|
Home > Temples of India >
pADal peRRa sthalam
தலமர சிறப்புகள்மந்தாரைச் செடி
மந்தாரை
Bauhinia Purpurea, Linn.; Caesalpiniaceae.
நிறையுடை நெஞ்சுளும் நீருளும் பூவுளும்
பறையுடை முழவுளும் பலியுளும் பாட்டுளும்
கறையுடை மிடற்றண்ணல் கருதிய கானப்பேர்
குறையுடை யவர்கலாற் களைகிலார் குற்றமே.
- திருஞானசம்பந்தர்.
திருக்கானப்பேர் (காளையார்கோயில்), திருத்திலதைப்பதியிலும் தலமரமாக விளங்குவது மந்தாரை ஆகும். இது மணமுடைய
இரண்டாகப் பிரிந்த இலைகளையும், மஞ்சள் நிறமலர்களையும் உடைய சிறுசெடி வகையாகும். இதில் செந்நிற மலருடைய பெரிதாய் வளரும்
இனமும் காணப்படுகிறது. வீட்டுத் தோட்டங்களில் வளர்க்கப்படுகிறது. இலை, பூ, வேர், பட்டை ஆகியன மருத்துவக் குணம் கொண்டவை.
மந்தாரைப் பட்டை சதை, நரம்புகளைச் சுருக்கி குருதி, சீழ்க்கசிவுகளைக் கட்டுப்படுத்தக்கூடியவை, நோய் நீக்கி உடல் தேற்றும்
மருந்தாகப் பயன்படுகிறது; உடல் பலம் மிகுக்கும்.
|