logo

|

Home >

hindu-hub >

temples

குமரிக்கொங்கு (கொங்கு குமரித்துறை - மோகனூர்) Kumarikkongu (Kongu kumaritthurai - Moganur)

இறைவர் திருப்பெயர்: அசலதீபேஸ்வரர்

இறைவியார் திருப்பெயர்: மதுகரவேணி

தல மரம்:

தீர்த்தம் : குமரித்துறை எனப்படும் அகண்ட காவிரி.

வழிபட்டோர்:

Sthala Puranam

  • இன்று மக்கள் வழக்கில் "மோகனூர்" என்று வழங்குகிறது.

     

  • 1. "அகண்ட காவிரியின் கரையில் சிவாலயம் உள்ளது இதுவே குமரிக் கொங்கு என்று அப்பர் க்ஷேத்திரக் கோவையில் குறிப்பிடும் தலம்" என்றும், "மோகனூர் சிவபெருமானுக்குக் "குமரீசர்" என்று பெயராதலால் இவ்வூர் மோகனூராக இருத்தல் வேண்டும்" என்றும் சொல்லப்படுகிறது.

     

  • எனவே, "குமரிக் கொங்கு", "கொங்கு குமரித்துறை" ஆகிய இரண்டும் ஒன்றே என்பதும், அது இன்று வழங்கும் 'மோகனூரே' என்பதும் புலனாகிறது.

     

  • 'ஞானப் பழம்' கிடைக்கவில்லை என்று கோபித்து வந்த முருகனைத் தேடி, சுவாமியும் அம்பிகையும் வந்தபோது, இவ்வூரில் முருகனைக் கண்டு மகிழ்ந்தனராம். ஆதலின் இது "மகனூர்" என்பது மருவி "மோகனூர்" என்றாயிற்று என்பது ஒரு செவி வழிச் செய்தியாகவுள்ளது.

     

  • சுவாமியின் திருவடியில் ஊறுகின்ற சிறிய நீரூற்று காவிரியில் சென்று கலப்பதாகச் சொல்லப்படுகிறது.
  • வைப்புத்தலப் பாடல்கள்		: சம்பந்தர் - குத்தங் குடிவே திகுடி (2-39-10).

Specialities

  • இத்தலம் அப்பர் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.

     

  • மூலத்தானத்தில் - சுவாமிக்கு முன்னிலுள்ள தீபம், எவ்வளவு காற்றடித்தாலும் அசைவதில்லை. எனவே சுவாமிக்கு 'அசலதீபேஸ்வரர்' என்று பெயருண்டாயிற்று.

     

  • மூலவர் - மேற்கு நோக்கிய சந்நிதி; சுயம்பு மூர்த்தி.

Contact Address

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு நாமக்கல்லுக்குப் பக்கத்தில் உள்ள ஊர். நாமக்கல்லிலிருந்து மோகனூருக்கு அடிக்கடி பேருந்துகள் உள்ளன.

Related Content