logo

|

Home >

hindu-hub >

temples

திருமுகத்தலை

இறைவர் திருப்பெயர்: பன்னகாபரணேஸ்வரர்

இறைவியார் திருப்பெயர்: சாந்தநாயகி

தல மரம்:

தீர்த்தம் : கோயிலுக்கு எதிரில் உள்ள திருக்குளம்.

வழிபட்டோர்:

Sthala Puranam

  • மக்கள் வழக்கில் பன்னத்தெரு என்று வழங்குகிறது.
  • முகலிங்கம், பண்டை நாளில் முகத்தலைலிங்கம் என்றும் வழங்கப்பட்டு வந்தது. அம்முகத்தலைலிங்கம் அமைந்துள்ள தலம். இதுவே பிற்காலத்தில் முகத்தலை என்றாயிற்று என்பர்.
  • பன்னகாபரணேஸ்வரர் வீற்றிருக்கும் தலமாதலின் பன்னத்தெரு என்று ஊருக்குப் பெயராயிற்று என்று கூறுவர்.
  • இதற்கேற்ப கோயிலின் உட்பிராகாரத்தில் முகலிங்கம் ஒன்றுள்ளது.
  • கோயிலுக்கு வெளியில் உள்ள பகுதி 'முகத்தலைக் கோட்டகம்' எனப்படுகிறது.

Specialities

  • இத்தலத்திற்கு - ஒன்பதின்மரில் கருவூர்த்தேவர், திருவிசைப்பா பாடியுள்ளார்.
  • ஒன்பதாம் திருமுறையான திருவிசைப்பா திருப்பல்லாண்டுப் பதிகங்கள் - சிவபெருமானின் திருமேனிச் சிறப்பு, அடியார்க்கருளிய அப்பெருமானின் நலங்கள் முதலியவற்றையும் எடுத்துரைப்பதோடு, ஆங்காங்குச் சைவசமயத் தத்துவக் கருத்துக்களையும் புகழ்ந்தோதுகிறது.
  • சிறிய கோயில், சுற்றிலும் பசுமையான சூழல்.
  • தலமரமான புன்னை மரத்தின்கீழ் விநாயகர் எழுந்தருளியுள்ளார்.
  • மூலவர் - பன்னகாபரணேஸ்வரர், பெயருக்கேற்ப வெள்ளி நாகாபரணத்தில் பிரகாசிக்க ஒளிர்விட்டுக் காட்சியளிக்கிறார்.
  • அம்பாள் - சாந்தநாயகி; நின்ற திருக்கோலம் - அற்புத தரிசனம்; மனதிற்குச் சாந்தி தரும் காட்சி.
  • மதுரை திருஞானசம்பந்தர் ஆதீனத்தின் அருளாட்சிக்குட்பட்ட திருக்கோயில்; ஆதீனத்தின் மேலாளர் ஒருவர் அங்கிருந்து கொண்டு கோயில் நிர்வாகத்தைக் கவனித்து வருகின்றார். நல்ல பராமரிப்பு.
  • நித்திய வழிபாடுகள் குறைவின்றி நடைபெறுகின்றன.
  • மூன்றாம் குலோத்துங்க சோழனுடைய கல்வெட்டுக்களில் இடம்பெற்றுள்ள இத்தலத்தில், கோயிலுக்கு விளக்கெரிக்க நிவந்தங்கள் ஏற்படுத்தப்பட்ட செய்திகள் தெரியவருகின்றன.

Contact Address

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு திருத்துறைப்பூண்டி - நாகப்பட்டினம் / வேளாங்கண்ணி சாலையில் 4-கி.மீ. சென்று 'கொக்காலடி' என்னும் ஊரையடைந்து; அங்கிருந்து மானாச்சேரி (மாராச்சேரி) பாதையில் 3-கி.மீ. சென்றால் திருமுகத்தலை - பன்னத்தெரு கோயிலை அடையலாம்.

Related Content