|
Home > Temples of India > Padal Perra Thalangal
திருமணஞ்சேரி
இறைவர் திருப்பெயர் : அருள்வள்ளல் நாயகர், உத்வாக நாதசுவாமி, கல்யாண சுந்தரேஸ்வரர்
இறைவியார் திருப்பெயர் : யாழினும் மென்மொழியம்மை, கோகிலாம்பாள்
தல மரம் :
தீர்த்தம் : சப்த சாகர தீர்த்தம்
வழிபட்டோர் : மன்மதன், ஆமை
தேவாரப் பாடல்கள் : சம்பந்தர் (அயிலாரும் அம்பதனாற்),
அப்பர் (பட்ட நெற்றியர் பாய்புலி)
தல வரலாறு
- ஈசன், உமாதேவியைத் திருமணம் புரிந்த தலம்.எனவே இப் பெயர் பெற்றது.
- ஆமை, பூஜித்து.மனித உருப்பெற்றது.
சிறப்புக்கள்
- திருமணப்பேறு, மகப்பேறு ஆகியவற்றுக்குப் பிரார்த்தனைத் தலமாக விளங்குகிறது.
- சோழர் காலக் கல்வெட்டுகள் 28 படி எடுக்கப்பட்டுள்ளன.
அமைவிடம்
மாநிலம் : தமிழ் நாடு
இது, கீழைத் திருமணஞ்சேரி எனப்படுகிறது. மயிலாடுதுறை-கும்பகோணம் இரயில்பாதையில், குத்தாலம் இரயில் நிலையத்திற்கு வடகிழக்கே 6கீ.மீ. தூரத்தில் உள்ளது. மயிலாடுதுறையிலிருந்து பஸ் வசதி உள்ளது.
|