logo

|

Home >

hindu-hub >

temples

திருப்பராய்த்துறை

இறைவர் திருப்பெயர்: தாருகவனேஸ்வரர், பராய்த்துறைநாதர்.

இறைவியார் திருப்பெயர்: ஹேமவர்ணாம்பாள், பசும்பொன்மயிலாம்பாள்.

தல மரம்:

தீர்த்தம் : காவிரி.

வழிபட்டோர்:சம்பந்தர், அப்பர், மாணிக்கவாசகர், பட்டினத்துப் பிள்ளையார், சேக்கிழார்,  இந்திரன், குபேரன், சப்தரிஷிகள் ஆகியோர்.

Sthala Puranam

  • பராய் மரக்காட்டில் இறைவன் எழுந்தருளியிருப்பதால் இத்தலம் 'பராய்த்துறை' எனப்படுகிறது. இத்தலத்திற்கு 'தாருகாவனம்' என்றும் பெயருண்டு. (பராய் மரம், சமஸ்கிருதத்தில் 'தாருகா விருக்ஷம்' எனப்படுகிறது.)

     

  • இறைவன் பிட்சாடனராய்ச் சென்று தாருகாவனத்து முனிவர்களின் செருக்கை அகற்றி அவர்கட்கு அருள்புரிந்தார்.

 

தேவாரப் பாடல்கள்    : 

பதிகங்கள்     :    சம்பந்தர்   -   1. நீறுசேர்வதொர் (1.135); 

                                  அப்பர்     -   1. கரப்பர் கால (5.30);

பாடல்கள்      :    சம்பந்தர்   -       கோலக் காவிற் (4.15.5);

                                 அப்பர்     -        செழுநீர்ப் புனற்கெடில (6.007.5), 

                                                            இடிப்பான்காண் (6.008.2),

                                                            நஞ்சடைந்த (6.013.6),  

                                                            பகலவன்றன் (6.33.10),     

                                                            வெண்காட்டார் (6.51.4), 

                                                            வீழி மிழலைவெண் காடு (6.70.7), 

                                                            கயிலாயமலை (6.71.11), 

                                                            படமாடு (6.81.8), 

                                                            விண்ணோர் (6.82.2), 

                                                            ஐந்தலைய (6.86.8);  

                மாணிக்கவாசகர்  -       பராய்த் துறை மேவிய பரனே போற்றி (8.04.153) போற்றித் திருவகவல், 

                                                           அன்பராகி (8.23.4) செத்திலாப்பத்து; 

 பட்டினத்துப் பிள்ளையார் -      நண்ணிப் பரவும் (11.30.62) திருஏகம்பமுடையார் திருவந்தாதி;

                            சேக்கிழார்  -      பன்னெடும் குன்றும் (12.28.340 & 341) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம்.

 

 

           தல மரம் : பராய் மரம்

Specialities

  • இங்குள்ள நவகிரகங்களுள் சனிபகவானுக்கு மட்டுமே வாகனம் உள்ளது; ஏனையோருக்கு வாகனமில்லை.

 

  • முதற் பராந்தக சோழன் காலத்தில் கட்டப்பட்டது இத்திருக்கோயில்.

 

  • கல்வெட்டில் இத்தலம், "உத்தம சீவிச் சதுர்வேதிமங்கலத்துத் திருப்பராய்த்துறை" என்றும்; இறைவன் பெயர் "பராய்த்துறை மகாதேவர் " என்றும்; "பராய்த்துறைப் பரமேஸ்வரன்" என்றும் குறிக்கப்படுகிறது.

Contact Address

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு திருச்சி - கரூர் - குளித்தலை செல்லும் பேருந்துச் சாலையில் சென்று இத்தலத்தை அடையலாம். திருச்சி - ஈரோடு இருப்புப் பாதையில் உள்ளது; எலமனூர் புகைவண்டி நிலையத்தில் இறங்கி செல்லலாம். தொடர்பு : 09940843571

Related Content