logo

|

Home >

hindu-hub >

temples

திருஅன்னியூர் (பொன்னூர்)

இறைவர் திருப்பெயர்: ஆபத்சகாயேசுவரர், லிகுசாரண்யேஸ்வரர், அக்னீசுவரர், பாண்டதவேசுவரர், ரதீசுவரர்.

இறைவியார் திருப்பெயர்: பிருகந்நாயகி, பெரியநாயகி.

தல மரம்:

தீர்த்தம் : சூரிய தீர்த்தம், வருணதீர்த்தம், அக்னிதீர்த்தம் (இரண்டும் ஒன்றே)

வழிபட்டோர்:வருணன், அக்கினி, சூரியன், ரதி, பாண்டவர், சம்பந்தர், அப்பர், சேக்கிழார் முதலியோர்.

Sthala Puranam

thiruanniyur templeview of the vimAnA

 

இத்தலம் தற்போது பொன்னூர் என்று வழங்குகிறது.

 

இத்தலத்தில் வருணன், அக்கினி, சூரியன், ரதி, பாண்டவர் ஆகியோர் வழிபட்டு பேறு பெற்றனர்.

 

திருமுறைப் பாடல்கள் : பதிகங்கள்   :   சம்பந்தர்   -   1. மன்னி யூரிறை (1.96);                   அப்பர்     -  1. பாற லைத்த படுவெண் (5.8); பாடல்கள்    :   சேக்கிழார் -       திருக்குறுக்கைப் பதி (12.28.289) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம்.

 

   தல மரம் :  எலுமிச்சை 

Specialities

 

 

இத்தலத்திற்கு லிகுசாரண்யம், பாஸ்கரக்ஷேத்திரம், பானுக்ஷேத்திரம் என்பன வேறு பெயர்கள்.

 

பிராகாரத்தில் ஆதிமூல லிங்கம் - அக்கினிக்குக் காட்சித் தந்த மூர்த்தி உள்ளார்.

 

சம்ஸ்கிருதத்தில் 'லிகுசாரண்ய மகாத்மியம் ' என்ற பெயரில் தலபுராணம் உள்ளது.

Contact Address

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு மாவட்டம் : நாகப்பட்டினம் மயிலாடுதுறையிலிருந்தும், நீடூரிலிருந்தும் செல்லலாம். மயிலாடுதுறையிலிருந்து மணல்மேடு செல்லும் பேருந்து இவ்வூர் வழியாகச் செல்கிறது. மயிலாடுதுறையிலிருந்து இத்தலம் 8 கி.மீ. தொலைவில் உள்ளது. தொடர்பு : 04364-250758; 250755.

Related Content