logo

|

Home >

Scripture >

scripture >

Tamil

திருமுறைகளின் மகிமை

(Greatness of Thirumurais)

 
புனலில் ஏடெதிர் செல்லெனச் செல்லுமே; 
	புத்த னார்தலை தத்தெனத் தத்துமே;
கனலில் ஏடிடப் பச்சென்(று) இருக்குமே;
	கதவு மாமறைக் காட்டில் அடைக்குமே;
பனையில் ஆண்பனை பெண்பனை ஆக்குமே;
	பழைய என்புபொற் பாவைய தாக்குமே;
சிவன ராவிடம் தீரெனத் தீருமே;
	செய்ய சம்பந்தர் செந்தமிழ்ப் பாடலே.

தலைகொள் நஞ்சமு தாக விளையுமே;
	தழல்கொள் நீறு தடாகம தாகுமே;
கொலைசெய் ஆனைகுனிந்து பணியுமே;
	கோள ராவின் கொடுவிடம் தீருமே;
கலைகொள் வேத வனப்பதி தன்னிலே;
	கதவு தானும் கடுகத் திறக்குமே; 
அலைகொள் வாரியிற் கல்லும் மிதக்குமே;
	அப்பர் போற்றும் அருந்தமிழ்ப் பாடலே.

வெங் கராவுண்ட பிள்ளையை நல்குமே;
	வெள்ளை யானையின் மீதேறிச் செல்லுமே;
மங்கை பாகனைத் தூது நடத்துமே;
	மருவி யாறு வழிவிட்டு நிற்குமே;
செங்க லாவது தங்கம தாக்குமே;
	திகழும் ஆற்றிட்டுச் செம்பொன் எடுக்குமே;
துங்க வான்பரி சேரற்கு நல்குமே;
	துய்ய நாவலூர்ச் சுந்தரர் பாடலே.

பெருகும் வைகை தனையடைப் பிக்குமே;
	பிரம்ப டிக்கும் பிரான்மேனி கன்றுமே; 
நரியெ லாம்பரி யாக நடத்துமே;
	நாடி மூகை தனைப்பேசு விக்குமே;
பரிவிற் பிட்டுக்கு மண்சுமப் பிக்குமே;
	பரமன் ஏடெழுதக் கோவை பாடுமே;
வருகும் புத்தரை வாதினில் வெல்லுமே;
	வாத வூரர் வழங்கிய பாடலே.

 

Related Content

Antiquity Of The Saiva Religion By R. A. Sastri

Chidambaram

Death Before Death By R. S. SUBRAMANIAM Esq., Colombo.

Flower And Fragrance By J. M. Nallaswami Pillai

Image Worship By Tamby Rajah Esq, Colombo