logo

|

Home >

hindu-hub >

temples

ஆவூர்ப்பசுபதீச்சுரம் (ஆவூர்) கோயில் தலவரலாறு Sthala puranam of Avurppasupatheechuram Temple

இறைவர் திருப்பெயர்: பசுபதீஸ்வரர், அஸ்வத்தநாதர், ஆவூருடையார்.

இறைவியார் திருப்பெயர்: மங்களாம்பிகை, பங்கஜவல்லி.

தல மரம்:

தீர்த்தம் : பிரமதீர்த்தம், காமதேனுதீர்த்தம் முதலியன.

வழிபட்டோர்:சம்பந்தர், சேக்கிழார்,காமதேனு, பிரமன், சப்தரிஷிகள், தேவர்கள், இந்திரன், சூரியன், நவக்கிரகங்கள்,வசிட்டர் ஆகியோர்.

Sthala Puranam

  • ஊர் - ஆவூர்; கோயில் - பசுபதீச்சுரம்.

     

  • வசிட்டரால் சாபம் பெற்ற காமதேனு, பிரமன் அறிவுரைப்படி உலகிற்கு வந்து இங்கு வழிபட்டுச் சாபம் நீங்கியதலம். (காமதேனு உலகிற்கு வந்த இடம். கோ + வந்த + குடி = கோவந்தகுடி ஆயிற்று)

     

  • கயிலையிலிருந்து, ஆதிசேடனுடன் போட்டியிட்டு வாயு தேவனால் கொண்டு வரப்பட்ட இருமலைச் சிகரங்களில் ஒன்று நல்லூரிலும் மற்றது ஆவூரிலும் தங்கியதாகப் புராணவரலாறு கூறுகிறது.

     

  • இங்குள்ள இரு அம்பிகைகளில், மங்களாம்பிகை குளத்திலிருந்து எடுத்துப் பிரதிஷ்டை செய்யப்பட்டது. பங்கஜவல்லி அம்பாள்-இதுவே, பழமையானது. (தேவாரத்தில் 'பங்கயமங்கை விரும்பும் ஆவூர் ' என்று வருகிறது. ஆனால் இங்குச் சிறப்பு மங்களாம்பிகை சந்நிதிக்கே.)

 

Sri Pasupathishwarar temple, Avurppasupatheechuram.

 

திருமுறைப் பாடல்கள்		: 

1. சம்பந்தர்   - 1. புண்ணியர் பூதியர் பூதநாதர் (1.8) 

2. சேக்கிழார் -    பொங்கு காதலில் (12.28.376)

 

   தல மரம் : அரசு

Specialities

  • கோச்செங்கட் சோழன் திருப்பணி - மாடக் கோயில்.

     

  • மணிகூடம், அசுவத்தவனம் என்பன இத்தலத்தின் வேறு பெயர்கள்.

     

  • சங்கப்புலவர்கள் ஆவூர் கிழார், ஆவூர் மூலங்கிழார் முதலிய சார்றோர்களைத் தந்த ஊர்.

     

  • கி. பி. 2-ஆம் நூற்றாண்டில் இவ்வூர் சோழ மன்னர்களின் கோட்டையாக விளங்கியது.

     

  • கல்வெட்டுச் செய்தியில் "நித்தவிநோத வளநாட்டைச் சேர்ந்த ஆவூர்க் கூற்றத்தைச் சேர்ந்த பசுபதீஸ்வரமுடையார் " என்று இறைவன் குறிக்கப்படுகிறார்.

Contact Address

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு கும்பகோணம் - மன்னார்குடி சாலையில் வலங்கைமான் வந்து அங்கிருந்து கோவந்தகுடி வழியாக இத்தலத்தை அடையலாம். கும்பகோணத்திலிருந்து பேருந்துகள் உள்ளன. தொடர்புக்கு : 9486303484.

Related Content