logo

|

Home >

devotees >

references-to-moorgga-nayanar-in-thevaram-other-thirumurais

திருமுறைகளில் மூர்க்க நாயனார் பற்றிய குறிப்புகள்

 

சுந்தரர் தேவாரம்

வம்பறா வரிவண்டு மணம்நாற மலரும்

        மதுமலர்நற் கொன்றையான் அடியலாற் பேணா

எம்பிரான் சம்பந்தன் அடியார்க்கும் அடியேன்

        ஏயர்கோன் கலிக்காமன் அடியார்க்கும் அடியேன்

நம்பிரான் திருமூலன் அடியார்க்கும் அடியேன்

        நாட்டமிகு தண்டிக்கும் மூர்க்கர்க்கும் அடியேன்

அம்பரான் சோமாசி மாறனுக்கும் அடியேன்

        ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.                    7.39.5 

 

நற்ற மிழ்வல்ல ஞானசம் பந்தன் 

        நாவினுக் கரையன் நாளைப்போ வானுங்

கற்ற சூதன்நற் சாக்கியன் சிலந்தி 

        கண்ணப் பன்கணம் புல்லனென் றிவர்கள்

குற்றஞ் செய்யினுங் குணமெனக் கருதுங் 

        கொள்கை கண்டுநின் குரைகழல் அடைந்தேன்

பொற்றி ரள்மணிக் கமலங்கள் மலரும் 

        பொய்கை சூழ்திருப் புன்கூர் உளானே.                   7.55.4 

 

 

பதினோறாம் திருமுறை

 

திருத்தொண்டர் திருவந்தாதி

 

தண்டலை சூழ்திரு வேற்காட்டூர் மன்னன் தருகவற்றால்

கொண்டவல் லாயம்வன் சூதரை வென்றுமுன் கொண்டபொருள்

முண்டநன் னீற்றன் அடியவர்க் கீபவன் மூர்க்கனென்பர்

நண்டலை நீரொண் குடந்தையில் மேவுநற் சூதனையே.                   11.38-நம்பி

 

 பெரியபுராணம்

 

சூதினில் வென்றெய்து பொருள் துரிசற்ற நல்லுணர்வில்

See Also: 1. Life history of mUrkkanAyanAr

 

திருமுறைகளில் நாயன்மார் பற்றிய குறிப்புகள் - /devotees/references-of-nayanmars-in-thevaram-other-thirumurais

 

Related Content

The Puranam of Moorkka Nayanar

The History of Murgga Nayanar