logo

|

Home >

hindu-hub >

temples

திருநெய்த்தானம் (தில்லைஸ்தானம்) கோயில் தலவரலாறு

இறைவர் திருப்பெயர்: நெய்யாடியப்பர், கிருதபுரீஸ்வரர்.

இறைவியார் திருப்பெயர்: பாலாம்பிகை.

தல மரம்:

தீர்த்தம் : காவிரி

வழிபட்டோர்:சம்பந்தர், அப்பர்,சுந்தரர் ,சேக்கிழார், சரசுவதி, காமதேனு, கௌதமமுனிவர் ஆகியோர்.

Sthala Puranam

Neyttanam temple

மக்கள் வழக்கில் தில்லைஸ்தானம் என்று வழங்கப்படுகிறது.

 

  • சப்தஸ்தானத் தலங்களுள் இதுவும் ஒன்று.

 

தேவாரப் பாடல்கள் : பதிகங்கள்     :    சம்பந்தர்     - 1. மையாடிய கண்டன்மலை (01.015);                       அப்பர்       - 1. காலனை வீழச் செற்ற (04.037),                                         2. பாரிடஞ் சாடிய (04.089),                                         3. கொல்லி யான்குளிர் (05.034),                                         4. வகையெலா முடையா (06.041),                                         5. மெய்த்தானத் தகம்படியுள் (06.042); பாடல்கள்       :  சம்பந்தர்  -           மலையினார் பருப்பதந் (1.76.1),                                            குன்றி யூர் (2.106.7);                      அப்பர்    -          குலாவெண் டலைமாலை (6.002.8),                                            சிறையார் (6.007.3),                                            கல்லலகு (6.009.9),                                            பன்மலிந்த (6.013.4),                                               கருத்துத்திக் (6.025.11),                                            விடையேறி (6.036.10),                                            இண்டைச் சடைமுடியா (6.037.5),                                            நதியாருஞ் (6.069.7),                                              புலிவலம் (6.070.11),                                             பூச்சூழ்ந்த (6.075.8),                                            கன்னியையங் (6.084.6),                                            ஐத்தானத் (6.093.2);                          சுந்தரர்   -        கச்சையூர் (7.031.4),                                             துருத்திச் சுடரே (7.047.8);                       சேக்கிழார்  -        நீடிய அப்பதி நின்று (12.21.386) திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்,                                             குடதிசை மேல் (12.28.305 & 949) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம்.

Specialities

 

  • இங்கு இறைவனுக்கு பசு நெய் அபிஷேகம் விசேஷமானது.

 

அம்பிகையின் திருப்பெயர் தேவாரப் பதிகத்துள் இளமங்கையம்மை என்றும் குறிக்கப்படுகிறது.

 

கல்வெட்டுக்களில் இத்தலம் "இராஜராஜ வளநாட்டு பைங்காநாட்டு திருநெய்த்தானம்" என்றும்; சுவாமியின் பெயர் நெய்த்தானமுடையார் என்றும் குறிக்கப்படுகிறது.

 

இக்கல்வெட்டுக்களிலிருந்து, நிபந்தமாக நிலங்கள் அளித்தமை, விளக்கெரிக்கப் பொற்காசுகள் தந்தமை, ஊர்ச்சபையதார் ஸ்தபன மண்டபம் கட்டியது, கோயிற் பணியாளர்களுக்கு நிலங்கள் அளித்தமை, சுவாமியின் நைவேத்தியத்திற்கு நிலங்கள் விட்டது முதலியன தெரியவருகிறது.

 

இலங்கையரசன் கயவாகு என்பவன் இப்பெருமானைத் தன் குலதெய்வமாகக் கொண்டு திருவிழாக்கள் செய்வித்த செய்தியும் கல்வெட்டால் தெரியவருகிறது.

 

இக்கோயிலில் பல்லவர்களும் திருப்பணி செய்துள்ளனர் என்பதற்குச் சான்றாக சிம்மத் தூண்கள் உள்ளதைக் காணலாம்.

Contact Address

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு திருவையாற்றுக்கு மிக அருகாமையில் உள்ளது. தொடர்பு : 04362 - 260553

Related Content

Thiruneythanam Neiyadiyappar temple