இறைவனுக்குச் சாத்தும் மலர்கள் எப்படி இருக்க வேண்டும்?

திருநாவுக்கரசர் தேவாரம் தலம் : திருக்கச்சி ஏகம்பம் பண் : காந்தாரம் நான்காம் திருமுறை திருச்சிற்றம்பலம் கைப்போது மலர் தூவிக் காதலித்து வானோர்கள் முப்போது முடிசாய்த்துத் தொழ நின்ற முதல்வனை அப்போது மலர் தூவி ஐம்புலனும் அகத்தடக்கி எப்போதும் இனியானை என்மனத்தே வைத்தேனே. 4.7.3 திருச்சிற்றம்பலம் thirunAvukkaracar thEvAram thalam : thirukkacci Ekambam paN : gAndhAram Fourth thirumuRai thirucciRRambalam kaippOthu malar thUvik kAthaliththu vAnOrkaL muppOthu muDi cAyththuth thoza n^inRa muthalvanai appOthu malar thUvi aimpulanum agaththaDakki eppOthum iniyAnai en manathhtE vaiththEnE. 4.7.3 thirucciRRambalam Meaning: The Prime, worshipped three times (of the day) by the celestials showering handful of buds and flowers fondly - Him - the Ever Sweet Lord, showering then bloomed flower controlling the five senses internally I have kept in my mind! பொருளுரை: கைகளில் அரும்பும் மலர்களும் கொண்டு தூவி, அன்பு மிகுந்து வானவர்கள் முப்பொழுதும் தலைவணங்கித் தொழ நின்ற முதல்வனை, அப்பொழுது மலர்ந்த மலர்கள் தூவி, ஐம்புலன்களையும் உள்ளே அடக்கி, எப்பொழுதும் இனிய சிவபெருமானை என் மனத்தில் வைத்தேனே! Notes: 1. அப்போது மலர் - இறைவனுக்குச் சாத்தும் மலர்கள் பழையனவாக இல்லாமல் அப்பொழுது மலர்ந்தனவாகவும் தூயனவாகவும் உள்ளதே சிறப்பு. எனவே தான் திருக்கோயில்களில் நந்தவனத்திலும், வீடுகளில் தோட்டத்திலும் அப்பொழுது மலர்ந்த புதிய மலர்கள் இறைவனுக்கு இனியவை. 2. போது - அரும்பு.

< PREV <
ஆரூர் அமர்ந்த அம்மான்
Table of Contents > NEXT >
எடுத்தானைத் தடுத்தானை

Back to ThirumuRai Series
Back to Shaiva Sidhdhantha Home Page