logo

|

Home >

hindu-hub >

temples

திருநல்லூர் கோயில் தலவரலாறு Sthala puranam of Thirunallur Temple

இறைவர் திருப்பெயர்: கல்யாணசுந்தரேஸ்வரர், பஞ்சவர்ணேஸ்வரர், பெரியாண்டேஸ்வரர்.

இறைவியார் திருப்பெயர்: கல்யாண சுந்தரி, திரிபுரசுந்தரி, பர்வதசுந்தரி.

தல மரம்:

தீர்த்தம் : சப்தசாகர தீர்த்தம்.

வழிபட்டோர்:சம்பந்தர்,அப்பர், பட்டினத்துப் பிள்ளையார், நம்பியாண்டார் நம்பி, சேக்கிழார், அகத்தியர், பிருங்கி முனிவர், வாயு.

Sthala Puranam

  • கயிலை மலையிலிருந்து வாயுவால் ஏவப்பட்ட இரு சிகரங்களில் ஒன்று இத்தலம். (மற்றது ஆவூர்). இச்சிகரத்தில் இறைவன் எழுந்தருளியுள்ளார். இது சுந்தரகிரி எனப்படுகிறது.

     

  • திருநாவுக்கரசருக்கு ஈசன் திருவடி சூட்டியத் திருத்தலம்.

     

  • பிருங்கி முனிவர் வண்டு வடிவம் தாங்கி, வழிபட்ட தலம்.

     

  • அகத்தியருக்கு இறைவன் திருமணக்கோலக் காட்சி வழங்கியது.

 

Sri Kalyanasundareswarar temple, Thirunallur.

 

Sri Kalyanasundareswarar temple, Thirunallur.
Sri Kalyanasundareswarar temple, Thirunallur.

 

தேவாரப் பாடல்கள்	: 

பதிகங்கள்     :    சம்பந்தர்     -	1. கொட்டும் பறைசீராற் (1.86),
                                        2. பெண்ணமருந் திருமேனி (2.57),
                                        3. வண்டிரிய விண்டமலர் (3.83);
                      
                      அப்பர்       -	1. அட்டுமின் இல்பலி யென்றன் (4.97),
                                        2. நினைந்துருகும் அடியாரை (6.14); 

பாடல்கள்      :    சம்பந்தர்      -      மனவஞ்சர்மற் றோடமுன் (2.39.6); 

பாடல்கள்      :     அப்பர்        -      புல்ல மூர்தியூர் (5.65.5),
                                           நாக மரைக்கசைத்த (6.002),  
                                           செல்வப் புனற்கெடில (6.007.1), 
                                           நில்லாதே பல்லூரும் (6.013.8), 
                                           நடையுடைய (6.22.5), 
                                           நல்லூரே நன்றாக (6.25.10), 
                                           நதியாருஞ் சடையானை (6.69.7), 
                                           நறையூரிற் சித்தீச் சரம் (6.70.10), 
                                           பிறையூருஞ் சடைமுடியெம் (6.71.4), 
                                           அல்ல லடியார்க் (6.82.9); 

      பட்டினத்துப் பிள்ளையார்     -     நண்ணிப் பரவும் (11.30.62) திருஏகம்பமுடையார் திருவந்தாதி; 

        நம்பியாண்டார் நம்பி       -     நற்றவன் நல்லூர்ச் சிவன் (11.34.25) திருத்தொண்டர் திருவந்தாதி;  

             சேக்கிழார்             -      பிறைத் தளிர் (12.7.6,43,46 & 49) அமர் நீதி நாயனார் புராணம், 
                                            கோவாய் முடுகி (12.21.194,195,197 & 213) திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம், 
                                            காவின் மேல் (12.28.365,366 & 371) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம். 

 

    தல மரம் : வில்வம்

Specialities

  • அமர்நீதி நாயனாருக்கும், அவரது குடும்பத்தாருக்கும் முக்தி கிடைத்த திருத்தலம். அவர் இருவரின் பிரதிமைகள், கற்சிலையிலும், செப்புச் சிலையிலும் உள்ளன.

     

  • இறைவரின் இலிங்கத் திருமேனி நாள்தோறும் ஐந்துமுறை நிறம் மாறும் தன்மையுடையது.

     

  • திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் பாடல் பெற்றத் திருத்தலம்.

     

  • இஃது கோட்செங்கணாரின் மாடக்கோவிலாகும்.

     

  • சோழர் கால கல்வெட்டுகள் 22ம், முஹாய்சரர் கல்வெட்டு ஒன்றும் ஆக 23 கல்வெட்டுகள் உள்ளன.

 

See also:

  • நல்லூர்ப் புராணம்  - திருவல்லிக்கேணி சடகோபராமாநுஜாசாரியர்.

Contact Address

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு இத்தலம், கும்பகோணம் - தஞ்சை இரயில் பாதையில் சுந்தரப்பெருமாள் இரயில் நிலையத்திலிருந்து தெற்கே 3-கி.மீ. தூரத்தில் உள்ளது. பாபநாசம் என்னும் தலத்திற்கு கிழக்கே 5-கி.மீ. தொலைவு. (வலங்கைமான் - பாபநாசம் சாலை) தொடர்புக்கு : 9443524410.

Related Content

திருநல்லூர்ப்பெருமணம் (ஆச்சாள்புரம்) கோயில் தலவரலாறு

திருப்பந்தணைநல்லூர் (பந்தநல்லூர்)

திருவியலூர் (திருவிசநல்லூர் / திருவிசலூர்)

திருநாவலூர் தலவரலாறு

திருஅறையணிநல்லூர் தலவரலாறு