logo

|

Home >

hindu-hub >

temples

ஏமப்பேறூர் - (திருநெய்ப்பேறு)

இறைவர் திருப்பெயர்: வன்மீகநாதர்

இறைவியார் திருப்பெயர்: உமாபரமேஸ்வரி

தல மரம்:

தீர்த்தம் :

வழிபட்டோர்:

Sthala Puranam

  • பெரியபுராணத்தில் சேக்கிழார் பெருமான் குறிப்ப்டும் பொன்னித் திருநாட்டு "ஏமப்பேறூர்" என்பது தற்போது மக்கள் வழக்கில் "திருநெய்ப்பேறு'' என்று வழங்குகிறது.
  • வைப்புத்தலப் பாடல்கள்		: அப்பர் - இடைமரு தீங்கோ (6-70-3).

Specialities

  • இத்தலம் அப்பர் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.

     

  • நமிநந்தியடிகள் நாயனார் அவதரித்த தலம்; சாலையோரத்தில் "அடியாகளார் கோயில்" என்று நமிநந்தியடிகள் நாயனாரின் திருக்கோயில் உள்ளது. சிறிய கோயில் நாயனாரின் மூலத் திருமேனி இக்கோயிலில் உள்ளது. உற்சவத் திருமேனி திருவாரூர்க் கோயிலில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. ஆண்டு தோறும் நாயனாரின் குருபூசை நடைபெறுகிறது.

    	நமிநந்தியடிகள் 
    	அவதாரத் தலம்	: ஏமப்பேறூர் (திருநெய்ப்பேறூர்).
    	வழிபாடு		: இலிங்க வழிபாடு.
    	முத்தித் தலம் 	: திருவாரூர்.
    	குருபூசை நாள் 	: வைகாசி - பூசம்.
    

     

  • மூலவர் தரிசனம் - நீண்டுயர்ந்த பாணம்.

     

  • கோயிலுள் நுழைந்ததும் இடப்பால் நமிநந்தியடிகள் (மூலத்திருமேனி) எண்ணெய்க் குடுவையுடன் நின்ற கோலத்தில் காட்சித் தருகிறார்.

 

Contact Address

அமைவிடம் அ/மி. வன்மீகநாதசுவாமி திருக்கோயில், திருநெய்ப்பேர், திருவாரூர் (வழி & மாவட்டம்) - 610 001. மாநிலம் : தமிழ் நாடு திருவாரூர் - திருத்துறைப்பூண்டிச் சாலையில் 8 கி.மீ-ல் திருநெய்ப்பேறு உள்ளது. "அடியாகளார் (நமிநந்தியடிகள்) கோயிலு"க்கு எதிர்ப்புறத்தில் உள்ள சாலையில் சென்றால் கோயிலை அடையலாம்.

Related Content