திருஆவடுதுறை (திருவாவடுதுறை)

இறைவர் திருப்பெயர்	: 1. மாசிலாமணி ஈஸ்வரர், கோமுத்தீஸ்வரர்  (மூலவர்)                                                  
                           2. அணைத்தெழுந்தநாயகர் (உமாதேவியை அணைத்தெழுந்த கோலமாக இருப்பவர்.
			திருவிழாவின் முடிவில் கோமுத்தி தீர்த்தம் கொடுத்தருளுபவரும் இவரே.) 
3. செம்பொன் தியாகர் (திருவிழா காலத்தில் திருத்தேரில் எழுந்தருள்பவர்) இறைவியார் திருப்பெயர் : ஒப்பிலா முலையம்மை, அதுல்ய குஜாம்பிகை தல மரம் : அரசு (இது, படர்ந்துள்ளதால், படர் அரசு எனப்படுகிறது.) தீர்த்தம் : கோமுக்தி தீர்த்தம், பத்ம தீர்த்தம், கைவல்ய தீர்த்தம் வழிபட்டோர் : அம்பிகை, தரும தேவதை, முசுகுந்தச் சக்கரவர்த்தி, திருமூலர், போகர் தேவாரப் பாடல்கள் : சம்பந்தர் ( இடரினும் தளரினும்), அப்பர்( 1. மாயிரு ஞால மெல்லாம் மலரடி, 2. மஞ்சனே மணியுமானாய், 3. நிறைக்க வாலியள், 4. நம்பனை நால்வேதங்கரை கண்டானை, 5. திருவேயென் செல்வமே), சுந்தரர், திருமூலர் திருமந்திரம்(மூவாயிரம் பாடல்கள்), சேந்தனார் திருவிசைப்பா

தல வரலாறு

  • அம்பிகை, பசு வடிவத்தில் இறைவனை வழிபட்ட தலம். எனவே, ஆவடுதுறையாயிற்று(ஆ-பசு) .
  • தரும தேவதை வழிபட்டு, இத் தல இறைவனின் ரிஷப வாகனமாகும் பேறுபெற்றது. மேலும் சந்நிதியில்
    அரசமரத்தின் நிழலில் கோவில்கொண்டிருக்கும் பேறும் பெற்றது.
  • தலமரமான படர் அரசின் கீழ், தேவர்களும் முனிவர்களும் வேண்டிட, இறைவன் தாண்டவம் புரிந்தமையால்,
    இது போதி அம்பல சபை எனப்படுகிறது(போதி-அரசமரம்).
  • நந்தி தருமநந்திதேவராவார்.
  • முசுகுந்தச் சக்கரவர்த்திக்கு, இறைவன் இத் தலத்தைத் திருவாரூராகவும், தம்மைத் தியாகேசராகவும்
    காட்டியருளியது. தியாகேசருக்கு இங்கு தனிச் சந்நிதி உள்ளது. (தியாகர்-செம்பொன் தியாகர்:
    ஆசனம்-வீரசிங்காசனம்; நடனம்-சுந்தர நடனம்.)
  • திருமூலரைத் தடுத்தாட்கொண்டு ஆகமசாரமாகிய திருமந்திரத்தை வெளிப்படுத்தி, இறைவன் திருவருள் புரிந்த பதி.
  • போகர் முதலிய சித்தர்களுக்கு அட்டமாசித்தியை அருளிய பதி.
  • முசுகுந்த மன்னனுக்கு மகப்பேறு அளித்த பதி.
  • சம்பந்தர் பெருமான் தமது தந்தையாரின் வேள்விக்கு, இறைவனிடம் பொற்கிழி பெற்ற பதி.
  • திருமாளிகைத் தேவர் அற்புதங்களை நிகழ்திய பதி.

சிறப்புக்கள்

  • சேரமான் பெருமாள் வழிபட்டத் தலம்.
  • திருக் கயிலாய பரம்பரையில் சிவஞானதேசிகராய் எழுந்தருளியுள்ள ஸ்ரீலஸ்ரீ நமச்சிவாய மூர்த்திகளால்
    நிறுவப்பெற்ற பழமையும் பெருமையும் வாய்ந்த திருமடாலயம் திகழும் பதி.
  • பிற்கால சோழர்கள் மற்றும் பாண்டியர் கால கல்வெட்டுகள் உள்ளன.

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு
இது, நரசிங்கன்பேட்டை இரயில்நிலையத்திற்குத் தென்கிழக்கே 2கீ.மீ. தூரத்தில் உள்ளது.மயிலாடுதுறை-கும்பகோணம்
பஸ் பாதையில் இத் தலம் உள்ளது. மயிலாடுதுறையிலிருந்தும், கும்பகோணத்திலிருந்தும் பஸ் வசதி உள்ளது.

< PREV <
காவிரி தென்கரை 35வது தலம்
கோழம்பம்
Table of Contents > NEXT >
காவிரி தென்கரை 37வது தலம்
திருத்துருத்தி