logo

|

Home >

Scripture >

scripture >

Tamil

சிவஞான சுவாமிகள் அருளிய காஞ்சிப் புராணம் படலம் 51 - 60 (1692 - 2022 )

Kanchip puranam of civanjana munivar 
patalam 51 -60 /verses 1692 - 2022


திருவாவடுதுறை யாதீனம் 
சிவஞான சுவாமிகள் அருளிய 
காஞ்சிப் புராணம் 

பாகம் 4a - (1692 - 2022)

51. வீராட்டகாசப்படலம்

1692 -1746

52. பாண்டவேசப்படலம்

1747-1755

53. மச்சேசப்படலம்

1756-1765

54. அபிராமேசப்படலம்

1765-1774

55. கண்ணேசப் படலம்

1775-1786

56. குமரகோட்டப் படலம்

1787-1831

57. மாசாத்தன் தளிப் படலம்

1832-1868

58. அனந்த பற்பநாபேசப் படலம்

1869-1878

59. கச்சி மயானப்படலம்

1879-1901

60. திருவேகம்பப்படலம்

1902-2022


காஞ்சிப் புராணம் 
51. வீராட்டகாசப்படலம் (1692 -1746)

அறுசீரடிக்கழி நெடிலாசிரிய விருத்தம்

1692

தண்காமர் புனல்குடையுந் தையலார் 
      திமிர்ந்தநறுந் தகர ஞாழல்
எண்காதங் கமழிலஞ்சி மகாலிங்கத் 
      தளிபுகன்றாம் இதன்வ டாது
விண்காவ லுடையார்மன் இளநகைபூத் 
      திவ்வாலம் விடுக்கா அன்றி
உண்காவென் றருள்செய்தான் வீராட்ட 
      காசநகர் உரைத்து மாலோ 
விடுக்கா -விடுக்கவோ. உண்கா - உண்கவோ

1

1693

சர்வசம்மாரக்காலத் திருக்கூத்து
வள்ளவாய் நறைக்கமல வெண்பீடத் 
      தரசிருக்கும் மாதர் அன்னப்
புள்ளவாம் நடைநல்லாள் முலைமுகட்டிற் 
      கோட்டியபூங் களபந் தோய்ந்த
கள்ளவாந் தொடைத்திண்டோள் மறைக்கிழவன் 
      ஒருவனுக்குக் கடையேன் உள்ளத்
துள்ளவாம் இறைவகுத்த பராத்தங்கள் 
      ஓரிரண்டும் ஒழிந்த காலை

2

1694

ஐவண்ண நிறம்படைத்த திருமுகமைந் 
      துடையபிரான் அருளால் அந்திச்
செவ்வண்ணக் காலத்தீ உருத்திரப்புத் 
      தேள்நுதற்கண் செந்தீப் பொங்கி
மொய்வண்ண அண்டமெலாம் முழங்கிநிமிர்ந் 
      தெழுந்துருக்கி உண்டு தேக்கி
மெய்வண்ண மனத்தன்பர் வினைப்பறம்பின் 
      நீறாக்கி விட்ட தாக 
வினைப்பறம்பின் நீராக்கி - மலையைச் சாம்பலாக்கியதைப் போல 
வினைமலையை நீறாக்கி.

3

1695

ஆயநாள் இரவில்லை பகலில்லை 
      அயனில்லை அரியு மில்லை
மேயவான் முதல்பூதம் இலையேனைப் 
      பவுதிகத்தை விளம்பு மாறென்
பாயபே ரண்டமெலாம் இவ்வாறு 
      படநீற்றிப் புரமூன் றட்ட
காய்க ணையோன் ஆனந்த மேலீட்டின் 
      தன்னியல்பு கருத்துட் கொள்ள

4

1696

கடைநாளும் அழியாது தன்னொருபாற் 
      பெருமாட்டி காப்ப வைகும்
நடைமாறாத் திருக்காஞ்சி நகர்மன்னி 
      உலகீன்ற நங்கை காண
இடையாம இரவெல்லாம் திருக்கூத்து 
      நவின்றருளி எறுழ்கால் வெள்ளை
விடையாளுந் தனிப்பாகன் ஆர்த்தார்த்து 
      வீரநகை விளைத்தான் மேன்மேல்

5

1697

அவ்விரவு புலர்காலை திருநடனம் 
      நீத்திலிங்க வடிவ மாகி
அவ்வரைப்பின் விளங்கினான் 
      ஆதலினால் வீராட்ட காசத் தேவாம்
அவ்விலிங்கம் வழிபட்டுச் சிலர்சித்தர் 
      அற்புதமாம் சித்தி பெற்றார்
அவ்வியல்பு தனைக்கேட்டுக் கொங்கணமா 
      முனிச்செல்வன் அங்கண் எய்தி

6

1698

கொங்கணமுனிவர் வழிபாடு
அவ்விலிங்க மேன்மையினை அளந்தறிவான் 
      ஆங்கதன்றன் சென்னி மீது
செவ்வனே தன்குளிகை ஈந்திட்டான் 
      மற்றவற்றின் சிரமேல் வைப்பின்
எவ்வமுற நீறாக்கும் அனையதையக் 
      கணமேயவ் விலிங்கம் உள்ளால்
வௌளவியது தனைக்கண்டான் வியப்பெய்தி 
      அவ்விலிங்க முன்னர் வைகி

7

1699

மெய்த்தவங்கள் இனிதாற்றிப் பேறுற்றான் 
      இன்னுமவண் மேவிச் சீர்சால்
சித்திகளை உழவாது பெறுகின்றோர் 
      எல்லையிலர் செந்நீர் தேக்கும்
முத்தலைவேல் வீராட்ட காசேசன் 
      மேன்மையெவர் மொழிவார் மாயன்
அத்தலத்தே வழிபட்டுப் பவளநிறம் 
      பெற்றானவ் வகையுஞ் சொல்வாம்

8

1700

திருமால் பவளநிறம் பெற்ற வரலாறு
எழுசீர்க்கழி நெடிலாசிரிய விருத்தம்
விரிதிரை சுருட்டிக் கரைமிசை எறியும் 
      வெள்ளிவெண் பாற்கடல் வரைப்பின்
எரிமணி மாடப் போகமா புரத்தின் 
      எய்தருந் தனியிடத் திருந்து
புரிமுறுக் குடைந்து நறவுகொப் புளிக்கும் 
      பூந்தவி சணங்கினோ டிணங்கி
வரிவளைக் குடங்கை வானவன் விளையாட் 
      டியற்கையின் மகிழ்வுறும் ஒருநாள்

9

1701

மாயிரு ஞால முழுதுமீன் றளித்து 
      மனைவியும் மணாளனு மாயோர்
ஆயிடைப் பொழுது கழிப்பிய தம்முட் 
      கதைசில அறைகுவா னமைந்தார்
பாயபாப் பணையில் அறிதுயில் அமர்வோன் 
      பனிமலர்க் கிழத்தியை நோக்கித்
தேயும்நுண் நுசுப்பின் அகன்றபே ரல்குல் 
      ஒருகதை கேளெனச் செப்பும்

10

1702

நன்னிறம் படைத்த நாமநீர்ப் பரவை 
      நளிதிரைப் பாற்கடல் மாமை
புன்னிறந் தோற்ற வெள்ளொளி விரிக்கும் 
      புகரறு கயிலையெம் பெருமான்
மின்னிடை மருங்குல் உமையுடன் ஒருநாட் 
      கறங்குவெள் ளருவியஞ் சாரல்
தன்னிறம் மாண்ட மந்தரப் பறம்பின் 
      தனியிடத் தினிதுறும் ஏல்வை

11

1703

எழால்மிடற் றளிகள் கொள்ளைகூட் டுண்ண 
      ஈர்ந்தொடை நறாவிரி ஐம்பால்
கழாமணி மேனிப் பிராட்டியை நோக்கிக் 
      காளியென் றெம்பிரா னழைப்ப
வழாநிலைக் கற்பின் உள்ளகம் வெதும்பி 
      வரிவிழி நித்திலம் உகுத்துக்
குழாமுடை இமையோர் ஏத்தெடுத் திறைஞ்சுங் 
      கோமளை யின்னது கூறும்

12

1704

விடுந்தகைக் காள நிறம்படைத் துளன்யான் 
      வெண்ணிறம் படைத்துளை நீயே
நெடுந்தகாய் நமக்குப் புணர்ச்சி யெவ்வாறு 
      நிகழும்மற் றிங்கிது காறும் 
கடுந்தகை என்மாட் டருளினால் இன்பக் 
      கலவியில் திளைத்தனை இனிநான்
அடுந்தகைப் படையோய் கவுரியாம் வண்ணம் 
      பெறுமுறை அருடியென் றிரந்தான் 
கடுந்தகை- விரும்புதற்கேலாத இயல்பு. கவுரி - பொன்னிறம்

13

1705

பொலங்குவட் டிமயப் பனிவரைப் பிராட்டி 
      புகன்றன திருச்செவி சாத்தி
இலங்குவெண் ணீற்றுச் சுந்தரக் கடவுள் 
      இயம்புவான் வரிவிழி கேட்டி
கலங்கஞர் எய்தேல் கடவுளர் கருமப் 
      பொருட்டுனை இம்முறை அழைத்தேம்
நலங்கொள உலகம் நாள்தொறும் புரத்தல் 
      நங்கட னாதலின் கண்டாய்

14

1706

மற்றது பின்னர்த் தெளிதிநீ கவுர 
      நிறம்பெறு மாறுனக் குரைப்பல்
வெற்றிடம் இன்றி எங்கணும் நிறைந்து 
      பரவெளிப் பரப்பிடை மேவும்
பெற்றியன் யானே யாயினுந் தகைசால் 
      பீடுயர் தலங்களின் மாட்டும்
அற்றமில் மறையோர் அகத்திலு முலவா 
      வருள்சுரந் தினிதுவீற் றிருப்பேன்

15

1707

மேம்படும் அவற்றின் உத்தமத் தளிகள் 
      விதியுளி மறைநெறி ஒழுக்கம்
ஓம்பிமிக் குயர்ந்தோர் உள்ளமும் எனக்குச் 
      சிறந்தன அவற்றினும் மேலாய்த்
தேம்பொழில் வேலிக் காசிமா நகரும் 
      யோகிகள் சிந்தையுஞ் சிறந்த
வாம்பகர் அவற்றிற் காஞ்சியும் உண்மை 
      அடியவர் உள்ளமுஞ் சிறந்த

16

1708

தகைபெறும் அவற்றின் வேறெனக் கினிய 
      தானம்மற் றெங்கணும் இல்லை
நகைமலர்க் கொடியே அந்நகர் எய்தி 
      நயந்தெனை அருச்சனை யாற்றி
மிகையறு தவத்தான் வேட்டவா பெறுதி 
      என்றலும் விளங்கிழை உமையாள்
பகைவினை துரக்குங் காஞ்சியின் எய்திப் 
      பஞ்சதீர்த் தக்கரை ஞாங்கர்

17

1709

மாதவம் இயற்றிப் பொன்னுருப் பெற்றுக் 
      கவுரியாய் வயங்கினள் இனைய
மேதகும் இறும்பூ தென்னெனப் புகல்வேன் 
      வெறிமலர்ப் பங்கயத் தவிசின்
மாதர்வாள் நகையாய் என்றெடுத் துரைத்தான் 
      மந்தரம் அலமரச் சுழற்றி
ஓதநீர் அளக்கர் அமுதெடுத் திமையோர்க் 
      கூட்டிய பெருந்திறற் குரிசில்

18

1710

செய்யவள் கேட்டு வியப்புமீக் கூர்ந்து 
      செப்புவாள் என்னையா ளுடையாய்
ஐயவிச் செயலைக் கேட்டொறும் உலவா 
      அற்புதம் பயக்குமால் மன்ற
மெய்யுணர் வின்பச் சத்தியும் சிவனும் 
      விளைக்குமிவ் விளைவுக ளெல்லாம்
மையறத் தெளிந்தோர் திருவிளையாட்டின் 
      வண்மையென் றியம்புவார் மன்னோ

19

1711

இற்றலாற் காமற் காய்ந்துமுற் றுணர்ந்து 
      வரம்பிலின் புடைய வீசனுக்கு
மற்றெவன் உளதோ அவ்விளை யாட்டும் 
      உலகெலாம் உய்யுமா றன்றே
அற்றென உணராக் கயவர்கள் காமத் 
      திறமெனக் கருதுவர் அனையர்
பெற்றியை யாரே தெளிதரற் பாலார் 
      பிறங்கொளி மணிநிறக் குரிசில்

20

1712

திருமகள் வேண்டுகோள்
நிலையியற் பொருளும் இயங்கியற் பொருளும் 
      நிலைபெறத் தொழிற்படுத் துடைய
தலைவனங் கவனே பனிவரைப் பிராட்டி 
      தன்னையும் நின்னையும் இடப்பால்
மலரணைப் புத்தேள் தன்னையும் எனையும் 
      வலப்புடைக் காலருத் திரனைக்
கலைமகள் தனையும் உளத்திடைத் தந்தான் 
      காத்துயிர்த் தழிப்பது கருதி

21

1713

அகிலமுந் தானே அருள்தொழில் நடாத்தும் 
      ஆங்கவற் கெவற்றினும் சால
மிகுபெருங் காத லுமையவ ளிடத்தும் 
      விரவும்நின் னிடத்தினும் அன்றே
முகிலுறழ் கூந்த லவளென் நீயும் 
      முதல்வனே யுன்னடி யேற்கு
மகிழ்வுமீக் கிளைப்ப அவ்வுரு பெறுதி 
      என்றனள் மலரணைக் கிழத்தி

22

1714

விளங்கிழை மாற்றம் அச்சுதன் கேளா 
      வெகுண்டுநின் மனக்கருத் திதுவேல்
களங்கனை அனையேன் றன்னுடன் 
      இந்நாள் காறும்நீ பொலஞ்சுடர் நிறத்தாய்
வளங்கெழும் இன்பம் என்னணம் நுகர்ந்தாய் 
      மற்றினிச் செக்கர்வான் உருவம்
உளங்கொளப் பெறுகேன் என்றவட் கியம்பிக் 
      கதுமெனக் கரந்தனன் ஊங்கு

23

1715

கச்சிமா நகரம் எய்திவீ ராட்ட 
      காசநல் வரைப்பினுக் கெதிரா
அச்சிவன் வீர நகைதிரண் டனைய 
      சக்கர தீர்த்த முண்டாக்கி
முச்சகம் ஏத்துங் கங்கையிற் சிறந்த 
      அத்தடம் மூழ்கிநோன் பியற்றிப்
பச்சைமால் வதிந்தான் வதிந்திடம் பச்சை 
      வண்ணனா லயமெனப் படுமால்

24

1716

ஆங்கனம் வைகி நாள்தொறும் ஈரே 
      ழாயிரம் அளிகெழு பொகுட்டுத்
தேங்கமழ் கமலங் கொண்டுவீ ராட்ட 
      காசமா தேவனை அருச்சித்
தோங்குபே ரன்பின் தொழுதெழுந் திரப்ப 
      உலப்பருங் கருணைமீக் கூர்ந்து
மாங்குயில் பாகன் எதிரெழுந் தருளி 
      வழங்கினன் பவளம்நேர் வடிவம்

25

1717

பொரியரைக் காயாம் போதுறழ் வண்ணங் 
      கழீஇத்துகிர் புரைநிறம் எய்திப்
பெரிதுளம் மகிழ்ந்தான் ஆயிடைச் சிலநாள் 
      வைகிமீண் டரவணைப் பெருமான்
விரிதிரைத் தீம்பாற் கடலகத் தணுகி 
      விரைமலர்க் கிழத்தியோ டிணங்கித்
தெரியிழைத் திருவே காண்டிநீ பவளச் 
      சேயொளி தழைக்குமிவ் வடிவம்

26

1718

கச்சறப் பணைத்துப் புடைபரந் தெழுந்த 
      கதிர்மணி முலையினாய் இதுவென்
இச்சையாற் பெற்றேன் விழந்தவா றென்மாட் 
      டின்னலம் நுகரெனக் கேட்டுப்
பச்சிளந் தோகை இந்நிறம் அடிகள் 
      இச்சையாற் படைத்ததேல் மாய
விச்சையே போலும் நிலைமையன் றெனக்கீ 
      தென்பயன் விளைத்திடு மென்றாள்

27

1719

பாய்சிறைக் கலுழப் புள்ளர சுகைக்கும் 
      ப·றலைச் சேக்கையன் வெகுளா
நீயினி யிருந்தை வண்ணமா கென்னச் 
      சபித்தலும் நேரிழை மேனிச்
சேயொளி கருகக் கண்டுளம் பதைத்தாள் 
      சிறியனேன் செய்பிழை பொறுத்திங்
கேயுமிச் சாபம் தவிர்த்தருள் பொறையாள் 
      கொண்கனே யென்றடி பணிந்தாள். 
இருந்தை- கரி. பொறையாள்- பூமி

28

1720

திருமகள் காஞ்சியை யடைதல்
தெம்முனை கடந்த திகிரியோன் இரங்கிச் 
      சீற்றத்தால் விரைந்துனைச் சபித்தேன்
அம்முறை யாற்றாற் கரிநிறம் பெற்றாய் 
      ஆயினும் முன்னையின் விழைய
வெம்முலைப்போகம் எனக்குள தாகவெருவலை 
      எனத்தழீஇக் கொள்ளச்
செம்மலர்த் திருவும் அடியிணை இறைஞ்சித் 
      திருந்துதன் இருக்கையுட் புக்காள்

29

1721

புக்கபின் அங்கண் பாங்கியர் தம்மோ 
      டுசாவினள் புதுநறாக் கான்று
நக்கபூஞ் சோலைக் காஞ்சிமா நகரை 
      நண்ணியாங் கிணைவிழி களிப்பத்
திக்கெலாம் பரசத் திகழுல காணித் 
      தீர்த்தநீர்த் தடங்கரை மாடே
மைக்குழல் உமையாள் இனிதமர்ந் தருளித் 
      தவஞ்செயும் வரைப்பினைக் கண்டாள்

30

1722

அனையநல் வரைப்பு நுண்பில மாகி 
      அருட்பர வெளியதாய்த் திகழும்
கனைகடல் உடுக்கை நிலமகட் குந்தித் 
      தானமாம் கமழ்நறுங் கடுக்கைத்
தனிமுதற் பிரமந் தனக்கொரு வடிவாம் 
      தாழ்குழலுமையவட் கடியார்
வினைதபு மூலத் திருவுரு வதுவே 
      விளங்கொளிக் காஞ்சியம் பதியுள்

31

1723

குறைவிலா நிறைவாய் உண்மையாய் 
      அறிவாய்க் கொட்புறு மனமடங் கிடமாய்
மறைமுடிப் பொருளாய் இன்பமாய்ச் 
      சிவமாய் மாசற வயங்குபே ரொளியை
நிறைதவ யோகத் தலைவர் இவ்வாறு 
      நெஞ்சகத் தேவழி படுவார்
அறைகடற் பரப்பிற் காஞ்சிமா நகரின் 
      ஆயிடை வழிபடு வாரால்

32

1724

      காமகோடி - பெயர்க்காரணம்
ஒருமுறை யங்கட் காமமாம் தருமம் 
      உஞற்றுநர் தமக்குமத் தருமம்
தருபயன்கோடி யாதலிற் கரடத் 
      தடத்திழி கடாம்படு கலுழிப்
பெருவரை வதனப்பிள்ளையைக் குகனைப் 
      பெற்றவள் அமர்பிலம் அதுதான்
கருதரு காமக் கோடியென் றுலகிற் 
      காரணப் பெயரினால் வயங்கும்

33

1725

அன்றியும் காமக் கிறையவர் தனத 
      ரனையவர் கோடியர்த் தரலால்
என்றுமோ ரியல்பின் எங்கணும் விரவி 
      யெவற்றினுங் கடந்தபே ரொளியைக்
குன்றுறழ் கொம்மைக் குவிமுலைத் தடத்தாற் 
      குழைத்தருள் கருணையெம் பிராட்டி
நன்றுவீற் றிருக்கும் பேரொளிப் பிலத்திற் 
      கப்பெயர் நாட்டலும் ஆமால்.

34

1726

இன்னுமிப் புவனப் பரப்பினிற் காம 
      மென்பன மனைவியர் மக்கள்
பொன்னணி யிருக்கைப் பூண்முதற் பலவாம் 
      பூந்தளிர் அணிநலங் கவற்றுந்
தன்னடி வணங்கி இரந்தவர் தமக்குத் 
      தடங்கிரி பயந்தபே ராட்டி
அன்னவை கோடி யளித்திட லானு 
      மப்பெய ரெய்துமங் கதுவே

35

1727

அல்லதூங் கவைத்தாட் கரும்பகட் டூர்தி 
      அடுதொழிற் கூற்றினைக் குமைத்த
கொல்லையேற் றண்ணல் நுதல்விழிச் 
      செந்தீக் கோட்படும் ஒருதனிக் கருப்பு
வில்லியை விளையாட் டியற்கையிற் கோடி 
      காமரா விழித்துணைக் கடையால்
அல்லியங் கோதை யாங்களித் திடலால் 
      அப்பெயர் பூண்டது மாமால்

36

1728

மற்றுமா ருயிர்சேர் நாற்பொருட் பயனில் 
      வகுத்தமூன் றாவது காமம்
பற்றுகா மத்திற் கோடியா முடிவிற் 
      பயில்வது வீடுபே றாகும்
உற்றவர் தமக்கு வீடுபே றளிக்கும் 
      உண்மையி னானுமப் பெயராற்
சொற்றிடப் படுமால் உலகெலாம் ஈன்றா 
      ளமர்ந்தருள் சுடரொளி விமானம்

37

1729

பின்னரும் ஒன்று ககரமே அகரம் 
      மகரமாப் பிரிதரும் மூன்றும்
அன்னவே றுகைக்கும் அயனரி ஈசன் 
      ஆயமுத் தேவரைப் பகரும்
இன்னவர் தம்மை யுகந்தொறுங் கோடி 
      முறையெழில் விழிகளிற் படைத்தாள்
மின்னிடைப் பிராட்டி யென்பத னானும் 
      அப்பெயர் விளங்கு மென்பதுவே

38

1730

வேறுமொன் றாங்கட் காவெனப் படுவாள் 
      வெண்மல ராட்டிமா வென்பாள்
ஊறுதேங் கமலப் பொகுட்டணை யணங்காம் 
      ஊங்குவர் இருவரும் முகிலை
மாறுகொள் ஐம்பால் உமைவிழிக் கோடி 
      தன்னிடை வருமுறை யானும்
ஏறுமத் திருப்பேர் எம்பெரு மாட்டிக் கென்றெடுத் 
      தியம்புவர் உணர்ந்தோர்

39

1731

விந்துவின் வயங்கி யம்பைவீற் றிருக்கும் 
      வியன்திருச் சக்கர வடிவாம்
அந்தவான் பிலந்தான் இயம்பிய காமம் 
      அனைத்திற்கும் ஆதர மாகிப்
பந்தமில் காமக் கோட்டமென் றொருபேர் 
      பரித்திடும் மற்றெவற் றினுக்கும்
முந்திய பீட மாதலின் ஆதி பீடமும் 
      மொழிந்திடப் படுமால்

40

1732

இனைய தாகிய திருப்பிலம் அதனை 
      எழால்மி டற்றிளஞ் சுருப்பினம் முரலும்
நனைக லுழ்ந்தலர் மலர்த்தவி சிருக்கை 
      நகைமலர்க்கொடி கண்டுகை தொழுதே
அனைய சூழலின் இடப்புறம் வைகி அடங்க 
      லார்புரம் அழலெழச் சிரித்த
முனைவ னார்க்கொரு சத்தியாய் இன்பாய் 
      முழுது மாகிய அகில காரணியை

41

1733

பாதம் ஒன்றொடு நிவிர்த்தியால் தரைக்கண் 
      பதமி ரண்டொடு பதிட்டையால் புனற்கண்
பாதம் நான்கொடு வித்தையால் கனற்கண் 
      பதங்கள் எட்டொடு சாந்தியால் வளிக்கண்
பாதம் ஒன்பத னொடுவெளிப் பரப்பிற் பகருஞ் 
      சாந்தியின் அதீதமாங் கலையாற்
பாதம் ஆயிரத் தொடுபர வெளிக்கண் 
      பயிலும் அக்கரத் தனிமுதற் பரையை

42

1734

திருமகள் வழிபாடு
எண்சீர்க் கழிநெடிலாசிரிய விருத்தம்
கருமை செம்மைவெண் ணிறமுடை யாளைக் 
      காமக் கோடிவான் பிலவடி வாளை
அருவி தாழ்குவட் டணிமலை மகளை மாயை 
      யோடுல கனைத்துமீன் றாளை
உருகி நெக்குநெக் குளப்பெருங் கோயி லுள்ளு 
      றுத்தியென வுடம்பினைப் பொதிந்து
மருவு மிக்கரு நிறஞ்செதிள் எடுப்பான் 
      கருணை செய்கென வழிபட லுற்றாள்

43

1735

வருண னாருனை வாருணி யெனப்பிருகு 
      மாதவற் கருளிய வாற்றால் 
பிருகு வாரநா ளுனைவழி படுவார் பெருவ 
      ளத்தொடு வாழ்வாரென் றுரைப்ப
அருவி னைப்புலக் குறும்பெறிந் துயர்ந்த 
      பிருகு மாமுனி மகளடி யேற்கும்
கருணை செய்வது கடனுனக் கன்றே கருப்பும்
      வில்லியைக் காய்ந்தவர்க் கினியாய்

44

1736

காஎ னப்பெய ரியகலை மகளைமுந்தை 
      ஞான்றுநின் கண்ணெனப் புரந்தாய்
மாஎ னப்பெய ருடையமற் றெனையும் மலர்ந்த 
      நின்விழி போற்புரந் தருளி
ஏஎ னப்பிறழ் தடங்கணாய் காமக்கண்ணி 
      யாம்பெயர் எய்துவை என்னாப்
பூஎ னப்பயில் அணைமிசைக் கிழத்தி போற்றி 
      சைத்தலும் எதிரெழுந் தருளி

45

1737

திருமகள் வரம் பெறல்
எம்பி ராட்டிவான் கருணைகூர்ந் தருளி யேட 
      விழ்ந்தபூந் தவிசுறை யணங்கே
கம்பி யாதிமற் றுன்னுடற் கருமை கரிய 
      சாந்தமாக் கழிகமுன் னையினும்
நம்பு நல்லுருப் பெறுதியிப் பொழுதே நார 
      ணற்குமிக் குரியவ ளாவாய்
வம்ப றுத்தெழுந் தோங்கியண் ணாந்து மதர்த்து 
      வீங்கிய வனமுலைத் தோகாய்

46

1738

அழகு வாய்ந்தநின் வடிவினிற் கழியும் 
      அனைய சாந்தணி நுதலினர் தமக்கு
விழவும் இன்பமுஞ் செல்வமும் புகழும் 
      மேக லின்மையும் இகழுமற் றொழிக
பழைய வேதமுற் றுணர்ந்துயர் சிறப்பிற் 
      பனுவ லாட்டியு மிவணமர் செயலாற்
கழிவில் அன்பின்நீ வேட்டவா றெனக்குக் 
      காமக் கண்ணியாம் பெயருறு கென்ன

47

1739

இறைவி திருமாலுக்குக் கட்டளை யிடுதல்
இனைய வாறிவண் நிகழ்வுழிச் சுரும்பர் 
      இமிருந் தாமரை உந்தியங் கடவுள்
மனைய கத்துமா மடந்தையைக் காணான் 
      மனமழுங்கினன் பிரிவுநோய் வருத்தக்
கனைக டற்பரம் பெங்கணுந் தேடிக் 
      காஞ்சி மாநகர் ஆவயின் கண்டான்
அனைய தாரமும் இறைவியும் தம்முள் அறைவ 
      கேட்டவண் ஒளித்துநின் றனனால்

48

1740

ஒள்வ ளைக்கரத் திருவரும் அவனை யுணர்ந்து 
      நோக்கினர் என்னையா ளுடையாள்
கள்வன் ஒத்திவண் நிற்பவன் யாரே யெனக்க 
      டாயினள் கடிமலர் அணங்கும்
வெள்க லுற்றுமுன் இறைஞ்சினள் மாயோன் 
      விரைவின் அம்பிகை திருவடி வணங்கி
உள்ள கம்பெரு மகிழ்ச்சியின் திளைப்ப 
      ஒரும ருங்குற ஒடுங்கிநின் றனனே

49

1741

நங்கை நாகணைக் குரிசிலை நோக்கி 
      நன்று வந்தனை யோவென வினவி
அங்கண் முச்சகம் நீபுரந் தளிக்கும் ஆரு 
      யிர்த்தொகை இனிதுவாழ்ந் தனவே
பங்க யக்கணாய் என்றலும் கலுழப் பாகன் 
      நின்னருட் கருணைபெற் றுடையேம்
எங்கள் வாழ்வினுக் கெவன் குறையானும் 
      இவளும் உய்ந்தனம் எனத்தொழு துரைத்தான்

60

1742

இறைவி பின்னரும் ஒன்றவற் கியம்பும் 
      ஈண்டு முப்பதிற் றிரண்டறம் வளர்க்கும்
முறையின் என்னறச் சாலையீ திங்கோர் 
      மூரிப்பாரிடம் இதற்கிடை யூறாய்க்
குறைவி லாற்றலி னுழிதரு மதனைக் 
      குறும்ப டக்குதி நீயென யேவ
நறைம லர்த்துழாய் மோலியும் இறைஞ்சி 
      நயந்து பஞ்சதீர்த் தத்தடங் கரைப்பால்

51

1743

மூரிப் பாரிடம் - வலிய பூதம்
திருமால் பூதத்தை யடக்கல்
அன்று பாரிடம் பாரிடை வீழ்த்தி யாற்ற 
      லான்மிதித் ததன்மிசை நின்றான்
நின்ற வன்றனை உந்திமேல் எழும்ப நெரித்தி 
      ருந்தனன் இருந்தவன் றனையும்
வென்றி சால்விறற் பூதம்மேல் உந்த நீண்டு 
      மற்றதன் மிசைப்படக் கிடந்தான்
கன்று பூதமும் வலிமுழு திழந்து கமலக் 
      கண்ணனை வணங்கியொன் றிரக்கும்

52

1744

வள்ள லேமலர்த் திருவிளை யாடு மார்ப 
      னேபெரும் பசியெனை வருத்த
உள்ளு டைந்துளேன் ஆண்டுதோ றடிமேற் 
      கொரும கன்றனை உயிரொடும் உதவின்
கொள்ளும் அப்பலி யேற்றுளம் மகிழ்வேன் 
      கொடுத்தி யிவ்வரம் எனக்கென வரவப்
பள்ளி யோனுமற் றாகென விளம்பிப் பத்தர் 
      போற்றவத் தலத்தினி திருந்தான்

53

1745

கள்வன் நின்றவன் இருந்தவன் கிடந்தவன் 
      என்னும் நால்வகைக் கரிசறு வடிவால்
வெள்வ ளைக்கரக் கடவுளங் கமர்ந்தான்
      விமல நாயகி ஆணையி னாற்றான்
முள்ளெ யிற்றராப் பணம்புரை அல்குல் 
      முளரி மாதுமப் பிலத்தயல் இருந்தாள்
புள்ளு யர்த்தவற் கினியவாம் அங்கட் 
      போற்றப் பெற்றவர் வைகுந்தம் புகுவார்

54

1746

கறைமி டற்றிறை வைகும்வீ ராட்ட காச 
      மேன்மையின் தொடர்ச்சியால் இங்கே
அறைக ழல்திரு நாயகன் வரலா 
      றனைத்துங் கூறினாம் அத்திரு நகரை
நிறைவி ருப்பினால் வழிபடப் பெறுவோர் 
      நிலமி சைப்பெரு வாழ்வின ராகிப்
பிறைமு டிப்பிரான் திருவடிக் கலப்பிற் 
பெறல ரும்பர போகமுற் றிருப்பார்

55


ஆகத் திருவிருத்தம் - 1746 
-----------

52. பாண்டவேசப்படலம் (1747-1755)

1747

கொச்சகக் கலிப்பா
பேரின்பச் சாக்கியனார் கல்லெறிக்கும் பேறுதவு
வார்தங்கும் வீராட்ட காச வரவிதுவால்
சீர்தங்கு தென்பால் திருப்பாண்ட வேச்சரமாம்
கார்தங்கு மிஞ்சிக் கடிநகரங் கட்டுரைப்பாம்

1

1748

தருமம் பயந்த தநயன் முதலோர்
உருகெழுவெங் காட்டின் உரோமசனே யாதித்
திருமுனிவர் தம்மோடுந் தீர்த்தமெலா மாடக்
கருதி நடந்தார் கழியாத காதலார்

2

1749

அங்கங் கிலிங்கம் நிறுவி அருச்சித்துப்
பங்கந் துமிக்கும் பரம்பொருளைப் போற்றிசைத்துச்
சிங்கம் படுக்குந் திறலார் வருநெறியார்
தெங்கம் பொழில்சூழ் திருக்காஞ்சி நண்ணினார்

3

1750

அங்கட் பலதளியும் நோக்கி அகமகிழ்ச்சி
பொங்கித் திருக்கம்ப மாத

Related Content

சிவஞான சுவாமிகள் அருளிய காஞ்சிப் புராணம் - பகுதி 1 பாயிரம்

சிவஞான சுவாமிகள் அருளிய காஞ்சிப் புராணம் - பகுதி 2 படலம் 7

சிவஞான சுவாமிகள் அருளிய காஞ்சிப் புராணம் - பகுதி 3 படலம் 30

சிவஞான சுவாமிகள் அருளிய காஞ்சிப் புராணம் படலம் 61 - 65 (202