logo

|

Home >

devotees >

references-to-kotpuli-nayanar-in-thevaram-other-thirumurais

திருமுறைகளில் கோட்புலி நாயனார் பற்றிய குறிப்புகள்


சுந்தரர் தேவாரம்

 

கூடா மன்னரைக் கூட்டத்து வென்ற

        கொடிறன் கோட்புலி சென்னி

நாடார் தொல்புகழ் நாட்டியத் தான்குடி

        நம்பியை நாளும் மறவாச்

சேடார் பூங்குழற் சிங்கடி யப்பன்

        திருவா ரூரன் உரைத்த

பாடீ ராகிலும் பாடுமின் றொண்டீர்

        பாடநும் பாவம்பற் றறுமே.                     7.15.10

 

கடல்சூழ்ந்த உலகெலாங் காக்கின்ற பெருமான்

        காடவர்கோன் கழற்சிங்கன் அடியார்க்கும் அடியேன்

மடல்சூழ்ந்த தார்நம்பி இடங்கழிக்குந் தஞ்சை

        மன்னவனாம் செருத்துணைதன் அடியார்க்கும் அடியேன்

புடைசூழ்ந்த புலியதள்மேல் அரவாட ஆடி

        பொன்னடிக்கே மனம்வைத்த புகழ்த்துணைக்கும் அடியேன்

அடல்சூழ்ந்த வேல்நம்பி கோட்புலிக்கும் அடியேன்

        ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.            7.39.9

 

பதினோறாம் திருமுறை

 

பெற்றம் உயர்த்தோன் விரையாக் கலிபிழைத் தோர்தமது

சுற்றம் அறுக்கும் தொழில்திரு நாட்டியத் தான்குடிக்கோன்

குற்றம் அறுக்கும்நங் கோட்புலி நாவற் குரிசில் அருள்

பெற்ற அருட்கடல் என்றுல கேத்தும் பெருந்தகையே.             11.68-நம்பி

 

 பெரியபுராணம்

 

மன்னவன்பால் பெறுஞ் சிறப்பின் வளம் எல்லாம் மதி அணியும்

See Also: 1. Life history of kOtpuli nAyanAr

 

திருமுறைகளில் நாயன்மார் பற்றிய குறிப்புகள் - /devotees/references-of-nayanmars-in-thevaram-other-thirumurais

 

Related Content

The Puranam of Kotpuli Nayanar

The History of Kotpuli Nayanar

கோட்புலி நாயனார் புராணம்