logo

|

Home >

Scripture >

scripture >

Tamil

வடமொழி சுலோகங்களில் சிவமஹிமையும் அடியார் மஹிமையும்

தொகுப்பும் தமிழ் விளக்கமும்:

தர்மப்ரவசன ரத்னம், உத்தம உபன்யாசக சக்ரவர்த்தி

பிரம்மஶ்ரீ மஞ்சகுடி கே. ராஜகோபால சாஸ்திரிகள்

 

[சிவஞான பூஜா மலர் – அக்ஷய, பிரபவ - விபவ ஆண்டு - (1986, 1987- 1988)

பிரசுரம்: ஆங்கீரஸ S. வேங்கடேச சர்மா, மேலமாம்பலம், சென்னை – 600 033]

 


      சைவம் விநா நாந்யதிஹாஸ்தி தைவதம்

              தூலோபமேஷு அன்யமதேஷ்விதம் மஹத் |

       சைவம் மதம் சோத்தமமித்யுபாஸ்யதாம்

              மந்த்ரேஷு பஞ்சாக்ஷர மந்த்ர உத்தம: || 1 ||

 

1.     சிவத்தைத் தவிர இந்த உலகில் வேறு தெய்வம் இல்லை. சிவமதத்தை வேறு மதங்கள் நோக்கும்போது அவை தங்களை இலவம் பஞ்சுக்கு ஒப்பான நிலையை அடைந்ததாக எண்ணி சிவமதத்தில் ஒடுங்கும். எனவே சிவமதம் தான் உத்தமம். மந்திரங்களில் பஞ்சாக்ஷரம்தான் உத்தமம். மற்ற எந்த மதமும் இலவம் பஞ்சுக்குச் சமானமாகும். (சிவமதமோ மேருமலை போன்றதாகும்).

       உபாஸ்ய ஏகோதிபதி: பசூனாம்

              ததீய பக்தாச்ச ஸமர்ச்சநீய: |

       ப்ரீத: சிவ: பக்த ஸபர்யயாஸ்யாத்

              சிவப்ரஸாதேன கசம் தரந்தி || 2 ||

 

2.     இந்த உலகில் உபாஸிக்க வேண்டிய தெய்வம் ஒன்றே தான். அவர்தான் ஜகத்ரக்ஷகர். அவரிடம் பக்தி செய்யும் உத்தமர்களின் உள்ளத்தில் அவர் இருப்பதால் சிவபக்தர்களை நாம் பூஜித்தால் சிவ பக்தர்களையும் சிவ பெருமானையும் பூஜித்த பலன் கிடைக்கும். சிவ பக்தர்களின் மனம் ஸந்தோஷப்பட்டால் சிவபெருமான் பரம்ப்ரீதி அடைவார். அதனால் சிவப்ரஸாதம் கிடைக்கும். சிவ ப்ரஸாதத்தால் ஸகலமான துன்பங்கள் துக்கம், தரித்திரம் யாவும் விலகும். ஷேமம் அடையலாம்.

       யேன கேனாபி நியமாத் பூஜயந்தி மஹேச்வரம் |

       தே தன்யா: சங்கர: தேஷாம் அசிரேண ப்ரஸீததி || 3 ||

 

       3.     ஏதேனும் ஒரு நியமப்படி (அதாவது சிவதர்சனம், சிவபூஜை, செய்த பிறகே ஜலம் அருந்துவது, சிவபூஜையில் வில்வம் வைத்துப் பூஜித்த பிறகு தான் சாப்பிடுவது இவை போன்ற ஏதேனும் நியமங்கள்) சிவபூஜை செய்பவர்களே தன்யர்களாவார்கள். அவர்களிடம் சங்கரர் விரைவில் மகிழ்ச்சியடைந்து அருள் பாலிக்கிறார். (அவர்கள் சீக்கிரம் சிவப்ரஸாதம் பெற்று க்ஷேமம் அடைவார்கள்).

 

துர்லபா சாங்கரீ பக்தி: சிவபக்தாச்ச துர்லபா: |

       துர்லபம் புவி ஜந்தூகாம் தன்மனோரத பூரணம் || 4 ||

 

4.     இந்த உலகில் மனிதனாகப் பிறப்பதே துர்லபம். அதிலும் அறிவு படைத்து அவ்வறிவினால் சங்கர பக்தி வருவது துர்லபம். இவ்வுலகில் சிவ பக்தர்களைக் காண பேரவாக் கொள்ள வேணும். ஏன்? சிவபக்தர்கள் கிடைக்கமாட்டார்கள். அவர்களின் தரிசனம் சிவ தரிசனம் போன்றதே. நமக்கு அந்த பக்தி வருவதும் அரிதே. அவர்கள் மனதை அறிந்து பூஜித்தால் க்ஷேமம் அடைந்தே தீருவோம்.

       சிரஸா சிவபக்தானாம் பாதாம்புஜ ரஜ: கணான் |

       வந்தாமஹே வயம் நித்யம் வாஸனா த்வாந்த பாஸ்கரான் || 5 ||

 

5.     சிரஸ்ஸினால் சிவ பக்தர்களின் பாத தூளியை தினம் வணங்கி வருபவர்களுக்கு கெட்டவாஸனையினால் வரும் பாவங்களை இருளைச் சூரிய ஒளி விரட்டுவது போலப் போக்கிய விடும். எனவே நாமும் தினமும் சிவ பக்தர்களின் பாத தூளியை வணங்குவோம்.

       பிந்தந்தி சைலான் உததீன் பிபந்தி

              வ்யத்யாஸயந்தி க்ஷிதிமந்தரிக்ஷம் |

       த்ருணீக்ருத ப்ரஹ்ம புரந்தராணாம்

              கிம் துஷ்கரம் சங்கர கிங்கராணாம் || 6 ||

                               

6.     சிவ பக்தர்கள் மலையைத் தூளாக்குவார்கள். சமுத்திர நீரைக் குடித்து விடுவார்கள். பூமியையும் ஆகாயத்தையும் மாற்றி அமைப்பார்கள். பிரமம் விஷ்ணு இந்திர பதங்கள் சிவபக்தர்களுக்குத் துரும்புக்குச் சமானம். எனவே சிவ பக்தர்களால் முடியாதது என்ன இருக்கிறது?

சிவம்.


Related Content