|
Home > Shaiva Siddhanta > Thirumurai > Thirumurai Series
உருவ வழிபாட்டால் என்ன பயன்?
திருஞானசம்பந்தர் தேவாரம்
தலம் : திருந்து தேவன் குடி
பண் : கொல்லி
மூன்றாம் திருமுறை
திருச்சிற்றம்பலம்
விண்ணுலாவும் நெறி வீடு காட்டும் நெறி
மண்ணுலாவும் நெறி மயக்கம் தீர்க்கும் நெறி
தெண்ணிலா வெண்மதி தீண்டு தேவன் குடி
அண்ணல் ஆனேறுடை அடிகள் வேடங்களே. 3.25.5
திருச்சிற்றம்பலம்
thirunyAnacamban^thar thEvAram
thalam : thirundhu dhEvan kuDi
paN : kolli
Third thirumuRai
thirucciRRambalam
viNNulAvum n^eRi vIDu kATTum n^eRi
maNNulAvum n^eRi mayakkam thIrkkum n^eRi
theNNilA veNmathi thINDu dhEvan kuDi
aNNal AnERuDai aDikaL vEDaN^gaLE. 3.25.5
thirucciRRambalam
Meaning:
Way to wander in the heavens;
Way that shows the liberation;
Way that the earth follows;
Way that demystifies;
That are the Forms of the Reverend,
Who has the eldest bull,
Who is at the thirundhudhEvankuDi
touched by the shiny white moon!
பொருளுரை:
விண்ணிலே உலவச் செய்யும் நெறியும்,
முத்திப்பேற்றை அருளும் நெறியும்,
பூமி இயங்கும் நெறியும்,
குழப்பத்தைத் தெளிவிக்கும் நெறியும் ஆவது
ஒளிமிக்க வெண்மதி தீண்டுகின்ற திருந்துதேவன்குடியில்
இருக்கின்ற எல்லாவற்றிற்கும் மூத்ததான
எருதினை உடைய அடிகளாகிய சிவபெருமானின்
திருவடிவங்களாகும்.
Notes:
1. உருவமற்ற பரசிவமாகிய தன்னிலையில் உள்ள இறைவன்,
உயிர்கள் வழிபட்டு உய்யும் பொருட்டு சோதிக்குறியாக,
இலிங்கமாக, அருவுருவாக சதாசிவமூர்த்தமாய் அமைகின்றார்.
இன்னும் அவ்வரிய பெருமான் அன்பர்களுக்கு எளியவனாகத்
தன்னைக் காட்டுவித்த திருவடிவங்களே மாகேச்சுர மூர்த்தங்கள்.
(விளக்கம் காண http://www.shaivam.org/siddhanta/maahesh.html )
பெருமானின் பெருங்கருணை வடிவங்களான இவை நம்மை
உய்விக்கும் பேரின்பம் தரும் என்பதை ஞானமுணர்ந்தார்
இத்திருப்பதிகத்தில் அறிவுறுத்துகிறார்.
2. அண்ணல் ஆனேறு - சிவபெருமானின் எருது அறம் ஆகும்.
இறைவனின் செயல்கள் என்றும் அறத்தை நிலைநிறுத்துவதாக
அமைவன. எனவே அறமே இறைவனுக்கு ஊர்தியாக அமைந்தது.
ஒ. திறந்தான் காட்டி அருளாய் என்று தேவர் அவர் வேண்ட
அறந்தான் காட்டி அருளிச்செய்தார் அண்ணாமலையாரே - சம்பந்தர்.
3. தெண்மை - ஒளி.
Back to ThirumuRai Series
Back to Shaiva Sidhdhantha Home Page
|