logo

|

Home >

Scripture >

scripture >

Tamil

ஊத்துக்காடு வேங்கடசுப்பையரின்

ஸப்த ரத்னம்


ஊத்துக்காடு வேங்கடசுப்பையரின் ஸப்த ரத்னம்

 

ராகம்: பரஜு / பரஸ்                          தாளம்: ஆதி

 

15ஆவது மேள ஜன்யம்

 

பல்லவி

 

ஆளாவ தென்னாளோ சிவமே உன்

அடியார்க்கடி யார்க்கு அடியனாய் மீளாத

 

அனுபல்லவி

 

கேளாதளிக்கும் வரமே அண்ட

மேலானதற்க்கும் பரமே இளம்

தாளான கமலமுட் புறமே பதம்

 

மத்யம கால ஸாஹித்யம்

 

ததிக்க தாம் என விதித்த தாளமும்

துதிக்க தான் என மதித்த கதிபெற

 

சரணம்

 

புன்மை பிறவி போக வேணும் எடுத்தால்

புண்ணிய பிறவிகள் ஆக வேணும்

 

இன்னவரில் ஒருவரை போலே ஸ்வர ஸாஹித்யம்

 

1. சீர்காழி மணம் சிவபாத மகன் திருநாவரசன்

மணிவாசக சுந்தரர் எனும்                              (இன்னவரில்)

 

2. சிறுதொண்ட திருநீலகண்ட விறன்மின்ட

நமிநந்தி தண்டி அடிகள் எனும்                  (இன்னவரில்)

 

3. ஐயடிகள் காடவர்கோன் ஆனாய கணம் புல்ல

நின்ற சீர் நெடுமாற கணநாத

முனையடுவாரோடு திருநாளைப்

போவார் எனும்                                (இன்னவரில்)

 

4. மெய்ப் பொருளார் பெருமிழலைக் குறும்பர்

ஏனாதிநாத கலிக்கம்பர்

அமர்நீதி நரசிங்க முனையரையர் சடைய

சண்டேச கலிய காரியார் எனும்                 (இன்னவரில்)

 

5. மானக்கஞ்சாற னேச பூசலாரொடு வாயிலார்

சோமாசிமாற மங்கையர்க்கரசி குங்கிலியக்கலயர்

இளையாங்குடி மாற அரிவாட்டாய கூற்றுவர்

கோட்புலி சாக்கியர் சத்தியர் சிறப்புலியர்

கழறிற்றறிவார் இயற் பகையர் எனும்            (இன்னவரில்)

 

6. திருமூல மூர்க்க மூர்த்தி அப்பூதி ருத்திர பசுபதியார்

இசைஞானியார் நீலநக்கர் இடங்கழியார்

அதிபத்தர் எறிபத்தர் ஏயர்கோனோடு

நீலகண்ட யாழ்பாண புகழ்ச் சோழ கோச் செங்கட்

சோழ கழற் சிங்கர் காரைக்கால் நகர் மேவு கனியாரொடு

கண்ணப்பர் குறிப்புத் தொண்டர் எனும்            (இன்னவரில்)

 

இன்னவரில் ஒருவரை போலே நான்

இனை ஒன்றும் இல்லா பதத்தினையாக வேனும்  (ஆளாவ தென்னாளோ)

 

Related Content

Vuttukkatu vegkatasubbaiyarin