logo

|

Home >

hindu-hub >

temples

திருக்கோளிலி (திருக்குவளை) திருக்கோயில் தலவரலாறு Sthala puranam of Thirukkolili (Thirukkuvalai) Temple

இறைவர் திருப்பெயர்: பிரமபுரீசுவரர், கோளிலிநாதர், கோளிலிநாதேஸ்வரர்.

இறைவியார் திருப்பெயர்: வண்டமர் பூங்குழலி.

தல மரம்:

தீர்த்தம் : பிரம தீர்த்தம். முத்தி நதியாகிய சந்திர நதி

வழிபட்டோர்:சம்பந்தர், அப்பர், சுந்தரர், பரணதேவ நாயனார், சேக்கிழார், பிரமன், திருமால், இந்திரன், அகத்தியர், முசுகுந்தன், பஞ்சபாண்டவர்கள், நவக்கிரகங்கள், ஹேமகாந்த மன்னன் முதலியோர்.

Sthala Puranam

 

Tirukkolili temple

  • இத்தலம் மக்கள் வழக்கில் "திருக்குவளை" என்று வழங்கப்படுகிறது.

     

  • நவக்கிரகங்கள் முதலியோர்க்கு உண்டாய குற்றங்களை நீக்கி அருள் புரிந்தமையால் "கோளிலி" என்று பெயர் பெற்றது. "கோளாய நீக்குமவன் கோளிலி எம்பெருமான்" என்பது ஞானசம்பந்தர் வாக்கு.

     

  • பகாசூரனைக் கொன்றதனால் உண்டான பாவத்தை (பிரமகத்தித் தோஷம்) வீமன் இங்குப் போக்கிக் கொண்டான் என்பது வரலாறு.

 

தேவாரப் பாடல்கள்	: 

பதிகங்கள்    :          சம்பந்தர்       -  1. நாளாய போகாமே நஞ்சணியுங் (1.62);

                           அப்பர்        -  1. மைக்கொள் கண்ணுமை (5.56),
                                             2. முன்ன மேநினை யாதொழிந் (5.57);

                           சுந்தரர்       -  1. நீள நினைந்தடி யேனுமை (7.20); 

பாடல்கள்     :  பரணதேவ நாயனார்   -     கரையேனு மாதர் (11.24.49) சிவபெருமான் திருவந்தாதி; 

                          சேக்கிழார்     -     மல்லல் நீடிய வலிவலம் கோளிலி (12.28.515) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம், 
                                                நீர் ஆரும் சடை முடியார் (12.21.228) திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம், 
                                                ஆளிட வேண்டிக் (12.29.20) ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம்.  

Specialities

  • சுந்தரமூர்த்தி சுவாமிகள் நெல்மலையை எடுத்துச் செல்ல ஆள்வேண்டிப் பாடிய சிறப்புக்குரியதாய் விளங்குவது இத்தலம்.

     

  • இத்தலம் சப்த விடங்கத் தலங்களுள் ஒன்று. (அவனி விடங்கத்தலம், பிருங்கநடனம்)

     

  • இத்தலத்திற்கு பிரமதபோவனம், கதகாரண்யம் (தேற்றாமரவனம்), புஷ்பவனம், தென்கயிலை எனப்பல பெயர்களுண்டு.

     

  • முன்கோபுரத்தில் பகாசூரன் உருவமும், பிரமகத்தி உருவமும் உள்ளது.

     

  • சுவாமி, அம்பாள் சந்நிதிக்கு நடுவில் அகத்தியர் வழிபட்ட சிவலிங்கம் உள்ளது.

     

  • இறைவன் வெண் மணலால் ஆன சிவமூர்த்தமாக காட்சி தருகிறார்.

     

  • இங்குள்ள நவக்கிரகங்கள் ஒருமுகமாகத் தென்திசையை நோக்கி விளங்குகின்றன.

     

  • ஆலயத்திற்கு தென்மேற்கு மூலையில் சிவலோக விநாயகர் (ஹேமகாந்த மன்னனுக்குச் சிவலோகம் காட்டியவர்) உள்ளார்.

     

  • இக்கோயிலில் 19 கல்வெட்டுக்கள் - சோழர், பாண்டியர் காலத்தியவை கண்டெடுக்கப்பட்டுள்ளன.

     

  • கல்வெட்டுக்களில் இறைவன் 'திருக்கோளிலி உடைய நாயனார் ' என்றும், தியாகேசர் 'அவனிவிடங்கத் தியாகர் ' என்றும் குறிக்கப்படுகிறார்.

Contact Address

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு திருவாரூர் - எட்டிக்குடி சாலையில் எட்டிக்குடிக்கு முன்னால் உள்ள தலம்; திருவாரூரிலிருந்து 19-கி. மீ. தொலைவில் உள்ளது. திருவாரூரிலிருந்து அடிக்கடி பேருந்து வசதிகள் உள்ளது. தொடர்புக்கு :- 04366 - 245 412.

Related Content