logo

|

Home >

hindu-hub >

temples

மிழலை நாட்டு மிழலை (தேவமலை)

இறைவர் திருப்பெயர்: தேவநாதர்.

இறைவியார் திருப்பெயர்: தேவநாயகி.

தல மரம்:

தீர்த்தம் : தேவ தீர்த்தம்

வழிபட்டோர்:குறும்ப நாயனார்.

Sthala Puranam

  • இது 'பெருமாநல்லூர்' என்று வழங்கியது; இப்பெயரும் இன்று மாறி, வழக்கில் "தேவமலை" என்று வழங்குகிறது. (இங்குள்ள மலையின் பெயரே தேவமலையாகும்.)

  • வைப்புத்தலப் பாடல்கள்		: சுந்தரர் - குழலை வென்ற மொழிமட (7-12-5).

 

Specialities

  • இத்தலம் சுந்தரர் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.

     

  • குன்றைக் குடைந்து கோயில் எடுத்துள்ளனர்.

     

  • ஊரயமான மலைப் பகுதியில் கோயில் தனிமையாகவுள்ளது.

     

  • இது பெருமிழலைக் குறும்ப நாயனாரின் அவதார தலம். நாயனாரின் குருபூசை ஆண்டுதோறும் தேவர்மலையில் கொண்டாடப்படுகின்றது.
    	அவதாரத் தலம்	: மிழலைநாட்டு மிழலை (அல்லது மிழலைநத்தம் எனும் திருப்பனந்தாளுக்கு அருகிலுள்ள தலம்) - ஆய்வுக்குரியது.
    	வழிபாடு		: குரு வழிபாடு.
    	முத்தித் தலம் 	: தேவமலை என வழங்கும் மிழலைநாட்டு மிழலை (பெருமிழலை).
    	குருபூசை நாள் 	: ஆடி - சித்திரை.
    

     

  • தேவமலையின் அடிவாரத்தில் ஓர் குகை கோயில் உள்ளது; இங்கு குறும்ப நாயனார் உருவம் சிற்பமாக (குடைந்து) செதுக்கப்பட்டுள்ளது. இங்கு ஓர் சமாதியுமுள்ளது, இது குறும்ப நாயனாரின் சமாதி எனக் கூறப்படுகிறது.

     

  • பெரிய குடவரைப் பிள்ளையார் உள்ளார்.

     

  • சில படிகள் கீழிறங்கிப் பார்த்தால் சில முனிவர்களின் திருவுருவச் சிலைகள் உள்ளன.

     

  • மண்டபத்தில் அம்பாள் திருமேனி தனியேயுள்ளது; தேவ தீர்த்த முள்ளது.

     

  • ("தேவமலை"க்கு அருகில் உள்ளது பேறையூர். இங்குள்ள நாகநாத சுவாமி கோயில் மிகப் பிரசித்தி பெற்றப் பிரார்த்தனைத் தலமாகும். எண்ணற்ற நாகப் பிரதிஷ்டைகள் உள்ளன. இஃது ராகு தோஷ நிவர்த்தி தலம். இங்குச் செல்வோர் இப்பேறையூர்ச் சிவாலயத்தை அவசியம் தரிசித்து வரலாம்.)

     

  • குறிப்பு :- 'மிழலை நாட்டு மிழலை' என்னும் இத்தலம் திருப்பனந்தாளுக்கு அருகிலுள்ள தலமென்று கூறுவாரும் உள்ளார்.

  • பெருமிழலைக் குறும்ப நாயனார் வரலாறு (மூலம்)

Contact Address

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு புதுக்கோட்டை - காரைக்குடிச் சாலையில், நடன சமுத்திரம் ரயில்வே லெவல் கிராசிங்கைக் கடந்து - வலமாகப் பிரியும் பொன்னமராவதிச் சாலையில் வந்து - பேறையூர் சாலையில் பிரிந்து பேறையூரை அடைந்து - நற்சாந்துப்பட்டி போகும் சாலையில் 2 கி.மீ. சென்று - குமரமலைக்குப் போகும் சாலையில் 1 கி.மீ. சென்றால் - "தேவமலை"க்குப் போகும் வண்டிப்பாதை வரும், அதிலிருந்து 1 கி.மீ. சென்றால் கோயிலை அடையலாம். (கடினமான பயணம், ஆங்காங்கே விசாரித்துச் செல்வது நலம்.)

Related Content