logo

|

Home >

Scripture >

scripture >

Tamil

திருவருட்பா அகவல் மற்றும் திருவொற்றியூர் வடிவுடைமாணிக்க மாலை

இராமலிங்க அடிகள் (வள்ளலார்) அருளிய

திருவொற்றியூர் வடிவுடைமாணிக்க மாலை

Thiruvarutpa Akaval & Thiruvotriyur Vadivudaimanikka Maalai of Ramalinga Adikal (Vallalar)


திருஅருட்பா அகவல்
இராமலிங்க அடிகள் (வள்ளலார்) அருளியது

அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ் ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ் ஜோதி

அருட்பெருஞ் ஜோதி அகவல்
=========================

அருட்பெருஞ் ஜோதி யருட்பெருஞ் ஜோதி
அருட்பெருஞ் ஜோதி யருட்பெருஞ் ஜோதி

அருட்சிவ நெறிசாரருட்பெருஞ்ஜோதி
அருட்சிவ பதியாமருட்பெருஞ்ஜோதி

ஆகம முடிமேல் ஆரண முடிமேல்
ஆகநின் றோங்கிய வருட்பெருஞ்ஜோதி

இகநிலைப் பொருளாய்ப் பரநிலைப் பொருளாய்
அகமறப் பொருந்திய வருட்பெருஞ்ஜோதி

இனமின்றிகபரத்திரண்டின்மேற்பொருளாய்
ஆனலின்றோங்கிய வருட்பெருஞ்ஜோதி .10

உரைமனங் கடந்த வொருபெருவெளிமேல்
அரைசுசெய் தோங்கு மருட்பெருஞ்ஜோதி

ஊக்கமு முணர்ச்சியுமொளிதரு மாக்கையும்
ஆக்கமு மருளிய வருட்பெருஞ்ஜோதி

எல்லையில் பிறப்பெனு மிருங்கடல் கடத்தியென்
அல்லலை நீக்கிய வருட்பெருஞ்ஜோதி

ஏறா நிலைமிசை யேற்றியென் றனக்கே
ஆறாறு காட்டிய வருட்பெருஞ்ஜோதி

ஐயமுந்தி஡஢பு மறுத்தெனதுடம்பினுள்
ஐயமு நீக்கிய வருட்பெருஞ்ஜோதி 20

ஒன்றென விரண்டென வொன்றிரண்டெனவிவை
யன்றென விளங்கிய வருட்பெருஞ்ஜோதி

ஓதாதுணர்ந்திட வொளியளித்தெனக்கே
ஆதாரமாகிய வருட்பெருஞ்ஜோதி

ஒளவியமாதி யோராறுந் தவிர்த்தபேர்
அவ்வியல் வழுத்து மருட்பெருஞ்ஜோதி

திருநிலைத் தனிவெளி சிவவெளி யெனுமோர்
அருள்வெளிப் பதிவள ரருட்பெருஞ்ஜோதி

சுத்தசன் மார்க்க சுகத்தனிவெளியெனும்
அத்தகையச் சிற்சபை யருட்பெருஞ்ஜோதி 30

சுந்தமெஞ்ஞான சுகோதய வெளியெனு
அத்துவிதச்ச்பை யருட்பெருஞ்ஜோதி

துயெகலாந்த சுகந்தரு வெளியெனும்
ஆயசிற் சபையி லருட்பெருஞ்ஜோதி

ஞானயோகாந்த நடத்திருவெளியெனும்
ஆனியில் சிற்சபை யருட்பெருஞ்ஜோதி

விமல போதந்தமா மெய்ப்பொருள்வெளியெனும்
அமல சிற்சபையி லருட்பெருஞ்ஜோதி

பொ஢ய நாதந்தப் பெருநிலைவெளியெனும்
அ஡஢யசிற்றம்பலத் தருட்பெருஞ்ஜோதி 40

சுத்தவேதாந்தத் து஡஢யமேல்வெளியெனும்
அத்தகு சிற்சபை யருட்பெருஞ்ஜோதி

சுத்த சித்தாந்த சுகப்பெருவெளியெனும்
அத்தனிச் சிற்சபை யருட்பெருஞ்ஜோதி

தகரமெய்ஞ்ஞானத் தனிப்பெருவெளியெனும்
அகர நிலைப்பதி யருட்பெருஞ்ஜோதி

தத்துவாதீத தனிப்பொருள் வெளியெனும்
அத்திருவம்பலத் தருட்பெருஞ்ஜோதி

சச்சிதானந்தத் தனிப்பரவெளியெனும்
அச்சிய லம்பலத் தருட்பெருஞ்ஜோதி 50

சாகாக் கலைநிலை தழைத்திடுவெளியெனும்
ஆகாயத் தொளி ரருட்பெருஞ்ஜோதி

காரண கா஡஢யங் காட்டிடு வெளியெனும்
ஆரணச் சிற்சபை யருட்பெருஞ்ஜோதி

ஏக மனேக மெனப்பகர் வெளியெனும்
ஆகமச் சிற்சபை யருட்பெருஞ்ஜோதி

வேதா கமங்களின் விளைவுகட்கெல்லாம்
ஆதாரமாஞ்சபை யருட்பெருஞ்ஜோதி

என்றாதிய சுடர்க் கியனிலையாயது
வன்றாந்திருச்சபை யருட்பெருஞ்ஜோதி 60

சமயங் கடந்த தனிப்பொருள் வெளியாய்
அமையுந்திருச்சபை யருட்பெருஞ்ஜோதி

முச்சுடர் களுமொளி முயங்குற வளித்தருள்
அச்சுடராஞ்சபை யருட்பெருஞ்ஜோதி

து஡஢யமுங்கடந்த சுகபூரணந்தரும்
அ஡஢யசிற்றம்பலத் தருட்பெருஞ்ஜோதி

எவ்வகைச் சுகங்களு மினிதுற வளித்தருள்
அவ்வகைச் சிற்சபை யருட்பெருஞ்ஜோதி

இயற்கையுண்மை யதாயியற்கையின்பமுமாம்
அயர்ப்பிலாச் சிற்சபை யருட்பெருஞ்ஜோதி 70

சாக்கிரா தீதத் தனிவெளியாய்நிறை
வாக்கிய சிற்சபை யருட்பெருஞ்ஜோதி

சுட்டுதற் கா஢தாஞ் சுகாதீத வெளியெனும்
அட்டமேற் சிற்சபை யருட்பெருஞ்ஜோதி

நவந்தவிர் நிலைகளு நண்ணுமோர் நிலையாய்
அவந்தவிர் சிற்சபை யருட்பெருஞ்ஜோதி

உபயபக் கங்களு மொன்றெனக் காட்டிய
அபயசிற் சபையி லருட்பெருஞ்ஜோதி

சேகர மாம்பல சித்தி நிலைக்கெலாம்
ஆகர மாஞ்சபை யருட்பெருஞ்ஜோதி 80

மனாதிகட் கா஢ய மதாதீத வெளியாம்
அனாதி சிற்சபையி லருட்பெருஞ்ஜோதி

ஓதிநின்றுணர்ந்துணர்ந்துணர்தற்கா஢தாம்
ஆதிசிற்சபையி லருட்பெருஞ்ஜோதி

வாரமு மழியா வரமுந் தருந்திரு
வாரமுதாஞ் சபை யருட்பெருஞ்ஜோதி

இழியாப் பெருநல மெல்லா மளித்தருள்
அழியாச் சிற்சபை யருட்பெருஞ்ஜோதி

கற்பம் பலபல கழியுனு மழிவுறா
அற்புதந் தருஞ்சபை யருட்பெருஞ்ஜோதி 90

எனைத்துந் துன்பிலா வியலளித்தெண்ணிய
வனைத்துந் தருஞ்சபை யருட்பெருஞ்ஜோதி

பாணிப்பிலதாய்ப் பரவினோர்க் கருள்பு஡஢
ஆணிப் பொனம்பலத் தருட்பெருஞ்ஜோதி

எம்பல மெனத்தொழு தேத்தினோர்க் கருள்பு஡஢
அம்பலத்தாடல்செய் யருட்பெருஞ்ஜோதி

தம்பர ஞான சிதம்பர மெனுமோர்
அம்பரத் தோங்கிய அருட்பெருஞ்ஜோதி

எச்சபை பொதுவென வியம்பின ரறிஞர்கள்
அச்சபை யிடங்கொளு மருட்பெருஞ்ஜோதி ..100

வாடுதனீக்கிய மணிமன் றிடையே
ஆடுதல் வல்ல வருட்பெருஞ்ஜோதி

நாடகத் திருச்செய நவிற்றிடு மொருபே
ராடகப் பொதுவொளி ரருட்பெருஞ்ஜோதி

கற்பனை முழுவதுங் கடந்தொளி தருமோர்
அற்புதச் சிற்சபை யருட்பெருஞ்ஜோதி

இன்றநற் றாயினு மினிய பெருந்தய
வான்றசிற் சபையி லருட்பெருஞ்ஜோதி

இன்புறு நானுளத் தெண்ணியாங் கெண்ணியாங்
கன்புறத் தருசபை யருட்பெருஞ்ஜோதி ..110

எம்மையு மென்னைவிட்டிறையும் பி஡஢யா
தம்மையப் பனுமா மருட்பெருஞ்ஜோதி

பிறிவுற் றறியாப் பெரும்பொருளாயென்
னறிவுக் கறிவா மருட்பெருஞ்ஜோதி

சாதியு மதமுஞ் சமயுமுங் காணா
ஆதிய நாதியா மருட்பெருஞ்ஜோதி

தநுகர ணாதிக டாங்கடந்தறியுமோர்
அனுபவ மாகிய வருட்பெருஞ்ஜோதி

உனுமுணர் வுணர்வா யுணர்வெலாங் கடந்த
அநுபவா தீத வருட்பெருஞ்ஜோதி ..120

பொதுவுணர் வுணரும் போதலாற் பி஡஢த்தே
அதுவெனிற் றோன்றா வருட்பெருஞ்ஜோதி

உளவினி லறிந்தா லொழியமற் றளக்கின்
அளவினி லளவா வருட்பெருஞ்ஜோதி

என்னையும் பணிகொண் டிறவா வரமளித்
தன்னையு ஡வந்த வருட்பெருஞ் ஜோதி

ஓதியோ தாம ஡றவெனக் களித்த
ஆதியீ றில்லா வருட்பெருஞ் ஜோதி

படியடி வான்முடி பற்றினுந் தோற்றா
அடிமுடி யெனுமோ ரருட்பெருஞ் ஜோதி ..130

பவனத் தினண்டப் பரப்பினெங் கெங்கும்
அவனுக் கவனா மருட்பெருஞ் ஜோதி

திவளுற் றவண்டத் திரளினெங் கெங்கும்
அவளுக் கவளா மருட்பெருஞ் ஜோதி

மதனுற் றவண்ட வரைப்பினெங் கெங்கும்
அதனுக் கதுவா மருட்பெருஞ் ஜோதி

எப்பா ஡மாய்வெளி யெல்லாங் கடந்துமேல்
அப்பா ஡மாகிய வருட்பெருஞ் ஜோதி

வல்லதா யெல்லா மாகியெல் லாமும்
அல்லதாய் விளங்கு மருட்பெருஞ் ஜோதி ..140

எப்பொருள் மெய்ப்பொரு ளென்பர் மெய்கண்டோ ர்
அப்பொரு ளாகிய அருட்பெருஞ் ஜோதி

தாங்ககி லாண்ட சராசர நிலைநின்
றாங்குற விளங்கு மருட்பெருஞ் ஜோதி

சத்தர் களெல்லாந் தழைத்திட வகம்புறத்
தத்திசை விளங்கு மருட்பெருஞ் ஜோதி

சத்திக ளெல்லாந் தழைக்கவெங் கெங்கும்
அத்தகை விளங்கு மருட்பெருஞ் ஜோதி

முந்துறு மைந்தொழின் மூர்த்திகள் பலர்க்கும்
ஐந்தொழி லளிக்கு மருட்பெருஞ் ஜோதி ..150

பொ஢தினும் பொ஢தாய்ச் சிறிதினுஞ் சிறிதாய்
அ஡஢தினு மா஢தா மருட்பெருஞ் ஜோதி

காட்சியுங் காணாக் காட்சியு மதுதரும்
ஆட்சியு மாகிய வருட்பெருஞ் ஜோதி

இன்புறு சித்திக ளெல்லாம் பு஡஢கவென்
றன்புட னெனக்கரு ளருட்பெருஞ் ஜோதி

இறவா வரமளித் தென்னைமே லேற்றிய
அறவா ழியாந்தனி யருட்பெருஞ் ஜோதி

நானந் தமில்லா நலம்பெற வெனக்கே
ஆனந் தநல்கிய வருட்பெருஞ் ஜோதி ..160

எண்ணிய வெண்ணியாங் கியற்றுக வென்றெனை
யண்ணியுள் ளோங்கு மருட்பெருஞ் ஜோதி

மேயினை மெய்ப்பொருள் விளங்கினை நீயது
வாயினை யென்றரு ளருட்பெருஞ் ஜோதி

எண்ணிற் செழுந்தே னினியதெள் ளமுதென
அண்ணித் தினிக்கு மருட்பெருஞ் ஜோதி

சிந்தையிற் றுன்பொழி சிவம்பெறு கெனத்தொழி
லைந்தையு மெனக்கரு ளருட்பெருஞ் ஜோதி

எங்கெங் கிருந்துயி ரெதெது வேண்டினும்
அங்கங் கிருந்தரு ளருட்பெருஞ் ஜோதி ..170

சகமுதற் புறப்புறந் தங்கிய வகப்புறம்
அகம்புற முற்றுமா மருட்பெருஞ் ஜோதி

சிகரமும் வகரமுஞ் சேர்தனி யுகரமும்
அகரமு மாகிய வருட்பெருஞ் ஜோதி

உபரச வேதியி னுபயமும் பரமும்
அபரமு மாகிய வருட்பெருஞ் ஜோதி

மந்த்ண மிதுவென மறுவிலா மதியால்
அந்தணர் வழுத்து மருட்பெருஞ் ஜோதி

எம்புயக் கனியென வெண்ணுவா ஡஢தய
வம்புயத் தமர்ந்த வருட்பெருஞ் ஜோதி ..180

செடியறுத் தேதிட தேகமும் போகமும்
அடியருக் கேதரு மருட்பெருஞ் ஜோதி

துன்புறுத் தொருசிவ து஡஢ய சுகந்தனை
அன்பருக் கேதரு மருட்பெருஞ் ஜோதி

பொதுவது சிறப்பது புதியது பழயதென்
றதுவது வாய்த்திக ழருட்பெருஞ் ஜோதி

சேதனப் பெருநிலை திகழ்தரு மொருபரை
யாதனத் தோங்கிய வருட்பெருஞ் ஜோதி

ஓமயத் திருவுரு வுவப்புட னளித்தெனக்
காமயத் தடைதவி ரருட்பெருஞ் ஜோதி ..190

எப்படி யெண்ணிய தென்கருத் திங்கெனக்
கப்படி யருளிய வருட்பெருஞ் ஜோதி

எத்தகை விழைந்தன வென்மன மிங்கெனக்
கத்தகை யருளிய வருட்பெருஞ் ஜோதி

இங்குறத் தி஡஢ந்துள மிளையா வகையெனக்
கங்கையிற் கனியா மருட்பெருஞ் ஜோதி

பாருயப் பு஡஢கெனப் பணித்தெனக் கருளியென்
ஆருயிர்க் குள்ளொளி ரருட்பெருஞ் ஜோதி

தேவியுற் றொளிர்தரு தி஡஢வுரு வுடனென
தாவியிற் கலந்தொளி ரருட்பெருஞ் ஜோதி ..200

எவ்வழி மெய்வழி யென்பவே தாகமம்
அவ்வழி யெனக்கரு ளருட்பெருஞ் ஜோதி

வையமும் வானமும் வாழ்த்திட வெனக்கருள்
ஐயறி வளித்த வருட்பெருஞ் ஜோதி

சாமா றனைத்துந் தவிர்த்திங் கெனக்கே
ஆமா ரருளிய வருட்பெருஞ் ஜோதி

சத்திய மாஞ்சிவ சத்தியை யீந்தெனக்
கத்திறல் வளர்க்கு மருட்பெருஞ் ஜோதி

சாவா நிலையிது தந்தன முனக்கே
ஆவா வெனவரு ளருட்பெருஞ் ஜோதி ..210

சாதியு மதமுஞ் சமயமும் பொய்யென
ஆதியி ஡ணர்த்திய வருட்பெருஞ் ஜோதி

மயர்ந்திடேல் சிறிது மனந்தளர்ந் தஞ்சேல்
அயர்ந்திடே லென்றரு ளருட்பெருஞ் ஜோதி

தேசுறத் திகழ்தரு திருநெறிப் பொருளியல்
ஆசறத் தொ஢த்த வருட்பெருஞ் ஜோதி

காட்டிய வுலகெலாங் கருணையாற் சித்தியின்
ஆட்டியல் பு஡஢யு மருட்பெருஞ் ஜோதி

எங்குல மெம்மின மென்பதொண் ணு஦ற்றா
றங்குல மென்றரு ளருட்பெருஞ் ஜோதி ..220

எம்மத மெம்மிறை யென்ப வுயிர்த்திறள்
அம்மத மென்றரு ளருட்பெருஞ் ஜோதி

கூறிய கருநிலை குலவிய கீழ்மேல்
ஆறிய லெனவுரை யருட்பெருஞ் ஜோதி

எண்டர முடியா திலங்கிய பற்பல
அண்டமு நிறைந்தொளி ரருட்பெருஞ் ஜோதி

சாருயிர்க் கெல்லாந் தாரக மாம்பரை
யாருயிர்க் குயிரா மருட்பெருஞ் ஜோதி

வாழிநீடுழீ வாழியென் றோங்குபே
ராழியை யளித்த வருட்பெருஞ் ஜோதி ..230

மாய்ந்தவர் மீட்டும் வருநெறி தந்திதை
யாய்ந்திடென் றுரைத்த வருட்பெருஞ் ஜோதி

எச்ச நினக்கிலை யெல்லாம் பெறுகவென்
அச்சந் தவிர்த்தவென் னருட்பெருஞ் ஜோதி

நீடுக நீயே நீளுல கனைத்தும்நின்
றாடுக வென்றவென் னருட்பெருஞ் ஜோதி

முத்திறல் வடிவமு முன்னியாங் கெய்துறு
மத்திற லெனக்கரு ளருட்பெருஞ் ஜோதி

மூவகைச் சித்தியின் முடிபுகள் முழுவதும்
ஆவகை யெனக்கரு ளருட்பெருஞ் ஜோதி ..240

கருமசித் திகளின் கலைபல கோடியும்
அரசுற வெனக்கரு ளருட்பெருஞ் ஜோதி

யோகசித் திகள்வகை யுறுபல கோடியும்
ஆகவென் றெனக்கரு ளருட்பெருஞ் ஜோதி

ஞானசித் தியின்வகை நல்வி஡஢ வனைத்தும்
ஆனியின் றெனக்கரு ளருட்பெருஞ் ஜோதி

புடையுறு சித்தியின் பொருட்டே முத்தியை
அடைவதென் றருளிய வருட்பெருஞ் ஜோதி

முத்தியென் பதுநிலை முன்னுறு சாதனம்
அத்தக வென்றவென் னருட்பெருஞ் ஜோதி ..250

சித்தியென் பதுநிலை சேர்ந்த வநுபவம்
அத்திற லென்றவென் னருட்பெருஞ் ஜோதி

ஏகசிற் சித்தியே யியாற வனேகம்
ஆகிய தென்றவென் னருட்பெருஞ் ஜோதி

இன்பசித் தியினிய லேக மனேகம்
அன்பருக் கென்றவென் னருட்பெருஞ் ஜோதி

எட்டிரண் டென்பன வியாமுற் படியென
அட்டநின் றருளிய வருட்பெருஞ் ஜோதி

இப்படி கண்டனை யினியுறு படியெலாம்
அப்படி யேயெனு மருட்பெருஞ் ஜோதி ..260

படிமுடி கடந்தனை பா஡஢து பாரென
அடிமுடி காட்டிய வருட்பெருஞ் ஜோதி

ஜோதியுட் ஜோதியின் சொருபமே யந்த
மாதியென் றருளிய வருட்பெருஞ் ஜோதி

இந்தசிற் ஜோதியி நியாரு வாதி
யந்தமென் றருளிய வருட்பெருஞ் ஜோதி

ஆதியு மந்தமு மறிந்தனை நீயே
ஆதியென் றருளிய வருட்பெருஞ் ஜோதி

நல்லமு தென்னொரு நாவுளங் காட்டியென்
அல்லலை நீக்கிய வருட்பெருஞ் ஜோதி ..270

கற்பக மென்னுளங் கைதனிற் கொடுத்தே
அற்புத மியற்றெனு மருட்பெருஞ் ஜோதி

கதிர்நல மென்னிரு கண்களிற் கொடுத்தே
அதிசய மியற்றெனு மருட்பெருஞ் ஜோதி

அருளொளி யென்றனி யறிவினில் வி஡஢த்தே
அருணெறி விளக்கெனு மருட்பெருஞ் ஜோதி

பரையொளி யென்மனப் பதியினில் வி஡஢த்தே
அரசது வியற்றெனு மருட்பெருஞ் ஜோதி

வல்லப சத்திகள் வகையெலா மளித்தென
தல்லலை நீக்கிய வருட்பெருஞ் ஜோதி ..280

ஆ஡஢ய லகம்புற மகப்புறம் புறப்புறம்
ஆரமு தெனக்கரு ளருட்பெருஞ் ஜோதி

சூ஡஢ய சந்திர ஜோதியுட் ஜோதியென்
றா஡஢யர் புகழ்தரு மருட்பெருஞ் ஜோதி

பிறிவே தினியுனைப் பிடித்தன முனக்குநம்
மறிவே வடிவெனு மருட்பெருஞ் ஜோதி

எஞ்சே ஡லகினில் யாதொன்று பற்றியும்
அஞ்சே லென்றரு ளருட்பெருஞ் ஜோதி

மாண்டுழ லாவகை வந்திளங் காலையே
ஆண்டுகொண் டருளிய வருட்பெருஞ் ஜோதி ..290

பற்றுக ளனைத்தையும் பற்றறத் தவிர்த்தென
தற்றமு நீக்கிய வருட்பெருஞ் ஜோதி

சமயங் குலமுதற் சார்பெலாம் விடுத்த
அமயந் தோன்றிய வருட்பெருஞ் ஜோதி

வாய்தற் கு஡஢த்தெனு மறையா கமங்களால்
ஆய்தற் கா஢ய வருட்பெருஞ் ஜோதி

எல்லாம் வல்லசித் தெனக்களித் தெனக்குனை
யல்லா திலையெனும் மருட்பெருஞ் ஜோதி

நவையிலா வுளத்தி னாடிய நாடிய
வவையெலா மளிக்கு மருட்பெருஞ் ஜோதி ..300

கூற்றுதைத் தென்பாற் குற்றமுங் குணங்கொண்
டாற்றன்மிக் களித்த வருட்பெருஞ் ஜோதி

நன்றறி வறியா நாயினேன் றனையும்
அன்றுவந் தாண்ட வருட்பெருஞ் ஜோதி

நாயினுங் கடையே னீயினு மிழிந்தேன்
ஆயினு மருளிய வருட்பெருஞ் ஜோதி

தோத்திரம் புகலேன் பாத்திர மல்லேன்
ஆத்திர மளித்த வருட்பெருஞ் ஜோதி

எச்சோ தனைகளு மியற்றா தெனக்கே
அச்சோ வென்றரு ளருட்பெருஞ் ஜோதி ..310

ஏறா நிலைநடு வேற்றியென் றனையீண்
டாறாறு கடத்திய வருட்பெருஞ் ஜோதி

தாபத் துயரந் தவிர்த்துல குறுமெலா
ஆபத்தும் நீக்கிய வருட்பெருஞ் ஜோதி

மருட்பகை தவிர்த்தெனை வாழ்வித் தெனக்கே
யருட்குரு வாகிய வருட்பெருஞ் ஜோதி

உருவமு மருவமு முபயமு மாகிய
அருணிலை தொ஢த்த வருட்பெருஞ் ஜோதி

இருளறுத் தென்னுளத் தெண்ணியாங் கருளி
அருளமு தளித்த வருட்பெருஞ் ஜோதி ..320

தெருணிலை யிதுவெனத் தெருட்டியென் னுளத்திருந்
அருணிலை காட்டிய வருட்பெருஞ் ஜோதி

பொருட்பத மெல்லாம் பு஡஢ந்துமே லோங்கிய
அருட்பத மளித்த வருட்பெருஞ் ஜோதி

உருள்சக டாகிய வுளஞ்சலி யாவகை
அருள்வழி நிறுத்திய வருட்பெருஞ் ஜோதி

வெருள்மன மாயை வினையிரு ணீக்கியுள்
அருள்விளக் கேற்றிய வருட்பெருஞ் ஜோதி

சுருள்வி஡஢ வுடைமனச் சுழலெலா மறுத்தே
அருளொளி நிரப்பிய வருட்பெருஞ் ஜோதி ..330

வி஡஢ப்போ டிகாறு வெறுப்புந் தவிர்த்தே
அருட்பே றளித்த வருட்பெருஞ் ஜோதி

அருட்பேர் தா஢த்துல கனைத்து மலர்ந்திட
அருட்சீ ரளித்த வருட்பெருஞ் ஜோதி

உலகெலாம் பரவவென் னுள்ளத் திருந்தே
அலகிலா வொளிசெய் யருட்பெருஞ் ஜோதி

விண்ணினுள் விண்ணாய் விண்ணடு விண்ணாய்
அண்ணி நிறைந்த வருட்பெருஞ் ஜோதி

விண்ணுறு விண்ணாய் விண்ணிலை விண்ணாய்
அண்ணி வயங்கு மருட்பெருஞ் ஜோதி ..340

காற்றினுட் காற்றாய்க் காற்றிடைக் காற்றாய்
ஆற்ற விளங்கு மருட்பெருஞ் ஜோதி

காற்றுறு காற்றாய்க் கானிலைக் காற்றாய்
ஆற்ற விளங்கு மருட்பெருஞ் ஜோதி

அனலினு ளனலா யனனடு வனலாய்
அனாற விளங்கு மருட்பெருஞ் ஜோதி

அனாறு மனலா யனனிலை யனலாய்
அனாற வயங்கு மருட்பெருஞ் ஜோதி

புனலினுட் புனலாய்ப் புனலிடைப் புனலாய்
அனையென வயங்கு மருட்பெருஞ் ஜோதி ..350

புனாறு புனலாய்ப் புனனிலைப் புனலாய்
அனையெனப் பெருகு மருட்பெருஞ் ஜோதி

புவியினுட் புவியாய்ப் புவிநடுப் புவியாய்
அவைதர வயங்கு மருட்பெருஞ் ஜோதி

புவியுறு புவியாய்ப் புவிநிலைப் புவியாய்
அவைகொள வி஡஢ந்த வருட்பெருஞ் ஜோதி

விண்ணிலை சிவத்தின் வியனிலை யளவி
அண்ணுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி

வளிநிலை சத்தியின் வளர்நிலை யளவி
அளியுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி ..360

நெருப்பது நிலைநடு நிலையெலா மளவி
அருப்பிட வகுத்த வருட்பெருஞ் ஜோதி

நீர்நிலை திரைவளர் நிலைதனை யளவி
ஆர்வுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி

புவிநிலை சுத்தமாம் பொற்பதி யளவி
அவையுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி

மண்ணினிற் றிண்மையை வகுத்ததிற் கிடக்கை
யண்ணுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி

மண்ணினிற் பொன்மை வகுத்ததி லைமையை
அண்ணுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி ..370

மன்ணினி லைம்பூ வகுத்ததி லைந்திறம்
அண்ணுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி

மண்ணினி னாற்றம் வகுத்தது பல்வகை
அண்ணுறப் பு஡஢ந்த வருட்பெருஞ் ஜோதி

மண்ணினிற் பற்பல வகைகரு நிலையியல்
அண்ணுறப் பு஡஢ந்த வருட்பெருஞ் ஜோதி

மண்ணினி லைந்தியல் வகுத்ததிற் பல்பயன்
அண்ணுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி

மண்ணிடை யடிநிலை வகுத்ததிற் பன்னிலை
யண்ணுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி ..380

மண்ணிலைந் தைந்து வகையுங் கலந்துகொண்
டண்ணுறப் பு஡஢ந்த வருட்பெருஞ் ஜோதி

மண்ணியற் சத்திகள் மண்செயற் சத்திகள்
அண்ணுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி

மண்ணுருச் சத்திகள் மண்கலைச் சத்திகள்
அண்ணுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி

மண்ணொளிச் சத்திகள் மண்கருச் சத்திகள்
அண்ணுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி

மண்கணச் சத்திகள் வகைபல பலவும்
அண்கொள வமைத்த வருட்பெருஞ் ஜோதி ..390

மண்ணிலைச் சத்தர்கள் வகைபல பலவும்
அண்ணுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி

மண்கரு வுயிர்த்தொகை வகைவி஡஢ பலவா
அண்கொள வமைத்த வருட்பெருஞ் ஜோதி

மண்ணினிற் பொருள்பல வகைவி஡஢ வெவ்வே
றண்ணுறப் பு஡஢ந்த வருட்பெருஞ் ஜோதி

மண்ணுறு நிலைபல வகுத்ததிற் செயல்பல
அண்ணுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி

மண்ணிடைப் பக்குவம் வகுத்ததிற் பயன்பல
அண்ணுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி ..400

மண்ணியல் பலபல வகுத்ததிற் பிறவும்
அண்ணுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி

நீ஡஢னிற் றண்மையும் நிகழூ ரொழுக்கமும்
ஆருற வகுத்த வருட்பெருஞ் ஜோதி

நீ஡஢னிற் பசுமையை நிறுத்தி யதிற்பல
வாருற வகுத்த வருட்பெருஞ் ஜோதி

நீ஡஢டைப் பூவியல் நிகழுறு திறவியல்
ஆர்தர வகுத்த வருட்பெருஞ் ஜோதி

நீ஡஢னிற் சுவைநிலை நிரைத்ததிற் பலவகை
ஆருறப் பு஡஢ந்த வருட்பெருஞ் ஜோதி ..410

நீ஡஢னிற் கருநிலை நிகழ்த்திய பற்பல
ஆருற வகுத்த வருட்பெருஞ் ஜோதி

நீ஡஢டை நான்கிய னிலவுவித் ததிற்பல
ஆர்தர வகுத்த வருட்பெருஞ் ஜோதி

நீ஡஢டை யடிநடு நிலையுற வகுத்தன
லார்தரப் பு஡஢ந்த வருட்பெருஞ் ஜோதி

நீ஡஢டை யொளியியல் நிகழ்பல குணவியல்
ஆர்தர வகுத்த வருட்பெருஞ் ஜோதி

நீ஡஢டைச் சத்திகள் நிகழ்வகை பலபல
ஆர்தர வகுத்த வருட்பெருஞ் ஜோதி ..420

நீ஡஢னிற் சத்தர்க ணிறைவகை யுறைவகை
ஆர்தரப் பு஡஢ந்த வருட்பெருஞ் ஜோதி

நீ஡஢டை யுயிர்பல நிகழுறு பொருள்பல
ஆருற வமைத்த வருட்பெருஞ் ஜோதி

நீ஡஢டை நிலைபல நிலையுறு செயல்பல
ஆர்கொள வகுத்த வருட்பெருஞ் ஜோதி

நீருறு பக்குவ நிறைவுறு பயன்பல
ஆருற வமைத்த வருட்பெருஞ் ஜோதி

நீ஡஢யல் பலபல நிறைத்ததிற் பிறவும்
ஆர்தரப் பு஡஢ந்த வருட்பெருஞ் ஜோதி ..430

தீயினிற் சூட்டியல் சேர்தரச் செலவியல்
ஆயுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி

தீயினில் வெண்மைத் திகழியல் பலவா
வாயுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி

தீயிடைப் பூவெலாந் திகழுறு திறமெலாம்
ஆயுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி

தீயிடை யொளியே திகழுற வமைத்ததில்
ஆய்பல வகுத்த வருட்பெருஞ் ஜோதி

தீயிடை யருநிலை திருநிலை கருநிலை
ஆயுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி ..440

தீயிடை மூவியல் செறிவித் ததிற்பல
ஆய்வகை யமைத்த வருட்பெருஞ் ஜோதி

தீயிடை நடுநிலை திகழ்நடு நடுநிலை
ஆயுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி

தீயிடைப் பெருந்திறற் சித்திகள் பலபல
ஆயுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி

தீயிடைச் சித்துகள் செப்புறு மனைத்தும்
ஆயுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி

தீயிடைச் சத்திகள் செறிதரு சத்தர்கள்
ஆய்பல வகுத்த வருட்பெருஞ் ஜோதி ..450

தீயிடை யுயிர்பல திகழுறு பொருள்பல
ஆய்வகை யமைத்த வருட்பெருஞ் ஜோதி

தீயிடை நிலைபல திகழ்செயல் பலபயன்
ஆய்பல வகுத்த வருட்பெருஞ் ஜோதி

தீயினிற் பக்குவஞ் சேர்குண மியற்குணம்
ஆய்பல வகுத்த வருட்பெருஞ் ஜோதி

தீயிடை யுருக்கியல் சிறப்பியல் பொதுவியல்
ஆயுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி

தீயியல் பலபல செறித்ததிற் பலவும்
ஆயுறப் பு஡஢ந்த வருட்பெருஞ் ஜோதி ..460

காற்றிடை யசையியல் கலையிய ஡யி஡஢யல்
ஆற்றலி னமைத்த வருட்பெருஞ் ஜோதி

காற்றிடைப் பூவியல் கருதுறு திறவியல்
ஆற்றலின் வகுத்த வருட்பெருஞ் ஜோதி

காற்றினி ஡றெ஢யல் காட்டுறு பலபல
ஆற்றிலி னமைத்த வருட்பெருஞ் ஜோதி

காற்றினிற் பெருநிலை கருநிலை யளவில்
ஆற்றவும் வகுத்த வருட்பெருஞ் ஜோதி

காற்றிடை யீ஡஢யல் காட்டி யதிற்பல
ஆற்றவும் வகுத்த வருட்பெருஞ் ஜோதி .470

காற்றினி லிடைநடு கடைந்டு வகம்புறம்
ஆற்றவும் வகுத்த வருட்பெருஞ் ஜோதி

காற்றினிற் குணம்பல கணம்பல வணம்பல
ஆற்றலி னமைத்த வருட்பெருஞ் ஜோதி

காற்றிடைச் சத்திகள் கணக்கில வுலப்பில
ஆற்றவு மமைத்த வருட்பெருஞ் ஜோதி

காற்றிடைச் சத்தர்கள் கணிதங் கடந்தன
ஆற்றவும் வகுத்த வருட்பெருஞ் ஜோதி

காற்றிடை யுயிர்பல கதிபல கலைபல
ஆற்றலி னமைத்த வருட்பெருஞ் ஜோதி ..480

காற்றிடை நானிலைக் கருவிக ளனைத்தையும்
ஆற்றுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி

காற்றிடை யுணா஢யல் கருதிய லாதிய
ஆற்றுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி

காற்றிடைச் செயலெலாங் கருதிய பயனெலாம்
ஆற்றவும் வகுத்த வருட்பெருஞ் ஜோதி

காற்றினிற் பக்குவக் கதியெலாம் விளைவித்
தாற்றலின் வகுத்த வருட்பெருஞ் ஜோதி

காற்றினிற் காலங் கருதுறு வகையெலாம்
ஆற்றவும் வகுத்த வருட்பெருஞ் ஜோதி ..490

காற்றியல் பலபல கணித்ததிற் பிறவும்
ஆற்றவும் வகுத்த வருட்பெருஞ் ஜோதி

வெளியிடைப் பகுதியின் வி஡஢விய லணைவியல்
அளியுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி

வெளியிடைப் பூவெலாம் வியப்புறு திறனெலாம்
அளியுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி

வெளியினி லொலிநிறை வியனிலை யனைத்தும்
அளியுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி

வெளியிடைக் கருநிலை வி஡஢நிலை யருநிலை
அளிகொள வகுத்த வருட்பெருஞ் ஜோதி ..500

வெளியிடை முடிநிலை விளங்குற வகுத்தே
அளிபெற விளக்கு மருட்பெருஞ் ஜோதி

வெளியினிற் சத்திகள் வியப்புற சத்தர்கள்
அளியுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி

வெளியிடை யொன்றே வி஡஢த்ததிற் பற்பல
அளியுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி

வெளியிடை பலவே வி஡஢த்ததிற் பற்பல
அளிதர வமைத்த வருட்பெருஞ் ஜோதி

வெளியிடை யுயி஡஢யல் வித்தியல் சித்தியல்
அளிபெற வமைத்த வருட்பெருஞ் ஜோதி ..510

வெளியி னனைத்தயும் வி஡஢த்ததிற் பிறவும்
அளியுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி

புறநடுவொடு கடை புணர்ப்பித் தொருமுதல்
அறமுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி

புறந்தலை நடுவொடு புணர்ப்பித் தொருகடை
அறம்பெற வகுத்த வருட்பெருஞ் ஜோதி

அகப்புற நடுக்கடை யணைவாற் புறமுதல்
அகப்பட வகுத்த வருட்பெருஞ் ஜோதி

அகப்புற நடுமுத லணைவாற் புறக்கடை
அகப்பட வ்மைத்த வருட்பெருஞ் ஜோதி ..520

கருதக நடுவொடு கடையணைந் தகமுதல்
அருளுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி

தணியக நடுவொடு தலையனைந் தகக்கடை
அணியுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி

அகநடு புறக்கடை யணைந்தகப் புறமுதல்
அகமுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி

அகநடு புறத்தலை யணைந்தகப் புறக்கடை
அகலிடை வகுத்த வருட்பெருஞ் ஜோதி

அகநடு வதனா லகப்புற நடுவை
அகமற வகுத்த வருட்பெருஞ் ஜோதி ..530

அகப்புற நடுவா லணிபுற நடுவை
அகப்பட வமைத்த வருட்பெருஞ் ஜோதி

புறநடு வதனாற் புறப்புற நடுவை
அறமுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி

புகலரு மகண்ட பூரண நடுவால்
அகநடு வகுத்த வருட்பெருஞ் ஜோதி

புறப்புறக் கடைமுதற் புணர்ப்பாற் புறப்புற
அறக்கணம் வகுத்த வருட்பெருஞ் ஜோதி

புறத்தியல் கடைமுதற் புணர்ப்பாற் புறத்துறும்
அறக்கணம் வகுத்த வருட்பெருஞ் ஜோதி ..540

அகப்புறக் கடைமுத லணைவா லக்கணம்
அகத்துற வகுத்த வருட்பெருஞ் ஜோதி

அகக்கடை முதற்புணர்ப் பதனா லகக்கணம்
அகத்திடை வகுத்த வருட்பெருஞ் ஜோதி

வானிடைக் காற்றும் காற்றிடை நெருப்பும்
ஆனற வகுத்த வருட்பெருஞ் ஜோதி

நெருப்பிடை நீரும் நீ஡஢டைப் புவியும்
அருப்பிட வகுத்த வருட்பெருஞ் ஜோதி

நீர்மேல் நெருப்பும் நெருப்பின்மே ஡யிர்ப்பும்
ஆர்வுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி ..550

புனன்மேற் புவியும் புவிமேற் புடைப்பும்
அனன்மேல் வகுத்த வருட்பெருஞ் ஜோதி

பகுதிவான் வெளியிற் படர்ந்தமா பூத
வகல்வெளி வகுத்த வருட்பெருஞ் ஜோதி

உயிர்வெளி யிடையே வுரைக்கரும் பகுதி
அயவெளி வகுத்த வருட்பெருஞ் ஜோதி

உயிர்வெளி யதனை யுணர்கலை வெளியில்
அயலற வகுத்த வருட்பெருஞ் ஜோதி

கலைவெளி யதனைக் கலப்பறு சித்த
அலர்வெளி வகுத்த வருட்பெருஞ் ஜோதி ..560

சுத்தநல் வெளியைத் து஡஢சறு பரவெளி
அத்திடை வகுத்த வருட்பெருஞ் ஜோதி

பரவெளி யதனைப் பரம்பர வெளியில்
அரசுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி

பரம்பர வெளியைப் பராபர வெளியில்
அரந்தெற வகுத்த வருட்பெருஞ் ஜோதி

பராபர வெளியைப் பகர்பெரு வெளியில்
அராவற வகுத்த வருட்பெருஞ் ஜோதி

பெருவெளி யதனைப் பெருஞ்சுக வெளியில்
அருளுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி ..570

குணமுதற் கருவிகள் கூடிய பகுதியில்
அணைவுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி

மனமுதற் கருவிகள் மன்னுயிர் வெளியிடை
அனமுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி

காலமே முதலிய கருவிகள் கலைவெளி
ஆ஡ற வகுத்த வருட்பெருஞ் ஜோதி

து஡஢சறு கருவிகள் சுத்தநல் வெளியிடை
அரசுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி

இவ்வெளி யெல்லா மிலங்கவண் டங்கள்
அவ்வயி னமைந்த வருட்பெருஞ் ஜோதி ..580

ஓங்கிய வண்ட மொளிபெற முச்சுடர்
ஆங்கிடை வகுத்த வருட்பெருஞ் ஜோதி

சிருட்டித் தலைவரைச் சிருட்டியண் டங்களை
அருட்டிறல் வகுத்த வருட்பெருஞ் ஜோதி

காவல்செய் தலைவரைக் காவலண் டங்களை
ஆவகை யமைத்த வருட்பெருஞ் ஜோதி

அழித்தல்செய் தலைவரை யவரண் டங்களை
அழுக்கற வமைத்த வருட்பெருஞ் ஜோதி

மறைத்திடு தலைவரை மற்றுமண் டங்களை
அறத்தொடு வகுத்த வருட்பெருஞ் ஜோதி ..590

தெளிவுசெய் தலைவரைத் திகழுமண் டங்களை
அளிபெற வகுத்த வருட்பெருஞ் ஜோதி

விந்துவாஞ் சத்தியை விந்தினண் டங்களை
அந்திறல் வகுத்த வருட்பெருஞ் ஜோதி

ஓங்கார சத்திக ளுற்றவண் டங்களை
ஆங்காக வமைத்த வருட்பெருஞ் ஜோதி

சத்தத் தலைவரைச் சாற்றுமண் டங்களை
அத்தகை வகுத்த வருட்பெருஞ் ஜோதி

நாதமாம் பிரமமும் நாதவண் டங்களும்
ஆதரம் வகுத்த வருட்பெருஞ் ஜோதி ..600

பகர்பரா சத்தியைப் பதியுமண் டங்களை
அகமற வகுத்த வருட்பெருஞ் ஜோதி

பரசிவ பதியைப் பரசிவாண் டங்களை
அரசுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி

எண்ணில்பல் சத்தியை யெண்ணிலண் டங்களை
அண்ணிற வகுத்த வருட்பெருஞ் ஜோதி

அளவில்பல் சத்தரை யளவி லண்டங்களை
அளவற வகுத்த வருட்பெருஞ் ஜோதி

உயிர்வகை யண்ட முலப்பில வெண்ணில
அயர்வற வகுத்த வருட்பெருஞ் ஜோதி ..610

களவில கடல்வகை கங்கில கரையில
அளவில வகுத்த வருட்பெருஞ் ஜோதி

கடலவை யனைத்துங் கரையின்றி நிலையுற
அடலன லமைத்த வருட்பெருஞ் ஜோதி

கடல்களு மலைகளு கதிகளு நதிகளும்
அடாற வகுத்த வருட்பெருஞ் ஜோதி

கடலிடைப் பல்வளங் கணித்ததிற் பல்஡யிர்
அடாற வகுத்த வருட்பெருஞ் ஜோதி

மலையிடைப் பல்வளம் வகுத்ததிற் பல்஡யிர்
அலைவற வகுத்த வருட்பெருஞ் ஜோதி ..620

ஒன்றினி லொன்றே யொன்றிடை யாயிரம்
அன்றற வகுத்த வருட்பெருஞ் ஜோதி

பத்திடை யாயிரம் பகரதிற் கோடி
அத்துற வகுத்த வருட்பெருஞ் ஜோதி

நு஦ற்றிடை யிலக்க நுவலதி லனந்தம்
ஆற்றிடை வகுத்த வருட்பெருஞ் ஜோதி

கோடியி லனந்த கோடிபல் கோடி
ஆடுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி

வித்திய லொன்றா விளைவியல் பலவா
அத்தகை யமைத்த வருட்பெருஞ் ஜோதி ..630

விளைவிய லனைத்தும் வித்திடை யடங்க
அளவுசெய் தமைத்த வருட்பெருஞ் ஜோதி

வித்தும் பதமும் விளையுப கா஢ப்பும்
அத்திற லமைத்த வருட்பெருஞ் ஜோதி

வித்திடை முளையும் முளையிடை விளைவும்
அத்தக வமைத்த வருட்பெருஞ் ஜோதி

வித்தினுள் வித்தும் வித்ததில் வித்தும்
அத்திறம் வகுத்த வருட்பெருஞ் ஜோதி

விளைவினுள் விளைவும் விளைவதில் விளைவும்
அளையுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி ..640

முளையதின் முளையும் முளையினுண் முளையும்
அளைதர வமைத்த வருட்பெருஞ் ஜோதி

வித்திடைப் பதமும் பதத்திடை வித்தும்
அத்துற வமைத்த வருட்பெருஞ் ஜோதி

பதமதிற் பதமும் பதத்தினுட் பதமும்
அதிர்வற வகுத்த வருட்பெருஞ் ஜோதி

ஒற்றுமை வேற்றுமை யு஡஢மைக ளனைத்தும்
அற்றென வகுத்த வருட்பெருஞ் ஜோதி

பொருணிலை யுறுப்புயல் பொதுவகை முதலிய
அருளுற வகுத்த அருட்பெருஞ் ஜோதி ..650

உறவினி ஡றவும் உறவினிற் பகையும்
அறனுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி

பகையினிற் பகையும் பகையினி ஡றவும்
அகைவுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி

பாதியு முழுதும் பதிசெயு மந்தமும்
ஆதியும் வகுத்த வருட்பெருஞ் ஜோதி

துணையு நிமித்தமுந் துலங்கதி னதுவும்
அணைவுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி

உருவதி னுருவும் உருவினுள் ளுருவும்
அருளுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி ..660

அருவினுள் ளருவும் மருவதி லருவும்
அருளிய லமைந்த வருட்பெருஞ் ஜோதி

கரணமு மிடமுங் கலைமுத லணையுமோர்
அரணிலை வகுத்த வருட்பெருஞ் ஜோதி

உருவதி லருவும் மருவதி ஡ருவும்
அருளுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி

வண்ணமு வடிவு மயங்கிய வகைபல
அண்ணுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி

சிறுமையிற் சிறுமையும் சிறுமையிற் பெருமையும்
அறிதர வகுத்த வருட்பெருஞ் ஜோதி ..670

பெருமையிற் பெருமையும் பெருமையிற் சிறுமையும்
அருணிலை வகுத்த வருட்பெருஞ் ஜோதி

திண்மையிற் றிண்மையுந் திண்மை யினேர்மையும்
அண்மையின் வகுத்த வருட்பெருஞ் ஜோதி

மென்மையின் மன்மையும் மென்மையில் வன்மையும்
அன்மையிற் றமைத்த வருட்பெருஞ் ஜோதி

அடியினுள் ளடியும் மடியிடை யடியும்
அடியுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி

நடுவினுண் ணடுவும் நடுவதி னடுவும்
அடர்வுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி ..680

முடியுனுண் முடியும் முடியினின் முடியும்
அடர்தர வமைத்த வருட்பெருஞ் ஜோதி

அகப்பூ வகவுறுப் பாக்க வதற்கவை
அகத்தே வகுத்த வருட்பெருஞ் ஜோதி

புறப்பூ புறத்திற் புனையுரு வாக்கிட
அறத்துடன் வகுத்த வருட்பெருஞ் ஜோதி

அகப்புறப் பூவகப் புறவுறுப் பியற்றிட
அகத்திடை வகுத்த வருட்பெருஞ் ஜோதி

புறப்புறப் பூவதிற் புறப்புற வுறுப்புற
அறத்திடை வகுத்த வருட்பெருஞ் ஜோதி ..690

பா஡஢டை வேர்வையிற் பையிடை முட்டையில்
ஆருயி ரமைக்கு மருட்பெருஞ் ஜோதி

ஊர்வன பறப்பன வுறுவன நடப்பன
ஆர்வுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி

அசைவில வசைவுள வாருயிர்த் திரள்பல
அசலற வகுத்த வருட்பெருஞ் ஜோதி

அறிவொரு வகைமுத லைவகை யறுவகை
அறிதர வகுத்த வருட்பெருஞ் ஜோதி

வெவ்வே றியலொடு வெவ்வேறு பயனுற
அவ்வா றமைத்த வருட்பெருஞ் ஜோதி ..700

சித்திர விசித்திர சிருட்டிகள் பலபல
அத்தகை வகுத்த வருட்பெருஞ் ஜோதி

பெண்ணினுள் ளாணு மாணினுட் பெண்ணும்
அண்ணுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி

பெண்ணினுண் மூன்று மாணினுள் ளிரண்டும்
அண்ணுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி

பெண்ணிடை நான்கு மாணிடை மூன்றும்
அண்ணுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி

பெண்ணிய லாணு மாணியற் பெண்ணும்
அண்ணுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி ..710

பெண்டிறல் புறத்து மாண்டிற லகத்தும்
அண்டுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி

பெண்ணியன் மனமு மாணிய லறிவும்
அண்ணுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி

தனித்தனி வடிவினுந் தக்கவாண் பெண்ணுயல்
அனைத்துற வகுத்த வருட்பெருஞ் ஜோதி

உனற்கரு முயிருள வுடாள வுலகுள
வனைத்தையும் வகுத்த வருட்பெருஞ் ஜோதி
ஓவுறா வெழுவகை வுயிர்முத லனைத்தும்
ஆவகை வகுத்த வருட்பெருஞ் ஜோதி ..720

பைகளின் முட்டையிற் பா஡஢னில் வேர்வினில்
ஐபெற வமைத்த வருட்பெருஞ் ஜோதி

தாய்கருப் பையினுட் டங்கிய வுயிர்களை
ஆய்வுறக் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி

முட்டைவாய்ப் பயி஡ முழுவுயிர்த் திரள்களை
அட்டமே காத்தரு ளருட்பெருஞ் ஜோதி

நிலம்பெறு முயிர்வகை நீள்குழு வனைத்தும்
அலம்பெறக் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி

வேர்வுற வுதித்த மிகுமுயிர்த் திரள்களை
ஆர்வுறக் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி ..730

உடாறு பிணியா ஡யிருடல் கெடாவகை
அடாறக் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி

சிசுமுதற் பருவச் செயல்களி னுயிர்களை
அசைவறக் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி

உயிருறு முடலையு முடாறு முயிரையும்
அயர்வறக் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி

பாடுறு மவத்தைகள் பலவினு முயிர்களை
ஆடுறக் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி

முச்சுட ராதியா லெச்சக வுயிரையும்
அச்சறக் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி ..740

வான்முகிற் சத்தியான் மழைபொழி வித்துயர்
ஆனறக் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி

இன்புற சத்தியா லெழின்மழை பொழிவித்
தன்புறக் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி

எண்ணியற் சத்தியா லெல்லா வுலகினும்
அண்ணுயிர் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி

அண்டப் புறப்புற வமுதம் பொழிந்துயிர்
அண்டுறக் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி

தேவரை யெல்லாந் திகழ்புற வமுதளித்
தாவகை காத்தரு ளருட்பெருஞ் ஜோதி ..750

அகப்புற வமுதளித் தைவர்ரா திகளை
அகப்படக் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி

தருமக வமுதாற் சத்திசத் தர்களை
அருளினிற் காக்கு மருட்பெருஞ் ஜோதி

காலமு நியதியுங் காட்டியெவ் வுயிரையும்
ஆ஡றக் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி

விச்சையை யிச்சயை விளைவித் துயிர்களை
அச்சறக் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி

போகமுங் களிப்பும் பொருந்துவித் துயிர்களை
ஆகமுட் காக்கு மருட்பெருஞ் ஜோதி ..760

கலையறி வளித்துக் களிப்பினி ஡யிரெலாம்
அலைவறக் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி

விடய நிகழ்ச்சியான் மிகுமுயி ரனைத்தையும்
அடைவுறக் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி

துன்பளித் தாங்கே சுகமளித் துயிர்களை
அன்புறக் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி

கரணேந் தியத்தாற் களிப்புற வுயிர்களை
அரணேர்ந் தளித்தரு ளருட்பெருஞ் ஜோதி

எத்தகை யெவ்வுயி ரெண்ணின வவ்வுயிர்க்
கத்தகை யளித்தரு ளருட்பெருஞ் ஜோதி ..770

எப்படி யெவ்வுயி ரெண்ணின வவ்வுயிர்க்
கப்படி யளித்தரு ளருட்பெருஞ் ஜோதி

ஏங்கா துயிர்த்திர ளெங்கெங் கிருந்தன
ஆங்காங் களித்தரு ளருட்பெருஞ் ஜோதி

சொல்஡று மசுத்தத் தொல்஡யிர்க் கவ்வகை
அல்லலிற் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி

சுத்தமு மசுத்தமுந் தோயுயிர்க் கிருமையின்
அத்தகை காத்தரு ளருட்பெருஞ் ஜோதி

வாய்ந்திடுஞ் சுத்த வகையுயிர்க் கொருமையின்
ஆய்ந்துறக் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி ..780

எவையெலா மெவையெலா மீண்டின வீண்டின
அவையெலாங் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி

அண்டத் து஡஢சையு மகிலத் து஡஢சையும்
அண்டற வடக்கு மருட்பெருஞ் ஜோதி

பிண்டத் து஡஢சையும் பேருயிர்த் து஡஢சையும்
அண்டற வடக்கு மருட்பெருஞ் ஜோதி

உயிருறு மாயையி னுறுவி஡஢ வனைத்தும்
அயிரற வடக்கு மருட்பெருஞ் ஜோதி

உயிருறு மிருவினை யுறுவி஡஢ வனைத்தும்
அயர்வற வடக்கு மருட்பெருஞ் ஜோதி ..790

காமப் புடைப்புயிர் கண்டொட ராவகை
ஆமற வடக்கு மருட்பெருஞ் ஜோதி

பொங்குற வெகுளிப் புடைப்புக ளெல்லாம்
அங்கற வடக்கு மருட்பெருஞ் ஜோதி

மதம்புரை மோகமு மற்றவு மாங்காங்
கதம்பெற வடக்கு மருட்பெருஞ் ஜோதி
வடுவுறு மசுத்த வாதனை யனைத்தையும்
அடர்பற வடக்கு மருட்பெருஞ் ஜோதி

சுத்தமு மசுத்தமுந் தோய்ந்தவா தனைகளை
அத்தகை யடக்கு மருட்பெருஞ் ஜோதி ..800

நால்வயிற் று஡஢சும் நண்ணுயி ராதியில்
ஆலற வடக்கு மருட்பெருஞ் ஜோதி

நால்வயிற் படைப்பு நால்வயிற் காப்பும்
ஆலற வடக்கு மருட்பெருஞ் ஜோதி

மூவிடத் திருமையின் முன்னிய தொழிற்கா஢ல்
ஆவிடத் தடக்கு மருட்பெருஞ் ஜோதி

மூவிட மும்மையின் முன்னிய தொழிற்கா஢ல்
ஆவிட மடக்கு மருட்பெருஞ் ஜோதி

தத்துவச் சேட்டையுந் தத்துவத் து஡஢சும்
அத்தகை யடக்கு மருட்பெருஞ் ஜோதி ..810

சுத்தமா நிலையிற் சூழுறு வி஡஢வை
அத்தகை யடக்கு மருட்பெருஞ் ஜோதி

கரைவின் மாமாயைக் கரும்பெருந் திரையால்
அரைசது மறைக்கு மருட்பெருஞ் ஜோதி

பேருறு நீலப் பெருந்திரை யதனால்
ஆருயிர் மறைக்கு மருட்பெருஞ் ஜோதி

பச்சைத் திரையாற் பரவெளி யதனை
அச்சுற மறைக்கு மருட்பெருஞ் ஜோதி

செம்மைத் திரையாற் சித்துறு வெளியை
அம்மையின் மறைக்கு மருட்பெருஞ் ஜோதி ..820

பொன்மைத் திரையாற் பொருளுறு வெளியை
அண்மையின் மறைக்கு மருட்பெருஞ் ஜோதி

வெண்மைத் திரையான் மெய்ப்பதி வெளியை
அண்மையின் மறைக்கு மருட்பெருஞ் ஜோதி

கலப்புத் திறையாற் கருதனு பவங்களை
அலப்புற மறைக்கு மருட்பெருஞ் ஜோதி

விடய நிலைகளை வெவ்வேறு திரைகளால்
அடர்புற மறைக்கு மருட்பெருஞ் ஜோதி

தத்துவ நிலைகளைத் தனித்தனித் திரையால்
அத்திற மறைக்கு மருட்பெருஞ் ஜோதி ..830

திரைமறைப் பெல்லாந் தீர்த்தாங் காங்கே
அரசுறக் காட்டு மருட்பெருஞ் ஜோதி

தோற்றமா மாயைத் தொடர்பறுத் தருளி
னாற்றலைக் காட்டு மருட்பெருஞ் ஜோதி

சுத்தமா மாயைத் தொடர்பறுத் தருளி
அத்தகை காட்டு மருட்பெருஞ் ஜோதி

எனைத்தா ணவமுத லெல்லாந் தவிர்த்தே
அனுக்கிர கம்பு஡஢ யருட்பெருஞ் ஜோதி

விடய மறைப்பெலாம் விடுவித் துயிர்களை
அடைவுறத் தெருட்டு மருட்பெருஞ் ஜோதி ..840

சொருப மறைப்பெலாந் தொலைப்பித் துயிர்களை
அருளினிற் றெருட்டு மருட்பெருஞ் ஜோதி

மறைப்பின் மறந்தன வருவித் தாங்கே
அறத்தொடு தெருட்டு மருட்பெருஞ் ஜோதி

எவ்வகை யுயிர்களு மின்புற வாங்கே
அவ்வகை தெருட்டு மருட்பெருஞ் ஜோதி

கடவுளர் மறைப்பைக் கடிந்தவர்க் கின்பம்
அடையுறத் தெருட்டு மருட்பெருஞ் ஜோதி

சத்திகண் மறைப்பைத் தவிர்த்தவர்க் கின்பம்
அத்துறத் தெருட்டு மருட்பெருஞ் ஜோதி ..850

சத்தர்கண் மறைப்பைத் தவிர்த்தவர்க் கின்பம்
அத்தகை தெருட்டும் மருட்பெருஞ் ஜோதி

படைக்குந் தலைவர்கள் பற்பல கோடியை
அடைப்புறப் படைக்கும் அருட்பெருஞ் ஜோதி

காக்குந் தலைவர்கள் கணக்கில்பல் கோடியை
ஆக்குறக் காக்கு மருட்பெருஞ் ஜோதி

அடக்குந் தலைவர்க ளளவிலர் தம்மையும்
அடர்ப்பற வடக்கு மருட்பெருஞ் ஜோதி

மறைக்குந் தலைவர்கள் வகைபல கோடியை
அறத்தொடு மறைக்கு மருட்பெருஞ் ஜோதி ..860

தெருட்டுந் தலைவர்கள் சேர்பல கோடியை
அருட்டிறந் தெருட்டு மருட்பெருஞ் ஜோதி

ஐந்தொழி லாதிசெய் யைவரா திகளை
ஐந்தொழி லாதிசெ யருட்பெருஞ் ஜோதி

இறந்தவ ரெல்லா மெழுந்திட வுலகில்
அறந்தலை யளித்த வருட்பெருஞ் ஜோதி

செத்தவ ரெல்லாஞ் சி஡஢த்தாங் கெழுதிறல்
அத்தகை காட்டிய வருட்பெருஞ் ஜோதி

இறந்தவ ரெழுகவென் றெண்ணியாங் கெழுப்பிட
அறந்துணை யெனக்கரு ளருட்பெருஞ் ஜோதி ..870

செத்தவ ரெழுகவெனச் செப்பியாங் கெழுப்பிட
அத்திற லெனக்கரு ளருட்பெருஞ் ஜோதி

சித்தெலாம் வல்ல திறலளித் தெனக்கே
அத்தனென் றோங்கு மருட்பெருஞ் ஜோதி

ஒன்றதி ரண்டது வொன்றினி ரண்டது
ஒன்றினு ளொன்றது வொன்றெனு மொன்றே

ஒன்றல ரண்டல வொன்றினி ரண்டல
ஒன்றினு ளொன்றல வொன்றெனு மொன்றே

ஒன்றினு லொன்றுள வொன்றினி லொன்றில
ஒன்றுற வொன்றிய வொன்றெனு மொன்றே ..880

களங்கநீத் துலகங் களிப்புற மெய்நெறி
விளங்கவென் னுள்ளே விளங்குமெய்ப் பொருளே

மூவிரு நிலையின் முடிநடு முடிமேல்
ஓவற விளங்கு மொருமைமெய்ப் பொருளே

எழுநிலை மிசையே யின்புரு வாகி
வழுநிலை நீக்கி வயங்குமெய்ப் பொருளே

நவநிலை மிசையே நடுவுறு நடுவே
சிவமய மாகித் திகழ்ந்தமெய்ப் பொருளே

ஏகா தசநிலை யாததி னடுவே
ஏகா தனமிசை யிருந்தமெய்ப் பொருளே ..890

திரையோ தசநிலை சிவவெளி நடுவே
வரையோ தருசுக வாழ்க்கைமெய்ப் பொருளே

இரெண் ணிலையென வியம்புமே னிலையிற்
பூரண சுகமாய்ப் பொருந்துமெய்ப் பொருளே

எல்லா நிலைகளு மிசைந்தாங் காங்கே
எல்லா மாகி யிலங்குமெய்ப் பொருளே

மனாதிகள் பொருந்தா வானடு வானாய்
அனாதியுண் மையதா யமர்ந்தமெய்ப் பொருளே

தானொரு தானாய்த் தானே தானாய்
ஊனுயிர் விளக்கு மொருதனிப் பொருளே ..900

அதுவினு ளதுவா யதுவே யதுவாய்ப்
பொதுவினுள் நடிக்கும் பூரணப் பொருளே

இயல்பினு ளியல்பா யியல்பே யியல்பா
உயாற விளங்கு மொருதனிப் பொருளே

அருவினு ளருவா யருவரு வருவாய்
உருவினுள் விள்ங்கு மொருதனிப் பொருளே

அலகிலாச் சித்தா யதுநிலை யதுவாய்
உலகெலாம் விளங்கு மொருதனிப் பொருளே

பொருளினுட் பொருளாய்ப் பொருளது பொருளா
யொருமையின் விளங்கு மொருதனிப் பொருளே ..910

ஆடுறு சித்திக ளறுபத் துநான்கெழு
கோடியும் விளங்கக் குலவுமெய்ப் பொருளே 

கூட்டுறு சித்திகள் கோடிபல் கோடியும்
ஆட்டுற விளங்கு மரும்பெரும் பொருளே

அறிவுறு சித்திக ளனந்தகோ டிகளும்
பிறிவற விளக்கும் பெருந்தனிப் பொருளே

வீடுக ளெல்லாம் விதிநெறி விளங்க
ஆடல்செய் தருளு மரும்பெரும் பொருளே

பற்றுக ளெல்லாம் பதிநெறி விளங்க
உற்றரு ளாடல்செய் யொருதனிப் பொருளே ..920

பரத்தினிற் பரமே பரத்தின்மேற் பரமே
பரத்தினுட் பரமே பரம்பரம் பரமே

பரம்பெறும் பரமே பரந்தரும் பரமே
பரம்பதம் பரமே பரஞ் சிதம்பரமே

பரம்புகழ் பரமே பரம்பகர் பரமே
பரஞ்சுக பரமே பரஞ்சிவ பரமே

பரங்கொள் சிற்பரமே பரஞ்செய் தற்பரமே
தரங்கொள் பொற்பரமே தனிப்பெரும் பரமே

வரம்பரா பரமே வணம்பரா பரமே
பரம்பரா பரமே பதம்பரா பரமே ..930

சத்திய பதமே சத்துவ பதமே
நித்திய பதமே நிற்குண பதமே

தத்துவ பதமே தற்பத பதமே
சித்துறு பதமே சிற்சுக பதமே

தம்பரம் பதமே தனிச்சுகம் பதமே
அம்பரம் பதமே யருட்பரம் பதமே

தந்திர பதமே சந்திர பதமே
மந்திர பதமே மந்தண பதமே

நவந்தரு பதமே நடந்தரு பதமே
சிவந்தரு பதமே சிவசிவ பதமே ..940

பிரமமெய்க் கதியே பிரமமெய்ப் பதியே
பிரமநிற் குணமே பிரமசிற் குணமே

பிரமமே பிரமப் பெருநிலை மிசையுறும்
பரமமே பரம பதந்தருஞ் சிவமே

அவனோ டவளா யதுவா யலவாய்
நவமா நிலைமிசை நண்ணிய சிவமே

எம்பொரு ளாகி யெமக்கருள் பு஡஢யுஞ்
செம்பொரு ளாகிய சிவமே சிவமே

ஒருநிலை யிதுவே வுயர்நிலை யெனுமொரு
திருநிலை மேவிய சிவமே சிவமே ..950

மெய்வைத் தழியா வெறுவெளி நடுவுற
தெய்வப் பதியாஞ் சிவமே சிவமே

புரைதவிர்த் தெனக்கே பொன்முடி சூட்டிச்
சிரமுற நாட்டிய சிவமே சிவமே

கல்வியுஞ் சாகாக் கல்வியு மழியாச்
செல்வமு மளித்த சிவமே சிவமே

அருளமு தெனக்கே யளித்தரு ணெறிவாய்த்
தெருளுற வளர்க்குஞ் சிவமே சிவமே

சத்தெலா மாகியுந் தானொரு தானாஞ்
சித்தெலாம் வல்லதோர் திருவருட் சிவமே ..960

எங்கே கருணை யியற்கையி னுள்ளன
அங்கே விளங்கிய வருட்பெருஞ் சிவமே

யாரே யென்னினு மிரங்குகின் றார்க்குச்
சீரே யளிக்கிஞ் சிதம்பர சிவமே

பொய்ந்நெறி யனைத்தினும் புகுத்தா தெனையருட்
செந்நெறி சொத்திய சிற்சபைச் சிவமே

கொல்ல நெறியே குருவரு ணெறியெனப்
பல்கா லெனக்குப் பகர்ந்தமெய்ச் சிவமே

உயிரெலாம் பொதுவி னுளம்பட நோக்குக
செயிரெலாம் விடுகெனச் செப்பிய சிவமே ..970

பயிர்ப்புறு கரணப் பா஢சுகள் பற்பல
உயிர்த்திர ளொன்றென வுரைத்தமெய்ச் சிவமே

உயிருள்யா மெம்மு ளுயி஡஢வை யுணர்ந்தே
உயிர்நலம் பரவுகென் றுரைத்தமெய்ச் சிவமே

இயலரு ளொளியோ ரேகதே சத்தினாம்
உயிரொளி காண்கவென் றுரைத்தமெய்ச் சிவமே

அருளலா தணுவு மசைந்திடா ததனால்
அருணலம் பரவுகென் றறைந்தமெய்ச் சிவமே

அ஡஢ளுறி னெல்லா மாகுமீ துண்மை
அருளுற முயல்கவென் றருளிய சிவமே ..980

அருணெறி யொன்றே தெருணெறி மற்றெலாம்
இருணெறி யெனவெனக் கியம்பிய சிவமே

அருள்பெறிற் றுரும்புமோ ரைந்தொழில் பு஡஢யுந்
தெருளிது வெனவே செப்பிய சிவமே

அருளறி வொன்றே யறிவுமற் றெல்லாம்
மருளறி வென்றே வகுத்தமெய்ச் சிவமே

அருட்சுக மொன்றே யரும்பெறற் பெருஞ்சுகம்
மருட்சுகம் பிறவென வகுத்தமெய்ச் சிவமே

அருட்பே றதுவே யருபெறற் பெரும்பே
றிருட்பே றருக்குமென் றியம்பிய சிவமே ..990

அருட்டனி வல்லப மதுவே யெலாஞ்செய்
பொருட்டனிச் சித்தெனப் புகன்றமெய்ச் சிவமே

அருளறி யார்தமை யறியார் எம்மையும்
பொருளறி யாரெனப் புகன்றமெய்ச் சிவமே

அருணிலை யொன்றே யனைத்தும் பெறுநிலை
பொருணிலை காண்கெனப் புகன்றமெய்ச் சிவமே

அருள்வடி வதுவே யழியாத் தனிவடி
வருள்பெற முயாகென் றருளிய சிவமே

அருளே நம்மிய லருளே நம்முரு
அருளே நம்வடி வாமென் றசிவமே .1000




அருளே நம்மடி யருளே நம்முடி
அருளே நம்நடு வாமென் றசிவமே

அருளே நம்மறி வருளே நம்மனம்
அருளே நங்குண மாமென் றசிவமே

அருளே நம்பதி யருளே நம்பதம்
அருளே நம்மிட மாமென் றசிவமே

அருளே நந்துணை யருளே நந்தொழில்
அருளே நம்விருப் பாமென் றசிவமே

அருளே நம்பொரு ளருளே நம்மொளி
அருளே நாமறி வாயென் றசிவமே .1010

அருளே நங்குல மருளே நம்மினம்
அருளே நாமறி வாயென் றசிவமே

அருளே நஞ்சுக மருளே நம்பெயர்
அருளே நாமறி வாயென் றசிவமே

அருளொளி யடைந்தனை யருளமு துண்டனை
அருண்மதி வாழ்கவென் றருளிய சிவமே

அருணிலை பெற்றனை யருள்வடி வுற்றனை
அருளர சியற்றுகென் றருளிய சிவமே

உள்ளகத் தமர்ந்தென துயி஡஢ற் கலந்தருள்
வள்ளல்சிற் றம்பலம் வளர்சிவ பதியே .1020

நிகா஢லா வின்ப நிலைநடு வைத்தெனைத்
தகவொடு காக்குந் தனிச்சிவ பதியே

சுத்தசன் மார்க்க சுகநிலை தனிலெனைத்
சத்திய னாக்கிய தனிச்சிவ பதியே

ஐவருங் காண்டற் கரும்பெரும் பொருளென்
கைவரப் பு஡஢ந்த கதிசிவ பதியே

துன்பந் தொலைத்தருட் ஜோதியால் நிறைந்த
இன்ப மெனக்கரு ளெழிற்சிவ பதியே

சித்தமும் வாக்குஞ் செல்லாப் பெருநிலை
ஒத்துற வேற்றிய வொருசிவ பதியே .1030

கையற வனைத்துங் கடிந்தெனைத் தேற்றி
வையமேல் வைத்த மாசிவ பதியே

இன்புறச் சிறியே னெண்ணுதோ றெண்ணுதோ
றன்பொடன் கண்ணுறு மருட்சிவ பதியே

பிழையெலாம் பொறுத்தெனுட் பிறங்கிய கருணை
மழையெலாம் பொழிந்து வளர்சிவ பதியே

உளத்தினுங் கண்ணினு முயி஡஢னு மெனது
குளத்தினு நிரம்பிய குருசிவ பதியே

பரமுட னபரம் பகர்நிலை யிவையினத்
திரமுற வருளிய திருவருட் குருவே .1040

மதிநிலை யிரவியின் வளர்நிலை யனலின்
றிதிநிலை யனைத்துந் தொ஢ந்தசற் குருவே

கணநிலை யவற்றின் கருநிலை யனைத்துங்
குணமுறத் தொ஢த்துட் குலவுசற் குருவே

பதிநிலை பசுநிலை பாச நிலையெலாம்
மதியுறத் தொ஢த்துள் வயங்குசற் குருவே

பிரம ரகசியம் பேசியென் னுளத்தே
தரமுற விளங்குஞ் சாந்தசற் குருவே

பரம ரகசியம் பகர்ந்தென துளத்தே
வரமுற வளர்த்து வயங்குசற் குருவே .1050

சிவரக சியமெலாந் தொ஢வித் தெனக்கே
நவநிலை காட்டிய ஞானசற் குருவே

சத்திய லனைத்துஞ் சித்தியன் முழுதும்
அத்தகை தொ஢த்த வருட்சிவ குருவே

அறிபவை யெல்லா மறிவித்தென் னுள்ளே
பிறிவற விளங்கும் பொ஢யசற் குருவே

கேட்பவை யெல்லாங் கேட்பித் தெனுள்ளே
வேட்கையின் விளங்கும் விமலசற் குருவே

காண்பவை யெல்லாங் காட்டுவித் தெனக்கே
மாண்பத மளித்து வயங்குசற் குருவே .1060

செய்பவை யெல்லாஞ் செய்வித் தெனக்கே
உய்பவை யளித்தெனு ளோங்குசற் குருவே

உண்பவை யெல்லா முண்ணுவித் தென்னுள்
பண்பினில் விளங்கும் பரமசற் குருவே

சாகாக் கல்வியின் றரமெலாங் கற்பித்
தேகாக் கரப்பொரு ளீந்தசற் குருவே

சத்திய மாஞ்சிவ சித்திக ளனைத்தையும்
மெய்த்தகை யளித்தெனுள் விளங்குசற் குருவே

எல்லா நிலைகளு மேற்றிச் சித்தெலாம்
வல்லா னெனவெனை வைத்தசற் குருவே .1070

சீருற வருளாந் தேசுற வழியாப்
பேருற வென்னைப் பெற்றநற் றாயே

பொருந்திய வருட்பெரும் போகமே யுறுகெனப்
பெருந்தய வாலெனைப் பெற்றநற் றாயே

ஆன்றசன் மார்க்க மணிபெற வெனைத்தான்
இன்றமு தளித்த வினியநற் றாயே

பசித்திடு தோறுமென் பாலணைந் தருளால்
வசித்தமு தருள்பு஡஢ வாய்மைந்ற் றாயே

தளர்ந்தோ றடியேன் சார்பணைந் தென்னை
உளந்தெளி வித்த வொருமைநற் றாயே .1080

அருளமு தேமுத லைவகை யமுதமும்
தெருளுற வெனக்கருள் செல்வநற் றாயே

இயலமு தேமுத லெழுவகை யமுதமும்
உயாற வெனக்கரு ளு஡஢யநற் றாயே

நண்புறு மெண்வகை நவவகை யமுதமும்
பண்புற வெனக்கருள் பண்புடைத் தாயே

மற்றுள வமுத வகையெலா மெனக்கே
உற்றுண வளித்தரு ளோங்குநற் றாயே

கலக்கமு மச்சமுங் கடிந்தென துளத்தே
அலக்கணுந் தவிர்த்தரு ளன்புடைத் தாயே .1090

துய்ப்பினி லனைத்துஞ் சுகம்பெற வளித்தெனக்
கெய்ப்பிலாந் தவிர்த்த வின்புடைத் தாயே

சித்திக ளெல்லாந் தெளிந்திட வெனக்கே
சத்தியை யளித்த தயவுடைத் தாயே

சத்திநி பாதந் தனையளித் தெனைமேல்
வைத்தமு தளித்த மரபுடைத் தாயே

சத்திசத் தர்களெலாஞ் சார்ந்தென தேவல்செய்
சித்தியை யளித்த தெய்வநற் றாயே

தன்னிக ஡஢ல்லாத் தலைவனைக் காட்டியே
என்னைமே லேற்றிய வினியநற் றாயே .1100

வெளிப்பட விரும்பிய விளைவெலா மெனக்கே
யளித்தளித் தின்புசெய் யன்புடைத் தாயே

எண்ணகத் தொடுபுறத் தென்னையெஞ் ஞான்றுங்
கண்ணெனக் காக்குங் கருணைநற் றாயே

இன்னரு ளமுதளித் திறவாத் திறல்பு஡஢ந்
தென்னை வளர்த்திடு மின்புடைத் தாயே

என்னுட லென்னுயி ரென்னறி வெல்லாம்
தன்னவென் றாக்கிய தயவுடைத் தாயே

தொ஢யா வகையாற் சிறியேன் றளர்ந்திடத்
தா஢யா தணைத்த தயவுடைத் தாயே .1110

சினமுத லனைத்தையுந் தீர்த்தெனை நனவினுங்
கனவினும் பி஡஢யாக் கருணைநற் றாயே

து஦க்கமுஞ் சோம்புமென் றுன்பமு மச்சமும்
ஏக்கமு நீக்கிய வென்றனித் தாயே

துன்பெலாந் தவிர்த்துளே யன்பெலாம் நிரம்ப
இன்பெலா மளித்த வென்றனித் தந்தையே

எல்லா நன்மையு மென்றெனக் களித்த
எல்லாம் வல்லசித் தென்றனித் தந்தையே

நாயிற் கடையே னலம்பெறக் காட்டிய
தாயிற் பொ஢துந் தயவுடைத் தந்தையே .1120

அறிவிலாப் பருவத் தறிவெனக் களித்தே
பிறவிலா தமர்ந்த பேரருட் டந்தையே

புன்னிக ஡஢ல்லேன் பொருட்டிவ ணடைந்த
தன்னிக ஡஢ல்லாத் தனிப்பெருந் தந்தையே

அகத்தினும் புறத்தினு மமர்ந்தருட் ஜோதி
சகத்தினி லெனக்கே தந்தமெய்த் தந்தையே

இணையிலாக் களிப்புற் றிருந்திட வெனக்கே
துணயடி சென்னியிற் சூட்டிய தந்தையே

ஆதியீ றறியா வருளர சாட்சியிற்
ஜோதிமா மகுடஞ் சூட்டிய தந்தையே .1130

எட்டிரண் டறிவித் தெனைத்தனி யேற்றிப்
பட்டிமண் டபத்திற் பதித்தமெய்த் தந்தையே

தங்கோ லளவது தந்தருட் ஜோதிச்
செங்கோல் சொத்தெனச் செப்பிய தந்தையே

தன்பொரு ளனைத்தையுந் தன்னர சாட்சியில்
என்பொரு ளாக்கிய என்றனித் தந்தையே

தன்வடி வனைத்தையுந் தன்னர சாட்சியில்
என்வடி வாக்கிய என்றனித் தந்தையே

தன்சித் தனைத்தையுந் தன்சமு கத்தினில்
என்சித் தாக்கிய என்றனித் தந்தையே .1140

தன்வச மாகிய தத்துவ மனைத்தையும்
என்வச மாக்கிய வென்னுயிர்த் தந்தையே

தன்கையிற் பிடித்த தனியருட் ஜோதியை
என்கையிற் கொடுத்த என்றனித் தந்தையே

தன்னையுந் தன்னருட் சத்தியின் வடிவையும்
என்னையு மொன்றென வியற்றிய தந்தையே

தன்னிய லென்னியல் தன்செய லென்செயல்
என்ன வியற்றிய வென்றனித் தந்தையே

தன்னுரு வென்னுரு தன்னுரை யென்னுரை
என்ன வியற்றிய வென்றனித் தந்தையே .1150

சதுரப் பேரருட் டனிப்பெருந் தலைவனென்
றெதிரற் றோங்கிய வென்னுடைத் தந்தையே

மனவாக் கறியா வரைப்பினி லெனக்கே
இனவாக் கருளிய வென்னுயிர்த் தந்தையே

உணர்ந்துணர்ந் துணா஢னு முணராப் பெருநிலை
யணைந்திட வெனக்கே யருளிய தந்தையே

து஡஢யவாழ் வுடனே சுகபூ ரணமெனும்
பொ஢யவாழ் வளித்த பெருந்தனித் தந்தையே

இறிலாப் பதங்கள் யாவையுங் கடந்த
பேறளித் தாண்ட பெருந்தகைத் தந்தையே .1160

எவ்வகைத் திறத்தினு மெய்துதற் கா஢தாம்
அவ்வகை நிலையெனக் களித்தநற் றந்தையே

இனிப்பிற வாநெறி யெனக்களித் தருளிய
தனிப்பெருந் தலைமைத் தந்தையே தந்தையே

பற்றயர்ந் தஞ்சிய பா஢வுகண்ட ணைந்தெனைச்
சற்றுமஞ் சேலெனத் தாங்கிய துணையே

தளர்ந்தவத் தருணமென் றளர்வெலாந் தவிர்த்துட்
கிளர்ந்திட வெனக்குக் கிடைத்தமெய்த் துணையே

துறையிது வழியிது துணிவிது நீசெயும்
முறையிது வெனவே மொழிந்தமெய்த் துணையே .1170

எங்குறு தீமையு மெனைத்தொட ராவகை
கங்கு஡ம் பகாமெய்க் காவல்செய் துணையே

வேண்டிய வேண்டுய விருப்பெலா மெனக்கே
யீண்டிருந் தருள்பு஡஢ யென்னுயிர்த் துணையே

இகத்தினும் பரத்தினு மெனக்கிடர் சாரா
தகத்தினும் புறத்தினு மமர்ந்தமெய்த் துணையே

அயர்வற வெனக்கே யருட்டுணை யாகியென்
னுயி஡஢னுஞ் சிறந்த வொருமையென் னட்பே

அன்பினிற் கலந்தென தறிவினிற் பயின்றே
இன்பினி லளைந்தவென் னின்னுயிர் நட்பே .1180

நான்பு஡஢ வனவெலாந் தான்பு஡஢ந் தெனக்கே
வான்பத மளிக்க வாய்த்தநன் னட்பே

உள்ளமு முணர்ச்சியு முயிருங் கலந்துகொண்
டெள்ளுறு நெய்யிலென் னுள்ளுறு நட்பே

செற்றமுந் தீமையுந் தீர்த்துநான் செய்த
குற்றமுங் குணமாக் கொண்டவென் னட்பே

குணங்குறி முதலிய குறித்திடா தெனையே
அணங்கறக் கலந்த அன்புடை நட்பே 

பிணக்கும் பேதமும் பேயுல கோர்புகல்
கணக்குந் தீர்த்தெனைக் கலந்தநன் னட்பே .1190

சவலைநெஞ் சகத்தின் றளர்ச்சியு மச்சமு
கவலையுந் தவிர்த்தெனைக் கலந்தநன் னட்பே

களப்பறிந் தெடுத்துக் கலக்கந் தவிர்த்தெனக்
கிளைப்பறிந் துதவிய வென்னுயி ருறவே

தன்னைத் தழுவுறு தரஞ்சிறி தறியா
வென்னைத் தழுவிய வென்னுயி ருறவே

மனக்குறை நீக்கிநல் வாழ்வளித் தென்றும்
எனக்குற வாகிய என்னுயி ருறவே

துன்னு மனாதியே சூழ்ந்தெனைப் பி஡஢யா
தென்னுற வாகிய வென்னுயி ருறவே .1200

என்றுமோர் நிலையாய் என்றுமோ ஡஢யலாய்
என்றுமுள் ளதுவா மென்றனிச் சத்தே

அனைத்துல கவைகளு மாங்காங் குணா஢னும்
இனைத்தென வறியா வென்றனிச் சத்தே

பொதுமறை முடிகளும் புகலவை முடிகளும்
இதுவெனக் கா஢தா மென்றனிச் சத்தே

ஆகம முடிகளு மவைபுகல் முடிகளும்
ஏகுதற் கா஢தா மென்றனிச் சத்தே

சத்தியஞ் சத்தியஞ் சத்திய மெனவே
இத்தகை வழுத்து மென்றனிச் சத்தே .1210

து஡஢யமுங் கடந்ததோர் பொ஢யவான் பொருளென
உரைசெய் வேதங்க ளுன்னுமெய்ச் சத்தே

அன்றத னப்பா லதன்பரத் ததுதான்
என்றிட நிறைந்த வென்றனிச் சத்தே

என்றுமுள் ளதுவாய் எங்குமோர் நிறைவாய்
என்றும் விளங்கிடு மென்றனிச் சித்தே

சத்திகள் பலவாய்த் சத்தர்கள் பலவாய்
இத்தகை விளங்கு மென்றனிச் சித்தே

தத்துவம் பலவாய்த் தத்துவி பலவாய்
இத்தகை விளங்கு மென்றனிச் சித்தே .1220

படிநிலை பலவாய் பதநிலை பலவாய்
இடிவற விளங்கிடு மென்றனிச் சித்தே

மூர்த்தர்கள் பலவாய் மூர்த்திகள் பலவாய்
ஏற்பட விளங்கிடு மென்றனிச் சித்தே

உயிர்வகை பலவா யுடல்வகை பலவாய்
இயாற விளக்கிடு மென்றனிச் சித்தே

அறிவவை பலவா யறிவன பலவாய்
எறிவற விளக்கிடு மென்றனிச் சித்தே

நினைவவை பலவாய் நினைவன பலவாய்
இனைவற விளக்கிடு மென்றனிச் சித்தே .1230

காட்சிகள் பலவாய்க் காண்பன பலவாய்
ஏட்சியின் விளக்கிடு மென்றனிச் சித்தே

செய்வினை பலவாய்ச் செய்வன பலவாய்ச்
எய்வற விளக்கிடு மென்றனிச் சித்தே

அண்ட சராசர மனைத்தையும் பிறவையும்
எண்டற விளக்கு மென்றனிச் சித்தே

எல்லாம் வல்லசித் தெனமறை புகன்றிட
எல்லாம் விள்க்கிடு மென்றனிச் சித்தே

ஒன்றதி லொன்றென் றுரைக்கவும் படாதாய்
என்றுமோர் படித்தா மென்றனி யின்பே .1240

இதுவது வென்னா வியாடை யதுவாய்
எதிரற நிறைந்த வென்றனி யின்பே

ஆக்குறு மவத்தைக ளனைத்தையுங் கடந்துமேல்
ஏக்கற நிறைந்த வென்றனி யின்பே

அறிவுக் கறிவினி லதுவது வதுவாய்
எறிவற் றோங்கிய வென்றனி யின்பே

விடய மெவற்றினு மேன்மேல் விளைந்தவை
யிடையிடை யோங்கிய வென்றனி யின்பே

இம்மையு மறுமையு மியம்பிடு மொருமையும்
எம்மையு நிரம்பிடு மென்றனி யின்பே .1250

முத்தர்கள் சித்தர்கள் சத்திகள் சத்தர்கள்
எத்திறத் தவர்க்குமா மென்றனி யின்பே

எல்லா நிலைகளி னெல்லா வுயிருறும்
எல்லா வின்புமா மென்றனி யின்பே

கரும்புறு சாறுங் கனிந்தமுக் கனியின்
விரும்புறு மிரதமு மிக்கதீம் பா஡ம்

குணங்கொள்கோற் றேனுங் கூட்டியொன் றாக்கி
மணங்கொளப் பதஞ்செய் வகையுற வியற்றிய

உணவெனப் பல்கா ஡ரைக்கினு நிகரா
வணமிறு மின்ப மயமே யதுவாய்க் .1260

கலந்தறி வுருவாய்க் கருதுதற் கா஢தாய்
நலந்தரு விளக்கமு நவிலருந் தண்மையும்

உள்ளதா யென்று முள்ளதாஅ யென்னுள்
உள்ளதா யென்ற னுயிருள முடம்புடன்

எல்லா மினிப்ப வியாறு சுவையளித்
தெல்லாம் வல்லசித் தியற்கைய தாகிச்

சாகா வரமுந் தனித்தபே ரறிவும்
மாகா தலிற்சிவ வல்லப சக்தியும்

செயற்கரு மனந்த சித்தியு மின்பமும்
மயக்கறத் தருந்திறல் வண்மைய தாகிப் .1270

பூரண வடிவாய்ப் பொங்கிமேற் றதும்பி
ஆரண முடுயுட னாகம முடியுங்

கடந்தென தறிவாங் கனமேற் சபைநடு
நடந்திகழ் கின்றமெய்ஞ் ஞானவா ரமுதே

சத்திய வமுதே தனித்திரு வமுதே
நித்திய வமுதே நிறைசிவ வமுதே

சச்சிதா னந்தத் தனிமுத லமுதே
மெய்ச்சிதா காச விளைவரு ளமுதே

ஆனந்த வமுதே யருளொளி யமுதே
தானந்த மில்லாத் தத்துவ வமுதே .1280

நவநிலை தருமோர் நல்லதெள் ளமுதே
சிவநிலை தனிலே திரண்டவுள் ளமுதே

பொய்படாக் கருணைப் புண்ணிய வமுதே
கைபடாப் பெருஞ்சீர்க் கடவுள்வா னமுதே

அகம்புற மகப்புற மாகிய புறப்புறம்
உகந்தநான் கிடத்து மோங்கிய வமுதே

பனிமுத னீக்கிய பரம்பர வமுதே
தனிமுத லாய சிதம்பர வமுதே

உலகெலாங் கொள்ளினு முலப்பிலா வமுதே
அலகிலாப் பெருந்திற லற்புத வமுதே .1290

அண்டமு மதன்மே லண்டமு மவற்றுள
பண்டமுங் காட்டிய பரம்பர மணியே

பிண்டமு மதி஡று பிண்டமு மவற்றுள
பண்டமுங் காட்டிய பராபர மணியே

நினைத்தவை நினைத்தவை நினைத்தாங் கெய்துற
அனைத்தையுந் தருமோ ரரும்பெறன் மணியே

விண்பத மனைத்து மேற்பத முழுவதுங்
கண்பெற நடத்துங் ககனமா மணியே

பார்பத மனைத்தும் பகரடி முழுவதுஞ்
சார்புற நடத்துஞ் சரவொளி மணியே .1300

அண்டகோ டிகளெலா மரைக்கணத் தேகிக்
கண்டுகொண் டிடவொளிர் கலைநிறை மணியே

சராசர வுயிர்தொறுஞ் சாற்றிய பொருடொறும்
விராவியுள் விளங்கும் வித்தக மணியே

மூவரு முனிவரு முத்தருஞ் சித்தருந்
தேவரு மதிக்குஞ் சித்திசெய் மணியே

தாழ்வெலாந் தவிர்த்துச் சகமிசை யழியா
வாழ்வெனக் களித்த வளரொளி மணியே

நவமணி முதலிய நலமெலாந் தருமொரு
சிவமணி யெனுமருட் செல்வமா மணியே .1310

வான்பெறற் கா஢ய வகையெலாம் விரைந்து
நான்பெற வளித்த நாதமந் திரமே

கற்பம் பலபல கழியினு மழியாப்
பொற்புற வளித்த புனிதமந் திரமே

அகாரமு முகரமு மழியாச் சிகரமும்
வகரமு மாகிய வாய்மைமந் திரமே

ஐந்தென வெட்டென வாறென நான்கென
முந்துறு மறைமுறை மொழியுமந் திரமே

வேதமு மாகம வி஡஢வுக ளனைத்தும்
ஓதநின் றுலவா தோங்குமந் திரமே .1320

உடற்பிணி யனைத்தையு முயிர்ப்பிணி யனைத்தையு
மடர்ப்பறத் தவிர்த்த வருட்சிவ மருந்தே

சித்திக்கு மூலமாஞ் சிவமருந் தெனவுளந்
தித்திக்கு ஞானத் திருவருண் மருந்தே

இறந்தவ ரெல்லா மெழுந்திடப் பு஡஢யுஞ்
சிறந்தவல் லபமுறு திருவருண் மருந்தே

மரணப் பெரும்பிணி வாரா வகைமிகு
கரணப் பெருந்திறல் காட்டிய மருந்தே

நரைதிரை மூப்பவை நண்ணா வகைதரும்
உரைதரு பெருஞ்சீ ருடையநன் மருந்தே .1330

என்றே யென்னினு மிளமையோ டிருக்க
நன்றே தருமொரு ஞானமா மருந்தே

மலப்பிணி தவிர்த்தருள் வலந்தரு கின்றதோர்
நலத்தகை யதுவென நாட்டிய மருந்தே

சிற்சபை நடுவே திருநடம் பு஡஢யும்
அற்புத மருந்தெனு மானந்த மருந்தே

இடையுறப் படாத வியற்கை விளக்கமாய்த்
தடையொன்று மில்லாத் தகவுடை யதுவாய்

மாற்றிவை யென்ன மதித்தளப் பா஢தாய்
ஊற்றமும் வண்ணமு மொருங்குடை யதுவாய்க் .1340

காட்சிக் கினியநற் கலையுடை யதுவாய்
ஆட்சிக் கு஡஢யபன் மாட்சியு முடைத்தாய்

கைதவிர் கனவினுங் காண்டற்க் கா஢தாய்ச்
செய்தவப் பயனாந் திருவருள் வலத்தால்

உளம்பெறு மிடமெலா முதவுக வெனவே
வளம்பட வாய்த்து மன்னிய பொன்னே

புடம்படாத் தரமும் விடம்படாத் திறமும்
வடம்படா நலமும் வாய்த்தசெம் பொன்னே

மும்மையுந் தருமொரு செம்மையை யுடைத்தாய்
இம்மையே கிடைத்திங் கிலங்கிய பொன்னே .1350

எடுத்தெடுத் துதவினு மென்றுங் குறையா
தடுத்தடுத் தோங்குமெய் யருளுடைப் பொன்னே

தளர்ந்திடே லெடுக்கின் வளர்ந்திடு வேமெனக்
கிளர்ந்திட வுரைத்துக் கிடைத்தசெம் பொன்னே

எண்ணிய தோறு மியற்றுக வென்றெனை
யண்ணியென் கரத்தி லமர்ந்தபைம் பொன்னே

நீகேண் மறக்கினு நின்னையாம் விட்டுப்
போகே மெனவெனைப் பொருந்திய பொன்னே

எண்ணிய வெண்ணியாங் கெய்திட வெனக்குப்
பண்ணிய தவத்தாற் பழுத்தசெம் பொன்னே .1360

விண்ணியற் தலைவரும் வியந்திட வெனக்குப்
புண்ணியப் பயனாற் பூத்தசெம் பொன்னே

நால்வகை நெறியினு நாட்டுக வெனவே
பால்வகை முழுதும் பணித்தபைம் பொன்னே

எழுவகை நெறியினு மியற்றுக வெனவே
முழுவகை காட்டி முயங்கிய பொன்னே

எண்ணிய படியெலா மியற்றுக வென்றனைப்
புண்ணிய பலத்தாற் பொருந்திய பொன்னே

ஊழிதோ றுழெ஢ யுலப்புறா தோங்கி
வாழியென் றெனக்கு வாய்த்தநன் னிதியே .1370

இதமுற வூழிதோ றெடுத்தெடுத் துலகோர்க்
குதவினு முலவா தோங்குநன் னிதியே

இருநிதி யெழுநிதி யியனவ நிதிமுதற்
றிருநிதி யெல்லாந் தருமொரு நிதியே

எவ்வகை நிதிகளு மிந்தமா நிதியிடை
அவ்வகை கிடைக்குமென் றருளிய நிதியே

அற்புதம் விளங்கு மருட்பெரு நிதியே
கற்பனை கடந்த கருணைமா நிதியே

நற்குண நிதியே சற்குண நிதியே
நிற்குண நிதியே சிற்குண நிதியே .1380

பளகிலா தோங்கும் பளிக்குமா மலையே
வளமெலா நிறைந்த மாணிக்க மலையே

மதியுற விளங்கு மரகத மலையே
வதிதரு பேரொளி வச்சிர மலையே

உரைமனங் கடந்தாங் கோங்குபொன் மலையே
து஡஢யமேல் வெளியிற் ஜோதிமா மலையே

புற்புதந் திரைநுரை புரைமுத லிலதோர்
அற்புதக் கடலே யமுதத்தண் கடலே

இருட்கலை தவிர்த்தொளி யெல்லாம் வழங்கிய
அருட்பெருங் கடலே யானந்தக் கடலே .1390

பவக்கடல் கடந்துநான் பார்த்தபோ தருகே
உவப்புறு வளங்கொண் டோ ங்கிய கரையே

என்றுயர்ச் சோடைக ளெல்லாந் தவிர்த்துள
நண்றுற விளங்கிய நந்தனக் காவே

சேற்றுநீ ஡஢ன்றிநற் றீஞ்சுவை தருமோர்
ஊற்றுநீர் நிரம்ப வுடையபூந் தடமே

கோடைவாய் வி஡஢ந்த குளிர்தரு நிழலே
மேடைவாய் வீசிய மெல்லிய காற்றே

களப்பறக் கிடைத்த கருணைநன் னீரே
இளைப்புற வாய்த்த வின்சுவை யுணவே .1400

தென்னைவாய்க் கிடைத்த செவ்விள நீரே
தென்னைவான் பலத்திற் றிருகுதீம் பாலே

நீர்நசை தவிர்க்கு நெல்லியங் கனியே
வேர்விளை பலவின் மென்சுவைச் சுளையே

கட்டுமாம் பழமே கதலிவான் பழமே
இட்டநற் சுவைசெய் யிலந்தையங் கனியே

புனிதவான் றருவிற் புதுமையாம் பலமே
கனியெலாங் கூட்டிக் கலந்ததீஞ் சுவையே

இதந்தரு கரும்பி லெடுத்ததீஞ் சாறே
பத்ந்தரு வெல்லப் பாகினின் சுவையே .1410

சாலவே யினிக்குஞ் சர்க்கரைத் திரளே
ஏலவே நாவுக் கினியகற் கண்டே

உலப்புறா தினிக்கு முயர்மலைத் தேனே
கலப்புறா மதுரங் கனிந்தகோற் றேனே

நவையிலா தெனக்கு நண்ணிய நறவே
சிவையெலாந் திரட்டிய துயெதீம் பதமே

பதம்பெறக் காய்ச்சிய பசுநறும் பாலே
இதம்பெற வுருக்கிய விளம்பசு நெய்யே

உலர்ந்திடா தென்று மொருபடித் தாகி
மலர்ந்துநல் வண்ணம் வயங்கிய மலரே .1420

இகந்தரு புவிமுத லெவ்வுல குயிர்களும்
உகந்திட மணக்குஞ் சுகந்தநன் மணமே

யாழுறு மிசையே யினியவின் னிசையே
ஏழுறு மிசையே யியலரு ளிசையே

திவளொளிப் பருவஞ் சேர்ந்தநல் லவளே
அவளொடுங் கூடி யடைந்ததோர் சுகமே

நாதநல் வரைப்பி னண்ணிய பாட்டே
வேதகீ தத்தில் விளைதிருப் பாட்டே

நன்மார்க்கர் நாவி னவிற்றிய பாட்டே
சன்மார்க்க சங்கந் தழுவிய பாட்டே .1430

நம்புறு மாகம நவிற்றிய பாட்டே
எம்பல மாகிய வம்பலப் பாட்டே

என்மனக் கண்ணே என்னருட் கண்ணே
என்னிரு கண்ணே யென்கணுண் மணியே

என்பெருங் களிப்பே யென்பெரும் பொருளே
என்பெருந் திறலே யென்பெருஞ் செயலே

என்பெருந் தவமே என்றவப் பலனே
என்பெருஞ் சுகமே யென்பெரும் பேறே

என்பெரு வாழ்வே யென்றன்வாழ் முதலே
என்பெரு வழக்கே யென்பெருங் கணக்கே .1440

என்பெரு நலமே யென்பெருங் குலமே
என்பெரு வலமே யென்பெரும் புலமே

என்பெரு வரமே யென்பெருந் தரமே
என்பெரு நெறியே யென்பெரு நிலையே

என்பருங் குணமே என்பெருங் கருத்தே
என்பெருந் தயவே யென்பெருங்கதியே

என்பெரும் பதியே யென்னுயி ஡஢யலே
என்பெரு நிறைவே யென்றனி யறிவே

தோலெலாங் குழைந்திடச் சூழ்நரம் பனைத்தும்
மேலெலாங் கட்டவை விட்டுவிட் டியங்கிட .1450

என்பெலா நெக்குநெக் கியலிடை நெகிழ்ந்திட
மென்புடைத் த்சையெலா மெய்யுறத் தளர்ந்திட

இரத்து மனைத்துமுள் ளிறுகிடச் சுக்கிலம்
உரத்திடை பந்தித் தொரு திரளாயிட

மடலெலா மூளை மலர்ந்திட வமுதம்
உடலெலா மூற்றெடுத் தோடி நிரம்பிட

ஒண்ணுதல் வியர்த்திட வொளிமுக மலர்ந்திட
தண்ணிய வுயிர்ப்பினிற் சாந்தந் ததும்பிட

உண்ணகை தோற்றிட வுரோமம் பொடித்திடக்
கண்ணினீர் பெருகிக் கால்வழிந் தோடிட .1460

வாய்துடித் தலறிட வளர்செவித் துணைகளிற்
கூயிசைப் பொறியெலாங் கும்மெனக் கொட்டிட

மெய்யெலாங் குளிர்ந்திட மென்மார் பசைந்திடக்
கையெலாங் குவிந்திடக் காலெலாஞ் சுலவிட

மனங்கனிந் துருகிட மதிநிறைந் தொளிர்ந்திட
இனம்பெறு சித்த மியைந்து களித்திட

அகங்கார மாங்காங் கதிபா஢ப் பமைந்திடச்
சகங்காண வுள்ளத் தழைத்து மலர்ந்திட

அறிவுறு வனைத்து மானந்த மாயிடப்
பொறியுறு மான்மதற் போதமும் போயிடத் .1470

தத்துவ மனைத்துந் தாமொருங் கொழிந்திடச்
சத்துவா மொன்றே தனித்துநின் றோங்கிட

உலகெலாம் விடய முளவெலா மறைந்திட
அலகிலா வருளி னாசைமேற் பொங்கிட

என்னுளத் தெழுந்துயி ரெல்லா மலர்ந்திட
என்னுளத் தோங்கிய என்றனி யன்பே

பொன்னடி கண்டருட் புத்தமு துணவே
என்னுளத் தெழுந்த வென்னுடை யன்பே

தன்னையே யெனக்குத் தந்தெரு ளொளியால்
என்னைவே தித்த என்றனி யன்பே .1480

என்னுளே யரும்பி யென்னுளே மலர்ந்து
என்னுளே வி஡஢ந்த என்னுடை யன்பே

என்னுளே விளங்கி யென்னுளே பழுத்து
என்னுளே கனிந்த வென்னுடை யன்பே

தன்னுளே நிறைவுறு தரமெலா மளித்தே
என்னுளே நிறைந்த என்றனி யன்பே

துன்புள வனைத்துந் தொலைத்தென துருவை
யின்புரு வாக்கிய என்னுடை யன்பே

பொன்னுடம் பெனக்குப் பொருந்திடும் பொருட்டா
என்னுளங் கலந்த என்றனி யன்பே .1490

தன்வச மாகித் ததும்பிமேற் பொங்கி
என்வசங் கடந்த என்னுடை யன்பே

தன்னுளே பொங்கிய தண்ணமு துணவே
என்னுளே பொங்கிய என்றனி யன்பே

அருளொளி விளங்கிட வாணவ மெனுமோர்
இருளற வென்னுளத் தேற்றிய விளக்கே

துன்புறு தத்துவத் து஡஢செலா நீக்கிநல்
லின்புற வென்னுளத் தேற்றிய விளக்கே

மயலற வழியா வாழ்வுமேன் மோம்
இயாற வென்னுளத் தேற்றிய விளக்கே .1500

இடுவெளி யனைத்து மியலொளி விளங்கிட
நடுவெளி நடுவே நாட்டிய விளக்கே

கருவெளி யனைத்துங் கதிரொளி விளங்கிட
உருவெளி நடுவே யொளிர்தரு விளக்கே

தேற்றிய வேதத் திருமுடி விளங்கிட
ஏற்றிய ஞான வியளொளி விளக்கே

ஆகம முடிமே லருளொளி விளங்கிட
வேகம தறவே விளங்கொளி விளக்கே

ஆ஡஢யர் வழுத்திய வருணிலை யனாதி
கா஡஢யம் விளக்குமோர் காரண விளக்கே .1510

தண்ணிய வமுதே தந்தென துளத்தே
புண்ணியம் பலித்த பூரண மதியே

உய்தர வமுத முதவியென் னுளத்தே
செய்தவம் பலித்த திருவளர் மதியே

பதியெலாந் தழைக்கப் பதம்பெறு மமுத
நிதியெலா மளித்த நிறைதரு மதியே

பாலெனத் தண்கதிர் பரப்பியெஞ் ஞான்று
மேல்வெளி விளங்க விளங்கிய மதியே

உயங்கிய உள்ளமு முயிருந் தழைத்திட 
வயங்கிய கருணை மழைபொழி மழையே .1520

என்னையும் பணிகொண் டென்னுளே நிரம்ப
மன்னிய கருணை மழைபொழி மழையே

உளங்கொளு மெனக்கே யுவகைமேற் பொங்கி
வளங்கொளக் கருணை மழைபொழி மழையே

நலந்தர வுடாயிர் நல்லறி வெனக்கே
மலர்ந்திடக் கருணை மழைபொழி மழையே

து஦ய்மையா லெனது து஡஢செலா நீக்கிநல்
வாய்மையாற் கருணை மழைபொழி மழையே

வெம்மல விரவது விடிதரு ணந்தனிற்
செம்மையி ஡தித்துளந் திகழ்ந்தசெஞ் சுடரே .1530

திரையெலாந் தவிர்த்துச் செவ்வியுற் றாங்கே
வரையெலாம் விளங்க வயங்குசெஞ் சுடரே

அலகிலாத் தலவர்க ளரசுசெய் தத்துவ
உலகெலாம் விளங்க வோங்குசெஞ் சுடரே

முன்னுறு மலவிருள் முழுவது நீக்கியே
என்னுள வரைமே லெழுந்தசெஞ் சுடரே

ஆதியு நடுவுட னந்தமுங் கடந்த
ஜோதியா யென்னுளஞ் சூழ்ந்தமெய்ச் சுடரே

உள்ளொளி யோங்கிட வுயிரொளி விளங்கிட
வெள்ளொளி காட்டிய மெய்யருட் கனலே .1540

நலங்கொளப் பு஡஢ந்திடு ஞானயா கத்திடை
வலஞ்சுழித் தெழுந்து வளர்ந்தமெய்க் கனலே

வேதமு மாகமு வி஡஢வும் பரம்பர
நாதமுங் கடந்த ஞானமெய்க் கனலே

எண்ணிய வெண்ணிய வெல்லாந் தரவெனுள்
நண்ணிய புண்ணிய ஞானமெய்க் கனலே

வலமுறு சுத்தசன் மார்க்க நிலைபெறு
நலமெலா மளித்த ஞானமெய்க் கனலே

இரவொடு பகலிலா வியல்பொது நடுமிடு
பரமவே தாந்தப் பரம்பரஞ் சுடரே .1550

வரநிறை பொதுவிடை வளர்திரு நடம்பு஡஢ 
பரமசித் தாந்தப் பதிபரஞ் சுடரே

சமரச சத்தியச் சபையி னடம்பு஡஢
சமரச சத்தியத் தற்சுயஞ் சுடரே

சபையென துளமென தனமர்ந் தெனக்கே
அபய மளித்ததோ ரருட்பெருஞ் ஜோதி

மருளெலாந் தவிர்த்து வரமெலாங் கொடுத்தே
அருளமு தருத்திய வருட்பெருஞ் ஜோதி

வாழிநின் பேரருள் வாழிநின் பெருஞ்சீர்
ஆழியொன் றளித்த வருட்பெருஞ் ஜோதி .1560

என்னையும் பொருளென வெண்ணியென் னுளத்தே
அன்னையு மப்பனு மாகிவீற் றிருந்து

உலகியல் சிறிது முளம்பிடி யாவகை
அலகில்பே ரருளா லறிவது விளக்கிச்

சிறுநெறிச் செல்லாத் திறனளித் தழியா
துறுநெறி யுணர்ச்சிதந் தொளியுறப் பு஡஢ந்து

சாகாக் கல்வியின் றரமெலா முணர்த்திச்
சாகா வரத்தையுந் தந்துமேன் மோம்

அன்பையும் விளைவித் தருட்பே ரொளியால்
இன்பையு நிறைவித் தென்னையு நின்னையும் .1570

ஓருரு வாக்கியா னுன்னிய படியெலாஞ்
சீருறச் செய்துயிர்த் திறம்பெற வழியா

அருளமு தளித்தனை யருணிலை யேற்றினை
அருளறி வளித்தனை யருட்பெருஞ் ஜோதி

வெல்கநின் பேரருள் வெல்கநின் பொ஢ஞ்சீர்
அல்கலின் றோங்கிய வருட்பெருஞ் ஜோதி

உலகுயிர்த் திரளெலா மொளிநெறி பெற்றிட
இலகுமைந் தொழிலையும் யான்செயத் தந்தனை

போற்றிநின் பேரருள் போற்றிநின் பெருஞ்சீர்
ஆற்றலி னோங்கிய வருட்பெருஞ் ஜோதி .1580

மூவருந் தேவரு முத்தருஞ் சித்தரும்
யாவரும் பெற்றிடா வியலெனக் களித்தனை

போற்றிநின் பேரருள் போற்றிநின் பெருஞ்சீர்
ஆற்றலி னோங்கிய வருட்பெருஞ் ஜோதி

சித்திக ளனைத்தையுந் தெளிவித் தெனக்கே
சத்திய நிலைதனைத் தயவினிற் றந்தனை

போற்றிநின் பேரருள் போற்றிநின் பெருஞ்சீர்
ஆற்றலி னோங்கிய வருட்பெருஞ் ஜோதி

உலகினி ஡யிர்களுக் குறுமிடை யூறெலாம்
விலகநீ யடைந்து விலக்குக மகிழ்க .1590

சுத்தசன் மார்க்க சுகநிலை பெறுக
உத்தம னாகுக வோங்குக வென்றனை

போற்றிநின் பேரருள் போற்றிநின் பெருஞ்சீர்
ஆற்றலி னோங்கிய வருட்பெருஞ் ஜோதி

அருட்பெருஞ் ஜோதி யருட்பெருஞ் ஜோதி
அருட்பெருஞ் ஜோதி யருட்பெருஞ் ஜோதி .1596

திருச்சிற்றம்பலம்


 

வள்ளலார் அருளிய

திருவொற்றியூர் வடிவுடை மாணிக்க மாலை


(கட்டளைக் களித்துறை)

காப்பு
சீர்கொண்ட வொற்றிப் பதியுடை யானிடஞ் சேர்ந்தமணி
வார்கொண்ட கொங்கை வடிவாம் பிகைதன் மலரடிக்குத்
தார்கொண்ட செந்தமிழ்ப் பாமாலை சாத்தத் தமியனுக்கே
ஏர்கொண்ட நல்லரு ளீயுங் குணாலய வேரம்பனே. 

நூல்
கடலமு தேசெங்கரும்பெ அருட்கற் பசுக்கனியே
உடலுயி ரேயுயிர்க் குள்ளுணர் வேயுணர் வுள்ளெளியே
அடல்விடை யாரொற்றி யாரிடங் கொண்ட அருமருந்தே
மடலவிழ் ஞானமலரே வடிவுடை மாணிக்கமே. 1

அணியே அணிபெறும் ஒற்றித் தியாகர்தம் அன்புறுசற்
குணியேஎம் வாழ்க்கைக் குலதெய்வ மேமலைக் கோன்தவமே
பணியேன் பிழைபொறுத் தாட்கொண்ட தெய்வப் பதிகொள்சிந்தா
மணியேயென் கண்ணுண் மணியே வடிவுடை மாணிக்கமே. 2

மானேர் விழிமலை மானேஎம் மானிடம் வாழ்மயிலே
கானேர் அளகப் பசுங்குயி லேஅருட் கட்கரும்பே
தேனே திருவொற்றி மாநகர் வாழும் சிவசத்தியே
வானே கருணை வடிவே வடிவுடை மாணிக்கமே. 3

பொருளே அடியர் புகலிட மேஒற்றிப் பூரணன்தண்
அருளேஎம் ஆருயிர்க் காந்துணை யேவிண்ணவர் புகழும்
தெருளேமெய்ஞ் ஞானத் தெளிவே மறைமுடிச் செம்பொருளே
மருளேத நீக்கும் ஒளியே வடிவுடை மாணிக்கமே. 4

திருமாலும் நான்முகத் தேவுமுன் னாள்மிகத் தேடிமனத்
தருமா லுழக்க அனலுரு வாகி அமர்ந்தருளும்
பெருமான்எம் மான்ஒற்றிப் பெம்மான்கைம்
மருமான் இடங்கொள்பெண் மானே வடிவுடை மாணிக்கமே. 5

உன்னேர் அருள்தெய்வம் காணேன் மனத்தும் உரைக்கப்படாப்
பொன்னேஅப் பொன்னற் புதஒளி யேமலர்ப் பொன்வணங்கும்
அன்னேஎம் ஆருயிர்க் கோர்உயி ரேஒற்றி யம்பதிவாழ்
மன்னே ரிடம்வளர் மின்னே வடிவுடை மாணிக்கமே. 6

கண்ணேஅக் கண்ணின் மணியே மணியில் கலந்தொளிசெய்
விண்ணே வியன்ஒற்றி யூர்அண்ணல் வாமத்தில் வீற்றிருக்கும்
பெண்ணே மலைபெறும் பெண்மணி யேதெய்வப் பெண்ணமுதே
மண்நேயம் நீத்தவர் வாழ்வே வடிவுடை மாணிக்கமே. 7

மலையான் தவஞ்செய்து பெற்றமத்தேஒற்றி வாழ்கனகச்
சிலையோன் மணக்க மணக்குந்தெய் வீகத் திருமலரே
அலையான் மலிகடல் பள்ளிகொண்டான்தொழும் ஆரமுதே
வலையான் அருமை மகளே வடிவுடை மாணிக்கமே. 8

காமம் படர்நெஞ் சுடையோர் கனவினும் காணப்படாச்
சேமம் படர்செல்வப் பொன்னே மதுரச் செழுங்கனியே
தாமம் படர்ஒற்றி யூர்வாழ் பவளத் தனிமலையின்
வாமம் படர்பைங் கொடியே வடிவுடை மாணிக்கமே. 9

கோடா அருட்குணக் குன்றே சிவத்தில் குறிப்பிலரை
நாடாத ஆனந்த நட்பேமெய் யன்பர் நயக்கும் இன்பே
பீடார் திருவொற்றிப் பெம்மான் இடஞ்செய் பெருந்தவமே
வாடா மணிமலர்க் கொம்பே வடிவுடை மாணிக்கமே. 10

நாலே எனுமறை அந்தங்கள் இன்னமும் நாடியெனைப்
போலே வருந்த வெளிஒளி யாய்ஒற்றிப் புண்ணியர்தம்
பாலே இருந்த நினைத்தங்கை யாகப் பகரப்பெற்ற
மாலே தவத்தில் பெரியோன் வடிவுடை மாணிக்கமே. 11

கங்கைகொண் டோ ன்ஒற்றி யூரண்ணல் வாமம் கலந்தருள்செய்
நங்கைஎல்லா உல குந்தந்த நின்னைஅந் நாரணற்குத்
தங்கைஎன் கோஅன்றித் தாயர்என் கோசொல் தழைக்குமலை
மங்கையங் கோமள மானே வடிவுடை மாணிக்கமே. 12

சேலையிட் டார்வயல் ஊரொற்றி வைத்துத்தன் தொண்டர்பின்
வேலையிட் டால்செயும் பித்தனை மெய்யிடை மேவுகரித்
தோலையிட் டாடும் தொழிலுடை யோனைத் துணிந்துமுன்னாள்
மாலையிட் டாய்இஃதென்னே வடிவுடை மாணிக்கமே. 13

தனையாள் பவரின்றி நிற்கும் பரமன் தனிஅருளாய்
வினையாள் உயிர்மல நீக்கிமெய் வீட்டின் விடுத்திடுநீ
எனையாள் அருளொற்றி யூர்வா ழவன்றன் னிடத்துமொரு
மனையாள் எனநின்ற தென்னே வடிவுடை மாணிக்கமே. 14

பின்னீன்ற பிள்ளையின் மேலார்வம் தாய்க்கெனப் பேசுவர்நீ
முன்னீன்ற பிள்ளையின் மேலாசை யுள்ளவர் மொய்யசுரர்
கொன்னீன்ற போர்க்கிளம் பிள்ளையை ஏவக் கொடுத்ததென்னே
மன்னீன்ற ஒற்றி மயிலே வடிவுடை மாணிக்கமே. 15

பையாளும் அல்குல் சுரர்மட வார்கள் பலருளும்இச்
செய்யாளும் வெண்ணிற மெய்யாளும் எத்தவம் செய்தனரோ
கையாளும் நின்னடிக் குற்றேவல் செய்யக் கடைக்கணித்தாய்
மையாளும் கண்ணொற்றி வாழ்வே வடிவுடை மாணிக்கமே. 16

இலையாற்று நீமலர்க் காலால் பணிக்குங்குற் றேவலெலாம்
தலையால் செயும்பெண்கள் பல்லோரில் பூமகள் தன்னைத் தள்ளாய்
நிலையால் பெரியநின் தொண்டர்தம் பக்க நிலாமையினான்
மலையாற் கருளொற்றி வாழ்வே வடிவுடை மாணிக்கமே. 17

கலைம களேநின்பணியைஅன் போடும் கடைப்பிடித்தாள்
அலைமகளே அன் பொடிபிடித் தாள்எற் கறைகண்டாய்
தலைமகளே அருட் டாயேசெவ் வாய்க்கருந் தாழ்குழற்பொன்
மலைமகளே ஒற்றி வாழ்வே வடிவுடை மாணிக்கமே. 18

பொன்னோடு வாணிஎன் போரிரு வோரும் பொருணற் கல்வி
தன்னோ டருளுந் திறநின்குற் றேவலைத் தாங்கிநின்ற
பின்னோ அலததன் முன்னோ தெளிந்திடப் பேசுகநீ
மன்னோ டெழிலொற்றி யூர்வாழ் வடிவுடை மாணிக்கமே. 19

காமட் டலர்திரு வொற்றிநின் னாயகன் கந்தைகற்றி
யேமட் டரையொடு நிற்பது கண்டும் இரங்கலர்போல்
நீமட்டு மேபட் டுடுக்கின் றனைஉன்றன் நேயம்என்னோ
மாமட் டலர்குழல் மானே வடிவுடை மாணிக்கமே. 20

வீற்றார்நின் றன்மணத் தம்மியின் மேல்சிறு மெல்லனிச்சம்
ஆற்றாநின் சிற்றடிப் போதினைத் தூக்கிவைத் தாரெனின்மால்
ஏற்றார் திருவொற்றி யுரார் களக்கறுப் பேற்றவரே
மாற்றா இயல்கொண்மயிலே வடிவுடை மாணிக்கமே. 21

பொருப்புறு நீலியென் பார்நின்னை மெய்அது போலும்ஒற்றி
விருப்புறு நாயகன் பாம்பா பரணமும் வெண்தலையும்
நெருப்புறு கையும் கனல்மேனி யுங்கண்டு நெஞ்சம் அஞ்சாய்
மருப்புறு கொங்கை மயிலே வடிவுடை மாணிக்கமே. 22

அனம்பொறுத் தான்புகழ் ஒற்றிநின் நாயகன் அங்குமிழித்
தனம்பொறுத் தாள்ஒரு மாற்றாளைத் தன்முடி தன்னில்வைத்தே
தினம்பொறுத் தான்அது கண்டும் சினமின்றிச் சேர்ந்தநின்போல்
மனம்பொறுத் தார்எவர் கண்டாய் வடிவுடை மாணிக்கமே. 23

ஓருரு வாய்ஒற்றி யூர்அமர்ந்தார் நின் னுடையயவர்பெண்
சீருரு வாகுநின் மாற்றாளை நீதெளி யாத்திறத்தில்
நீருரு வாக்கிச் சுமந்தார் அதனை நினைந்திலையே
வாருரு வார்கொங்கை நங்காய் வடிவுடை மாணிக்கமே. 24

சார்ந்தேநின் பால்ஒற்றி யூர்வாழும் நாயகர் தாமகிழ்வு
கூர்ந்தே குலாவும்அக் கொள்கையைக் காணில் கொதிப்பளென்று
தேர்ந்தேஅக் கங்கையைச் செஞ்சடைமேல்சிறை செய்தனர்ஒண்
வார்ந்தே குழைகொள் விழியாய் வடிவுடை மாணிக்கமே. 25

நீயே எனது பிழைகுறிப் பாயெனில் நின்னடிமைப்
பேயேன் செயும்வண்ணம் எவ்வண்ண மோஎனப் பெற்றளிக்கும்
தாயே கருணைத் தடங்கட லேஒற்றிச் சார்முத
வாயேர் சவுந்தர மானே வடிவுடை மாணிக்கமே. 26

முப்போதும் அன்பர்கள் வாழ்த்தொற்றி யூர்எம் முதல்வர்மகிழ்
ஒப்போ தருமலைப் பெண்ணமு தேஎன்று வந்துநினை
எப்போதும் சிந்தித் திடர்நீங்கி வாழ எனக்கருள்வாய்
மைப்போ தனையகண் மானே வடிவுடை மாணிக்கமே. 27

மீதலத் தோர்களுள் யார்வணங் காதவர் மேவுநடுப்
பூதலத் தோர்களுள் யார்புக ழாதவர் போற்றிநிதம்
பாதலத் தோர்களுள் யார்பணி யாதவர் பற்றிநின்றாள்
மாதலத் தோங்கொற்றி வாழ்வே வடிவுடை மாணிக்கமே. 28

சேய்க்குற்றம் தாய்பொறுத் தேடா வருகெனச் செப்புவள்இந்
நாய்க்குற்றம் நீபொறுத் தாளுதல் வேண்டும் நவின்மதியின்
தேய்க்குற்றம் மாற்றும் திருவொற்றி நாதர்தந் தேவிஅன்பர்
வாய்க்குற்றம் நீக்கும் மயிலே வடிவுடை மாணிக்கமே. 29

செங்கம லாசனன் தேவிபொன் நாணும் திருமுதலோர்
சங்கம தாமிடற் றோங்குபொன் நாணும் தலைகுனித்துத்
துங்கமு றாதுஉளம் நாணத் திருவொற்றித் தோன்றல்புனை
மங்கல நாணுடை யாளே வடிவுடை மாணிக்கமே. 30

சேடா ரியன்மணம் வீசச் செயன்மணம் சேர்ந்துபொங்க
ஏடார் பொழிலொற்றி யூரண்ணல் நெஞ்சம் இருந்துவக்க
வீடா இருளும் முகிலும்பின் னிட்டு வெருவவைத்த
வாடா மலர்க்குழ லாளே வடிவுடை மாணிக்கமே. 31

புரநோக்கி னால்பொடி தேக்கிய ஒற்றிப் புனிதர்களக்
கரநோக்கி நல்லமு தாக்கிநிற் போற்றுங் கருத்தினரா
தரநோக்கி உள்ளிருள் நீக்கிமெய்ஞ் ஞானத் தனிச்சுகந்தான்
வரநோக்கி ஆள்விழி மானே வடிவுடை மாணிக்கமே. 32

உன்னும் திருவொற்றி யூருடை யார்நெஞ் சுவப்பஎழில்
துன்னும் உயிர்ப்பயிர் எல்லாந் தழைக்கச் சுகக்கருணை
என்னும் திருவமு தோயாமல் ஊற்றி எமதுளத்தின்
மன்னும் கடைக்கண் மயிலே வடிவுடை மாணிக்கமே. 33

வெள்ளம் குளிரும் சடைமுடி யோன்ஒற்றி வித்தகன்தன்
உள்ளம் குளிரமெய் பூரிப்ப ஆனந்தம் ஊற்றெடுப்பத்
தெள்ளம் குளிர்இன் அமுதே அளிக்கும்செவ்வாய்க்குமுத
வள்ளம் குளிர்முத்த மானே வடிவுடை மாணிக்கமே. 34

மாநந்த மார்வயல் காழிக் கவுணியர் மாமணிக்கன்(று)
ஆநந்த இன்னமு தூற்றும் திருமுலை ஆரணங்கே
காநந்த வோங்கும் எழுவொற்றி யார்உட் களித்தியலும்
வானந் தருமிடை மானே வடிவுடை மாணிக்கமே. 35

வான்தேட நான்கு மறைதேட மாலுடன் வாரிசமே
வான்தேட மற்றை அருந்தவர் தேடஎன் அன்பின்மையால்
யான்தேட என்னுளம் சேர்ஒற்றி யூர்எம் இருநிதியே
மான்தேடும் வாட்கண் மயிலே வடிவுடை மாணிக்கமே. 36

முத்தேவர் விண்ணன் முதல்தேவர் சித்தர் முனிவர்மற்றை
எத்தே வருநின் அடிநினை வார்நினைக் கின்றிலர்தாம்
செத்தே பிறக்கும் சிறியர்அன் றோஒற்றித் தேவர்நற்றா
மத்தேவர் வாம மயிலே வடிவுடை மாணிக்கமே. 37

திருநாள் நினைத்தொழும் நன்னாள் தொ஡ழமல் செலுத்தியநாள்
கருநாள் எனமழை எல்லாம் புகலும் கருத்தறிந்தே
ஒருநா ளினுநின் றனைமற வார்அன்பர் ஒற்றியில்வாழ்
மருநாண் மலர்க்குழல் மானே வடிவுடை மாணிக்கமே. 38

வாணான் அடைவர் வறுமை யுறார்நன் மலமைக்கள்பொன்
பூணாள் இடம்புகழ் போதம் பெறுவர்பின் புன்மைஒன்றும்
காணார்நின் நாமம் கருதுநின் றோர்ஒற்றிக் கண்ணுதல்பால்
மாணார்வம் உற்ற மயிலே வடிவுடை மாணிக்கமே. 39

சீரறி வாய்த்திரு வொற்றிப் பரம சிவத்தைநினைப்
போரறி வாய்அவ் அறிவாம் வெளிக்கப் புறத்துநின்றாய்
யாரறி வார்நின்னைநாயேன் அறிவ தழகுடைத்தே
வாரெறி பூண்முலை மானே வடிவுடை மாணிக்கமே. 40

போற்றிடு வோர்தம் பிழையா யிரமும் பொறுத்தருள்செய்
வீற்றொளிர் ஞான விளக்கே மரகத மென்கரும்பே
ஏற்றொளிர் ஒற்றி யிடத்தார் இடத்தில் இலங்குமுயர்
மாற்றொளி ரும்பகம் பொன்னே வடிவுடை மாணிக்கமே. 41

ஆசைஉள் ளார்அயன் மால் ஆதி தேவர்கள் யாரும்நின்தாள்
பூசையுள் ளார்எனில் எங்கே உலகர்செய் பூசைகொள்வார்
தேசையுள் ளார்ஒற்றி யூருடை யார்இடஞ் சேர்மயிலே
மாசையுள் ளார் புகழ் மானே வடிவுடை மாணிக்கமே. 42

அண்டாரை வென்றுல காண்டுமெய்ஞ் ஞானம் அடைந்துவிண்ணில்
பண்டாரை சூழ்மதி போலிருப் போர்கள்நின் பத்தர்பாதம்
கண்டாரைக் கண்டவர் அன்றோ திருவொற்றிக் கண்ணுதல்சேர்
வண்டாரை வேலன்ன மானே வடிவுடை மாணிக்கமே. 43

அடியார் தொழுநின் அடிப்பொடி தான்சற் றணியப்பெற்ற
முடியால் அடிக்குப் பெருமைபெற் றார்அம் முகுந்தன்சந்தக்
கடியார் மலர்அயன் முன்னோர்தென் ஒற்றிக் கடவுட் செம்பால்
வடியாக் கருணைக் கடலே வடிவுடை மாணிக்கமே. 44

ஓவா தயன்முதலோர்முடி கோடி உறழந்துபடில்
ஆவா அனிச்சம் பொறாமலர்ச் சிற்றடி ஆற்றக்கொலோ
காவாய் இமயப்பொற் பாவாய் அருளொற்றிக் காமர்வல்லி
வாவா எனும்அன்பர் வாழ்வே வடிவுடை மாணிக்கமே. 45

இட்டார் மறைக்கும் உபநிட தத்திற்கும் இன்னுஞ்சற்றம்
எட்டாநின் பொன்னடிப் போதெளி யேன்தலைக் கெட்டுங்கொலோ
கட்டார் சடைமுடி ஒற்றிஎம் மான்நெஞ்ச சுத்தமர்ந்த
மட்டார் குழன்மட மானே வடிவுடை மாணிக்கமே. 46

வெளியாய் வெளிக்குள் வெறுவெளி யாய்ச்சிவ மேநிறைந்த
ஒளியாய் ஒளிக்குள் ஒளியாம் பரைநினை ஒப்பவரார்
எளியார்க் கெளியர் திருவொற்றி யார்மெய் இனிதுபரி
மளியார்நின் றோங்கு மருவே வடிவுடை மாணிக்கமே. 47

விணங்காத லன்பர்தம் அன்பிற்கும் நின்புல விக்கும்அன்றி
வணங்கா மதிமுடி எங்கள் பிரான்ஒற்றி வாணனும்நின்
குணங்காதலித்துமெய்க் கூறுதந்தான் எனக் கூறுவர்உன்
மணங்கா தலித்த தறியார் வடிவுடை மாணிக்கமே. 48

பன்னும்பல் வேறண்டாம் எல்லாம்அவ் அண்டப் பரப்பினின்று
துன்னும் சராசரம் யாவையும் ஈன்றது சூழ்ந்தும் உன்னை
இன்னும் இளந்தை அழியாத கன்னிகை என்பதென்னே
மன்னும் சுகாநந்த வாழ்வே வடிவுடை மாணிக்கமே. 49

சினங்கடந் தோர்உள்ளச் செந்தா மரையில் செழித்துமற்றை
மனங்கடந் தோதும்அவ் வாக்கும் கடந்த மறைஅன்னமே
தினங்கடந் தோர்புகழ் ஒற்றிஎம் மானிடம் சேரமுதே
வனங்கடந் தோன்புகழ் மானே வடிவுடை மாணிக்கமே. 50

வல்லாரும் வல்லவர் அல்லாரும் மற்றை மனிதர்முதல்
எல்லாரும் நின்செயல் அல்லா தணுவும் இயக்கிலரேல்
இல்லாமை யால்உழல் புல்லேன்செய் குற்றங்கள் ஏதுகண்டாய்
மல்லார் வயல்ஒற்றி நல்லாய் வடிவுடை மாணிக்கமே. 51

எழுதா எழில்உயிர்ச் சித்திர மேஇன் இசைப்பயனே
தொழுதாடும் அன்பர்தம் உட்களிப் பேசிற் சுகக்கடலே
செழுவார் மலர்ப்பொழில் ஒற்றிஎம் மான்தம் திருந்துணையே
வழுவா மறையின் பொருளே வடிவுடை மாணிக்கமே. 52

தெருட்பா லுறும்ஐங்கைச் செல்வர்க்கும் நல்லிளஞ் சேய்க்குமகிழ்ந்து
அருட்பால் அளிக்கும் தனத்தனமேஎம் அகங்கலந்த
இருட்பால் அகற்றும் இருஞ்சுடரேஒற்றி எந்தைஉள்ளம்
மருட்பால் பயிலு மயிலே வடிவுடை மாணிக்கமே. 53

அயிலேந்தும் பிள்ளைநற்றாயே திருவொற்றி ஐயர்மலர்க்
கயிலேந் தரும்பெறல் முத்தே இசையில் கனிந்தகுரல்
குயிலே குயின்மென் குழற்பிடியே மலைக் கோன்பயந்த
மயிலே மதிமுக மானே வடிவுடை மாணிக்கமே. 54

செய்யகம் ஓங்கும் திருவொற்றியூரில் சிவபெருமான்
மெய்யகம் ஓங்குநல் அன்பேநின்பால்அன்பு மேவுகின்றோர்
கையகம் ஓங்கும் கனியே தனிமெய்க் கதிநெறியே
வையகம் ஓங்கு மருந்தே வடிவுடை மாணிக்கமே. 55

தரும்பேர் அருளொற்றி யூருடையான்இடஞ் சார்ந்தபசுங்
கரும்பே இனியகற் கண்டே மதுரக் கனிநறவே
இரும்பேய் மனத்தினர் பால்இசை யாத இளங்கிளியே
வரும்பேர் ஒளிச்செஞ் சுடரே வடிவுடை மாணிக்கமே. 56

சேலேர் விழியருள் தேனே அடியருள் தித்திக்கும்செம்
பாலே மதுரச்செம் பாகேசொல் வேதப் பனுவல்முடி
மேலே விளங்கும் விளக்கே அருளொற்றி வித்தகனார்
மாலே கொளும்எழில் மானே வடிவுடை மாணிக்கமே. 57

எம்பால் அருள்வைத்தெழி லொற்றி யூர் கொண்டிருக்கும் இறைச்
செம்பால் கலந்தபைந் தேனே கதலிச் செழுங்கனியே
வெம்பாலை நெஞ்சருள் மேவா மலர்ப்பத மென்கொடியே
வம்பால் அணிமுல்லை மானே வடிவுடை மாணிக்கமே. 58

ஏமமுய்ப் பேர்எமக் கென்றே இளைக்கில் எடுக்கவைத்த
சேமவைப் பேஅன்பர் தேடுமெய்ஞ் ஞானத் திரவியமே
காமமைக்கார் மலர்க் கூந்தல் பிடிமென் தனிநடையாய்
வாமநற் சீர்ஒற்றி மானே வடிவுடை மாணிக்கமே. 59

மன்னேர் மலையன் மனையும் நற்காஞ்சன மாலையும் நீ
அன்னே எனத்திரு வாயால் அழைக்கப்பெற்றார் அவர்தாம்
முன்னே அருந்தவம் என்னே முயன்றனர் முன்னும் ஒற்றி
வன்னேர் இளமுலை மின்னே வடிவுடை மாணிக்கமே. 60

கணமொன்றி லேனும்என் உள்ளக் கவலைக்கடல்கடந்தே
குணமொன்றி லேன்எது செய்கின்றேன் நின் உள்ளக் குறிப்பறியேன்
பணமொன்று பாம்பணி ஒற்றிஎம்மானிடப் பாலில்தெய்வ
மணமொன்று பச்சைக்கொடியே வடிவுடை மாணிக்கமே. 61

கருவே தனையற என்னெஞ் சகத்தில் களிப்பொடொற்றிக்
குருவே எனும்நின் கணவனும் நீயும் குலவும் அந்தக்
திருவே அருள்செந் திருவே முதற்பணி செய்யத்தந்த
மருவே மருவு மலலே வடிவுடை மாணிக்கமே. 62

எண்ணிய எண்ணங்கள் எல்லாம் பலிக்க எனக்குனருள்
பண்ணிய உள்ளங்கொள் உள்ளும் புறம்பும் பரிமளிக்கும்
புண்ணிய மல்லிகைப் போதே எழில்ஒற்றிப் பூரணர்பால்
மண்ணிய பச்சை மணியே வடிவுடை மாணிக்கமே. 63

தீதுசெய் தாலும்நின் அன்பர்கள் தம்முன் செருக்கிநின்று
வாதுசெய் தாலும்நின் தாள்மறந்தாலும் மதியிலியேன்
ஏதுசெய் தாலும் பொறுத்தருள் வாய்ஒற்றி யின்னிடைப்பூ
மாதுசெய் தாழ்குழல் மானே வடிவுடை மாணிக்கமே. 64

மருந்தினின் நான்ஒற்றி யூர்வாழும் நின்றன் மகிழ்நன்முன்னும்
திருந்திநின் றார்புகழ் நின்முன்னும் நல்லருள் தேன்விழைந்தே
விருந்தினின் றேன்சற்றும் உள்ளிரங் காத விதத்தைக்கண்டு
வருந்திநின் றேன்இது நன்றோ வடிவுடை மாணிக்கமே. 65

என்போல் குணத்தில் இழிந்தவர் இல்லைஎப் போதும்எங்கும்
நின்போல் அருளில் சிறந்தவர் இல்லைஇந் நீர்மையினால்
பொன்போலும் நின்னருள் அன்னே எனக்கும் புரிதிகண்டாய்
மன்போல் உயர்ஒற்றி வாழ்வே வடிவுடை மாணிக்கமே. 66

துன்பே மிகும்இவ் அடியேன் மனத்தில்நின் துய்யஅருள்
இன்பே மிகுவதெந் நாளோ எழிலொற்றி எந்தைஉயிர்த்
கன்பேமெய்த் தொண்டர் அறிவே சிவநெறிக் கன்பிலர்பால்
வன்பேமெய்ப் போத வடிவே வடிவுடை மாணிக்கமே. 67

சற்றே யெனினும் நெஞ்சத் துயரம் தவிரவும்நின்
பொற்றே மலர்ப்பாதம் போற்றவும் உள்ளம் புரிதிகண்டாய்
சொற்றேர் அறிஞர் புகழ்ஒற்றி மேவும் துணைவர்தஞ்செம்
மற்றேர் புயத்தணை மானே வடிவுடை மாணிக்கமே. 68

சந்தோட மாப்பிறர் எல்லாம் இருக்கவும் சஞ்சலத்தால்
அந்தோ ஒருதமி யேன்மட்டும் வாடல் அருட்கழகோ
நந்தோட நீக்கிய நங்காய் எனத்திரு நான்முகன்மால்
வந்தோதும் ஒற்றி மயிலே வடிவுடை மாணிக்கமே. 69

அடியேன் மிசைஎன் பிழையிருந் தாலும் அவைபொறுத்துச்
செடியேதம் நீக்கிநற் சீரருள் வாய்திகழ் தெய்வமறைக்
கொடியே மரகதக் கொம்பே எழில்ஒற்றிக் கோமளமே
வடியேர் அயில்விழி மானே வடிவுடை மாணிக்கமே. 70

கண்ணப்பன் ஏத்துநற் காளத்தி யார்மங் கலங்கொள்ஒற்றி
நண்ணப்பர் வேண்டும் நலமே பரானந்த நன்னறவே
எண்ணப் பசும்பொன் வடிவே வடிவுடை மாணிக்கமே. 71

கற்பே விகற்பம் கடியும்ஒன்றே எங்கள் கன்நிறைந்த
பொற்பேமெய்த் தொண்டர்தம் புண்ணியமே அருட் போத இன்பெ
சொற்பேர் அறிவுட் சுகப்பொரு ளேமெய்ச் சுயஞ்சுடரே
மற்பேர் பெறும்ஒற்றி மானே வடிவுடை மாணிக்கமே. 72

மிகவே துயர்க்கடல் வீழ்ந்தேனே நீகை விடுதலருள்
தகவே எனக்குநற் றாயே அகில சராசரமும்
சுகவேநஇ முழ்கத் திருவொற்றி யூரிடந் துன்னிப் பெற்ற
மகவே எனப்புரக் கின்றோய் வடிவுடை மாணிக்கமே. 73

வேதங்க ளாய்ஒற்றி மேவும் சிவத்தின் விளைவருளாய்ப்
பூதங்க ளாய்ப் பொறி யாய்ப்புல னாகிப் புகல்கரண
பேதங்க ளாய்உயிர் ஆகிய நின்னைஇப் பேதைஎன்வாய்
வாதங்க ளால்அறி வேனோ வடிவுடை மாணிக்கமே. 74

மதியே மதிமுக மானே அடியர் மனத்துவைத்த
நிதியே கருணை நிறைவே சுகாநந்த நீள்நிலையே
கதியே கதிவழி காட்டுங்கண் ணேஒற்றிக் காவலர்பால்
வதியேர் இளமட மானே வடிவுடை மாணிக்கமே. 75

ஆறாத் துயரத் தழுந்துகின்றேனைஇங் கஞ்சல்என்றே
கூறாக் குறைஎன்குறையே இனிநின் குறிப்பறியேன்
தேறாச் சிறியர்க் கரிதாம் திருவொற்றித் தேவர்மகிழ்
மாறாக் கருணை மழையே வடிவுடை மாணிக்கமே. 76

எற்றே நிலைஒன்றும் இல்லா துயங்கும் எனக்கருளச்
சற்றேநின் உள்ளம் திரும்பிலை யான்செயத் தக்கதென்னே
சொற்றேன் நிறைமறைக் கொம்பேமெய்ஞ் ஞானச் சுடர்க்கொழுந்தே
மற்றேர் அணியொற்றி வாழ்வே வடிவுடை மாணிக்கமே. 77

செவ்வேலை வென்றகண் மின்னே நின்சித்தம் திரும்பியெனக்
கெவ்வேலை செய்யேன் றிடினும் அவ்வேலை இயற்றுவல்காண்
தெவ்வேலை வற்றச்செய் அவ்வேளை யீன்றொற்றித் தேவர்நெஞ்சை
வவ்வேல வார்குழல் மானே வடிவுடை மாணிக்கமே. 78

தாயே மிகவும் தயவுடை யாள்எனச் சாற்றுவர்இச்
சேயேன் படுந்துயர் நீக்கஎன்னேஉளம் செய்திலையே
நாயேன் பிழைஇனி நாடாது நல்லருள் நல்கவரு
வாயேஎம் ஒற்றி மயிலே வடிவுடை மாணிக்கமே. 80

கல்லாரிடத்தில்என் இல்லாமை சொல்லிக் கலங்கிஇடர்
நல்லாண்மை உண்டருள் வல்லாண்மை உண்டெனின் நல்குவையே
வல்லார் எவர்கட்கும் வல்லார் திருவொற்றி வாணரொடு
மல்லார் பொழில்ஒற்றி வாழ்வே வடிவுடை மாணிக்கமே. 81

சுந்தர வாண்முகத் தோகாய் மறைகள் சொலுபைங்கிள்ளாய்
சுந்தர வார்குழற் பூவாய் கருணைக் கடைக்கண்நங்காய்
அந்தர நேரிடைப் பாவாய் அருள்ஒற்றி அண்ணல்மகிழ்
மந்தர நேர்கொங்கை மங்கை வடிவுடை மாணிக்கமே. 82

பத்தர்தம் உள்ளத் திருக்கோயில் மேவும் பரம்பரையே
சுத்தமெய்ஞ் ஞானவொளிப்பிழம் பேசிற் சுகாநந்தமே
நித்தநின் சீர்சொல எற்கருள் வாய்ஒற்றி நின்மலர்உன்
மத்தர்தம் வாம மயிலே வடிவுடை மாணிக்கமே. 83

பூவாய் மலர்க்குழல் பூவாய்மெய் அன்பர் புனைந்ததமிழ்ப்
பாவாய் நிறைந்தபொற் பாவாய்செந் தேனிற் பகர்மொழியாய்
காவாய் எனஅயன்காவாய் பவனும் கருதுமலர்
மாவாய் எழில்ஒற்றி வாழ்வே வடிவுடை மாணிக்கமே. 84

தாதா உணவுடை தாதா எனப்புல்லர் தம்மிடைப்போய்
மாதாகம் உற்றவர் வன்நெஞ்சில் நின்அடி வைகுங்கொலோ
காதார் நெடுங்கட் கரும்பேநல் ஒற்றிக் கருத்தர்நட
வாதா ரிடம்வளர் மாதே வடிவுடை மாணிக்கமே. 85

களந்திரும் பாஇக் கடையேனை ஆளக்கருணைகொண்டுன்
உளத்திரும் பாமைக் கென் செய்கேன் துயர்க்கட லூடலைந்தேன்
குளத்திரும் பாவிழிக் கோமா னொடுந்தொண்டர் கூட்டமுற
வளந்திரும் பாவொற்றி வாழ்வே வடிவுடை மாணிக்கமே. 86

ஆரணம் பூத்த அருட்கோ மளக்கொடி அந்தரிபூந்
தோரணம் பூத்த எழில்ஒற்றி யுர்மகிழ் சுந்தரிசற்
காரணம் பூத்த சிவைப்பார்ப் பதிநங் கெளரிஎன்னும்
வாரணம் பூத்த தனத்தாய் வடிவுடை மாணிக்கமே. 87

திருவல்லி ஏத்தும் அபிடேக வல்லிஎஞ் சென்னியிடை
வருவல்லி கற்பக வல்லிஒண் பச்சை மணிவல்லிஎங்
கருவல்லி நீக்குங் கருணாம் பகவல்லி கண்கொள்ஒற்றி
மருவல்லி யென்று மறைதேர் வடிவுடை மாணிக்கமே. 88

உடையென்ன ஒண்புலித் தோல்உடை யார்கண்டுவக்குமிள
நடையென்ன மேமலர்ப் பொன்முத லாம்பெண்கள் நாயகமே
படையென்ன நீள்விழி மின்னேர் இடைப் பொற் பசுங்கிளியே
மடைமன்னு நீரொற்றி வாழ்வே வடிவுடை மாணிக்கமே. 89

கற்பதும் கேட்பதும் எல்லாம்நின் அற்புதக் கஞ்சமலர்ப்
பொற்பதங் காணும் பொருட்டென எண்ணுவர் புண்ணியரே
சொற்பத மாய் அவைக் கப்புற மாய்நின்ற தூய்ச் சுடரே
மற்பதம் சேரொற்றி வாழ்வே வடிவுடை மாணிக்கமே. 90

நின்னால் எனக்குள எல்லா நலனும் நினைஅடைந்த
என்னால் உனக்குள தென்னைகண் டாய்எமை ஈன்றவளே
முன்நால் வருக்கருள் ஒற்றிஎம் மான்கண் முழுமணியே
மன்னால் மறையின் முடிவே வடிவுடை மாணிக்கமே. 91

நன்றே சிவநெறி நாடுமெய்த் தொண்டர்க்கு நன்மைசெய்து
நின்றேநின் சேவடிக் குற்றேவல் செய்ய நினைத்தனன்ஈது
என்றே முடிகுவ தின்றே முடியில் இனிதுகண்டாய்
மன்றேர் எழில்ஒற்றி வாழ்வே வடிவுடை மாணிக்கமே. 92

அத்தனை ஒற்றிக் கிறைவனை அம்பலத் தாடுகின்ற
முத்தனைச் சேர்ந்தஒண் முத்தே மதிய முகவமுதே
இத்தனை என்றள வேலாத குற்றம் இழைத்திடும்இம்
மத்தனை ஆளல் வழக்கோ வடிவுடை மாணிக்கமே. 93

கூறாத வாழ்க்கைச் சிறுமையை நோக்கிக் குறித்திடும்என்
தேறாத விண்ணப்பம் சற்றேனும் நின்றன் திருச்செவியில்
ஏறாத வண்ணம்என் ஒற்றித் தியாகர் இடப்புறத்தின்
மாறா தமர்ந்த மயிலே வடிவுடை மாணிக்கமே. 94

ஓயா இடர்கொண் டுலைவேனுக் கன்பர்க் குதவுதல் போல்
ஈயா விடினும்ஓர் எள்ளள வேனும் இரங்குகண்டாய்
சாயா அருள்தரும் தாயே எழில்ஒற்றித் தற்பரையே
மாயா நலம்அருள் வாழ்வே வடிவுடை மாணிக்கமே. 95

பெரும்பேதை யேன்சிறு வாழ்க்கைத் துயர்எனும் பேரலையிற்
துரும்பே எனஅலை கின்றேன் புணைநின் துணைப்பதமே
கரும்பே கருணைக் கடலே அருண்முக் கனிநறவே
அரும்பேர் அருள்ஒற்றி வாழ்வே வடிவுடை மாணிக்கமே. 96

காதரவால்உட் கலங்கிநின் றேன்நின் கடைக்கண்அருள்
ஆதர வால்மகிழ் கின்றேன் இனிஉன் அடைக்கலமே
சீதரன் ஏத்தும் திருவொற்றி நாதர்தம் தேவிஎழில்
மாதரசே ஒற்றி வாழ்வே வடிவுடை மாணிக்கமே. 97

பொன்னுடை யார் அன்றிப் போற்றுநற் கல்விப் பொருளுடையார்
என்னுடை யார்எனஏசுகின் றார்இஃ தென்னை அன்னே
மின்னுடையாய் மின்னில் துன்னிடை யாய்ஒற்றி மேவுமுக்கண்
மன்னுடை யாய்என் னுடையாய் வடிவுடை மாணிக்கமே. 98

பொய்விட்டி டாதவன் நெஞ்சகத் தேனைப் புலம்பும்வண்ணம்
கைவிட்டி டாதின்னும் காப்பாய் அதுநின் கடன்கரும்பே
மெய்விட்டி டாருள் விளைஇன்ப மேஒற்றி வித்தகமே
மைவிட்டி டாவிழி மானே வடிவுடை மாணிக்கமே. 99

நேயானு கூல மனமுடை யாய்இனி நீயும்என்றன்
தாயாகில் யான்உன் தனையனும் ஆகில் என் தன்உளத்தில்
ஓயா துறந்துயர் எல்லாம் தவிர்த்தருள் ஒற்றியில்செவ்
வாயார் அமுத வடிவே வடிவுடை மாணிக்கமே. 100

வாழிநின் சேவடி போற்றிநின் பூம்பத வாரிசங்கள்
வாழிநின் தாண்மலர் போற்றிநின் தண்ணளி வாழிநின்சீர்
வாழிஎன் உள்ளத்தில் நீயநின் ஒற்றி மகிழ்நரும்நீ
வாழிஎன் ஆருயிர் வாழ்வே வடிவுடை மாணிக்கமே. 101

திருச்சிற்றம்பலம்

Related Content

Ramalingam Swamigal

Thiruvarutpa of ramalinga adikal (aka vallalar) - Part-II (v

Thiruvarutpayan of Umapathisivam - G U Pope

Thiruvarutpayan Of Umapathisivam - English Explanation By Mr

Thiruvasagam Part-1 - Romanized version