logo

|

Home >

hindu-hub >

temples

பேணுபெருந்துறை (திருப்பந்துறை)

இறைவர் திருப்பெயர்: சிவானந்தேஸ்வரர், பிரணவேஸ்வரர்.

இறைவியார் திருப்பெயர்: மங்களாம்பிகை, மலையரசி.

தல மரம்:

தீர்த்தம் : மங்கள தீர்த்தம்.

வழிபட்டோர்:சம்பந்தர், சேக்கிழார், பிரமன், உமாதேவி, முருகன் ஆகியோர்.

Sthala Puranam

 

  • அரிசிலாற்றின் கரையிலுள்ள இவ்வூர், 'திருப்பெருந்துறை'யினின்றும் வேறுபாடறிய 'பேணு' என்னும் அடைமொழிசேர்த்து 'பேணு பெருந்துறை' என்று வழங்கப்படுகிறது.

     

  • பிரமன், உமாதேவி, முருகன் ஆகியோர் வழிபட்டு சிறப்புற்றுள்ளனர்.

 

தேவாரப் பாடல்கள்	: 

பதிகங்கள்     :    சம்பந்தர்     -    1. பைம்மா நாகம் பன்மலர்க் (1.42); 

பாடல்கள்      :   சேக்கிழார்    -       ஓங்கு புனல் பேணு பெருந்துறையும் (12.28.549) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம்.

 

Specialities

 

  • செங்கற் கோயிலாக இருந்த இக்கோயில் கரிகாற்சோழன் காலத்தில் கற்கோயிலாயிற்று என்றொரு கல்வெட்டு தெரிவிக்கின்றது.

     

  • சுவாமிப் புறப்பாட்டிற்கு ஒரு மாது நிலமளித்த நிவந்தமும் கல்வெட்டால் தெரியவருகின்றது.

     

  • கல்வெட்டில் சுவாமி "பேணு பெருந்துறை மகாதேவர் " என்றும் அம்பிகை "மலையரசியம்மை" என்றும் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

 

appearance of the temple

 

Contact Address

அமைவிடம் இந்தியா - மாநிலம் : தமிழ் நாடு கும்பகோணம் - காரைக்கால் பேருந்துப் பாதையில் அமைந்துள்ள தலம். (நாச்சியார் கோயிலையடுத்து எரவாஞ்சேரி பாதையில் 1 கி. மீ. தொலைவில் உள்ளது) கோயில் வரை வாகனங்கள் செல்லும். தொடர்புக்கு :- 94436 50826 , 0435 - 2448138

Related Content