logo

|

Home >

hindu-hub >

temples

திருப்பூந்துருத்தி கோயில் தலவரலாறு

இறைவர் திருப்பெயர்: புஷ்பவனேஸ்வரர், ஆதிபுராணர், பொய்யிலியர்.

இறைவியார் திருப்பெயர்: சௌந்தரநாயகி.

தல மரம்:

தீர்த்தம் : காசிப தீர்த்தம், சூரிய தீர்த்தம்.

வழிபட்டோர்:சம்பந்தர், அப்பர், சுந்தரர், பூந்துருத்திநம்பி காடநம்பி, சேக்கிழார், இந்திரன், திருமால், இலக்குமி, சூரியன், காசிபர் ஆகியோர்.

Sthala Puranam

 

Tiruppunturutti temple

  • மக்கள் வழக்கிலும் - அஞ்சல் பெயர் வழக்கிலும் தற்போது திருப்பந்துருத்தி என்று வழங்குகிறது. கோயில் உள்ளபகுதி மேலத்திருப்பூந்துருத்தியாகும்.

     

  • ஆற்றிடைக் குறையிலுள்ள ஊர்கள் "துருத்தி" என்று பெயர் பெறும். இத்தலம் காவிரிக்கும் குடமுருட்டிக்கும் இடையில் உள்ளதால் இப்பெயர் பெற்றது.

     

  • அப்பர் உழவாரத் தொண்டு செய்த தலமென்றெண்ணி, காலால் மிதிக்கவும் அஞ்சி வெளியில் நின்ற ஞானசம்பந்தருக்கு இறைவன் நந்தியை விலகச் செய்து காட்சித் தந்ததாகத் தலபுராணம் கூறுகிறது. (திருப்புங்கூர் தலத்தில் நந்தனாருக்காக நந்தி விலகியதும் குறிப்பிடத்தக்கது)

 

தேவாரப் பாடல்கள்	: 

பதிகங்கள்     :    அப்பர்     -    1. மாலினை மாலுற (4.88),
                                     2. கொடிகொள் செல்வ விழா (5.32), 
                                     3. நில்லாத நீர்சடைமேல் (6.43); 

பாடல்கள்      :    அப்பர்     -       நெருப்பனைய (6.59.2),
                                        இகழ்ந்தானை (6.68.10),
                                        பூச்சூழ்ந்த (6.75.8), 
                                        மற்றாருந் (6.81.4), 
                                        கன்னியையங் (6.84.6), 
                                        வரையார்ந்த (6.86.5), 
                                        நேர்ந்தொருத்தி (6.93.1); 

   பூந்துருத்திநம்பி காடநம்பி    -     சேடர் உறைதில்லைச் (9.19.10) கோயில் - முத்து வயிரமணி திருவிசைப்பா; 

               சேக்கிழார்        -     நீடிய அப்பதி நின்று (12.21.386,391,392,396,398 & 401) திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம், 
                                        அங்கு அப்பதி நின்று (12.28.351,928,931,938 & 948) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம், 
                                        தேவர் பெருமான் (12.29.71) ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம்.    

 

தல மரம் :  வில்வம்

 

Specialities

  • சப்தஸ்தானத் தலங்களுள் இதுவும் ஒன்று.

     

  • பூந்துருத்தி காடவநம்பி "யின் அவதாரத் தலம்.

     

  • இத்தலத்திலும் நந்தி விலகியுள்ளது. (தலபுராணம் தொடர்புடையது.)

     

  • ஞானசம்பந்தரின் பல்லக்கை அப்பர் பெருமான் தன் தோளிற் சுமந்தத் தலம். இவ்விடம் சம்பந்தர் மேடு என்று சொல்லப்படுகிறது. (திருவாம்பொழிலுக்குப் பக்கத்தில் வெள்ளாம்பரப்பூரையடுத்து இம் மேடு உள்ளது. இங்கு இருவருக்கும் கோயில் உள்ளது; விழா நடைபெறுகிறது.)

     

  • அப்பர் அமைத்த - "திங்களும் ஞாயிறும் தோயும் திருமடம்" என்று புகழப்படும் திருமடம் உள்ள தலம். இங்கு இருந்து தான் அப்பர் பெருமான் திரு அங்கமாலை உள்ளிட்ட பல தாண்டகங்களையும் பல பதிகங்களையும் பாடியருளினார்.

     

  • கருவறையின் தென்பால் தென்கயிலையும், வடபால் வடகயிலையுமாகிய கோயில்கள் விளங்குகின்றன.

     

  • மகிடனையழித்த பாவத்தைப் போக்க ஒற்றைக் காலில் நின்று தவம் செய்யும் துர்க்கையும், அமர்ந்த கோலத்தில் அப்பர் பெருமானும், பூந்துருத்தி காடவ நம்பியின் திருவுருவமும் தரிசிக்கச் சிறப்புடையன.

Contact Address

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு திருக்கண்டியூரிலிருந்து 3-கி. மீ. தொலைவில், திருக்காட்டுப்பள்ளிச் சாலையில் உள்ள தலம். திருவையாற்றிலிருந்தும் செல்லலாம். தொடர்பு : 09486576529

Related Content

Thiruppunthuruthi Sri Poiyiliyappar temple