logo

|

Home >

hindu-hub >

temples

திருவாமூர் (Thiruvamur)

இறைவர் திருப்பெயர்: பசுபதீசுவரர்.

இறைவியார் திருப்பெயர்: திரிபுரசுந்தரி.

தல மரம்:

தீர்த்தம் : கெடில நதி.

வழிபட்டோர்:

Sthala Puranam

  • இத்தலம் அப்பர் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.

Specialities

  • மூலவர் சுயம்பு மூர்த்தி; சிவலிங்கத் திருமேனி.

     

  • திருநாவுக்கரசு சுவாமிகள் அவதரித்தருளிய புண்ணிய பூமி.
    	அவதாரத் தலம்	: திருவாமூர்.
    	வழிபாடு		: குரு வழிபாடு.
    	முத்தித் தலம் 	: திருப்புகலூர்
    	குருபூசை நாள் 	: சித்திரை - சதயம்.
    

     

  • சுவாமி சந்நிதிக்கு எதிர்புறத்தில் திருநாவுக்கரசு பெருமான் நின்ற திருக்கோலத்தில் காட்சித் தந்து அருள்பாலிக்கின்றார்.

     

  • இத்தலத்திற்கு தனித் தேவாரத் திருப்பதிகம் இல்லையாயினும், அப்பர் சுவாமிகள் பாடியருளிய "பசுபதி திருவிருத்தம்" இத்தல இறைவனைக் குறித்தே அருளிச் செய்யப்பெற்றது எனலாம்.

     

  • இப்பதியின் பெருமையினை பெரிய புராணத்தில் சேக்கிழார் மிகவும் சிறப்பித்துப் பாடுகிறார்.

     

  • திருநாவுக்கரசு சுவாமிகள் திருவவதாரம் செய்தருளிய இடம் இக்கோயிலின் தென்மேற்கே உள்ளது. அவர் அவதரித்த இல்லம் தற்போது திருக்கோயிலாகத் திகழ்கிறது.

     

  • பங்குனி - ரோகிணி, சித்திரை - சதயத் திருநாட்களில் அப்பர் பெருமானுக்கு வழிபாடுகள் நடைபெறுகின்றன.

     

  • அருணகிரி நாதரின் திருப்புகழும் இத்தலத்திற்கு உள்ளது.

Contact Address

அமைவிடம் 1. அ/மி. பசுபதீசுவரர் திருக்கோயில், திருவாமூர், திருக்கோயிலூர் (வழி), பண்ருட்டி (அஞ்சல்) - 607 106. தொலைபேசி : 041442 - 247707. 2. அ/மி. திருநாவுக்கரசர் சுவாமிகள் திருமடம், திருவாமூர், திருக்கோயிலூர் (வழி), பண்ருட்டி (அஞ்சல்) - 607 106. தொலைபேசி : 041442 - 247707. மாநிலம் : தமிழ் நாடு கடலூர் மாவட்டம் - பண்ருட்டியிலிருந்து மேற்றிசையில் 8 கி. மீ.ல் கெடில நதியில் வடகரையில் இக்கோயில் உள்ளது.

Related Content