|
Home > Shaiva Siddhanta > Thirumurai > Thirumurai Series
இருந்தும் இல்லாத உறுப்புக்களும் மனிதர்களும்
திருநாவுக்கரசர் தேவாரம்
தலம் : பொது
பண் : சாதாரி
நான்காம் திருமுறை
திருவங்கமாலை
திருச்சிற்றம்பலம்
கால்களாற் பயன் என் - கறைக்கண்டன் உறைகோயில்
கோலக் கோபுரக் கோகரணஞ் சூழாக் கால்களாற் பயன் என்? 4.9.9
திருச்சிற்றம்பலம்
thirunAvukkaracar thEvAram
thalam : common
paN : cAthAri
Fourth thirumuRai
thiruvangamAlai
thirucciRRambalam
kAlkaLAR payan en - kaRaikkaNDan uRaikOyil
kOlak kOpurak kOkaraNany cUzAk kAlkaLAR payan en? 4.9.9
thirucciRRambalam
Meaning:
What is the use of legs?
If they do not circumambulate the abode of the
stain throated Lord, the gOkarNa having beautiful pinnacles,
what is the use of legs?
பொருளுரை:
கால்கள் இருந்தும் பயன் என்ன?
கறையைக் கழுத்தின் அணிந்த பெருமானின் திருக்கோயிலாம்
அழகிய கோபுரங்கள் கொண்ட திருக்கோகரணத்தை வலம் செய்யாத
கால்கள் இருந்தும் பயன் என்ன?
Notes:
1. கோளில் பொறியில் குணமிலவே எண் குணத்தான்
தாளை வணங்காத் தலை - திருக்குறள்
சிவபெருமானுடைய திருவடிகளை வணங்கி வலம் வராத
கால்களும் வழிபடாத உறுப்புக்களும், போற்றாத வாழ்வும்
வீண் என்பதில் எந்த ஐயமும் இல்லை.
2. கோகரணம் - கன்னட நாட்டில் உள்ள தலம்.
சம்பந்தர், அப்பரால் பதிகம் பாடப்பெற்றது.
Back to ThirumuRai Series
Back to Shaiva Sidhdhantha Home Page
|