குவளை யனையகண் ணாளிவ
ளுண்மையெனப் புகல்வாய் புகலிப் புராணர் பொருப்பிற்
புரிந்திருந்து மிகல்வாய் புயத்தன்பர்க் கென்பய னாய திளங்கொடியே.
| 246 |
| 1401
| தலைவி விருந்தெனவந்த பெருந்தகைநிலைமைகூறல். இரவே
குறிபிழைத் தார்பக லேநம்மி லின்னமுதா தரவே யுளேனென்றுற் றாரன்னை
நல்கென்று சாற்றினள்யான் கரவேயில் சோறு முதன்மூன்று மோர்ந்தனன்
காழிப்பிரா னுரவே யுறுமொழி யன்றென்று நீங்கின ரொண்ணுதலே.
| 247 |
| 1402
| தாய் துஞ்சாமை. பழுத்துப் படர்திரை யன்னைதுஞ் சாத
படியெவன்மெல் லெழுத்துப் படர்வல் லினமுலை யாய்சண்பை
யெய்தியன்பர் கொழுத்துப் படர்புரி கூற்றங்கொன் றாரைக்
குழீஇப்பணியும் வழுத்துப் படரொரு நல்லிரு ளோவிந்த வல்லிருளே.
| 248 |
| 1403
| நாய் துஞ்சாமை. என்கொடு மாமலந் தீர்ப்பார் புகலி
யிகலில்கல்வி நன்கொடு கேள்வி யிலாருரை போற்றுயி
னண்பொழித்துப் புன்கொடு வானெடும் போந்தின் கருக்குப்
புரைபுலைவாய் வன்கொடு நாய்குரைத் தாற்கொடுங் கூற்றும் வரவஞ்சுமே.
| 249 |
| 1404
| ஊர் துஞ்சாமை. மலைவிதி சென்னிகைக் கொண்டார்மெய்
யன்பின் வழிகழியா நிலைவிதி யேத்தும் பிரம புரேசர் நிறைவிழவோ கலைவிதி
யாமவர் கூத்தோ நகர்கண் படாததற்கென் றலைவிதி யேயொரு பாழ்ங்கூத்
துருக்கொடு சார்ந்ததுவே.
| 250 |
| 1405
| காவலர் கடுகல். சேறந்த கண்ணி யொருபாகர் காழித்
திருத்தளியு ளேறந்த வின்பறைக் கீயா தஞர்தரு மிப்பறைக்குத் தோறந்த
வேறும்வன் கோறந்த தாருவுந் துஞ்சலொழி மாறந்த காவலர் வன்கையும் வாழிய
வாழியவே.
| 251 |
| 1406
| நிலவு வெளிப்படுதல். மதியே யுணர்நங் குலக்கோதை
கேள்வற்கு வாஞ்சைநற்றாய் துதியேய் மலர்க்கை யவள்கோன் முகக்கண்
டொடலரிதோ நிதியே யடக்க மமரரு ளுய்க்கு நிறைபுகலிப் பதியேய் பவர்மதி
போலடங் காயெனிற் பண்பல்லவே.
| 252 |
| 1407
| கூகை குழறல். எல்லா வுயிர்க்கு மிருடீர்த்
திடுமெம் மிறைவலக்கண் பொல்லா நினக்கிரு ளுண்டாக்கு மானின்
புரையுணர்ந்தே கல்லா தவரணு காக்காழி யன்பரெங் கண்ணெதிர்நா ளொல்லா
தவரில்வெங் கூகாய் குழறுத லொத்ததன்றே.
| 253 |
| 1408
| கோழிகுரல் காட்டுதல். கோழிக்கு வேளுட னீறாக
நோக்கு குழகர்கொம்பில் கோழிக்கு நாயகர் மேவிய வீழிக்குங்
கூடலுக்குங் கோழிக்கு மன்புடை யார்வரும் போது குரலெழுப்புங் கோழிக்கு
நான்செய்த தீங்கெவ னோசொல் கொடியிடையே.
| 254 |
| 1409
| வரைதல் வேட்கை. பாங்கி தலைவியைப் பருவரல்வினாதல்.
சடையென வேமின் றரித்தவர் காழித் தடத்திலன்னப் பெடையென வேநடப் பாயன்ப
ரென்று பெறாமையினோ வுடையென வேயனை மார்சொற் பனிவந் துலாயதுவோ விடையென
வேமுகத் தாமரை வாடுதற் கேதுவென்னே.
| 255 |
| 1410
| அருமறைசெவிலி அறிந்தமைகூறல். கொண்டலம் பான
லெனுங்களத் தார்வெங் குருவரைவாய் விண்டலம் பார்புகழ் வேந்தரை யெண்ணி
விழிபனித்தேன் கண்டலம் பாவலிற் கைத்தாயென் னென்னக்
கடற்றிரையென் வண்டலம் பாவைகொண் டோடிற்றென் றோதி மறைத்தனனே.
| 256 |
| 1411
| தலைமகன்வருந்தொழிற்கு அருமைசாற்றல். கூடிய பாசமொ
ரைந்தொழிந் தேவெங் குருப்பரன்மன் றாடிய பாத மடைவது போனில
வாய்நகர்நாய் நீடிய காவலர் வெங்காவ லைந்த னிகழ்வொழிந்தே நாடிய
வன்பரிங் கெய்தலுண் டாகுங்கொ னன்னுதலே.
| 257 |
| 1412
| தலைவி தலைமகனூர்க்குச்செல வொருப்படுதல். தாரூர்
தடம்புயத் தோணிப் பிரானரு டாங்கியன்பர் சேரூ ரடையத் தடையெவ னோமுன்
சிறந்தவரைப் பாரூர் புகழ்மிகு நும்மூ ரெதுவெனப் பன்னிரண்டு பேரூரென்
றாரெங்கு நாந்தேடிச் செல்வது பெண்ணணங்கே.
| 258 |
| 1413
| பாங்கி இறைவனைப் பழித்தல். நன்கண்மை யாரணங்
கேநம்மை யாளு நலத்தர்மலர்ப் புன்கண்மை யாளர் திருத்தோணி யாரடி
போற்றலரி னின்கண்மை யாத்த லுடையாரின் மேவிப்பி னீங்குதலால் வன்கண்மை
யாருண்முற் றாம்பூலம் வாங்குநர் மற்றவரே.
| 259 |
| 1414
| தலைமகள் இயற்பட மொழிதல். வளக்குங் குமமுலை யாயுயி
ரோம்பு மகிழ்நர்நம்பாற் கிளக்குங் கருணை யிலரா குதனங்
கெடுவினைவா ளைக்குங் கனக மதிற்காழி நாத ரருளினெல்லாம் விளக்குங்
கதிரிரு ளாகுத லோர்தி விழிக்குற்றமே.
| 260 |
| 1415
| கனவுநலிபுரைத்தல். பூவலர் சோலைப் புகலிப்
பிரானருள் போற்றியமுந் நாவல ராதியர் நாமாயி னானன வாங்கனவு மாவலர்
கோதைநல் லாய்நென்ன லாரிருள் வந்துவந்து காவலர் மார்புதந் தார்விழித்
தேனொன்றுங் கண்டிலனே.
| 261 |
| 1416
| கவினழிபுரைத்தல். அன்பே யவாவு புகலிப் பிராற்கன்பு
ளாரையுன்னி யென்பே வெளிக்கொண் டிடமேனி வாடி யெழிலிழந்து வன்பே
யுருவமுற் றேனப் பிரானை வழுத்தியொரு மின்பே யுருவமுற் றாளென்ப ராலென்
வியப்பதிலே.
| 262 |
| 1417
| தலைமகள் தன்றுயர் தலைவற்கு
உணர்த்தல்வேண்டல். சேவாய்நஞ் சண்பைப் பிரானைச் சுமக்குந்
திறத்தனுமோ ரேவாய் விழியை வருத்தி யுருப்பத் தெடுத்துழன்ற மாவாய்
கதையுடன் யான்படும் பாடும் வகுத்துரைத்துப் பாவாய் வருந ரெவரேநங் காவலர்
பாலடைந்தே.
| 263 |
| 1418
| நின்குறை நீயே சென்றுரையென்றல். எப்போது நின்னு
ளமர்வார்க்கொன் றோதவங் கெய்துவர்யார் செப்போது கொங்கைத் திருவனை
யாய்திரு மாலொடயன் முப்போது மேத்தும் புகலிப் பிரானெம்
முதலிளஞ்சே யொப்போது னன்பர்க்கு நீயே யுரைநின் னுளத்ததுவே.
| 264 |
| 1419
| அலர்பார்த்துற்ற அச்சக்கிளவி. நல்லா ரொருவர்கற்
றூற்றவு மாற்றிய நம்புகலி வல்லா ரொருவ ரலர்தூற்ற வாற்றிலர்
மற்றவரும் பல்லார் களுநனி தூற்றலர் யானெப் படிபொறுப்பேன் வில்லார்
மதிநுத லாய்நினை தோறெழும் வெய்துயிர்ப்பே.
| 265 |
| 1420
| ஆறுபார்த்துற்ற அச்சக்கிளவி. தோளா மணிசண்பை
வாழ்வடு கேசன் றுணையடிக்கே யாளா னவர்நம் புடைசார்ந் தியற்று
மருண்மறந்து வாளா விருப்பது கண்டுங் கொடிய வழியெனையுங் கேளா
தெழுந்தவர் பாற்செல்லு மாலென் கிளர்மனமே.
| 266 |
| 1421
| காமமிக்க கழிபடர்கிளவி. நீரே நிலாமன மேபிறி தாகு
நிலாமனமே காரே கரும்பனை யேகுயில் கூவுங் கரும்பனையே பாரே பரவலை யேமய
றீயப் பரவலையே வாரேகொள் வாரல ரேகாழி யார்க்கன்பர் வாரலரே.
| 267 |
| 1422
| தன்னுட் கையாறெய்திடுகிளவி. பன்னாக வேணிப்
பிரான்காழி சூழும் பனித்துறைவாய் நின்னாக முற்றும் பசந்தா யசைந்துகண்
ணீருகுப்பாய் முன்னாக மேவி யகரும் பனையலர் மூழ்கிநிற்பாய் புன்னாக
மேநினை நீத்தகன் றாருமெப் புண்ணியரே.
| 268 |
| 1423
| தலைமகள் நெறிவிலக்குவித்தல். மன்னுங் கொடுமலர்
தீர்ப்பார் புகலி மறந்துமற்றொன் றுன்னுங் கொடுவினை யாரினங் காவலர்க்
கொண்டொடியே பன்னுங் கொடுவரி யாளி யரிகரி பம்பியிரு டுன்னுங் கொடுநெறி
வாரற்க நீயென்று சொல்லுகவே.
| 269 |
| 1424
| குறிவிலக்குவித்தல். பொறிவா யரவரைப் புண்ணியன்
காழிப் பொருப்பணங்கே நெறிவா யெமருட் சிலர்குறிப் பாலொன்ற
னீருணர்வார் கறிவாய் நறுஞ்சந் தனச்சாரல் வேரல் கலந்தபொழிற் குறிவாய்
வருத றகாதென்று கூறுநங் கொற்றவர்க்கே.
| 270 |
| 1425
| வெறிவிலக்குவித்தல் பாடுதற் கெண்ணிய யான்மல மாதி
பறித்தருளிற் கூடுதற் கெண்ணிய கோன்சண்பை யேத்துநர்
கொள்ளுமின்ப நீடுதற் கெண்ணி யவர்தரு நோய்நினை யாதுவெறி யாடுதற்
கெண்ணிய வன்னைக்கொன் றோதி யகற்றணங்கே.
| 271 |
| 1426
| பிறர் விலக்குவித்தல் புரியொன்று கூழைநல்
லாயன்பர் தம்மணம் போற்றியயான் விரியொன்று மற்றையர் தம்மணம் போற்றும்
விதியுமுண்டோ வரியொன்று மேனி யரன்காழி வெற்பி லரியையவாய் நரியொன்று
பெற்றொழி வாருமுண் டோவிந்த நானிலத்தே.
| 272 |
| 1427
| குரவரை வரைவெதிர் கொள்ளுவித்தல் தீங்கோய் புகலிச்
சிவனா ருமையொடு சேர்ந்துறையு மீங்கோய் மலையன் றிருஞ்சுனை வீழ
வெடுத்தளித்தார் தாங்கோய் வருநசை யோடுறு போது தவாநமரென் பாங்கோய்
வரைவெதிர் கொண்டிடு மாறு பகருகவே.
| 273 |
| 1428
| வரைவுகடாதல் வினவிய செவிலிக்கு மறைத்தமை
விளம்பல் வலநீர் விறற்கழ லோயன்னை யென்னைநம் மாதர்முக நலநீர்
மெலிவுற்ற தென்னென நென்ன னவிற்றியசிற் றிலநீர் பரன்சண்பை சூழ்கடல்
வாய்ப்புக்க தென்றுவிழிக் குலநீர் கவிழ்ப்பமெய் வாடின ளாலென்று கூறினனே.
| 274 |
| 1429
| அலரறிவுறுத்தல் நன்மாலை கொன்றையுந் தும்பையு
மாக்கிய நம்பரென்பு வன்மாலை யும்புனை வார்காழி வாணர்
வரையிறைவா தன்மாலை யன்றி யொருமத வேள்பல் சரந்தொடுக்க நின்மாலை
யுற்றவட் கூரலர் சூழ்ந்து நெருங்கியதே.
| 275 |
| 1430
| தாயறிவுணர்த்தல் நன்கண்டு மாறடி யேற்கருள் வார்நறு
நாவன்மலர்ப் புன்கண்டு நீழலி னார்சண்பை நாட்டுப்
புனிதவன்னை மின்கண்டு தாழு மருங்குனல் லாண்முலை மேற்பரந்த பொன்கண்டு
நெட்டுயிர்த் தாளிளை யாட்கெங்ஙன் புக்கதென்றே.
| 276 |
| 1431
| வெறியச்சுறுத்தல். அசத்துக் கிரங்குகி லார்காழி
வாழு மவரெனவோ ரசத்துக் கிரங்குகி லாளாயி னாளெங்க
ளன்னையுநின் வசத்துப் படுமொரு மாங்குயில் சோர்ந்து
மயக்கமுற்ற வசத்துப் பதைத்தல்கண் டாள்வெறி யாடன் மதித்தையனே.
| 277 |
| 1432
| பிறர் வரைவுணர்த்தல். பண்ணவ ரேத்து குருலிங்க
சங்கமம் பற்றுபதிக் கண்ணவர் காழிக் கழுக்குன்ற மால்வரைக்
காவலமுன் விண்ணவ ரத்திரு மாதையிச் சித்த விதம்பொருவ மண்ணவ ரித்திரு
மாதையிச் சித்து மயங்குவரே.
| 278 |
| 1433
| வரைவெதிர்வுணர்த்தல். முருகோடு முன்ன முனிந்தேற்
றமர்த்தவெம் மொய்குலத்தோர் திருகோடு நிற்பது தீர்ந்துநன் கேற்றுச்
சிறப்பளிப்பா ரிருகோடு கோட்டுக் களிற்றாய் வரைவென்
றெழுதரினீ குருகோடு வண்டுறங் குந்தடங் காழியெங் கோன்வரைக்கே.
| 279 |
| 143
| வரையுநாளுணர்த்தல். ஆருற்ற வேணிக் கமலர்பொற் றோணி
யமலர்வெற்பிற் சீருற்ற கோதைக் குழல்வேட்கு நாளிது
தேர்ந்துகொண்மோ காருற்ற சோலைக் கணிபூ மலர்ந்து கலைமதியொன் றூருற்ற
போதல்ல வோமணங் காட்டுமெம் மூரண்ணலே.
| 280 |
| 1435
| தலைமகளறிவு தலைமகற்கு அறிவுறுத்தல். விழியேறு
நெற்றி யுடையார் கொடியில்வெள் ளேறமைத்தார் மொழியேறு சீர்கெழு சண்பைநண்
பாமுழு முத்தமுலை யுழியேறு பீருங் கழலும் வளையு
முணர்ந்துனக்குப் பழியேறு மென்று மறைத்தா ளெனையும் பசுங்கொடியே.
| 281 |
| 1436
| குறிபெயர்த்திடுதல். பொருவா ரிலாத புயத்தார்
புகலிப் புராணர்வெற்பின் மருவார் தொழுங்கழ லாயிப் பொழிலமர்
மாதவிப்பா லொருவார் பலரும் வருவா ரணிமையி னோவிமணிக் குருவார் நகையொடு
செல்லுதி சேய்மைக் குறிகுறித்தே.
| 282 |
| 1437
| பகல்வருவானை இரவுவருகென்றல். கதிவாய் விருப்பங்
கழலா தெனக்குங் கடைக்கணித்த நதிவாய் சடையர் கொதிவாய் மழுவர்
நயந்தமரு நிதிவாய் புகலிப் பதிவாய் மடந்தை நிகரின்முக மதிவா யமுது
பகல்வா யடைவதெவ் வாறண்ணலே.
| 283 |
| 1438
| இரவுவருவானைப் பகல்வருகென்றல். உகல்வாய் வினையுடை
யேன்யா னெனவெனக் கோங்கருள்செய் மிகல்வாய் புகலி நகுவடு கேசன்
வியன்சிலம்பி னிகல்வாய் களிற்றண்ண லேமாதர் செவ்விள
நீரிரண்டும் பகல்வா யடையினன் றோநல மாய பயன்றருமே.
| 284 |
| 1439
| பகலினு மிரவினும் பயின்று வருகென்றல். புகலும்
வரவுஞ் செலவுமில் வேணு புரேசரன்பு நகலும் விரவுநர் பாலுறு போழ்து
நவிலினொன்றோ விகலு மரவுந் தொழுமல்கு லாளின் பினிதடையப் பகலு மிரவும்
பயின்றே வருக பகட்டண்ணலே.
| 285 |
| 1440
| பகலினுமிரவினும் அகலிவணென்றல். ஏதிலர் வாயல ராம்பக
லென்பணி யேற்றருளுஞ் சூதிலர் கண்ணல ராமிரு ணீவரிற் றோன்றுமிரு போதில
ரென்னும் புகழ்மேவண் ணாலற் புதர்வலப்பான் மாதிலர் பிட்டுக்கு மண்சுமந்
தார்சண்பை மால்வரைக்கே.
| 286 |
| 1441
| உரவோனாடுமூருங்குலனுமரபும்
புகழும்வாய்மையுங்கூறல். பொன்னாடு போற்றும் புகலிப் புராணர்
புகழ்ப்பொருப்பிற் கொன்னாடு வேல்வலங் கொண்டுதண் டாவிறல்
கொள்பவநி னன்னாடு மூருங் குலனு மரபு நகுபுகழு மன்னாடு மெய்யு
மணஞ்செயு மாதை மணஞ்செயினே.
| 287 |
| 1442
| ஆறுபார்த்துற்ற அச்சங்கூறல். வேட்டுக் குளிர்நகை
யாளின்ப நீவரல் வேலவவென் பாட்டுக் கருளும் பரன்காழி நாதன்
பசும்பொன்மன்ற மாட்டுப் புலியர வோவழி நேர்புலி வல்லரவு காட்டுக்
களிறுந மாவத்துக் காத்த களிறலவே.
| 288 |
| 1443
| ஆற்றாத்தன்மை ஆற்றக்கூறல். பச்சை மயிலொரு பாலுடை
யாயெனும் பையரவக் கச்சை யரைக்கசைத் தாய்தென்றல் சீறுங்
கலந்தெனுமெ னிச்சை முழுதுமென் னன்பரெண்ணாதமை
யென்னெனும்வண் கொச்சையுன் னாரி னழும்விழு மோரெங் குலக்கொழுந்தே.
| 289 |
| 1444
| காவன்மிகவுரைத்தல். நீங்கும் பொழுதுகொன் னாகாது
தன்னை நினைப்பித்தென்னை வாங்கும் பொழுதுட் குறித்த பிரான்சண்பை
மால்வரைவா யோங்கும் பொழுது வறிதாக்கு வாய்கை யுறவணைத்துத் தூங்கும்
பொழுதும் விடாரன்னை மாரொரு தோகையையே.
| 290 |
| 1445
| காமமிகவுரைத்தல். கொட்கும் புலனுடை யேனஞர்
தீர்க்குங் குழகர்சண்பை நட்கும் பயனடை யார்போற் கலங்குவ
ணல்லமுது முட்கும் வருக்கைச் சிறுகோட்டுத் தூங்கு மொருகனிபோற் பெட்கு
முயிர்சிறி தாயினுங் காமம் பெரிதையனே.
| 291 |
| 1446
| கனவுநலிபுரைத்தல். நனவே யெனக்கருள் வார்காழி வாணர்
நகுவரைவாய்ப் புனவே யடுவளைத் தோளா ளிரவிற் புகுந்துயிலிற் கனவே
சிறந்ததென் பாளல ரோவலிற் காணுமதை யுனவே கொடியதென் பாளிடை நீங்கலி
னுத்தமனே.
| 292 |
| 1447
| கவினழிபுரைத்தல். வருமந்த மாருத முன்றி
லுலாஞ்சண்பை வாணரெனைப் பொருமந்த காரம் புடைப்பா ரருளுரு
புண்ணியர்பாற் றருமந்த மாதவ மெய்தார் படைத்த தனம்பொருவ வருமந்த மேனி
யழகண்ண லேகொள்ளை யாயினதே.
| 293 |
| 1448
| ஒருவழித்தணத்தல். தன்பதிக்ககற்சி
தலைவன்சாற்றல். கரும்பே கமுகு கமுகேதென் னென்னுங்
கழனியெம்மூ ரரும்பே பொருமுலை யாய்குறை யொன்றுண்
டதுமுடிப்பான் பொரும்பே ரடல்விடை யான்காழி யூர்வழி
போயுங்களூர் விரும்பேர் மரையிதழ் மூடித் திறக்குமுன் மேவுவனே.
| 294 |
| 1449
| மென்சொற்பாங்கி விலக்கல். இடைக்குறை யுள்ள
விவள்குறை யன்றிமற் றேதுகுறை விடைக்குறை கொட்டில்வை குந்தஞ்செய்
தோனிண்டை மேவியபா சடைக்குறை முத்தி னழகுசெய் சண்பை யடைவழகே படைக்குறை
யொன்னலர் மார்பாக் கியவிறற் பார்த்திபனே.
| 295 |
| 1450
| தலைவன் நீங்கல்வேண்டல். முடியாரை வேய்ந்த பெருமான்
புகலி முழுமுதல்வ னடியாரை நீங்கி யிருக்கினுங் கொங்கை
யடர்மருங்குற் றுடியாரை நீங்கி யிருக்ககி லேனின்னுஞ்
சொல்லுவதென் கொடியாரை சூழெயி லின்றேசென் றிங்குக் குறுகுவனே.
| 296 |
| 1451
| தலைவனைப் பாங்கிவிடுத்தல். என்றார் கொடிமதிற்
காழிப் பிரானையெண் ணாதவரின் மென்றார் மலர்க்குழல் சோர்வது யான்சொல்ல
வேண்டுங்கொலோ குன்றார் முலைநின் கொழுநர்தம் மூர்க்கொரு
கோள்குறித்துச் சென்றா ரெனுமுனம் வந்தா ரெனவந்து சேரண்ணலே.
| 297 |
| 1452
| பாங்கி தலைவிக்கு அவன்செலவுணர்த்தல். தொடையேறி
வண்டு துயில்குழ லாய்துய ராதிதுகேள் விடையேறி காரிய மொன்றறுப்
பான்சங்கம் வெண்முத்தநீர் மடையேறி யீனும் புகலிசென் றார்குழை
வாயுங்கள்கட் கடையேறி மீளுமுன் னேவரு வேனென்று காவலரே.
| 298 |
| 1453
| தலைவி நெஞ்சொடுபுலத்தல். நன்றோதி நூல்பல
வோர்ந்தார்க்கு மீது நலந்தருமே துன்றோதி பங்குடை யார்சண்பை நாயகர்
தோளமர்வி லொன்றோதி யென்பய னாமெனுந் தோள ருனைப்பிரியே னென்றோதி
முன்பிரிந் தார்தெளிந் தாரிடத் தென்பிழையே.
| 299 |
| 1454
| சென்றோனீடலிற் காமமிக்க கழிபடர்கிளவி. விரைமே
விரவல ரேயன்னை மாரும் விரவலரே கரைசூழ் கருங்கழி யேயூ ரலர்ப
கருங்கழியே திரைசால் சிறைக்குரு கேயெளி யேன்வெஞ்
சிறைக்குருகே வரைதீர்வெள் வார்க்குரை யேசண்பை யாரையுள் வார்க்குரையே.
| 300 |
| 1455
| தலைவியைப் பாங்கி ஆற்றுவித்தல். பாசங் கொடுவருந்
தாதென்னை யாளும் பரன்புகலி நேசங் கொடுதுதிப் பார்நகர் நின்று
நிகழ்குடிஞை யோசங் கொடுமுத்து முந்துதல் பாரவ ரூரின்மௌவல் வாசங்
கொடுவரல் பார்மாத ராய்மந்த மாருதமே.
| 301 |
| 1456
| நெஞ்சுநினைந்திரங்கல். கஞ்சந் தொடர்ந்து வருங்கழ
லார்பின் கனிந்துதொடர் நெஞ்சந் தொடர்ந்துடன் சென்றது வோவிடை
நின்றதுவோ வஞ்சந் தொடர்ந்துபின் மீண்டது வோவன்றி மாண்டதுவோ நஞ்சந்
தொடர்ந்து பொலிகளத் தார்சண்பை நாட்டகத்தே.
| 302 |
| 1457
| நெஞ்சொடுகிளத்தல் மஞ்சே பொருகளத் தார்காழி வாணர்
வரையிலெனை நஞ்சே யெனவெறுத் தஞ்சேலென் னார்வழி நண்ணியவென் னெஞ்சே
யவரென்சொன் னாரது கேட்டபி னீயென்சொனாய் வஞ்சே யுளார்கொ லிலார்கொலெற்
கோது மறையொழித்தே.
| 303 |
| 1458
| ஒருவழித்தணத்தல் கடலொடு புலம்பல். அருந்திய
நஞ்சமுன் காழிப் பிரானுக் கருளியநீ வருந்திய வெற்கெது செய்யாயென்
கேள்வர்வை வேல்வலத்திற் பொருந்திய னோக்கி முருகனென் றெண்ணினை
போலுமவர் திருந்திய தேர்செல் வழியழித் தேறுந் திரைக்கடலே.
| 304 |
| 1459
| ஆற்றொடு புலம்பல். மூவல்செய் வார்புனல் சூழுமை
யாறு முதுகுன்றம்வெண் ணாவல்செய் வார்நிழல் மேய பிரான்சண்பை
நாட்டினின்று மோவல்செய் வார்நுரைத் தூசான் மறைந்திங்
கொழுகுவையெற் காவல்செய் வார்தொழில் கூறற்கு நாணிக்கொல் காவிரியே.
| 305 |
| 1460
| புள்ளொடு புலம்பல். பிரியா ரெவர்கொல் கொழுநரை
யோர்வரைப் பெண்ணன்றிமாற் கரியார் புகலிநல் லாரெனை நோக்கி
யசிப்பரென்னே வரியார் சிறையளி காளன்றில் காண்மகி ழோதிமங்கா ளுரியார்
பிரிவரி யாராக வாற்று முறுதவமே.
| 306 |
| 1461
| கையறுகிளவி மடலே பொலிகொன்றை மாலிகை யான்வழுத்
தேனையுங்கை விடலே துணிபெனக் கொள்ளாத வன்சண்பை மெய்ந்நகர்சூழ் கடலே
கழிக்கரை யேகைதை யேகுளிர் கானன்மணற் றிடலே தலைவர்சொல் சூளுற வாலுயிர்
தேம்புவனே.
| 307 |
| 1462
| கூடலிழைத்தல் விழிக்குந் திருநுத லான்கொடி யேன்வெவ்
வினையனைத்து மழிக்குந் திறலுடை யான்காழி சூழ்துறை
யாய்சுவைத்தேன் மொழிக்குங் குமமுலை யாள்விரல் கன்றவெண்
முத்தமணற் சுழிக்குங் கழிக்கு மொழிக்குங்கண் ணீரென்று துன்புறுமே.
| 308 |
| 1463
| சூளுறவு பொய்யென்றல் மெய்த்தா ரிதழியர் வேணுபு
ரேசர் விரிதுறையன் புய்த்தார்வெள் ளோதிமஞ் சான்றாக முன்ன
முரைத்திடுசூள் பொய்த்தா ரவர்வருந் தாதிருந் தாரது
போற்றிமெய்யென் றெய்த்தார் வருந்துவ ரென்றானன் றான்முன் னெழுத்தியலே.
| 309 |
| 1464
| மடமைகூறல். பெருகுறு நீர்வென் மதிற்காழி யாருண்
பெருவிடம்போற் கருகுறு போதடி சூழ்பாம்பு மாவுங் கடந்தளியே னருகுறு
வார்பொருட் டிம்மெலி வோவின்னும் யானடைவேன் முருகுறு கூழைநல் லாய்மட
வோரிது முன்னுவரே.
| 310 |
| 1465
| தன்னுட்கூறல் புரிதரு செஞ்சடை யார்காழி நாதர்
பொருப்பர்தந்த விரிதரு வெப்ப மவரூர் வழிவரு மென்புனல்யாற் றிரிதரு
மாறு படிவோமவ் வீர்ம்புன லீர்த்துவரு மரிதரு பைந்தளிர் போர்ப்போநம் மேனி
யடங்கலுமே.
| 311 |
| 1466
| பாங்கி தலைமகட்குத்
தலைவன்வந்தமையுணர்த்தல் கண்பொழி நீருந் தனிமையும் பீருங்
கழல்வளையும் பண்பொழி வாய்மயி லேயினி யேதுநின் பாலுணர்மோ விண்பொழி
நீர்வைத்த செஞ்சடை யார்விளங் கும்புகலி நண்பொழி யார்மணிப் பொற்றே
ரொடுமிங்கு நண்ணினரே.
| 312 |
| 1467
| வந்தோன்றன்னோடு பாங்கி நொந்துவினாதல் நனவி
னுணர்ந்திலி ராயினு மெங்க ணறுங்கொடியைக் கனவி னுணர்ந்திருப் பீருண்மை
யேயெனிற் கண்டனிரோ சினவி னுதன்முலைப் பீருங்கண் ணீருமுட்
சேருந்துன்பு மனவி னிடையர் கழுமலத் தார்வரை மன்னவரே.
| 313 |
| 1468
| தலைவன் பாங்கியொடு நொந்துவினாதல் வீழ்வது கண்முத்த
மோமுலை மேலணி வெண்முத்தமோ சூழ்வது பாயல ரோவயல் வாய்நடுத்
தோயலரோ போழ்வது மாலைகொல் வேலைகொ லோது புலையடியேன் வாழ்வது செய்த
பிரான்காழி நாதன் வரையணங்கே.
| 314 |
| 1469
| பாங்கி தலைவியை ஆற்றுவித்திருந்த
அருமைகூறல் செயிர்முடி யாவிதந் தீயோர்க் கருள்சண்பைச்
செல்வர்துவள் பயிர்முடி யாவிதம் பெய்மழை போலப் பரவருளான் மயிர்முடி
யாவிதம் பொன்போர்த் தெழுகொங்கை மங்கைக்கியா னுயிர்முடி யாவிதங் காத்தேன்
வருத்தமுற் றுத்தமனே.
| 315 |
| 1470
| வரைவிடைவைத்துப் பொருள்வயிற்பிரிதல் என்பொருட்
பிரிவுணர்த்து ஏந்திழைக்கென்றல் ஒருவா வளச்சண்பை யோவார் கவுணியர்க்
கோங்குபைம்பொன் றிடுவா வடுதுறை யிற்கொடுத் தார்தந் திருவருளான் மருவா
வருஞ்சுரம் போய்வரு வேனுங்கண் மங்கைகொங்கைப் பொருவா விலைகொண்டு மாதே
புகறியப் பூங்கொடிக்கே.
| 316 |
| 1471
| பாங்கி நின்பொருட்பிரிவுரை நீயவட்கென்றல் தாயே
யனைய கருணைப் பிரான்றிருச் சண்பைநகர் போயே வருவல் புகறியென் பாய்புன்மை
பூண்டுழலும் பேயே யெனினும் பிரிவுரை யோதவுட் பேணுங்கொலோ நீயே
யுரைநின் பிரிவெங்கள் வாணுத னேரிழைக்கே.
| 317 |
| 1472
| நீடேனென்றவன் நீங்கல் தொடைநிலை வேணிப் பிரான்கூடல்
வாய்ச்சொன்முற் றூக்குறுநூ லிடைநிலை யெய்தி னுடனெய்த லாமற்
றிருநிலையும் படைநிலை நோக்கி கழுத்திற்பொன் னேறப்
பசும்பொனுங்கள் கடைநிலை யிற்குவிப் பான்சென்று மீளுவல் காழிமட்டே.
| 318 |
| 1473
| பாங்கி தலைமகட்குத் தலைவன்செலவுணர்த்தல் வலம்புரி
நேர்நின் கழுத்திற்பொன் னேற்றியுன் வண்ணமுலைக் குலம்புரி யும்பொ
னிறக்கிடு பைம்பொன் கொணர்வதற்கே யுலம்புரி தோளன்ப ரின்றுசென் றார்மன
மொன்றுநன்று னலம்புரி காவற் கமைத்தரன் காழி நறுநுதலே.
| 319 |
| 1474
| தலைமகளிரங்கல் சீரார் கவுணியர் போற்பாலை நெய்தல்
செயவுமென்போ ரேரார் மயில்செய வுங்கற் றுளார்கொ லிறைபுகலித் தாரார்
புயத்தர் தமையு மெமையுந் தழுஉந்துயர மோரார் பொருள்குறித் தேசுரம் போயின
தொத்ததன்றே.
| 320 |
| 1475
| பாங்கி கொடுஞ்சொற்சொல்லல் கயலார் புனற்பல்
வயலார்தென் காழிக் கடவுள்வெற்பில் வியலார் மயிலனை யாயார் பொருட்டன்பர்
மேவியதோ ரியலார் மழைக்க ணெனன்மெய்ம்மை யாக விரங்குவையே லயலா ரறியவுங்
கூடுமன் றோநின் னகத்ததுவே.
| 321 |
| 1476
| தலைவி கொடுஞ்சொற்சொல்லல் அண்ணாவென் பார்துயர்
நண்ணா வகையரு ளண்ணல்வரைப் பெண்ணா தரஞ்செய் பிராற்பணி யாரிற்
பிறர்துயர மெண்ணா மனமு மனமாகண் ணோட்ட மிலாதகண்ணுங் கண்ணா வவர்பிறப்
பும்பிறப் பாசண்பைக் காரிகையே.
| 322 |
| 1477
| வருகுவர் மீண்டெனப் பாங்கி வலித்தல் காழியம்
மானைக் கழுக்குன்றிற் போற்றுங் கழுகுமன்று வீழியொண் வாய்மயில் வீண்கழு
கொன்றுதன் மென்பெடைகற் பூழிவெங் கான்வெயில் சாரா திறகுட்
புகப்புரிதல் வாழிகண் ணுற்றுமப் பாலே குவார்கொனம் மன்னவரே.
| 323 |
| 1478
| பருவங்கண்டு பெருமகள்புலம்பல் கதிக்கும் புகலிப்
பிரான்றிரு நீற்றிலிக் கானகத்துத் திதிக்குந் தளவம் விளர்த்தன கொன்றை
சிவந்தனமெய் பதிக்கு மவன்மெய் வலத்தி னிடத்திற் பசந்தனதோண் மதிக்குங்
களத்திற் கறுத்தன காரன்பர் வந்திலரே.
| 324 |
| 1479
| இகுளை வம்பென்றல் மருவ மருவ வினிக்கும்
பிரான்சண்பை வாணர்வெம்மை யொருவ வருவி மழையெனச் செய்யுளொன்
றோர்புலவன் றிருவ முறச்செயப் பெய்ததென் றோதுந்
திசைமுற்றுங்கார்ப் பருவ மிதுவெனல் வம்பேநம் பேர்கொள் பனிமொழியே.
| 325 |
| 1480
| இறைமகள் மறுத்தல் நனையீன் றனபசுங் கொன்றைக டோன்றி
நகமலரு முனையீன்ற முத்தலை வேலண்ணல் காழி முதுகுன்றின்மின் றனையீன்ற
கார்ப்பரு வம்பொய்ம்மை யாலெனச் சாற்றுநின்சொ லெனையீன்ற தாய்வந்தி
யென்னுஞ்சொற் போலு மிளங்கொடியே.
| 326 |
| 1481
| அவர்தூதாகிவந்தடைந்தது இப்பொழுதெனத்
துணைவிகூறல் நீர்வந்த தோணி புரத்தீசர் வெற்பி
னிகழ்பருவக் கார்வந்த தென்று கருதிநை யேனங் கடைமறைக்கும் பார்வந்த
பொன்னொடு மார்வந் தவாதன்பர் பன்மணிப்பொற் றேர்வந்த தோதநம் மூர்வந்த
தாவித் திருமுகிலே.
| 327 |
| 1482
| தலைமகள் ஆற்றல் பழியே யறநல் வழியே யுலகம்
பரிப்பவர்சொல் விழியே யலர்செயு மாறொழுங் காழி விமலர்செவ்வாய் மொழியே
யெனத்துணிந் தேனினி முன்னலென் முன்னுகடற் குழியேய் தரக்கொள் புனல்மான்
குளப்படி கொள் புனலே.
| 328 |
| 1483
| அவன் அவட்புலம்பல் கார்கொடி தென்னுங்கொல் கூடலு
றாது கவிழ்க்கும்விழி நீர்கொடி தென்னுங்கொ லென்னைச் சுமந்து
நிகழ்தருமித் தேர்கொடி தென்னுங்கொ லூர்கொடி தென்னுங்கொ
றீரரிய நார்கொடி தென்னுங்கொ னம்மான் புகலி நறுநுதலே.
| 329 |
| 1484
| தலைமகன் பாகனொடுசொல்லல் ஆரோடு கொன்றையுந்
தும்பையுஞ் சூடு மழகரம ரேரோடு வாழ்வயற் காழியில் வாழி
யியல்வலவா பீரோடு சிந்துகண் ணீரோடு வாடுமொரு பெண்முனமிக் காரோடு
முன்னநந் தேரோடு மாறு கருதுகவே.
| 330 |
| 1485
| தலைமகன் மேகத்தோடு சொல்லல் தெண்ணீர் பருகி
யெழுமுகில் காணந் திருந்திழைமு னண்ணீர் நணுகி னிறையவர் காழிநண்
ணாரிலிரு கண்ணீர் பொழியுமவ் வெந்நீ ரமலைகைந் நீர்நிகர மண்ணீ ருலகெனப்
போர்க்குமொண் டேரு மறிதருமே.
| 331 |
| 1486
| பாங்கிவலம்புரிகேட்டு அவன்வரவறிவுறுத்தல் வலம்புரி
யேற்கு நலம்புரி வார்வண் டுழாயணிகா வலம்புரி யேமெய்க் கிடுவடு கேசர்
வரைநினக்க வலம்புரி யேதமொன் றுண்டுகொ லோவன்பர் வந்தனர்வெள் வலம்புரி
யேயினி தார்க்கின்ற தோர்கொச்சை மாமயிலே.
| 332 |
| 1487
| வலம்புரி கிழத்தி வாழ்த்தல் வள்ளிய வன்பர் வரவெனக்
கோதியென் வான்றுயரந் தள்ளிய சங்கமங் கம்புனை வார்திருச்
சண்பைவள ரொள்ளிய ஞானசம் பந்தப் பிரான்மு னொலித்தல்செயும் வெள்ளிய
முத்தின் றிருச்சின்னம் போன்று விளங்குவே.
| 333 |
| 1488
| தலைமகன்வந்துழிப் பாங்கி நினைத்தமைவினாதல் நடத்தே
பயில்கழ லார்சண்பை நாடன்ன நங்கைகொங்கைக் குடத்தே நிறைந்தபொ னோக்காது
வேறுபொன் கொள்ளநெடுங் கடத்தேசென் றீருண்டு கொல்லோவம் மாதுங்
கலங்கலினெஞ் சிடத்தே பயிறல் வலத்தே யயில்கொ ளிறையவரே.
| 334 |
| 1489
| தலைவன் நினைத்தமைசெப்பல் படந்தொறுஞ் செம்மணி
வாய்ப்பணி பூண்பான் பங்கயப்பூந் தடந்தொறு மன்ன மலிசண்பை நாடன்ன
தாழ்குழலோர் திடந்தொறு மேவிவெந் தீவினை யேனனி சென்றசென்ற விடந்தொறு
நீநின் மடப்பாவை யோடு மியங்கினையே.
| 335 |
| 1490
| தலைவன் ஆற்றுவித்திருந்த அருமைவினாதல் கன்னா
ருரித்தது போலென்னை யாண்ட கருணைப்பிரான் றுண்னார் மதிலொரு மூன்றுஞ்சுட்
டோன்சண்பைத் தொல்வரைவாய்ப் பொன்னா ரணிமயில் யானும்மி னின்றங்குப்
போகியபி னென்னா ருயிரையெவ் வாறாற்று வித்திங் கிருந்தனையே.
| 336 |
| 1491
| தலைவியைப் பாங்கி ஆற்றுவித்திருந்த
அருமைகூறல் கடல்சூழ் புகலிப் பெருமான் றிருநுதற்
கட்பொலிவை யடல்சூழ்வை வேலிறை வாசிறி தோதி யலர்ப்பகழி யுடல்சூழ்
வதுசற் றொழித்துநின் வாய்மை யுரைத்தளித்தேன் மடல்சூழ் கருங்குழல்
வெண்ணகைச்செவ்வாய் மயிலினையே.
| 337 |
| 1492
| வரைவுமலிவு. காதலன்முலைவிலைவிடுத்தமை பாங்கி
காதலிக்குணர்த்தல் ஆரூ ரடங்க முனங்குண்டை யூர்நெ லடங்கவுய்த்த காரூர்
குறளிற் புகலிப் பிரான்விற்ற கர்த்தெடுத்தாங் கேரூர் களிறு மிசையேற்
றுபுவந் திறக்கினநம் மோரூர் முலைவிலை யென்றன்பர் நல்குபொன் னொண்ணுதலே.
| 338 |
| 1493
| காதலி நற்றாயுள்ளமகிழ்ச்சியுள்ளல் பொன்றா வளமைப்
புகலிப் பிரான்மணம் பூண்டுமுகின் மின்றா விமயம் புகுதரு கான்மகிழ்
மேனையைப்போற் குன்றா விறலுடை யார்மணம் பூண்டு குறுகினம்மூர் நன்றா
மணவணி கண்டாய் மகிழ்தரு நம்மினுமே.
| 339 |
| 1494
| பாங்கி தமர்வரைவெதிர்த்தமை
தலைமகட்குணர்த்தல் மேற்றா ரகையி னரும்பார் பொழிற்சண்பை
வித்தகர்வெண் ணீற்றா ரடல்விடை யேற்றா ரருளி னிறைமகிழ்விற் போற்றார்
முடியிட றுங்கழ லார்தந்த பொன்முழுது மேற்றார் நமரினித் தூற்றா ரயலவ
ரீர்ங்கொடியே.
| 340 |
| 1495
| தலைமகள் உவகையாற்றாது உளத்தொடுகிளத்தல் அரவெழுந்
தார்க்கு மவிர்சடை யார்சண்பை யாளர்வெற்பி லுரவெழுந் தார்க்கு முருவுடை
யார்நம தூரகத்தே வரவெழுந் தார்க்கும் பகலே யிகலின் மணமுரச மிரவெழுந்
தார்க்கு முருவ மிலார்முர சென்செயுமே.
| 341 |
| 1496
| தலைவனைப் பாங்கி வாழ்த்தல் மன்னும் புகலிப்
பிரான்கட வூரில் வழுத்தொருவற் றுன்னுங் கொடுஞ்சம னைத்தெறல் போலச்
சுடரிலைவேன் மின்னுங் கரத்தரிம் மாதுயிர்க் கூற்றம்
விலக்கினரென் பன்னுந் திறத்த தவர்வாழ்க வாழ்கவிப் பாரென்றுமே.
| 342 |
| 1497
| தலைவி மணம்பொருட்டாக
அணங்கைப்பாரநிலைகாட்டல் செய்யே மலிசண்பை யார்பாற் கவுரி
திருவடிகண் மொய்யே ருருக்கு மணிபணிந் தாங்கிம் முதுகுன்றின்வாய் மையே
பொலிகண் மணம்பொருட் டாக மகிழ்ந்தணங்கைக் கையே குவித்துப் பரவுதல்
காண்கநின் கண்விடுத்தே.
| 343 |
| 1498
| அறத்தொடுநிற்றல். பராநிலைகண்டதலைவன்
மகிழ்தல். நாதன்மை தாய களத்தான் புகலி நகுவரைமா னோதன்மை சானம்
மணம்பொருட் டாக வுவந்தணங்கைத் தீதன்மை மேவ மலர் தூய்ப் பராவுத
றேர்தரினங் காதன்மை தானெஞ்ச மேவஞ்ச மேயிக் கடலகத்தே.
| 344 |
| 1499
| அறத்தொடுநிற்றல். கையறுதோழி கண்ணீர்
துடைத்தல். ஆலத்தின் கீழுறை வார்காழி நாத ரருளனையாய் கோலத்தின்
கிள்ளை குளிர்மொழி பேசுங் குலவுபொழில் காலத்தி னன்மலர் நல்கும்பந்
தாடுங் கடும்புமுண்டு நீலத்தின் முத்தம் பிறப்பதற் கேதுவெ னீயுரையே.
| 345 |
| 1500
| தலைமகள் கலுழ்தற்காரணங்கூறல். பூண்பது வாளா
வாக்கிதென் காழிப் பொருப்பிறைவற் காண்பது நாமது காரண மாகக்
கரிகுழைத்து மாண்பது மேவப் புனைபூங்கை யோவும் வளையென்றொரீஇ யேண்பது
மாதனி போல்வாய் கலுழு மிருவிழியே.
| 346 |
| 1501
| தலைமகன் தெய்வங்காட்டித்தெளிப்பத் தெளிந்தமை
எய்தக்கூறல். பொன்னே பொருசடை யார்காழி நாதர்
புகார்த்துறைவாய் மின்னே கடற்றெய் வதங்காட்டி யன்பர்
விரித்ததெல்லாங் கொன்னே யலவென் றிருந்தேன் கயல்கொல்
குருகினொடாங் கென்னேமுட் கைதையு முண்டோது மோகரி யென்செய்வனே.
| 347 |
| 1502
| தலைவன் இகந்தமை இயம்பல். பொழுங் குளிர்மதி சூடும்
பிரான்புக லித்துறைவாய் வாழுந் தலைவர் கலந்தவந் நாளங்கு
வைகுகொலை சூழுங் குருகு கரியுரை யாமை துணிந்தஞரி லாழும் படியெனை
நீத்தடைந் தார்த மகனகரெ.
| 348 |
| 1503
| தோழி இயற்பழித்துரைத்தல். மேதக் கவர்புக ழுங்காழி
மேய விறல்வடுக நாதக் கடவுளை நண்ணாரி னீ துயர் நண்ணமயி லேதக் கனமு
னிசைத்தயர்ந் தார்பின்ன ரென்னிலிவ ரோதக் கவர்மிக் கவர்யா ரிவரி
னுணர்தரினெ.
| 349 |
| 1504
| தலைமகள் இயற்படமொழிதல் அடியார் கருத்தின் படியார்
பிறைகொண் டலங்கரித்த முடியார்நஞ் சுண்டு முடியார் புகலி
முதுகிரிவாய் வடியார் மலர்க்குழன் மாதேமுற் சூளு மறந்தகலுங் கொடியா
ரெனினு மவரே யெனக்குக் குலதெய்வமே.
| 350 |
| 1505
| தெய்வம்பொறைகொளச் செல்குவமென்றல் நொதுமல ரல்லர்தஞ்
சூண்மறந் தாரென்று நோதலுறப் புதுமலர் மாலைப் புயத்தாரைச் சீறல்
பொறுத்தியென்று விதுமலர் வாண்முகத் தாயெழு வாவப்பி
மென்புழுகு மதுமலர் தூவிப் பணிவாம் புகலி வடுகனையே.
| 351 |
| 1506
| தலைவி இல்வயிற்செறித்தமை இயம்பல் கற்றைச் சடையுடை
யான்காழி நாதன் கயிலைவரைச் சுற்றைப் புனைபொழி லூடுசென் றாடற்க
தோகையென்றா ளிற்றைத் தினமன்னை யெய்த்தனள் போலுமெய் யேறியபீ ரொற்றைத்
திகிரியுள் ளார்மாத ராயி துணர்ந்திலரே.
| 352 |
| 1507
| செவிலி கனையிருளவன்வரக் கண்டமைகூறல் மைவாய்
விழியொரு பாலார் புகலி மணிவரைப்பாற் கைவாய் வடிநெடு வேலோடு வந்துநங்
காளைநிற்கப் பைவா யரவல்கு லாய்தா யிருண்டுப் பார்த்தற்புதத் தைவாய்
முருகென் றொழிந்தா ளதுநந் தவப்பயனே.
| 353 |
| 1508
| செவிலி தலைமகள்வேற்றுமைகண்டு
பாங்கியைவினாதல் கனங்காவல் கொண்ட குழலாய் பொழிலெழிற்
காழியினென் மனங்காவல் கொண்ட பெருமான் வரையில் வயங்குதினைப் புனங்காவ
னீத்தபின் மெய்வேறு பட்டுநம் பொன்கைவளை யினங்காவ லோவி யொழிவதற் கேது
வியம்புகவே.
| 354 |
| 1509
| வெறிவிலக்கல் சொல்லவந் தீரிக் குடில்வா யரன்சண்பை
துன்னலரிற் பல்லவந் தீர்கொம் பரின்மெலி வாளுட் படர்தருநோய் வெல்லவந்
தீர்கொல் வெறிவேல ரேயிவ்வெறுந்தகரைக் கொல்லவந் தீர்கொல் சொலவேண்டுங்
கோபங்கொளாதெனக்கே.
| 355 |
| 1510
| வெறிவிலக்கியவழிச் செவிலி
தோழியைவினாதல் குறியாட்டை மன்று ணவில்வார் புகலிக்
குழகர்வெற்பிற் செறியாட்டை யென்னுலு நீகண்டு ளாய்கொ
றிருந்திழையே மறியாட்டை யீர்ந்து முருகனுக் கீந்துந
மங்கையுய்ய வெறியாட்டை யாற்றிடுங் காற்றடுத் தாய்சொல் விளைந்ததென்னே.
| 356 |
| 1511
| அறத்தொடுநிற்றல். தோழி பூத்தருபுணர்ச்சியால்
அறத்தொடுநிற்றல். அரனார் புகலிக் கடற்றுறை வாய்வண்ட
லாட்டிற்கைதை வரனார் மடல்குரு கென்றனள் யான்மட லென்றனனென் கரனார்
தாச்செ யெனக்கலுழ்ந் தாளது கண்டுவிரைந் துரனா ரொருவர் முறித்தளித் தேகின
ருள்ளதிதே.
| 357 |
| 1512
| புனறருபுணர்ச்சியால் அறத்தொடுநிற்றல். மருதுறை
யேகன் புகலிப் பிரான்வள நாட்டுநதி யொருதுறை மூழ்கவுண் ணீரிர்த்த லான்மற்
றொருதுசைபோய்க் கருதுறை நாவுக் கரசெனத் தோன்றுமக்
காலையினோர் விருதுறை வேலவ னாற்கரை யேறினண் மெய்ம்மையிதே.
| 358 |
| 1513
| களிறுதருபுணர்ச்சியால் அறத்தொடுநிற்றல். வாரேறு
பூண்முலை பங்கர்தென் காழி வரைப்புனத்துக் கூரேறு கோட்டுக் களிறொன்று
சீறிக் குறுகவிரைந் தேரேறு கோதை நடுக்குற்று வீழ
வெடுத்தணைத்தாங் கோரேறு போல்வந் துதவின ரான்முன் னுதவினரே.
| 359 |
| 1514
| மணம் விலக்கல். அற்றாக் கருளும் பிரான்காழி நாத
னருளியநூ லுற்றார்க் குரியவர் பொற்றொடி யாரென்
றுணர்த்துதலான் மற்றார்க் குரிமை யுளதாகு மோவென்
வகுப்பதன்னாய் நற்றாக் கருங்குழற் செவ்வா யொளிர்வெண் ணகைமணமே
| 360 |
| 1515
| தலைமகள் வேற்றுமைகண்டு நற்றாய் செவிலியை
வினாதல்./i> கங்கா தரர்தென் கழுமலத் தீசர் கழனினைவார் தங்கா
தரம்பொரு வப்போம் வனைகளத் தாளமைத்த பொங்கா தரமெங்கும் போர்ப்பது
போலெங்கும் போர்த்தெழு பொன் மங்கா தரகர வென்னுற்ற தோநம் மயிற்கணங்கே.
| 361 |
| 1516
| செவிலி நற்றாய்க்கு அறத்தொடுநிற்றல். மானாறு
பாகத்தர் தென்காழி நம்மகள் வாயின்முலைப் பானாறு மின்னும் புறந்தோன்
றினவல பல்லுமுதிர் சூனாறுற் றென்ன முதுக்குறைந் தாளினிச்
சொல்வதென்யான் றேனாறு பூங்குழ லன்னா யினித்தக்க செய்கைநன்றெ.
| 362 |
| 1517
| நற்றாய் தமருக்கு அறத்தொடுநிற்றல். குருத்துக்
கிசைந்த பொடிபூசு மேனியர் கோயில்கொடென் மருத்துக் கிசைந்த மணிமாடக் காழி
வரைநமர்காண் முருத்துக் கிசைந்த முகைமூரன் மாது
முதுக்குறைந்தாள் கருத்துக் கிசைந்த வரைநாடி யாற்றுங் கடிமணமே.
| 363 |
| 1518
| உடன்போக்கு. பாங்கி தலைவற்கு
உடன்போக்குணர்த்தல். பொல்லா மலமொழிப் பார்காழி நாதர்
பொருப்பிறைவா வில்லா நுதல்பிரி வாற்றாள்பொற் கொங்கை
விலைக்குலக மெல்லா மளிப்பினு மீயா ரெமரிஃ தெண்ணினஞ ரொல்லாநின் னூருக்
குடனழைத் தேகுத லுத்தமமே.
| 364 |
| 1519
| தலைவன் உடன்போக்கு மறுத்தல். முடியைந் துடைய
பிரான்காழி வாணன் முடுகிரிவா யடியைந் தெடுத்துவைத் தைங்காத மென்றஞ்ச
மாயிழையை வடியைந்து பாற்குழ லாய்கொண்டு செல்ல மனங்கொள்வலோ கடியைந்
துடைய விரதிய ரெசெலுங் கானகத்தே.
| 365 |
| 1520
| பாங்கி தலைமகனை உடன்படுத்தல். ஆலை மலியும்
வயற்காழி நாத ரருள்கலந்த வேலை மறமு மறமா மருளும் விரும்பருளா நூலை
மதிக்கு நினைக்கலந் தாலெங்க ணூலிடைக்குப் பாலை மருதமன் றோவினி யாது
பகர்வதுவே.
| 366 |
| 1521
| தலைவன் போக்குடன்படுதல். நுண்ணிய நாயகன்
றென்காழிச் சம்பந்தர் நோக்கமெய்யி லண்ணிய வெப்பம் வழுதியற் றாங்கெனை
யாண்டுகொண்ட புண்ணிய மாமயி னோக்கவெம் பாலையிற் பொங்குவெப்பந் தண்ணிய
தாகுமென் றேதுணிந்தேனின் றனிக்கருத்தே.
| 367 |
| 1522
| பாங்கி தலைவிக்கு உடன்போக்குணர்த்தல். சேலை யவாவு
வயற்காழி நாதர்பஃ றேவரெற்பு மாலை யவாவு சடையார் கயிலை மயிலனையா யோலை
யவாவு செவிகுவி மாமுலை யுங்களன்னம் பாலை யவாவுங்கொ லென்றார்நங் காவலர்
பைங்கொடியே.
| 368 |
| 1523
| தலைவி நாணழிபிரங்கல். எண்பிறப் பைத்தவிர்த்
தார்காழி நாத ரிமயத்தினா ணண்பிறப் பைத்தர லானம் பிறப்பு
நகுபிறப்பே யொண்பிறப் பைத்தரு வண்காரைக் காலம்மை
யோர்ந்தலவோ பெண்பிறப் பைத்தவிர்த் துற்றா ளொருகரும் பேய்ப்பிறப்பே.
| 369 |
| 1524
| உடன்போக்கு. கற்புமேம்பாடு
பாங்கிபுகறல். பூவனை யாய்நினக் கோதுவ தென்னை புகலியினந் தேவனை
யேயருச் சிப்பார்க்கு மாமந் திரங்கிரியை பாவனை நாண மடமச்சங் காண்குலப்
பாவையர்க்கு மேவனை யார்க்கன்பு தேரினை யார்க்கு விரும்புகற்பே.
| 370 |
| 1525
| தலைவி ஒருப்பட்டெழுதல். நாறுங் கடுக்கைச் சடையார்
புகலிநல் லார்பலர்வாய் கூறுங் குறிப்பு மனைமா ரியற்று
கொடுஞ்சிறையு மேறும் பசப்பு மதவே டுடிப்புமற் றெய்துமிடை யூறுங்
கெடுப்பலின் னேயொரு நானன்ப ரோடுசென்றே.
| 371 |
| 1526
| தலைவி ஒருப்பட்டெழுந்தமை பாங்கி
தலைவற்குணர்த்தல். பந்துங் கழங்குமென் கைக்கொடுத் தாளுட்
பரிந்துகண்ணீர் சிந்தும் பசுங்கிளி சிந்தாது போற்றிச்
சிறப்பியென்றாள் சந்துங் கறியுஞ் செறிபொழிற் குள்ளந்
தளரலென்றாண் முந்துங் களிற்றண்ண லேயரன் காழி முகிழ்நகையே.
| 372 |
| 1527
| பாங்கி சுரத்தியல்புரைத்துழித்
தலைமகள்சொல்லல். மறைக்குந் திருநெடு மாற்குமெட் டான்சண்பை
வாணுதலா ரிறைக்கு மலர்க்கு மதவே ளலர்க்கு மிலகுறுவான் பிறைக்குங்
குறைக்குந் தனிமைக்குந் தாயர் பெருக்குகொடுஞ் சிறைக்குங் கொடியது வோவன்ப
ரோடு செலுஞ்சுரமே.
| 373 |
| 1528
| பாங்கி தலைமகளைத் தலைமகற்குக்
கையடைகொடுத்தல். யான்செயும் விண்ணப்ப மீதுநற் றாய்தந்தை
யான்றவனீ மான்செயு நோக்கிக்கு நின்னருண் மாறுறின்
மாலயன்மேன் மீன்செயு நீர்த்தடங் காழிப் பிரான்றிரு
வீழிப்பிரான் றான்செயும் பேரருண் மாறுறு மோர்தி தராதிபனே.
| 374 |
| 1529
| பாங்கி வைகிருள்விடுத்தல். பற்றுமுன் மேவும்
பரன்காழி நோக்கியிப் பாவையொடு சற்றுமுன் போதிரிவ் வைகிருள் வாயெங்க
டாய்நமரை யுற்றுமுன் கூறுவ கூறியிவ் வூர்க்கௌவை
யோவச்செய்து மற்றுமுன் னேவந்து கூடுவ னானிற்பன் மன்னவரே.
| 375 |
| 1530
| தலைவன் தலைவியைச் சுரத்துய்த்தல். மணம்புரி
நாளம்மி யேற்றலெவ் வாறென்று மாழ்குறுமென் குணம்புரி காரிய மிக்கழ
காயிற்றுக் கோமளமே பணம்புரி பாப்பணி யார்காழி யெண்ணலர்
பற்றுவெம்மைக் கணம்புரி காட்டுண் மெலப்பெயர்ப் பாய்திருக் கான்மலரே
| 376 |
| 1531
| தலைமகன் பொழில்கண்டுவியத்தல். சுந்தரர் தென்குரு
காவூர்க்குச் செல்வழித் தோன்றுமொரு பந்தரின் ஞானசம் பந்தர்க்குத்
தோன்றுமொர் பந்தரினிற் சுந்தர மார்சண்பை யாள்வா ரருளிற்
றொருநிழலின் பந்தரு சோலையொன் றுற்றது காணம் படர்தெறவே.
| 377 |
| 1532
| தலைமகன் தலைமகள் அசைவறிந்திருத்தல். மருக்கோல
வார்குழன் மாதே பருதி வழங்கழலு முருக்கோல மார்நின் முகமா மதிநல்
குறுபுனலு மிருக்கோல மிட்டு முணரான் புகலி யெனவடுத்த திருக்கோலக்
காவி னிருந்தொழிப் பாம்பின்பு செல்லுவமே.
| 378 |
| 1533
| தலைவன் தலைமகளை உவந்தலர்சூட்டி
உண்மகிழ்ந்துரைத்தல். மையோ வெனுங்களத் தார்காழி நாதர்
வழங்கருளாற் பொய்யோ வெனுமிவ் விடைகூந்தன் முன்செய்புத்
தேடன்கையோ வையோவக் கூந்தன் முடித்துமென் பூவு மணிதல்செய்யென் கையோ
சிறந்தன யாருரைப் பாரிந்தக் கானகத்தே.
| 379 |
| 1534
| கண்டோர் அயிர்த்தல். புன்முளை யாவிந் நெடுங்கொடுங்
கானம் புகுநரல்லர் நென்முளை யாமென் மலங்கெடுத் தாள்சண்பை
நித்தனருண் மன்முளை யாமுரு கோவிந்த நம்பிநல் வள்ளியெனு மன்முளை யாமதி
போன்முகத் தாள்கொலிவ் வாயிழையே.
| 380 |
| 1535
| கண்டோர்மகிழ்தல். அணிகெழு மாதின் பிடிநடை காண
வவள்பின்செலு மணிகெழு தோள னரன்காழி யன்னவன் மால்களிற்றின் றிணிகெழு
போர்நடை காண்பா னனையன்பின் செல்லுமிந்தப் பிணிகெழு கூந்த லெனில்யா
ரிவரன்பு பேசுநரே. (38
| 381 |
| 1536
| கண்டோரிரங்கல். கடந்தா ளலள்சிறு பேதைப் பருவமிக்
கன்னியன்னோ நடந்தாள் கணவன் பணிதலைக் கொண்டிந் நருகொடுங்கான் றடந்தா
ளுடைத்தருச் சூழ்சண்பை நாகர் சயிலத்துண்ணோ யிடந்தா ளலளிவ ளைப்பெற்ற
பாவியென் னாகுவளே. (38
| 382 |
| 1537
| கண்டோர் காதலின் விலக்கல். மெல்லியல் வாடு நகரணித்
தன்றுவெய் யோன்விழுந்தா னல்லிய லாழி யகம்பரன் காழி
யணுகலரிற் கல்லியல் காடுபல் கானியா றியங்குங் கடுங்கொடுமா வல்லிய
றோளவெம் மிற்றங்கி யேகுக மாதொடின்றே.
| 383 |
| 1538
| கற்பொடுபுணர்ந்த கௌவை. கண்டோர்
தம்பதியணிமைசாற்றல். மின்னா வெனநுடங் கும்மிடை யாளொடு
வேல்வலங்கொண் மன்னா வினைய கழிப்பாலை முல்லை வனமிரண்டும் பின்னாக
நீநடந் தாலெதிர் தோன்றும் பிறந்துழல்வோர் முன்னா வமலமுன் னோனுறை காழி
முதுநகரே.
| 384 |
| 1539
| தலைவிக்குத் தலைவன் தன்பதியணிமைசாற்றல். உடல்சூழ்
பிணிக்கு மருந்தாக மண்ணிட் டுதையொழிக்கு மிடல்சூழ் புகழ்த்திரு வேளூர்
கடந்து விரவுவமேன் மடல்சூழ் கருங்குழ லாய்காண லாமின்னும்
வந்துகருங் கடல்சூழ் வதுபொரு வும்பொழில் சூழ்பரன் காழியையே.
| 385 |
| 1540
| தலைவிக்குத் தன்னகர்காட்டல். நல்லாய் நயனம்
விடுத்தெதிர் காண்க நகுகடலே வெல்லா யகலக லென்றுகை நீட்டி
விலக்குதல்போல் வல்லாய் கொடிதுவள் பொற்கோ புரமு
மணிமதிலுஞ் செல்லாய்செய் குன்றமுஞ் சூழ்பரன் காழித் திருநகரே.
| 386 |
| 1541
| தலைவன் தன்பதியடைந்தமை தலைவிக்குணர்த்தல். திகழும்
பிரம புரமிஃ தப்பெயர்த் தீர்த்தமிது நிகழும் பிரமலிங் கேசரி லீது
நிலையழகி புகழுமி லீதிது தோணிப் பிரானில் புகுந்துயரெற் ககழும்
வடுகனி லீதிது சம்பந்த னாரின்மின்னே.
| 387 |
| 1542
| தலைவன் தலைவியொடு தன்மனைசார்தல். சொல்லிய
சீர்த்திருக் காழிப் பிரான்றளி சூழ்ந்திறைஞ்சிப் பல்லிய மார்ப்ப மறுகூடு
சென்றுபல் லாண்டிசைப்ப வல்லிய நேர்விறன் மன்னன்மின் னாளொடு
மாளிகையுட் புல்லிய மங்கல மோங்கப் புகுந்து பொலிந்தனனே.
| 388 |
| 1543
| கற்பொடு புணர்ந்த கௌவை. செவிலி பாங்கியைவினாதல்.
கல்லா தவர்கரு தாக்காழி நாதர் கயிலைவரை நல்லா தரஞ்செய்
பொழிற்கெழி லில்லை நமைப்பிரிய வொல்லா மகட்குற்ற தென்னினக் குற்றதெ
னூர்க்கௌவையெ னில்லா விழிமுகம் போனம்மி லாயதெ னேந்திழையே.
| 389 |
| 1544
| பாங்கி செவிலிக்குணர்த்தல் கண்ணா ணுதற்பெரு
மான்காழி நாதன் கருணைகொடு மண்ணா ளொருவலி யான்மண மேற்றிலர்
வன்கணமர் புண்ணாண் மனத்த ணமையுஞ் சுரத்துப் புழுங்கழலு மெண்ணா ணடந்தன
ளன்னாயின் றேநின் னிளங்கிளியே.
| 390 |
| 1545
| பாங்கியினுணர்ந்தசெவிலிதேற்றுவார்க்கு
எதிரழிந்துமொழிதல் அறவே தனையுளை யாறுகென் பீர்சண்பை
யண்ணலரு ளுறவே முயலுந ரொத்துறங் காமலுண் ணாமலஞ ரறவே துயிற்றி யருத்தி
வளர்த்ததற் காகவய லுறவே பொருளெனக் கொண்டுசென் றாளென்னொருமகளே.
| 391 |
| 1546
| செவிலி தன்னறிவின்மைதன்னை நொந்துரைத்தல் புகராய்
பவர்க்கொழிப் பார்காழி நாதர் பொருப்பிளமா ணிகரா யினுமின் முருகோடி
யாரையு நீத்துவள்ளி நகராய் தரமுனஞ் சென்றதற் கேதுவெ
னாடியன்னாய் பகராயென் றாணென்ன லம்முன்ன மோர்ந்திலன் பாவியனே.
| 392 |
| 1547
| செவிலி தெய்வம் வாழ்த்தல் மின்னுங் கொடுங்குன்று
ளார்காழி நாதரை மேவலர்போன் மன்னுங் கொடுஞ்சுரஞ் சென்றவண் மீண்டு
வரப்புரியிற் கொன்னுங் கொடுமுடி வாழ்முரு கேயெங்
குலத்தொருபெ ணின்னுங் கொடுத்துத் தொழும்பாகு வேமுனக் கெற்றைக்குமே.
| 393 |
| 1548
| செவிலி நற்றாய்க்கு அறத்தொடுநிற்றல் கயலார்
கருங்கண் சுனைவீழ வன்று கலந்தெடுத்த மயலார் களிற்றண்ண னிற்கமற் றோர்த
மணமிசையு மியலார் நமரென்று சொல்லாது வெஞ்சுரத் தெய்தினண்மின் பயலார்
புகலியன் னாய்நங் கொழுந்தென்ன பண்ணுதுமே.
| 394 |
| 1549
| நற்றாய் தன்னுளிரங்கல் ஊரும் பிறைமுடி யார்காழி
நாத ரொருவர்வரை நேருங் கிளியொடு பூவையும் பாவையு நீத்திருகண் வாரும்
புனல்கொடு கைத்தாயும் பாங்கியும் வாடவழல் சேருஞ் சுரத்தடைந் தாய்மக
ளேயென்ன செய்குவையே.
| 395 |
| 1550
| நற்றாய் பாங்கி தன்னொடுபுலம்பல் பாவா யிதுமுன்
பகர்ந்தா யலைபகர்ந் தாலுடனே யேவாய் சிலைத்தடந் தோளான் றிருமண
மெய்துவள்பூங் காவாய் புகலிக் கடவுள்பொற் பாதங் கருதலரிற் பூவாய்
குழலியை வீணே யருஞ்சுரம் போக்கினையே.
| 396 |
| 1551
| கற்பொடுபுணர்ந்த கெளவை. தோழியழுங்க
நற்றாய்புலம்பல். அறியாப் பருவத் தறிவே தலைக்கொண்
டருந்துயரங் குறியாச் சிறிய ளயலான்பின் வெஞ்சுரங் கூடுதனன் னெறியாக்
கருதினள் சண்பைப் பிரான்வரை நீயென்செய்வாய் மறியாப் பொலிகண் மகளே
வருந்தி வருத்தலையே.
| 397 |
| 1552
| நற்றாய் பாங்கியர்தம்மோடு புலம்பல். பெற்று
வளர்த்த வெனைமறந் தாள்பிரி யாதமரும் பற்று வளர்த்த வுமைமறந் தாள்பதிப்
பற்றடையிற் சுற்று வளர்த்த துணர்ப்பொழிற் காழித்தொல் லோனுதற்றீ மற்று
வளர்த்த சுரம்போக வேண்டுங்கொன் மங்கையரே.
| 398 |
| 1553
| நற்றாய் அயலார்தம்மோடு புலம்பல். கொன்னூர்
மறுகவுங் கைத்தாய் துயரிற் குறுகவுஞ்செம் பொன்னூர் வதனஞ் சிறுகவும்
பாங்கி புரத்தமர்வீர் தன்னூர் கழுமல மாகக்கொண் டானருள்
சாரலரின் மன்னூ ரழற்சுரஞ் சென்றா ளவண்மன வன்மையென்னே.
| 399 |
| 1554
| நற்றாய் தத்தையொடுபுலம்பல். கள்ளாய் மலர்க்குழல்
காழிப் பிரான்வரைக் காளையுரைக் குள்ளாய் நடப்பவள் வள்ளாய்முன் னோரை
யொருங்குவிட்டா டள்ளா யெனைச்சற்று மெள்ளாய்தள் ளாயென்று
சாற்றிமெலி கிள்ளா யுனையுங்கை விட்டா ளெனிலென் கிளப்பதுவே.
| 400 |
| 1555
| நற்றாய் தலைமகள்பயிலிடந் தம்மொடு
புலம்பல். கள்வார் கணையுடைக் காமனைக் காய்ந்த
கனல்விழியோன் வள்வார் முரசதி ருங்காழி யோன்வரை மன்னனையே யுள்வார்
குழலுமக் கேதுரைத் தாளிங் குறுவதென்று கொள்வா ரெவர்நும் மலர்சுனை யேநனை
கூர்பொழிலே.
| 401 |
| 1556
| நற்றாய் நிமித்தம்போற்றல். வரைந்தாலிவ் வாறு
வரலின்று காண்வரை யாமலிப்போ திரைந்தாற் பயனெ னிருங்காழி யார்வரை
யேந்தலொடு விரைந்தா லிளந்தளிர் மெல்வயிற் றென்மகண்
மீண்டுவரக் கரைந்தா னிணப்பலி யின்னே கொடுப்பல் கருங்கொடியே.
| 402 |
| 1557
| தலைவன் மீக்கன்புசெய்கவென்று
தெய்வம்பரவல். பிணியார் மலர்க்குழல் சென்றாள் சுரத்திலப்
பேதைக்குள்ள பணியார் புரிவர் மணவாள னெமுற்றும் பண்பிற்செய வணியா
ரவன்றிரு மார்பே துயிலிட மாகவருண் மணியார் மதிற்சண்பை வாழ்வடு காநின்னை
வாழ்த்துவனே.
| 403 |
| 1558
| நற்றாய் சுரந்தணிவித்தல். சந்தாபந் தீர்த்தென்னை
யாள்வோன் புகலித் தனிமுதல்வ னந்தா வருளி னியல்கதி ரேயுன்னை
நான்றொழுதேன் முந்தா வழற்சுரந் தண்மைசெய் தேமுத்த மூரன்முகச் செந்தா
மரையை மலர்த்தியல் பேயத் திறநினக்கே.
| 404 |
| 1559
| நற்றாய் தன்மகள் மென்மைத்தன்மைக்கிரங்கல் பூமேன்
மிதிப்பினுமந் தீமேன் மிதித்தது போற்பதைப்பாள் காமே லணவு புகலிப்
பிரானுதற் கட்டழலுஞ் சேமே லவன்சடை நீர்போற் குளிரச் செறிதழற்கா னாமே
லுரைப்பதெ னாமே துணிந்து நடப்பதற்கே.
| 405 |
| 1560
| நற்றாய் தன்மகள் இளமைத் தன்மைக்கு உளமெலிந்திரங்கல் உட்டா
னமர்ந்தென்னை யாள்வோன் புகலி யொருவன்வரைக் கட்டா னுணன்முலைப் பாலேயல்
லாற்பதங் கண்டறியாண் முட்டா னெனவெம் பரல்செறி கான்சென்று
முன்னமங்கை தொட்டான் பணிசெயக் கற்றதெங் கோவெத் துணிபிதுவே.
| 406 |
| 1561
| நற்றாய் அச்சத்தன்மைக்கு அச்சமுற்றிரங்கல் பூசையை
யோவத்துக் காணினு மஞ்சிப் புழுங்குமுளத் தாசையை யோவென் னுரைக்கேன்
செடிக்கொவ்வொன் றாகமுழங் கோசையை யோவரும் வெம்புலி துஞ்சு
மொருகடத்தி லீசையை யோவரி யான்காழி மாமயி லென்செயுமே.
| 407 |
| 1562
| கண்டோரிரக்கம் காவி விளர்த்த களத்தான் புகலிக்
கயிலைவரை யாவி நிகர்த்தவள் சென்றாள் சுரத்தவ ளாடிடமு மேவி யிருக்கு
மிடமுங்கண் டான்முன் விழைந்துபெற்ற பாவி வயிற்றிடை மூளா தவியுங்கொல்
பற்றழலே.
| 408 |
| 1563
| செவிலி ஆற்றாத்தாயைத் தேற்றல் பொற்பே மலியும்
புகலிப் பிரான்பொற் பொருப்பிடைத்தன் கற்பே நிறுத்தப் புகுந்தாட்கிவ்
வாறு கலங்கலன்னாய் வெற்பே முதலிய வெல்லா நிலமும்
விரைந்துதுரீஇ யற்பேகொ ளண்ண லொடுமாதை மீட்ப லறிதியின்றே.
| 409 |
| 1564
| முக்கோற்பகவரை வினாதல் பதியிய லிற்று பசுவிய
லிற்றுவெம் பாசவகை மதியிய லிற்றென் றுணர்ந்தேழ் வகைப்பவ
வாய்மணிட்டீர் நதியியல் செஞ்சடைக் காழிப் பிரானைநண்
ணாரினிந்தக் கொதியியல் கானொரு காளையொ டோர்மின் குறுகினளே.
| 410 |
| 1565
| கற்பொடுபுணர்ந்த கௌவை. மாவிரதியரை
வினாதல். மொழிதரு பஞ்ச வடியோ டடிப்பஞ்ச முத்திரையுங் கழிதரு
மெற்பணி யும்புனை வீரிக் கடத்துவழி விழிதரு நெற்றிப் பிரான்காழி நாதனை
மேவலர்போற் பொழிதரு மேரொரு பூவையொர் காளைபின் போயினளே.
| 411 |
| 1566
| உய்த்துணர்வோரை உரைமினென்றல். எல்லா வுயிர்க்கு
முயிராய் காழிக் கிறையவனை நல்லா தரத்தழ லிற்கண்டு போற்றிடு
நான்மறையீர் பொல்லா வழலிச் சுரத்தொரு காளைபின் போகியமா னொல்லா
வெனவெதிர் மீளுங்கொ லோவுணர்ந் தோதுமினே.
| 412 |
| 1567
| மிக்கோர் ஏதுக்காட்டல். மாதே யுலகிய லோர்ந்திலை
யாலன்பு வைகுமுள்ளப் போதே யமரும் புகலிப் பிரான்றென் பொதியவரை மீதே
பலாமுற் றருவீன் கனிகள் விரும்புநர்க்கே தீதேயி னின்மக ளும்மன்ன
ளாலென்று தேருதியே.
| 413 |
| 1568
| செவிலி எயிற்றியொடுபுலம்பல். அறப்பாவை பாகர்
பிரமலிங் கேச ரவனியுண்மா னிறப்பாவை வாழ்சண்பை யூருடை யானொடு
நேயமிக்கோர் குறப்பாவை வந்தன ளோகொடு வேங்கைப்பல் கோத்தணிந்த மறப்பாவை
யேயுண்மை யோதுபு கோடி மலியறமே.
| 414 |
| 1569
| செவிலி குரவொடுபுலம்பல். தற்றா யொடுதந்தை யில்லான்
புகலித் தடவரைவாய் நற்றாய் வருந்தநின் னாயமுந் தேம்பநல்
லூர்மறுக வுற்றாய் நினக்குத் தகாதென்று நீயென் னொருமகட்குச் சொற்றா
யலைநின்று ளாய்பயன் யாது துணர்க்குரவே.
| 415 |
| 1570
| செவிலி புறவொடுபுலம்பல். வல்லா யெழுமுலை வெங்கா
னடைய வழிமறித்து நில்லா யெனத்தகைந் தாயில்லை யேசெல்ல
நீளவிட்ட பொல்லாயுன் வன்மை யுணர்ந்தல்ல வோபுற வேயுணவு கல்லாய் முடிய
வகுத்தான் கழுமலக் கண்ணுதலே.
| 416 |
| 1571
| சுவடுகண்டிரங்கல். சிற்பங் கதிர்க்கு மதிற்காழி
நாதன்செம் மேனியில்வெண் கற்பங் கதிர்க்கும் படிபுனை வோன்றிருக்
காளத்திவா யற்பங் கதிர்க்கு மருங்குனல் லாள்சிற் றடியிதது பொற்பங்
கதிர்க்கும் புயத்தா னடியென்று போற்றுவனே.
| 417 |
| 1572
| கலந்துடன்வருவோரைக் கண்டுகேட்டல். இன்பார்
முருகனும் வள்ளியும் போல வெதிர்வருவீ ரன்பார் மொழியென் னஞர்கெடு மாறொன்
றறைமினிந்த வன்பார்நும் போல்வ ரொருதோன்ற லும்மொரு மாமயிலு மென்பா
ரணிசடை யோன்காழி நோக்கியின் றெய்தினரே.
| 418 |
| 1573
| கலந்துடன்வருவோர் புலம்பறேற்றல். யானெதிர் கண்ட
வெழில்வள ரேந்தலு மிம்மடமான் றானெதிர் கண்ட மடமானும் போயின்று
சார்வர்கரு வானெதிர் கண்டனம் மாதேவன் சங்கரன் வானவர்கோன் கானெதிர்
கண்ட பொழில்சூ ழுடுத்த கழுமலமே.
| 419 |
| 1574
| செவிலி புதல்வியைக்காணாது கவலைகூர்தல். படைபோ
லொளிர்கண் ணொருபாற் பரன்சண்பை பாடுதலில் கடைபோன் மெலியு மெனக்கெங்ஙன்
வாயுண்டு காணகர்போய் விடைபோ னடையொரு வேந்தன்பின் னேசென்ற
மெல்லியலா ளிடைபோன்மற் றுள்ள வுறுப்பொன்றுங் கண்டில னென்பதற்கே.
| 420 |
| 1575
| மீட்சி. தலைவி சேணகன்றமை செவிலி
தாய்க்குணர்த்தல். சேரா ருயிருண் டுழல்வடி வேலுடைச்
செம்மலொடு வாரா ரிளமுலை வெங்கான் கடந்து மருவினளின் றோரார்த முள்ளத்
தொளிப்பா னளிப்பா னுயிரளித்த காரார் களத்த னுறையு நிறையுங் கழுமலமே.
| 421 |
| 1576
| உடன்போய்வரைந்த நெடுந்தகை
மீட்சியுரைத்தல். வண்டாள் குழலை வடிவே லவனருண்
மாட்சியினந் தொண்டாள் பரமன் புகலியிற் றன்மனை துன்னிமணம் பண்டாள்
விதஞ்செய் தமர்நாணம் மானம் பதிநினைத்துக் கொண்டா ளுணர்ந்தது மீண்டன
னாலக் குரிசிலின்றே.
| 422 |
| 1577
| தலைவன் தம்மூர்சார்ந்தமை சாற்றல். விதுகா ணரிய
கழற்சண்பை நாயகர் வெற்பதுமற் றதுகாணின் னாயத் துடனீ பகல்விளை
யாடுமிட மிதுகா ணுனைமுத னான்வந்து கண்ட விரும்புனமற் றுதுகா ணிரவுக்
குறிகொண்டு முன்பயி லோரிடமே.
| 423 |
| 1578
| தன்மனைவரைதல். தலைவி முன்செல்வோர்தம்மொடு தம்வரல்
பாங்கியர்க்குணர்த்தி விடுத்தல். பூமா னொடுகலை நாமான் மருவும்
புகழ்ப்புகலி யோமா னொடுபங் குமையையும் போற்றியெம் மூர்புகுவீர் வாமா
னொடுசம ரேற்குங்கண் ணாய மடந்தையர்க்குக் கோமா னொடுசுரஞ் சென்றாள்வந்
தாளென்று கூறிடுமே.
| 424 |
| 1579
| முன்செல்வோர் பாங்கியர்க்குணர்த்தல். அருவார்
சதுக்கொ ளுருவார் புகலியன் னீர்களுங்க ளிருவார் முலையுஞ் செருவார்
சிலைகொளொ ரேந்தலுமுள் வெருவா ரணங்கு பொருவா ரொருவரை
விட்டொருவ ரொருவார் வழியில் வருவா ரிதுண்மை யுரைத்தனமே.
| 425 |
| 1580
| பாங்கியர்கேட்டு நற்றாய்க்குணர்த்தல். அன்னாய்
முதலை கொடுபோன பிள்ளை யருட்புகலி மின்னாய் சடைப்பெரு மான்றோழ ராற்பின்பு
மீண்டதெனப் பொன்னாய் கழல்வலி யோன்கொடு போயநின் பூங்கொடிமற் றுன்னாய்
தருநன்மை யான்மீண் டுளாளிவ் வுரையுண்மையே.
| 426 |
| 1581
| நற்றாய் தலைமகனுளங்கோள் வேலனைவினாதல். ஆலம்
புனையுங் களத்தான் புகலியி லாய்ந்தொருமுக் காலம் புனையு முணர்வுடை
யீர்கழற் கல்விறலோ னேலம் புனையுங் குழலா ளொடுமென திற்புகுமோ கோலம்
புனையுந்த னிற்புகு மோவுண்மை கூறுகவே.
| 427 |
| 1582
| தன்மனைவரைதல். நற்றாய் மணனயர்வேட்கையிற்
செவிலியைவினாதல். சிம்மனை வாயர வம்புனை வோன்வரைச்
செல்வியெனு மம்மனை வாய்திரு மேனிப் பிரானமர் காழியன்னாய் நம்மனை
வாயம்மி யோமண மாலை நகுபுயத்தார் தம்மனை வாயம்மி யோமட மானடி தாங்குவதே.
| 428 |
| 1583
| செவிலிக்கு இகுளை வரைந்தமையுணர்த்தல். கண்டு
வருந்திப் பியமொழி பாகன்றென் காழியுள்ளார் மண்டு வருந்திப் புவிபுரப்
பார்வரைந் தார்மணிவாய்த் தண்டு வருந்திச் சுழியையென் றார்வன்
றரைமெழுகி யுண்டு வருந்திப்பெற் றாட்கன்னை போயென் னுரைப்பதுவே.
| 429 |
| 1584
| வரைந்தமை செவிலி நற்றாய்க்குணர்த்தல். பகலருங்
கோளு மிகலரு நாளும் பலித்தனவென் றகலருஞ் சீருடை யார்பரன் காழியி
லாய்தொடியைப் புகலருஞ் செல்வம் பொலியச்செய் தார்புதுப்
பூங்கடியென் றுகலரு மெய்ம்மொழி யோதுந ரன்னையெற் கோதினரே.
| 430 |
| 1585
| தலைவன் பாங்கிக்கு
யான்வரைந்தமை நுமர்க்கியம்புசென்றென்றல். தெங்குங் கமுகுங்
கதலியுஞ் சூழெந் திருநகரிற் பொங்கும் புகலிப் பிரானரு ளாலுங்கள்
பூங்கொடியைத் தங்கும் பெருமறை யந்தணர் சூழத் தழன்முனர்யா மெங்கும்
புகழ்மணஞ் செய்தாநும் மன்னைக் கியம்புகவே.
| 431 |
| 1586
| தானது முன்னே சாற்றினனென்றல். வல்லாண்டு கொள்ளு
முலையாளை மங்கல வாழ்த்துவிம்மப் பல்லாண்டு மல்கப் பரன்காழி யின்மணப்
பந்தர்நல்லோர் சொல்லாண்டு நீமணஞ் செய்தாய்முன் னேயத்
துணிபுணர்ந்தேன் வில்லாண்டு வாழ்நுதற் றோளெமர்க் கோதினன் வேலவனே.
| 432 |
| 1587
| உடன்போக்கிடையீடு. நீங்குங்கிழத்தி பாங்கியர்தமக்குத்
தன்செலவு உணர்த்திவிடுத்தல். ஒருவன் புடைகொள் கழுமல நின்றுமெம்
மூர்புகுவீர் மருவன் புடையென் றுணைவியர் பாலுங்கண்
மங்கையென்பா டருவன் புடைவனத் துங்களை யேநெஞ்சுட்
டான்சுமந்தோர் திருவன் புடையக லாதுசெல் வாளென்று செப்புமினே.
| 433 |
| 1588
| தலைமகள் தன்செலவு ஈன்றாட்கு
உணர்த்திவிடுத்தல். தரவாத சண்பைச் சதாசிவற் றாழ்ந்தெழு
தாழ்சடையீ ரோவாத துன்பத் துழலுமென் றாய்முன முற்றுவசை மேவாத வண்குடி
யோர்ந்தொரு வேந்தன்பின் மேவிநினைஇ யேவாத நின்மகள் சென்றாளென் றோது
மிறைஞ்சுவனே.
| 434 |
| 1589
| நற்றாய்க்கு அந்தணர்மொழிதல். அன்னாய் புகலி யரனடி
யேமெங்க ளாசிகொண்மோ மின்னாய் மருங்கு லொருவே லவனொடு
மேவிநல்லோர் முன்னாய் வழிச்செலக் கண்டே மணையண்
முதுக்குறைவின் றென்னாய் விளையுங்கொ லோவட மீனு மிறைஞ்சிடுமே.
| 435 |
| 1590
| நற்றாய் அறத்தொடுநிற்றலிற் றமர்பின்சேறலைத் தலைவிகண்டு
தலைவற்குரைத்தல். மூதண்ட கூட முடியாக வோங்கு
முதல்வர்வெள்ளி வேதண்ட வாணர் கழுமலஞ் சூழ்பெரு வீரையென மாதண்ட
நேர்புய மன்னாநின் மேலம்பு மாரிபெய்வான் கோதண்டம் வாங்கி வளைந்தா
ரெமரென் கொடுவினையே.
| 436 |
| 1591
| தமர்பின்சேறலைக்கண்டோர் இரங்கல். மெலியுங்
கொடிநுண் ணிடையா ளொடுசெல் விடலையைப்பொன் மலியும் புகலிப் பிரானையுன்
னாரை வளைக்கும்வெய்ய கலியுங் கடுவினை யும்போல் வளைந்தனர்
கானவர்மேற் பொலியுஞ் சமரிது பார்ப்பதிற் றோடம் புகும்புகுமே.
| 437 |
| 1592
| தலைவியைத் தலைவன்விடுத்தகறல். தகையே மலிபுக லிச்சட்டை
நாதர் தமதருளாற் பகையே யெனில்வெங் களிற்றுக் குழாத்துட்பஞ்
சானனம்பாய் வகையே யெழுவனிற் பாய்நீ நுமரென வந்தமையான் முகையே
பொருமுலை யாயஞ்சு வேனிவர் முன்செலற்கே.
| 438 |
| 1593
| தமருடன்செல்பவள் அவன்புறநோக்கிக்
கவன்றுஅரற்றல். அரியார் மதலை யொடுசூழ் புகலி யமருமறைப் பரியார்
கயிலை வரைவா யெனைமுற் பயந்தவர்மு னுரியார் வளைக்கவு மஞ்சினர் போலென்
னுயிரனைய பெரியார் புறங்கொடுத் தாரென்சொல் வேனிவர் பேரருளே.
| 439 |
| 1594
| வரைதல். சென்றோன்மீண்டுவந்து அந்தணரையும்
சான்றோரையுமுன்னிட்டு வரைந்துகொண்டுழிக் கண்டோர்
மகிழ்ந்துரைத்தல். அருகாத பூரணர் காழியிற் பாலுண்ட
வையருமற் றொருகா தலியு மணந்துட னேதம் முருக்குலைந்தார் கருகாத மாலைப்
புயவேந் தலுமிக் கனங்குழையுந் தருகாத லின்மணந் தார்தளிர்த் தாருடன்
றம்முருவே.
| 440 |
| 1595
| இல்வாழ்க்கை. தலைவன் தலைவிமுன்
பாங்கியைப்புகழ்தல். ஆன்மா புகலிப் பெருமா னடிக ளடையளவுந் தான்மா
முயற்சி தவாவருள் போற்றமி யேனறும்பூந் தேன்மா வுணுங்குழன் மான்மா
முலைதுணை சேருமட்டு மான்மா வனையகண் ணாய்முயன் றாயுன் மதிப்புநன்றே.
| 441 |
| 1596
| தலைவனைப் பாங்கிபுகழ்தல். புடைக்குஞ் சிறுபசு
வேய்முளை வானம் பொதுத்தெழுஞ்சீர் படைக்கும் பனிவரை நன்னாட வையர்சண்
பைப்பெருநின் னடைக்குநின் கேண்மைக் கொடைக்கு மவாவுபு
நானறுஞ்சந் துடைக்குங் குமமுலை நாணுமெண் ணேன்முய லுற்றனனே.
| 442 |
| 1597
| தலைவனைப் பாங்கிவாழ்த்தல். நாரலர் சிந்தை யகலார்
புகலிமுன் னாளுரைத்த சீரலர் சொற்படி பொன்புனைந் தேசெல்வி
செல்வரின்று வாரல ரென்றுகண் வாரல ரூருறை வாரலர்வேள் போரலர் மாற்றிய
நீவாழ்க வென்றும் புரவலனே.
| 443 |
| 1598
| வரையுநாளளவும் வருந்தாதிருந்தமை பாங்கி
தலைவியைவினாதல். தடுப்பது முன்னி யிமைத்தலுந் தீர்ந்து
தவாவணங்கா யுடுப்பது முண்பது முன்னாது வந்தின் பொருங்குறுநீ கடுப்பது
தீர்பரன் காழியி லன்னையர் காவல்செய்நாள் விடுப்ப திவர்செய்த நாளெங்ங
னாற்றினை மெல்லியலே.
| 444 |
| 1599
| தலைமகள் வருந்தாதிருந்ததற்குக்
காரணங்கூறல். பூங்காது வார்குழை மாதொரு பாகர் புகலியிலெற் றாங்கா
தகன்றன ராயினுந் தாயுனுந் தாமகத்தே நீங்கா திவரிருந் தார்புறத்
தார்புறத் தேயொரு நீயிருந்தா யேங்கா தியானுயிர் வாழ்ந்தேனிச் சார்புகொண்
டேந்திழையே.
| 445 |
| 1600
| பாங்கி தலைவனை வரையுநாளளவும் நிலைபெறவாற்றிய
நிலைமைவினாதல். மோந்து மணைத்துந் தழுவியு நோக்கியு முத்தங்கொண்டுஞ்
சாந்தும் புழுகு மொழுகுமென் கொங்கைத் தலைதுயின்று மேந்தும்
பிறைச்சடை யார்காழி வாயிவ ளின்புறுநீ நீந்தும் படியுற்ற தெவ்வாறு முன்ன
நெடுந்தகையே.
| 446 |
| 1601
| பரத்தையிற்பிரிவு. பாங்கி மணமனைச்சென்ற செவிலிக்கு
இருவரன்புமுரைத்தல். நிகர்வா விலாத நிருமலன் காழி
நிரைவளையும் புகர்வா ரயில்கொள் புயவேந் தனுமன்பிற் பூரணரே நகர்வார்
குழலிய ராடவர் போலலர் நாடினும்யார் பதர்வார்மெய்ம் மாத்திரம் வேறிது
நாஞ்செய்த பாக்கியமே.
| 447 |
| 1602
| இல்வாழ்க்கை நன்றென்று பாங்கி
செவிலிக்குணர்த்தல். மன்பா லடிசில் வறையல் கருனைகுய்
வாய்பளிம்பா கன்பானம் மான்கை துழந்தட்ட தேயிறை யார்தலினென் றன்பா
லருள்வைத்த கோன்காழி வாழ்பலர் தாநுகரு மின்பாலன் னாய்மிக வும்பொலி
யாநின்ற தில்லறமே.
| 448 |
| 1603
| மணமனைச் சென்றுவந்தசெவிலி பொற்றோடிகற்பியல்
நற்றாய்க்குணர்த்தல். விழியென்று தீநுதல் வைத்தோன் கழுமல
வேதியர்த முழியென்று பெய்யு மழையென்று கேட்ட லுலகமிகை பழியென்று
மோவுமன் னாயின்றுன் செல்வி பயோதரமே பொழியென்று கூறினப் போதே
பொழியுஞ்செம் பொன்னையுமே.
| 449 |
| 1604
| செவிலி நன்மனைவாழ்க்கைத் தன்மையுரைத்தல். கொந்தார்
குழலொரு பாலா ரமர்வெங் குருநகர்வாய்ச் சந்தார் வனமுலைத் தாழ்குழ னின்மக
டன்மனைவாய் வந்தார் பசித்தறி யாரென்றும் பொங்கி வழிதரும்பா வந்தா
ரணிப்பொரு ளெல்லா மறையொன் றகங்கொண்டதே.
| 450 |
| 1605
| செவிலி நற்றாய்க்கு இருவர் காதலும்
அறிவித்தல். காரிற் பொலிதண் பொழிற்பூந் தராய்ச்சங்
கரனுமைபோ லேரிற் பொலியுடம் பொன்றாக் குறையொன்றுண் டில்லிடத்தே வாரிற்
பொலிமுலை வைகுத லாலண்ணன் மாற்றலர்வெம் போரிற் பொலியவு மூர்மாவின்
முன்னுறும் போதறினே.
| 451 |
| 1606
| பரத்தையிற்பிரிவு காதலன்பிரிவுழிக்
கண்டோர்புலவிக்கு ஏதுலிதாமல் விறைவிக்கென்றல். ஒண்மலர் தோறு நறவுண்டு
வண்டுழ லூரனின்று தண்மலர் வீதிவந் தான்முன்பு போந்துகை
தாங்குவித்துக் கண்மலர் நோக்கஞ்செய் தார்பரன் காழிக்கண்
ணாரிவனு மெண்மலர் நோக்கஞ்செய் தான்மனை யூடுதற் கேதுவிதே.
| 452 |
| 1607
| தனித்துழி இறைவி துனித்தழுதிரங்கல். நலத்தே
வசிக்குங் குலமாதி னீத்து நவில்பதியில் குலத்தே வசிக்கு மடவாரில் லேகுடி
கொள்ளுதன்மும் மலத்தே வசிக்கு மெமையடுத் தாளும் வரதர்சண்பைத் தலத்தே
வசிக்கு மதுபோலு மானந் தலைவருக்கே.
| 453 |
| 1608
| தலைவனைத் தலைவி கனவிற்கண்டிரங்கல். காணித் திலநகை
யாயென வூரர் கனவில்வந்தார் நாணித் தழுவ விழித்தேன் மறைந்தனர்
நாடுறுங்காற் பாணித்த தென்னென் றரன்காழி வாழும் பரத்தையருட் கோணித்
தமைமுனி வாரென்று போலுமுட் கொண்டதுவே.
| 454 |
| 1609
| செஞ்சுடர்க்குரைத்தல். முந்தாநம் மூரன் முகநோக்கி
வாக்குநெய் முற்றுமுண்டு நந்தா தெழுசுட ரேயெனைப் போனிற்ற
னன்மையென்றென் சிந்தா குலமுரை யாய்பரன் காழிப்பல்
செல்வர்நல்கு மந்தார் புனையு மடவார்க்கு நீயுமுள் ளஞ்சினையே.
| 455 |
| 1610
| வாரம்பகர்தல். காருந் தழுவப் பிறையுந் தழுவக்
கழிதலையு நீருந் தழுவப் படுசடை யார்சண்பை நீணகர்வாய்ப் பாருந் தழுவப்
பலருந் தழுவப் படுமடவார் யாருந் தழுவக் கொடுத்தன னாலென் னிறைவனையே.
| 456 |
| 1611
| அடிசிலமைத்தமடவாலிரங்கல். ஆளும் பரமர்தென்
காழியின் வாயிசை யாருணவு வாளும் பணிகணல் லார்செவிக் கூட்டலின்
மன்னுபுகழ் நீளுந் திருவள் ளுவர்சொற்ற வாறு நிலவகட்டுண் மூளும்
பசியிலை யாயிற்றம் மாநம் முதல்வருக்கே.
| 457 |
| 1612
| தலைவன்பிரிந்தமைக்கு இரங்கல். மாவுங் கரியும்
புரியும்பொற் றேருநம் மாளிகைமுன் மேவும் படியி லரன்காழி யல்குல்
விலைமடவார் பாவுந் தெருவுறு மானல்ல காதன்மை பங்கயமென் பூவும் புலவுங்
கமழ்புன லூரனுட் புக்கதுவே.
| 458 |
| 1613
| ஈங்கிதுவென்னெனப் பாங்கி வினாவுதல். பொன்னேயென்
னுள்ளப் புனலோடிப் பாயும் புணரியெனுந் தன்னே ரிலாவடி யோன்சண்பை வாய்மணந்
தான்முடித்து நன்னேய மிக்கன்பர் நல்கவு நீமுன்னை நாளிலின்னுங் கொன்னே
வருந்துவ தென்னே யெனக்குண்மை கூறுகவே.
| 459 |
| 1614
| பரத்தையிற்பிரிவு. இறைமகன் புறத்தொழுக்கு
இறைமகளுணர்த்தல். நேருங் கரும்பு பொழிசாறு நீத்து
நெடும்பகடாங் கூறுங் கலங்கற் புனல்கொளு மூர ருபேந்திரன்முன் யாருந்
தொழும்பெரு மான்சண்பை வாய்ப்பொன் னெழின்மடவார்ச் சாருந் தகைய ரெனைநீத்
தனரின்று தாழ்குழலே.
| 460 |
| 1615
| தலைவியைப் பாங்கி கழறல். ஆனுண்ட கேதனத் தார்காழி
வாயிர வாம்பன்மலர்த் தேனுண்ட வண்டு சிறுகாலை யிற்கஞ்சத்
தேனுமுண்ணும் வானுண்ட கீர்த்தி மகிழ்நர்பொல் லாங்கு
மறந்துஞ்சொலல் கூனுண்ட வாணுத லாய்குல மாதர்தங் கோளலவே.
| 461 |
| 1616
| செவ்வணியணிந்து சேடியை விடுக்கவென்றல். பவளம்
புனைந்துசெம் பூமாலை சூட்டிச்செம் பட்டுடுத்தி நவளம் படுகுங்
குமம்பூசிப் பாகிலை நல்கிநனி துவளங் கொடியிடை யாய்விடு சேடியைத்
தோன்றறன்பாற் கவளங் கொளுங்களிற் றீருரி யார்மகிழ் காழிக்கின்றே.
| 462 |
| 1617
| செவ்வணியணிந்து சேடியைவிடுத்தல். பாடியை யிந்திர
கோபஞ் செறிந்த பசுங்கொடியு மேடியை வண்கவிர் பூத்தபொற் கொம்பு
மிணையவொரு சேடியை விட்டனள் செங்கோலஞ் செய்து திருந்திழைவிண் மாடியை
மாடப் புகலிப் பிரானன்பர் மாடுறவே.
| 463 |
| 1618
| அவ்வணி உழையர்கண்டு அழுங்கிக்கூறல் தோளா மணிதிருத்
தோணி புரேசன் றுணைமலர்த்தாட் காளா னவரை யடையா துழலு மறிவிலரிற் கோளா
டரவக லல்குலிம் மாதுசெங் கோலங்கொண்டு வாளா விகழ்பவர் வீதியிற் போகுமிம்
மாண்புநன்றே.
| 464 |
| 1619
| பரத்தையர் கண்டு பழித்தல். தவந்தாள் பணித லெனக்கரு
தேனுக்குந் தன்னருடந் துவந்தாள் பரம னிகரில் புகலி
யுரிமையுற்று நிவந்தாள் சிறிது சிவந்தா ளதுநிகழ்த்
தப்பெரிது சிவந்தாடன் னாணம் விளர்த்ததெண் ணாளித் தெருவகத்தே.
| 465 |
| 1620
| பரத்தையர் உலகியனோக்கி விடுத்தல். கல்லுக வீங்கு
புயத்தாய் பரம்பரன் காழியினீர் செல்லுக வாய்மலர் கின்றவ ணாளுந்
திருந்தறமே வெல்லுக வென்பவள் பூத்தன ளாம்விடை கொள்கசெல்க புல்லுக
பன்னிரு நாளுமப் பாலிங்குப் போதுகவே.
| 466 |
| 1621
| வரவுகண்டுவந்து வாயில்கள் மொழிதல். இமைய மடந்தை
புணர்ந்தும் விகார மிலாமுதல்வ னமையமை தங்கு கயிலைப் பிரான்சண்பை
நங்கையர்பச் சமையமை தோடழு விக்கிடந் தாலுநம் மாயிழையார் சமைய
மறிந்துத வுந்தகை யாலிவர் சான்றவரே.
| 467 |
| 1622
| தலைமகன்வரவு பாங்கி தலைவிக்குணர்த்தல். முன்மா
றொழுகினர் பின்னடைந் தாலின்ப முத்திதரு மன்மா தவர்பெரு மான்காழி வாழி
மடமயிலே பொன்மாலை மார்பர் புறத்தா றொழுகினும் பொற்பவந்தின் றுன்மா
ளிகைமுனின் றாரெதிர் கோட லுயர்வுறுமே.
| 468 |
| 1623
| தலைவனைத் தலைவி எதிர்கொண்டுபணிதல். ஊடா துவத்தலி
னுண்டாகு மின்பமுள் ளூடல்கொளில் வாடா வவர்க்குக் குறையுள தோசண்பை
வாழ்பரமர் கூடா ரரணந் தழல்விளை யாடக் குறுநகைகொ ளேடா ரிதழித் தொடையா
ரருளென் றெதிர்கொள்வனே.
| 469 |
| 1624
| புணர்ச்சியின்மகிழ்தல். காரார் குழலியு நாமும்
புணரின்பங் காப்புகலி யூரார் முதலு முயிரும் புணரின்ப
மொக்குமெனி லேரா ரொருதலை யின்பே யதுமற் றிருதலையுஞ் சேரா மருவின்ப
மீதெனில் யாதிணை செப்புவதே.
| 470 |
| 1625
| வெள்ளணியணிந்துவிடுத்தல். இருளுத யஞ்செய்
மிடற்றார் கழுமல மெய்தலர்சேர் மருளுத யஞ்செய் மனத்தார் முலைவளர்
மன்னவற்குத் தெருளுத யஞ்செய்வெண் பூமணி தூசு செறித்தடைந்தாள் பொருளுத
யஞ்செய் ததுபுகல் வானொரு பூங்கொடியே.
| 471 |
| 1626
| வெள்ளணியணிந்து விடுத்துழித் தலைமகன்
வாயில்வேண்டல். யான்செய் பிழையை நினைந்து மறாமலின்
றேன்செய்மொழி மான்செய் விழிமயிற் கோதுக தீதுக வல்லரக்கன் றான்செய்
பிழைமறந் தொள்வாளு நாளுமுன் றந்தபிரான் கூன்செய் பிறைமுடி யோன்காழி வாழி
கொடியிடையே.
| 472 |
| 1627
| தலைவி நெய்யாடியது இகுளைசாற்றல். கையா டியமழு
வோன்காழி நாதன் கருணையினான் மையா டியகண் மயின்மணி போல
மகவுயிர்த்து நெய்யா டியமெய் யினள்கா ணறிவ ணெடுந்தகைநீ பொய்யா டியமட
வார்ப்புல்லு நீத்திங்குப் போந்ததுவே.
| 473 |
| 1628
| தலைவன் தன்மனத்து உவகைகூர்தல். நாம்பா லுணுமழ வாகா
தருள்புரி நம்பர்தமைப் பாம்பா லலங்கரிப் பார்காழி வாயென்று
பார்ப்பதுபோ யாம்பா லடுநெய் யவிர்மெய்ப் பசப்பு மலர்முகமுந் தீம்பால்
பொழிகொங்கை யும்மக வேந்திய செங்கையுமே.
| 474 |
| 1629
| தலைவிக்கு அவன்வரல் பாங்கியுணர்த்தல். ஒளிர்பரை
பானள் ளொருசே யுளார்சண்பை யூரரின்று தளிர்புரை மெல்லடி யாய்பச்
சுடம்புந் தவாமகவுங் குளிர்தரு பால்பொழி கொங்கையுங் காணக்
குறுகுபுநின் மிளிர்திரு மாளிகை வாயினின் றாரிதென் விண்ணப்பமே.
| 475 |
| 1630
| தலைவியுணர்ந்து தலைவனொடுபுலத்தல். மட்டார் கடுக்கை
மலர்மாலை யார்சண்பை வாழுநல்லார் விட்டார்கொ னம்மைப் புரப்பாரெவ்
வாறிங்கு மேவவுடன் பட்டா ரவர்க்கிம் மனைவாயென் னுண்டு
பழந்தொடர்பு கட்டார் மகவுண்டு நானுண்டு காலங் கழிப்பனன்றே.
| 476 |
| 1631
| தலைவி பாணனைமறுத்தல். தோயு மகிழ்நர்மிக் கன்பினர்
நீயென்னை சொல்லன்முல்லை வீயு மருவும் பொலிதேத் தெருக்கலர்
விற்கவந்தா யேயும் பரமர்தென் காழியில் வீணை யிசைக்குங்கைபோல் வாயுங்
கொளும்புலைப் பாண்மக சேறியென் வாய்தல்விட்டே.
| 477 |
| 1632
| வாயில்மறுக்கப்பட்ட பாணன்கூறல். தாயே தலைவற்
புகழ்ந்தே னதற்கென் றலைதகர நீயே கருங்கலை வீசினை வாருஞ்செந்
நீர்முழுகி யாயேகர் காழி யதுசெங்க லாயிற் றமையுமிதே போயே விடுவல்
விடாதோங் குகநின் புலவியதே.
| 478 |
| 1633
| விறலி வாயின்மறுத்தல். சேவுந் திருமறை மாவுஞ்
செலுத்துந் திறத்தர்வளம் பரவும் புகலி யடையாரி லொத்ததிப்
பாவியில்ல மாவுந் துணர்ப்பொலங் காவுமொப் பாங்கொடை யாளரென்று மேவும்
பரத்தையர் சேரியிற் பாடு விறலிசென்றே.
| 479 |
| 1634
| கூத்தன் வாயின்மறுத்தல். முடித்திடு வேணிப்
பிறையான் புகலி முதல்வன்மன்று ணடித்திடுங் கூத்தன்றி நோக்கேனின் கூத்து
நடிப்பதற்குத் துடித்திடு கூத்தன் மகனே யகறிநந்
தோன்றலுக்குத் தடித்திடு மின்பந் தருமாதர் நோக்குவர் தாழ்வின்றியே.
| 480 |
| 1635
| பாங்கி வாயின்மறுத்தல். அளி்யுற்ற காழிப் பிரான்றா
யுருக்கொண் டடைந்துமிடைந் தொளியுற்ற தெய்வச் சிராமலை மேவுத
லோர்ந்தவரிவ் வெளியுற்ற சேய்வயிற் றுள்ளுற்ற போதிங்
கிருந்துசென்று வெளியுற்ற போதுவந் தார்நல்ல ரேயவர் மெல்லியலே.
| 481 |
| 1636
| விருந்துடன்வந்துழிப் பொறுத்தல். உன்னுமுன்
னுள்ளத் துறைவார் புகலிநல் லூரர்வந்தா ரென்னுமுன் செங்கு வளையியல் பட்ட
விருகண்களு மின்னுமுன் றாழ்நுண் மருங்குனல் லாட்கு
விருந்தொடென்று பன்னுமுன் னம்ம கருங்கு வளையியல் பட்டனவே.
| 482 |
| 1637
| விருந்தொடுவந்துழிப் பொறுத்தல்கண்டு
தலைமகன்மகிழ்தல். முருந்தென்று பேசு நகைபாகர் சண்பையின்
முற்றியது வருந்தென் றெனைவைத்த தீவினை நல்வினை
வந்ததன்றோ விருந்தென்று கொண்டிலம் வீயாப் புலவியை
வீப்பதற்கோர் மருந்தென்று கொண்டனங் காண்போநம் மாதை மகவொடுமே.
| 483 |
| 1638
| விருந்துகண்டொளித்தவூடல் பள்ளியிடத்து
வெளிப்படல். அல்லார் களத்த னழலார் குளத்த னருட்புகலிப் பல்லார்
புகழப் படுவோயிப் பள்ளி பலர்தழுவு மெல்லா ரொடுமென்னை யுஞ்சும வாதென்
றிழிந்துநின்றாள் கல்லார வோதி கருத்தென் விளைந்த கலாமென்னையே.
| 484 |
| 1639
| தலைமகன் சீறேலென்று அவன் சீறடிதொழுதல். உணங்கா
விளம்பொழிற் கூடற் பிரானுமை யூடற்கன்றி வணங்கா முடித்தம் பிரான்காழி
யூரன் மலரடிவீழ்ந் தணங்கா வருத்தலென் வாய்முத்த நல்கி
யருளுமெனக் குணங்கா முறுமயில் கண்முத்த நல்கிக் கொதித்தனளே.
| 485 |
| 1640
| இஃது எங்கையர்காணின் நன்றன்றென்றல். அண்மையின்
மேவலென் பொற்றானை பற்ற லடிபிடியல் வண்மையி நீமகி ழப்பலர் பாற்கற்று
வந்திலன்யான் றிண்மைகொ டேவர் புகலியி னீயின்று
செய்வதெல்லா முண்மையென் றோர்ந்தெங்கை மார்வெகு ளாநிற்ப ருத்தமனே.
| 486 |
| 1641
| நின்னலது அங்கவர்யாரையும் அறியேனென்றல். புல்லாது
காலில் விழவுமெண் ணாது புழுங்கியெனைக் கொல்லாது கொல்லுதல் குற்றமன்
றோவெங் குருப்பரனைக் கல்லாது வாடுநர் போனினைத் தாயென்னைக்
காதனின்னை யல்லா தொருவரை யும்மறி யேனுண்மை யாரணங்கே.
| 487 |
| 1642
| பரத்தையிற்பிரிவு. காமக்கிழத்தியைக்
கண்டமைபகர்தல். திருவன் புகலிப் பெருவீதி யிற்சிறு
தேருருட்டு மருவன் புறுநம் மகவைக்கண் டாள்கட்டி மார்பணைத்தா ளொருவன்
புடனது நோக்கிநின் றாயிவ ளோரினிவள் பொருவன் பினர்பல ரென்றா ளயலொரு
பூங்கொடியே.
| 488 |
| 1643
| தலைமகளைப் பாங்கி புலவிதணித்தல். உழைபொறுக் குங்க
ணொருபா லுறவு மொளிர்முடியோர் மழைபொறுக் குங்குழல் வைத்தார் புகலிநம்
மன்னரின்றுன் னிழைபொறுக் கும்முலை சேர்வான் வருந்துத
லெண்ணிலைமுப் பிழைபொறுக் கும்புன லென்பது மோர்ந்திலை பெண்ணணங்கே.
| 489 |
| 1644
| தலைவி புலவிதணியாளாதல். மானாறு பாகத்தர் காழிநல்
லார்கள்செவ் வாயினிய தேனாறு நிம்பநெய் நாறுமென் வாயவர்
செம்பொன்முலை மேனாறு நல்விரைப் பான்மக வுண்டு மிழத்திரிந்த பானாறு
மென்முலை யென்னிலொவ் வாதுன் பகட்டினுக்கே.
| 490 |
| 1645
| தலைமகள் தணியாளாகத் தலைமகனூடல். மான்மே லெழுநஞ்
சமுதா யதுசண்பை வள்ளலுக்குத் தான்மேல் விழுந்து தழீஇநமக் கின்பந்
தருமமுதங் கான்மேல் விழுந்து கரைந்திரந் தாலுங் கனிதலின்றி மேன்மெல்
வருத்தும் விடமாயிற் றானம் விதிவசமே.
| 491 |
| 1646
| பாங்கி தலைவனை அன்பிலைகொடியையென்றல். பைதொட்ட
நாகப் பணியார் புகலிப் பதியனையாள் கைதொட்ட வேம்புங் கரும்பேயென் றீர்கட்
கடைக்குறிப்பால் வைதொட்ட வெங்கழு வாயேறி வைகவும்
வல்லனென்றீர் நைதொட்ட வன்ன டனியாகக் கண்டு நகைப்பிரின்றே.
| 492 |
| 1647
| பாங்கி அன்பிலைகொடியையென்று தலைவனையிகழ்தல். ஆரோடு
சொற்று மிளங்கன்றை நாடி யணைபசுப்போல் வாரோடு விம்மு முலைபா லடிக்கடி
வந்தருள்வீர் நீரோடு கண்ணிமெய்ப் பீரோடு வாட நிமலர்சண்பைத் தேரோடு
வீதியு ணாரோடு மாதரிற் செல்லுவிரே.
| 493 |
| 1648
| பள்ளியிடத்துத் தலைவி புறங்காட்டக்கண்டு
தலைமகன்கூறல். அறங்காட்டி யென்னைப் புரப்பான் புகலி
யனையவரே நிறங்காட்டி யுங்கண் மதவேள் சினந்து
நெடுஞ்சிலையின் மறங்காட்டி நின்று சமராடு கால
மதித்தெனக்குப் புறங்காட்டி மெல்லிய லாரெனும் பேரைப் புதுக்கினிரே.
| 494 |
| 1649
| காமக்கிழத்தி வாயில்வேண்டல். பிழையே செயினு
நினைக்கே பொறுத்தல் பெருங்கடன்வா வுழையே யனையகண் ணாயெனைப் போலலை
யூடனிறத் திழையே புனையு மகவீன்றுங் கோட லியல்புகொலுட் டழையேத
நீத்துத் தழுவரன் காழித் தலைவனையே.
| 495 |
| 1650
| தலைவி காமக்கிழத்தியோடு பகர்தல். தண்ணார் புகலிப்
பெருமானு மாயனுஞ் சம்புபல கண்ணார் கருன்புங் கடுமூங்கி லுங்கழை
காமரமென் பண்ணார் மொழிமயி லேயானு மேய பரத்தையரு மெண்ணார் பணியுநம்
மூரற்கு மாத ரிதுமெய்ம்மையே.
| 496 |
| 1651
| பாங்கி வாயினேர்வித்தல் நீலம் பொலியும் விழியாய்
புலவியை நீளவிட்டுத் தாலம் பொலியுந் தலைவரை வாட்டுத றக்கதன்றா லாலம்
பொலியு மிடற்றார்தென் காழிநல் லாடவருட் சாலம் பொலியும் பொதுமாதர் தோடழு
வாரெவரே.
| 497 |
| 1652
| தலைவி மகவொடுபுலத்தல். உள்ளாய் பவருக் கொளியா
யமரிறை யொண்புகலிக் கள்ளாய் குழற்பொது மாதர்தம் பார்செல்லுங்
காதலரைத் தள்ளாய் யழுதழைத் தொண்மார்பிற் சாந்தந்
தழீஇயழித்துப் பிள்ளாய் பிழைசெய்துள் ளாய்வந்த தாலொர் பெரும்பழியே.
| 498 |
| 1653
| மகற்கறிவுறுத்தல். எழுந்தே பணைத்த முலையார் பொதுநல
மெய்துபுதி கழுந்தே சுடைத்திருத் தந்தையைச் சார்ந்துமுக்
கட்பெருமான் செழுந்தே மலர்ப்பொழிற் சீகாழி யிற்சிறு
தேருருட்டுங் கொழுந்தே யிதுபிது ராசார மென்றுபொய் கொள்ளற்கவே.
| 499 |
| 1654
| மகற்பழித்தல். அம்பல வாணர் புகலிநல் லார்மென்
றமைத்தபொதுத் தம்பல மேவிற்றுன் வாயினுந் தந்தைமுத் தங்கொளலால் வம்பல
வாலென்றன் வாயினும் பூசவந் தாயுனைநல் கும்பல மோமக னேயிது தானின்
குலத்தியல்பே.
| 500 |
| 1655
| ஆயிழைமைந்தனும் ஆற்றாமையும் வாயிலாக
வரவெதிர்கோடல். போதுசெய் கூந்தற் புணர்முலை பாகர்தென்
பூம்புகலிச் சூதுசெய் கொங்கைப் பொதுமட வாரிற்
றுறந்தின்றுசெந் தாதுசெய் பூணிளஞ் சேயையுந் தோளிற்
றழுவிவந்தீ ரேதுசெய் தாலு மியம்புந ராரெம் மிறையவரே.
| 501 |
| 1656
| கல்வியிற்பிரிவு. மணந்தவன் போய்பின்வந்தபாங்கியொடு
இணங்கிய மைந்தனை இனிதிற்புகழ்தல். களிமிகு மாமயிற் சாயனல்
லாய்கடை யேனிதயத் தளிமிகு வாழ்வுடை யோன்சண்பை யூரிற்றன்
றந்தைதனை யளிமிகு மாறு பொருமிப் பொருமி யழுதழைத்தா னொளிமிகு ஞானசம்
பந்தன்கொ லோவென் னொருமகனே.
| 502 |
| 1657
| தலைவி தலைவனைப் புகழ்தல். பெரியோர் பவஞ்சங்
கலந்தமர்ந் தாலும் பெரும்புகலி யரியோர் விடைய ரலர்தாட் கலப்படைந்
தேயமர்வர் கரியோர் தடங்கட் பொதுமாதர் கொங்கைக்
கலப்புறினு முரியோர்நங் கொங்கைக் கலப்பின்று தாறு மொழிந்திலரே.
| 503 |
| 1658
| பாங்கி தலைவியைப் புகழ்தல். மாலே யனையநங் காவலர்
மேவலர் வாழ்புரந்தீ யாலே யழிய நகைத்தார்தென் காழி யமருநல்லார் பாலே
பயின்று வரக்கண்டு மேற்றருள் பண்பினிவள் போலே பெருங்கற் புடையாரு
முண்டுகொல் பூதலத்தே.
| 504 |
| 1659
| கல்வியிற்பிரிவு. கல்வியிற்பிரிவு தலைவன் பாங்கிக்கு
அறிவுறுத்தல். வேய்பவ ரேபுரை தோளிடை யாய்வெவ்
வினைமுழுதுங் காய்பவ ரேசொல் கழுமல வாணர் கலைமடந்தை யேய்பவ ரேயென்
பவருட னாய்ந்த வினியகல்வி யாய்பவ ரேயற மாதியொர் நான்கு மடைபவரே.
| 505 |
| 1660
| பாங்கி தலைவிக்கு அறிவுறுத்தல். ஓங்கற்ற வாவில்
லுடையார் புகலி யுறுநர்முன்போய்த் தாங்கற்ற யாவுந் தகவுரைத் தேயவர்
தாமுணர்ந்த தீங்கற்ற யாவுந் தெரிந்துகொள் வான்சென்று
ளார்பணியக் கோங்கற்ற மோருங் குவிமுலை யாய்நின் கொழுநரின்றே.
| 506 |
| 1661
| கார்ப்பருவங்கண்டு தலைவிவருந்தல். வெறுத்துப்
புரம்பொடித் தார்காழி யூரில் வெளியெழுந்து கறுத்துச் சிலையும்
வளைத்தம்பு தூற்றுங் கனமுளெழுந் தொறுத்துப் படர்செயு மவ்வா றொருவ
னொருத்தியெங்ஙன் பொறுத்துத் தனியிருப் பேன்வந்தி லார்கற்கப் போனவரே.
| 507 |
| 1662
| தலைமகளைப் பாங்கி ஆற்றுவித்தல். சந்தார் தடம்புயத்
தார்தடங் காழித் தனிமுதல்வர் முந்தா ரருளின்முக் குற்றமு நீங்க
முழுதுணர்ந்து பந்தார் வனமுலை யாய்திரு ஞானசம் பந்தரொத்து வந்தா
ரெனச்சொல் வந்தது காணிம் மழைமுகிலே.
| 508 |
| 1663
| காவற்பிரிவு. காவற்பிரிவு தலைவன் பாங்கிக்கு
அறிவுறுத்தல். தண்மலர் கோதை யொருபாகன் காழித்
தனிமுதல்வன் கண்மலர் நெற்றிப் பிரானரு ளானிலங் காவல்செய்வோ ருண்மல
ரச்சமைந் தாங்காங்குற் றாருயிர்க் கோட்டிலரேற் பண்மலர் சொல்லினல் லாயுறு
லாயுறு வார்பெரும் பாதகமே.
| 509 |
| 1664
| பாங்கி தலைவிக்கு அறிவுறுத்தல். அடிமலர் மீதுதன்
கண்மலர் சாத்து மரிக்குநெடுங் கடிமல ராழிதந் தார்காழி நாதர்
கருணையினான் முடிமலர் மாலைநம் மன்னவர் நீதி முறைப்படியே படிமலர்
காவல்செய் வான்சென்று ளாரின்று பைந்தொடியே.
| 510 |
| 1665
| தலைமகள் கூதிர்ப்பருவங்கண்டு வருந்தல். மண்காவல்
கொண்டவர் பெண்காவ நீத்தனர் வாடிவந்தென் கண்காவல் கொண்ட திதற்கஞ்சி
யேதிருக் காழிப்பிரான் புண்காவல் கொண்ட மருப்புப் பொருப்புரி
போர்த்துபுமெய் யொண்காவல் கொண்ட தழனின்று மாட்ட மொழிந்திலனே.
| 511 |
| 1666
| தலைமகளைப் பாங்கியாற்றுவித்தல். மூவலை யாறு
திருப்புக லூர்குட மூக்குநணா மேவலை யாதரிப் பார்காழி சூழ்பொழின்
மென்பெடைகள் சேவலை யாதரிக் குந்திற னோக்கித் திரும்பினர்மண் காவலை
யாதரித் தார்வாடை தீர்ந்தது கார்மயிலே.
| 512 |
| 1667
| தூதிற்பிரிவு. தூதிற்பிரிவு தலைவன் பாங்கிக்கு
அறிவுறுத்தல். கடல்சூழ் புவியி னிருபெரு வேந்தர்
கலமொழித்த லடல்சூ ழரசர் குலத்துதித் தாருக் கறநெறிகை விடல்சூழ்
தராதெனை யாள்சண்பை நாதர் விரும்பருளான் மடல்சூழ் துழாய்க்கண்ண னுந்தூது
சென்றனன் மாமயிலே.
| 513 |
| 1668
| துணைவயிற்பிரிவு. பாங்கி தலைவிக்கு
அறிவுறுத்தல். கலிக்காம ருக்கும்வன் றொண்டர்க்கும் வந்த
கலாமறவார் கலிக்காழி நாத ரிடைநின்ற தேய்ப்பக் கறுத்துளத்தி கலிக்கா
சினியிற் பொருமிரு வேந்தர் கலப்புறுத்தக் கலிக்கா மருகழன் மன்னர்சென்
றாரின்று காரிகையே.
| 514 |
| 1669
| தலைமகள் முன்பனிப்பருவங்கண்டுவருந்தல். இருகா
வலர்வெம் பகைதணிப் பான்றுணிந் தெய்தியநம் மொருகா வலர்வந் திலர்வந்
ததுமுன் னுறுபனியே யருகா வலர்செறி யும்பொழிற் காழி யரனருள்பால் பருகா
வலர்திரு நீலகண் டத்தமிழ் பாடுவமே.
| 515 |
| 1670
| தலைமகளைப் பாங்கி ஆற்றுவித்தல். நீங்கா விருவர்
பகைதணித் தேநெடுந் தேர்கடவி நாங்கா முறுமன்னர் செங்கதிர் போல
நணுகினர்பார் வாங்கா வருள்கடை யேன்பாலும் வைத்தவம்
மான்சண்பைவா யேங்கா மெலியற்க முன்பனி செய்வதெ னேந்திழையே.
| 516 |
| 1671
| துணைவயிற்பிரிவு. தலைவன் பாங்கிக்கு
அறிவுறுத்தல். கூற்றா ருயிர்முன் குடித்தபொற் பாதன்
குளிர்புகலி யேற்றார் கொடியுடை யான்கயி லாயத் திளமயிலே மாற்றா ரமருண்
மெலியொரு வேந்தற்கு வான்றுணையாய்ப் போற்றா ரிருந்து மிறந்தவ ரேயிப்
புவியிடத்தே.
| 517 |
| 1672
| பாங்கி தலைவிக்கு அறிவுறுத்தல். குன்றார் வனமுலைக்
கோமள மெநின் கொழுநர்நண்பு பொன்றார் துணையெனப் போயின ராலிப்
பொழுதிகலி நின்றா ருறையும் புரமொரு மூவர் நிறைந்தபுர மன்றார்
முடிச்சண்பை யார்நகை நேருற்ற தையுறுமே.
| 518 |
| 1673
| தலைமகள் பின்பனிப்பருவங்கண்டு வருந்தல். கட்டார்
புனையுங் கருங்குழ லாய்நங் கணவர்தமை நட்டார் துயரந் தணிக்கச்சென்
றாரின்று நாமவர்க்கு விட்டார்கொ னந்துயர் தீர்ப்பவர் யார்சடை
மேன்மதியம் பெட்டார் புகலிப் பொழில்சூழ் வளைந்தது பின்பனியே.
| 519 |
| 1674
| தலைவி பாணனைப் பாசறைவிடுத்தல். கண்புடை யார்தரு
நீரோடு பீருங் கலந்தொருயான் பெண்புடை யார்சண்பை யுன்னாரில் வாடுதல்
பேசிடுக நண்புடை யார்தமைக் காப்பான் றுணிந்து நமைக்கைவிட்ட பண்புடை
யார்தங்கு பாசறை வாய்ச்சென்று பாணவின்றே.
| 520 |
| 1675
| தலைவன் பாணனை வினாதல். தீராத காத லுடைப்பாண
ரேநெடுஞ் சேரியொரீஇ வாராத நீரெங்கு வந்தீர் மதிக்கும்வல்
லாரறிவிற் காராத வின்னமு தன்னார்மின் னார்மெய் யமலர்சண்பை யோரா
தவரினென் சொன்னாள்பொன் னாணெழி லோரணங்கே.
| 521 |
| 1676
| தலைவனுக்குப் பாணன் கூறல். வரும்போது தண்டனிட்
டேன்விடை தாபெரு மாட்டியென்றே னரும்போது கொங்கை யமர்பாகன் காழியன்
னார்புகன்றார் சுரும்போது பண்பொலி சோலைநல் லூரர்
துணையிற்சென்று பெரும்போது நீட்டித்த லாலுயிர் நீட்டிக்கும்
பேறின்றென்றே.
| 522 |
| 1677
| தலைவன் பாசறைப் புலம்பல். தனிவந்து கூடு
மவர்க்கொளி யாம்பரன் சண்பையிற்பின் பனிவந்து கூடும் பொழுதுணர்ந்
தேங்கிப் பதைபதைத்திங் கினிவந்து கூடுங்கொ லென்றழு மேயெழு
மேவிழுமே நனிவந்து கூடு மெழிற்கொம்பு போன்ற நறுநுதலே.
| 523 |
| 1678
| பின்பனிப் பருவங் கண்டு வருந்திய தலைவியைத் தோழி
ஆற்றுவித்தல். தன்பனி மாமலர்த் தாட்டா மரையென்
றலைக்கணிவோன் நன்பனி மால்வரை நங்கைபங் காள னகுபுகலி யன்பனி மாசலம்
போன்மணித் தேரி னடைந்தனனிப் பின்பனி மாதரை சூழ்ந்தினி யாவதென் பெண்ணரசே.
| 524 |
| 1679
| பொருள்வயிற் பிரிவு. தலைவன் பாங்கிக்கு
அறிவுறுத்தல். அல்லற வாள்விட் டவிர்மணி மாட மளாம்புகலி நல்லற
வாணர் பிரமலிங் கேசர் நகுமருள்சால் சொல்லற வேதிய ராதியர்ச் சூழ்தரு
சோர்வொழிப்ப தில்லற மாமது பொன்னையல் லாதிய லாதணங்கே.
| 525 |
| 1680
| பொருள்வயிற் பிரிவு. பாங்கி தலைவிக்கு அறிவுறுத்தல்.
கல்லாரை யுட்குறி யார்முறி யார்பொழிற் கச்சியுள்ளார் வல்லாரை
மேன்மஞ்சு துஞ்சுதென் காழி மடமயிலே புல்லாரை வாட்டுநங் காவலர் யாவரும்
போற்றலின்றி யில்லாரை யெள்ளுவ ரென்றார் பொருள்குறித் தேகினரே.
| 526 |
| 1681
| தலைவி இளவேனிற் பருவங்கண்டு வருந்தல். மனவாசை
நாயிற் கடையேற் கொழித்து வழுத்தடியா ரினவாசை மேவவைத் தோன்காழி சூழ்பொழி
லின்றளிர்நந் தினவாசை போர்த்த திளவேனில் வந்திலர்
செல்வரின்னுந் தனவாசை யுற்றவர்க் கெவ்வாசை யுண்டுகொ றாழ்குழலே.
| 527 |
| 1682
| தோழிதலைவியை ஆற்றுவித்தல். பரவலர் தூய்வழி
பாடுசெய் யேற்கும் பதமளிப்பா ரரவலர் செஞ்சடை யார்காழி நாயக
ராரருளா லிரவல ரேத்த வினவளை யார்ப்ப விருநிதிசால் புரவலர் வந்தன
ராலிள வேனிற் பொலிவுணர்ந்தே.
| 528 |
| 1683
| தலைவன் தலைமகளது உருவுவெளிப்பாடு கண்டு
கூறல். பொன்னொன்று மேனியன் சீகாழி நாதன் புரிந்தசடை முன்னொன்று
பாதிப் பிறையு நிறையு முழுமதியும் கொன்னொன்று மேகமுங் கோபமுஞ் சாபமுங்
கொண்டுபொலி மின்னொன்று பார்க்குந் திசைதொறுந் தோன்றும் வியப்பிதுவே.
| 529 |
| 1684
| பாசறை முற்றி மீண்டு ஊர்வயின்வந்த தலைவன்
பாகற்குரைத்தல். ஈறென்ற தாதியொ டில்லான் புகலி யிகல்வலவா வாறென்ற
காலுழு தார்ப்புயத் தாயிவ் வவிர்மணித்தே ரேறென்ற நீயங் கிருக்குமுன்
னேயிங் கிறங்கு கென்றாய் மாறென்ற தீருநின் கைகாலென் றேயுண் மதித்தனனே.
| 530 |
| 1685
| தலைமகளோடு கூடியிருந்த தலைவன் கார்ப்பருவங் கண்டு
மகிழ்ந்துரைத்தல். அந்தா மரைமுகத் தாயிழை யார்த மலர்முலைக ணந்தா
தரத்தி னகன்மார் பழுந்திட நன்குதழீஇச் சந்தாபந் தீர்ந்து தழைத்தனம்
யாமினிச் சண்பையெங்கள் சிந்தா மணியருள் போற்பொழி வாழி செழுமுகிலே.
| 531 |