logo

|

Home >

hindu-hub >

temples

திருநள்ளாறு திருக்கோயில் தல வரலாறு Sthala puranam of Thirunallaru Temple

இறைவர் திருப்பெயர்: தர்ப்பாரண்யேஸ்வரர், திருநள்ளாற்றீசர்.

இறைவியார் திருப்பெயர்: போகமார்த்த பூண்முலையாள், பிராணாம்பிகை.

தல மரம்:

தீர்த்தம் : நளதீர்த்தம், சிவகங்கை.

வழிபட்டோர்:சம்பந்தர்,அப்பர், சுந்தரர், நம்பியாண்டார் நம்பி,சேக்கிழார், திருமால், பிரமன், இந்திரன், அகத்தியர், புலஸ்தியர், அர்ச்சுனர், நளச் சக்கரவர்த்தி, திக்குப் பாலகர்கள், வசுக்கள், போஜன், முசுகுந்தச் சக்கரவர்த்தி.

Sthala Puranam

 

  • இது, நளன் பூஜித்தக் காரணத்தால், நள்ளாறு எனப்படுகிறது. இறைவனருளால், நளன் சனியின் இடர் நீங்கப்பெற்றான்.

     

  • திருஞானசம்பந்தர், திருஆலவாயில் (மதுரை) சமணரோடு நடத்திய அனல் வாதத்தின்போது, இத்தலப் பதிகமான போகமார்த்த பூண்முலையாள் என்ற பதிகத்தை அனலில் இட, அது தீப்பற்றாமல், பச்சைப் பதிகமாய் நின்று, சைவத்தை நிலைநாட்டியது.

 

திருமுறைப் பாடல்கள்	: 

பதிகங்கள்     :    சம்பந்தர்     -    1. பாடக மெல்லடிப் பாவை (1.7),
                                        2. போகமார்த்த பூண்முலையாள் (1.49),
                                        3. ஏடுமலி கொன்றையர (2.33),
                                        4. தளிரிள வளரொளி (3.87);

                      அப்பர்      -	1. உள்ளாறாததோர் புண்டரிகத் திரள் (5.68),
                                        2. ஆதிகண்ணான் முகத்திலொன்று (6.20); 

                      சுந்தரர்     -	1. செம்பொன் மேனிவெண் ணீறணி (7.68); 

பாடல்கள்      :      அப்பர்     -    பூவ னூர்தண் (5.65.8), 
                                       வாரேறு வனமுலையாள் (6.02.4),
                                       சிந்தும் புனற்கெடில (6.07.10), 
                                       முந்தி யிருந்தாயும் (6.41.5),
                                       பல்லார் பயில் (6.58.8), 
                                       நதியாருஞ் சடையானை (6.69.7),
                                       நள்ளாறும் பழையாறுங் (6.71.10),
                                       தக்கனது வேள்விகெடச் (6.74.7),
                                       அல்ல லடியார்க் கறுப்பார் (6.82.9);

                      சுந்தரர்     -    தேசனூர் வினைதேய (7.31.8),
                                       நாற்றானத் தொருவனை (7.38.4),
                                       நள்ளாறு தெள்ளா றரத்துறை (7.92.9); 

          நம்பியாண்டார் நம்பி   -   அடைத்தது மாமறைக் காடர்தம் (11.35.91)  ஆளுடைய பிள்ளையார் திருவந்தாதி;   

                    சேக்கிழார்    -    சீர்தரு செங்காட்டங்குடி (12.21.240) திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்,    
                                        போற்றி இசைத்துப் (12.28.454,455,459,782,901 & 903)  திருஞானசம்பந்தர் நாயனார் புராணம், 
                                        விண் தடவு (12.29.143 & 144) ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம்.  

 

         தல மரம் : தர்ப்பை

Specialities

  • இது, முசுகுந்தச் சக்கரவர்த்தி எழுந்தருளுவித்த சப்த விடங்கத் தலங்களுள் ஒன்று (தியாகராஜர்-நகவிடங்கர்;நடனம்-உன்மத்த நடனம்).

     

  • இது, சனி தோஷம் நீங்கும் சிறப்புடைய தலம். இத்தலத்தில் சிவபெருமானை வழிபட்ட பின்னரே சனிபகவான் சன்னிதிக்குச் செல்ல வேண்டும். இத்தலத்தின் போகமார்த்த பூண்முலையாள் என்ற மேலே குறிக்கப்பட்டுள்ள பதிகத்தைப் பாடி சிவபெருமானை வழிபட சனி தோஷம் விலகும்..

     

  • இது,தருமை ஆதீனக் கோவிலாகும்.

     

  • சோழர்காலக் கல்வெட்டுகள் இரண்டு உள்ளன.

Contact Address

அமைவிடம்: மாநிலம் : தமிழ் நாடு இது, பேரளம் - காரைக்கால் இரயில் பாதையில் உள்ள நிலையமாகும். இரயில் நிலையத்திற்கு அருகிலேயே கோவில் உள்ளது. காரைக்கால், நாகை, மயிலாடுதுறை, திருவாரூர் ஆகிய இடங்களிலிருந்து பேருந்து வசதி உள்ளது. தொடர்பு : 04368-236530 / 236504

Related Content

கோயில் (சிதம்பரம், தில்லை) தலவரலாறு.

திருவேட்களம்

திருநெல்வாயில் (திருவுச்சி)

திருக்கழிப்பாலை

திருநல்லூர்ப்பெருமணம் (ஆச்சாள்புரம்) கோயில் தலவரலாறு